வெள்ளி, 6 மார்ச், 2015

பாகிஸ்தானில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக ஹோலி கொண்டாடினார்கள்


நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள காராச்சி நகரில் இந்துக்கள் ஒன்று கூடி அங்குள்ள சுவாமி நாராயண் கோவிலில் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேசிய மாணவர் கூட்டமைப்பினர் கோவிலை சுற்றி மனித சங்கிலி போன்று அமைத்திருந்தனர். மத ஒற்றுமையை வலியுறுத்தவே இந்த மனித சங்கிலியை அமைத்துள்ளதாகவும், மற்றவர்களின் உரிமையை நாம் பாதுகாக்க தவறினால், நாளை நமது உரிமையை பாதுகாக்க யாரும் வரமாட்டார்கள் என்றும் மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: