வெள்ளி, 25 ஜனவரி, 2013

DMK.. தே.மு.தி.க.வுக்கு 7 MP தொகுதிகள் ,1 ராஜ்யசபா சீட்?

தி.மு.க.-வும், தே.மு.தி.க.வும் பொதுக்கூட்ட மேடைகளில் ஆளாளுக்கு ‘சிக்னல்’ காட்டிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று தே.மு.தி.க.வின் பொதுக்குழு கூட்டம் கூடியுள்ளது. இதில் விஜயகாந்த், தி.மு.க.வுக்கு சிக்னல் காட்டுவாரா என்று இரு கட்சியினரும் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். பொதுக்குழுவில் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் மற்றும் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கட்சியின் வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பற்றிய பிரஸ்தாபமும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
காங். தி.மு.க. தரப்பில் இருந்து “தே.மு.தி.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகள் பிளஸ் 1 ராஜ்யசபா சீட்” என்று தகவல் பாஸ் பண்ணப்பட்டு இருப்பதாக தகவல். பார்க்கலாம், கேப்டன் என்ன சொல்கிறார் என்று.
இனியும் சுடு மணலில் நடக்க தன்னாலும் முடியாது ரசிகர்களாலும் முடியாது என்பதை கப்டனும் பிரேமாவும் புரிந்து நீண்ட நாளாகி விட்டது ஆனால் இந்த பன்மாமா எதோ ஏதோ சொல்லி பாமாகா ரேஞ்சுக்கு நம்பளை ஆகிடுவாரோ என்ற பயம் இப்போ ஜாஸ்தி ஆகிடுச்சு ஏன்னா அவரு வரலாறு அப்படிங்க 

கருத்துகள் இல்லை: