சனி, 26 ஜனவரி, 2013

அமெரிக்காவில் மோசடியில் ஈடுபட்ட மதத் தலைவருக்கு சிறை

இந்தியாவை சேர்ந்தவர் இந்து மத தலைவர் சாகர்சென் ஹல்தார். இவர் அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத் தில் உள்ள மில்வாவ்கீ நகரில் இந்துக் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். கவுடியா வைஷ்ணவ சொசைட்டியின் நிறுவன தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவர் மத தொண் டுக்குரிய விசா பெற்று அமெரிக்கா சென்றார். அங்கிருந்து கொண்டு 2 டஜனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு, ஒவ்வொருவரிடமும் இருந்து தலா 30 ஆயிரம் டாலர்  வாங்கி கொண்டு, மோசடி செய்து விசா வாங்கி கொடுத்திருக் கிறார்.
எனவே ஹல்தார் மீது அமெரிக்காவில், மில் வாவ்கீ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட் டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத் துக்கு இடமின்றி நிரூபிக் கப்பட்டுள்ளதாக கருதி, 37 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
தண்டனை காலம் முடிந் ததும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என  தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: