
பொலிசார் அவரிடம் வாக்கு மூலத்தை பதிவுசெய்து கொண்டுள்ளனர். அதனையடுத்து பொலிசார் மேற்படி அழைப்பாணையை வாசலிலுள்ள ‘கேற்’றில் ஒட்டி விட்டுத் திரும்பியுள்ளனர். இதனை மிரிஹான பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி ஜயலத்திற்கு மேற்படி குழு தெரிவித்துள்ளது. அவ்வறிவித்தலுக்கிணங்க கோதாபய ராஜபக்ஷ இன்றைய தினம் மேற்படி விசாரணைக் குழு முன்னிலையில் ஆஜராகாவிட்டால் அவருக்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் மேற்படி விசாரணைக்குழு இன்று வெளியிடும். கோதாபய ராஜபக்ஷவை மேற்படி விசாரணைக் குழு கடந்த 14 ஆம் திகதி அழைத்திருந்தபோதும் அவர் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால் பிறிதொரு தினத்தைக் கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக