வெள்ளி, 2 டிசம்பர், 2022

திராவிட இயக்க தமிழர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் தமிழ் கவிமீது கொலைவெறி தாக்குதல்! நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை .

May be an image of text that says 'தமிழக அரசே... காவல் துறையே.. நடவடிக்கை எடு..! நடவடிக்கை எடு..! திராவிட இயக்கத் தமிழர் பேரவை கரூர் மாவட்ட தோழர்.பா தமிழ்க்கவி மீது சாதிய வன்மத்தோடு கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய். இவண் தோழர் களம் -தமிழ்நாடு, சாமானிய மக்கள் நல கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தலித் விடுதலை இயக்கம், தமிழ் புலிகள் சி,அம்பேத்கர் மக்கள் இயக்கம், மே-17, அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை, மக்கள் அதிகாரம், பட்டியலின விடுதலைப் பேரவை, ஞ்சிறுத்தைகள் இயக்கம், ஆதித்தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை பேரவை,திராவிட இயக்க தமிழர் பேரவை. கரூர் மாவட்ட தோழமை இயக்கங்கள்'

கருவூர் லெனின்  :  சென்ற இரண்டு நாட்களில் சமூக விரோதிகள் தாக்கப்பட்ட நான். மருத்துவ மனையில் இருந்த பொழுது, இந்த அரசு அதிகாரிகளை புரிந்து கொண்ட தருணங்களில் இந்த பதிவு
சட்டம்  சமூகநீதி மனித உரிமை சமூக சனநாயகம் என்னும்  மக்களுக்கும் ,மண்ணுக்குமான  சமூக,பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கான பொருள் புரிந்த சொற்களையும்,செயல்களையும்
இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தங்களின் செருப்புக் காலால் போட்டு மிதித்து நசுக்குவதும்,
பிறகு அதைத் துடைத்தெடுத்து நாட்டு மக்களிடம் காட்டுவதுமாக ஒரே மனிதர்கள் இரட்டைத் தன்மையில் செயல்படுகிறார்கள் என்பதை இப்போதாவது இநத மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுகொண்டோர்கள் விளங்கிக்கொள்வோம் !

கருத்துகள் இல்லை: