சனி, 9 ஏப்ரல், 2011

Cellphone தொலைபேசி மூலம் பிறப்பு,இறப்பு சான்றிதழ்கள் துரிதமாக பெறும் வசதி!

செல்லிட தொலைபேசிகள் மூலம் விபரங்களை பெற்று பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்களை துரிதமாக வழங்குவதற்கான செயற்திட்டமொன்றை தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் விபரங்களை வழங்குவதன் ஊடாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாக பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி இச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான கட்டணங்கள் செல்லிட தொலைபேசி மூலம் செலுத்த முடியும்

கருத்துகள் இல்லை: