செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ரஜினி இந்துதத்வா கொள்கையுடையவர் என்பதால் மோடியுடன் கூட்டு ?

திருச்சியில் வரும் 26.09.2013 வியாழக்கிழமை நடக்கும் பாஜக மாநாட்டிற்கு அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி வருகை தருகிறார். இதனையொட்டி ஒவ்வொரு ஊரிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் பாஜக தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் பாஜகவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தர வேண்டும் என்றும், அவரது ரசிகர்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர்.
ஆனால், ரஜினி மவுனமாகவே இருந்து வந்தார்.
இந்தநிலையில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ரஜினி தளம் மற்றும் ரஜினிகாந்த் தலைமையகம் என்ற பெயரில் ரஜினிகாந்திற்கு நரேந்திர மோடி பூங்கொத்து கொடுப்பது போலவும், அதில் 'உங்களத்தான் நம்புது இந்த பூமி, இனி இந்தியாவுக்கு நல்ல வழிகாமி', 'மக்களின் எதிர்பார்ப்பே ஒளிரட்டும் பாரதம்', 'பாரத தாயை மீட்க, தர்மம் காக்க வந்தவரே' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டி உள்ளனர்.
இந்த போஸ்டர்  nakkheeran.in

கருத்துகள் இல்லை: