புதன், 9 அக்டோபர், 2013

ஏற்காடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு பாண்டியன் கம்யூ. ஆதரவு-

ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வருகிற டிசம்பர் 4-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அ.தி.மு.க. வேட்பாளருக்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியதாவது:- ஏற்காடு இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். நாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோமோ அந்த கூட்டணி வேட்பாளருக்குத் தான் ஆதரவு அளிப்போம். அந்த வகையில் அ.தி.மு.க.வை ஆதரிக்க கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்துள்ளன. தி.மு.க. வேட்பாளரை ஆதரிக்குமாறு கருணாநிதி அனைத்து கட்சிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டோம். தி.மு.க.வை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம். இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

கருத்துகள் இல்லை: