ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பி.பி.ஸ்ரீனிவாஸ் அழியா புகழை எய்தினார்

Veteran playback singer P B Srinivas died on Sunday following a brief illness, family sources said. சென்னை : பழம்பெரும் தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்
காலமானார். அவருக்கு வயது 83. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.  1952ஆம் ஆண்டு 'மிஸ்டர் சம்பத்' என்ற படத்திற்கு முதன் முறையாக பின்னணி பாடல் பாடினார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 12 மொழிகளில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல் பாடியுள்ளார்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ், "காலங்களில் அவள் வசந்தம்" என்ற பாடல் பெரும் புகழை பெற்று தந்தது.இந்த நிலையில் சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் இன்று பிற்பகலில் ஸ்ரீனிவாஸ் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: