வெள்ளி, 28 மே, 2021

பத்மா சேஷாத்திரிகள் பதட்டம் அடைவது ஏன்? மேலும் பல குற்றங்களை மூடிமறைக்கும் முயற்சி?

May be an image of outdoors and text that says 'PRAGNYA EDENPARK SIPCOT Park Siruseri PADMA SESHADRI BALA BHAVAN THE CONTEMPORARY SCHOOL BUILT ON TRADITIONAL VALUES Û BALA HAVAN SCHOOL SESHADRI SIRUSERI (Run (RunbyBalaBavanEducatinalTrust) by Bala Bhava Educational Trust READ NOW'

May be an image of 1 person and text

 Sellapuram Valliyammai :

பத்மா சேஷாத்திரிகள் மீது கைவைத்தால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்!
இவர் சொல்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.
முன்பு திமுக புலிகளுக்கு ஆதரவு அளிக்கிறது என்ற கூறி கலைஞர் ஆட்சியை கவிழ்த்த சந்திரசேகர் ஆட்சியின் போது இதே சுப்பிரமணியன்தான் மத்திய சட்ட அமைச்சர்.
கர்நாடக மாநில முதல்வர் எஸ் ஆர் பொம்மை ஆட்சியை கவிழ்த்தமைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பின் படி அப்படி மாநில அரசுகளை இலகுவாக கவிழ்க்க முடியாது என்பது தெரிந்ததே.
ஆனால் சுப்பிரமணியன் சாமியின் பதட்டத்தை,
பின்னணியில் குற்றங்களை மறைக்கும் அவசரம் தெரிகிறது என்றெண்ணுகிறேன்.
எல்லோரும் எண்ணுவதை விட அங்கு பாரதூரமான குற்றங்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்ற கோணத்திலும் பார்க்கவேண்டும்.
இவ்வளவு பதட்டம் ஏன்?
ஒரு ஆசிரியரின் ஆன்லைன் சில்மிஷத்திற்கு இவ்வளவு பதட்டம் அடைந்து ரியாக்ட் பண்ணுகிறார்கள் என்பது கொஞ்சம் ஓவர்தான்.
ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார் சட்டம் கடமையை செய்கிறது.
அதற்குள் அவசரப்படுவது மேலும் பாரிய குற்றங்கள் அம்பலமாவதை தடுக்கும் ஒரு முயற்சியாக ஏன் கருதக்கூடாது என்ற கோணாத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆய்வு செய்யவேண்டும்
S. R. Bommai v. Union of India ([1994] 2 SCR 644 : AIR 1994 SC 1918 : (1994)3 SCC1) was a landmark judgment of the Supreme Court of India, where the Court discussed at length provisions of Article 356 of the Constitution of India and related issues. This case had huge impact on Centre-State Relations. The judgement attempted to curb blatant misuse of Article 356 of the Constitution of India, which allowed President's rule to be imposed over state governments.

கருத்துகள் இல்லை: