சனி, 4 செப்டம்பர், 2021

பேராசிரியர் சுப வீரபாண்டியன் இந்து மதம் பற்றி அறிந்த அளவிற்கு இஸ்லாம் பற்றி அறியவில்லை ... சாதிக் சமத்து

 Saadiq Samad Saadiq Samad  :  திரு ஐயா சுபவீ அவர்களுக்கு ஓர் மடல்  !  வணக்கம்.
ஐயா அவர்களின் முஸ்லிம்கள் தமிழில் வழிபாடு நடத்துகிறார்கள் என்ற உங்க பதில் கூறும் வீடியோ ஒன்றை பார்த்தேன்  ஐயா சொல்வது போல் அங்கே இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் உங்களை எந்த மௌலவியோ ஏமாற்றி இருக்கிறார்கள் நீங்களும் "வழமை" யாக ஏமாந்துப்போனதுப்போல் ஏமாந்து இருக்கிறீர்கள் ஹிந்து மதம் (!!?)பற்றி நீங்கள் அறிந்த அளவிற்கு இஸ்லாம் பற்றி அறியவில்லை  என்பதையும் தாழ்மையுடன் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் .
நீங்கள் பார்ப்பனிய ,பார்பனிய கடவுள்களை மறுக்கும் ஒரு இறை மறுப்பாளர் நான் சிவன், இயேசு ,யகோவா, அல்லாஹ் குறிப்பா இறைத்தூதர் என்று  திராவிடர்களையும் தமிழர்களையும்  இன்றும் ஏமாற்றிவரும் முஹம்மது உட்பட அனைத்து கருத்துவாத கடவுள்கள் அதன் வேதங்கள் தூதர்களை  நேர்கொண்டு மறுக்கும் EX முஸ்லிம்களில்நானும் ஒருவன்   இந்த வேறுபாடும் ,ஒற்றுமையும் தான் நம்மை இணைக்கிறது  சரி மேட்டருக்கு போவோம்
 முதலில் உங்களுக்கு ஒரு நன்றி அல்லா சாமி அரபிய கடவுள் அதாவது இங்கே அது ஓர் இறக்குமதி கடவுள் என்று ஒப்புக்கொண்டதற்கு

அடுத்து  முஸ்லிம்களுக்கு தொழுகை வெள்ளிக்கிழமை மட்டுமல்ல தினமும்  ஐந்து வேளை கடமையான(?!)தொழுகையும் கடமையில்லா ஸுன்னத்தான நீண்ட தொழுகை பட்டியலே உண்டு இதை எல்லாம் நீங்கள் அறியவில்லை அல்லது அறிந்ததை மறைத்து இருக்கிறீர்கள் . இது தவறு நீங்களே இன்னொரு வீடியோவில் சொன்ன வார்த்தை பொய் சொல்ல கூச்சபட வேண்டும் என்கிறீர்கள் .நான் இங்கே  நீங்கள் பொய் சொன்னதாக கருதவில்லை  இஸ்லாம் பற்றி அரை குறை..இல்லை ....இல்லை ...அரை ,கால்  அதிலும் குறைவா புரிதலில்  பேசி இருப்பதாகவே கருதுகிறேன்.
  அரேபியாவில் அரேபிய சாமிக்கு அரேபியில் வழிபாடு ஓகே தமிழ் நாட்டில் தமிழில் சொல்ல என்ன கேடு ?என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் பகுத்தறிவாதி .
 

தமிழில்  அல்லது அரபி அல்லாத பிற மொழிகளில் வழிபாடு செய்ய கூடாது என்று குரானிலோ ஹதீஸ்களோ சொல்லப்பட்டிருக்கிறதா? என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும் ஏனெனில் நீங்கள் மதவாதி அல்ல பகுத்தறிவு வாதி  .
சரி தமிழகத்து முஸ்லிம்களில் எத்தனைபேருக்கு அரபி தெரியும்?  உங்கள் கழகத்திலிருந்து கழன்று போனாரே பெ....ரியாயாயார்ர்ர்ர்ர் தாசன் அவருக்காவது அரபி தெரியுமா? அட அரபியில் எத்தனை எழுத்துக்கள் என்றுகூட இங்கே இருக்கும் 99% முஸ்லிம்களுக்கு தெரியாது என்பது உங்களுக்கு தெரியுமா? பாங்கு அரபியில் கூறுவது யூனிஃபார்ம் என்கிறீர்கள் எவன் இப்படி சொல்லி கொடுத்தான் (கடுமையான வார்த்தைக்கு வருந்துகிறேன்  சில தெளிவுகளை புரியவைக்க சர்ஜரி செய்ய வேண்டி இருக்கிறது ) உங்களுக்கு தெரியுமா ?
மஸ்ஜீத்களில் கூம்பு ஒலிபெருக்கியில் பாங்கு சொல்லும் போதே  துவா ஓதுவார்கள் அதை ஓதுவும் எவனுக்கும் அதன் அர்த்தம் தெரியாது  தெரியாவிட்டாலும் அரபியில் தான் ஓதுவான் ஏனெனில் அவன் அப்படித்தான் அரபி புரோகிதர்களால் பயிற்று வைக்கப்படுகிறான் (அதாவது நீங்கள் சில மௌலவிகள் மூலம் இஸ்லாத்தை 1/4-1/2 அறிவது போல்) பாங்கு முடிந்து துவா முடிந்து அப்புறம் உளூ அதாவது தண்ணீர் கொண்டு சுத்தபடுத்தி கொள்ளுதல்  அதற்கும் அரபி தான்  அது முடிந்து தொழுகைக்கான நேரம் வந்தவுடன் பாங்கு சொன்னத்தையே குறைந்த அளவில் ரிப்பீட் செய்வார்கள் அது இகாமத் அதுவும் அரபியில் தான்  மஸ்ஜீத்களில் நடக்கும் ஐ வேளை தொழுகையில்  மூன்று அதை நடத்தும் புரோகிதன் சப்தமாக சொல்லுவான்  இரண்டு வேளை மனதிற்குள் ஓதிகொள்வதுதான்  மனதிற்குள் சொல்வதை கூட அரபியில் தான் சொல்வார்கள் (நான் கூறுவது புரிகிறதா?)  

தொழுகையை முடிக்க ஸலாம் கூறுவார்கள் அதாவது "உங்க" பகுத்தறிவு மார்க்க இஸ்லாத்தின் கான்செப்ட்டின் படி ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும்  இரண்டு தோள்பட்டைகளிலும் இரண்டு மலக்குகள்/வானவர்கள்/தேவர்கள் உண்டு (எச்சரிக்கை ஹிந்து மதத்தை விமர்சிப்பதுபோல் இதை யெல்லாம் பொது வழியில் அசந்தும் மறந்தும் கூட விமர்சித்து விடாதீர்கள் அல்லாஹ் சூழ்ச்சிக்காரன் (??)) இவர்களுக்கு இந்த முஸ்லிம்கள் ஸலாம் சொல்லுவார்கள் இதுவும் அரபிதான் இப்படி முக்கல் தொடங்கி முனகல்வரை எல்லாமே அரபி மயம் ஆனால் இஸ்லாத்தை ஏற்று மதம் மாறியவன் தமிழன்  இங்கே மதம் மாறியவுடம் மொழியும் மாறி விடுவது ஏன் என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா?இஸ்லாத்தில் அரபி அல்லாத மொழியில் வழிபாடு செய்ய பாங்கு கூற எந்த தடையும் இல்லை .என்பதையாவது நீங்கள் அறிவீர்களா?
 பிறகு ஏன் செய்வது  இல்லை என்றால் அரபி அல்லாமல் தமிழில் செய்தால் மார்க்கத்தின் மானம் கப்பல் ஏறி  கேலிக்கூத்தாகி விடும்  இப்போது அரபியில் அல்லாஹூ அக்பர் என்கிறான்  ஐயா சுபவிக்கு எதுவும் புரியாது

எதோ ஒரு அரபி பாடல் என்று கடந்து விடுவீர் அதையே தமிழில் கடவுள் பெரியவன்.... கடவுள் பெரியவன்.....கடவுள் பெரியவன்....என்றால் ?  ஓ.... இஸ்லாத்தில் ஏகன் இல்லை அதனால்தான் தமது கடவுளை பெரியவன் என்கிறார்கள் மற்றவை எல்லாம் சிறிய கடவுள்கள் என்று கருதுவீர்கள் ..அப்புறம் ஹய்ய அலஸ்ஸ'லாத்'..இதுவும் அல்லாஹு அக்பர் போலவே கடந்து விடுவீர்கள் இதையே  வணங்க சீக்கிரம் வா .....வணங்க சீக்கிரம் வா ....என்றால் என்னடா இவனுங்க சந்தையில்  ஓடியா.... ஓடியா  சரக்கு சரியாபோச்சு சீக்கிரம் வா என்பது போல் அல்லவா இருக்கு என்று கருதுவீர்கள் இப்படி மார்க்கம் கேலிக்கூத்தாகாமல் இருக்க தான் அரபி போர்வை மேலும் ஜிஹாத் என்ற மேட்டர் கிலாஃபா என்ற மேட்டரும் இருக்கு .
அதனால் இஸ்லாத்தில் அரபி அல்லாத வழிபாட்டிற்கு எந்த தடையும் இல்லை இனியும் உங்களைப்போன்ற பேராசியர்கள் அரபி முட்டு கொடுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
ஐயா அவர்களுக்கு  நிறைவாக அரபி சாமியான அல்லாஹ்வை வணங்கிய  ஒரு கேலிக்கூத்தை (ஹதீஸ்) கூறிவிட்டு இந்த மடலை நிறைவு செய்கிறேன் .

தயவு செய்து அடுத்த முறை இஸ்லாம் பற்றி பேசாதீர்கள் இல்லை தாவா செய்துதான் ஆகவேண்டும் என்றால் குரான் ஹதீஸ்களை முழுமையாக படித்து விட்டு வாருங்கள் . ஐயாவுக்கு அரபி தெரியாது என்று தெரியும்  விமர்சனம் என்பது மூல மொழி ஆதாரத்துடன் பேசப்படனும் அந்த மொழியும் தெரிந்திருக்கனும் என்பதால் அரபி ஆதாரத்தையும் இணைத்து இருக்கிறேன்
حدثنا سليمان بن حرب حدثنا حماد بن زيد عن أيوب عن أبي قلابة عن عمرو بن سلمة قال قال لي أبو قلابة ألا تلقاه فتسأله قال فلقيته فسألته فقال كنا بماء ممر الناس وكان يمر بنا الركبان فنسألهم ما للناس ما للناس ما هذا الرجل فيقولون يزعم أن الله أرسله أوحى إليه أو أوحى الله بكذا فكنت أحفظ ذلك الكلام وكأنما يقر في صدري وكانت العرب تلوم بإسلامهم الفتح فيقولون اتركوه وقومه فإنه إن ظهر عليهم فهو نبي صادق فلما كانت وقعة أهل الفتح بادر كل قوم بإسلامهم وبدر أبي قومي بإسلامهم فلما قدم قال جئتكم والله من عند النبي صلى الله عليه وسلم حقا فقال صلوا صلاة كذا في حين كذا وصلوا صلاة كذا في حين كذا فإذا حضرت الصلاة فليؤذن أحدكم وليؤمكم أكثركم قرآنا فنظروا فلم يكن أحد أكثر قرآنا مني لما كنت أتلقى من الركبان فقدموني بين أيديهم وأنا ابن ست أو سبع سنين وكانت علي بردة كنت إذا سجدت تقلصت عني فقالت امرأة من الحي ألا تغطوا عنا است قارئكم فاشتزوا فقطعوا لي قميصا فما فرحت بشيء فرحي بذلك القميص
எனது தந்தை (இஸ்லாத்தை ஏற்று
//எனது தந்தை  வந்ததும் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ளேன். இன்னின்ன நேரத்தில் இந்த இந்த தொழுகைகளைத் தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகைக்கு அழைக்கட்டும். மேலும் உங்களில் குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள். அப்போது அவர்கள் (அத்தகுதியுடைய ஒருவரை தேடிப் பார்த்தார்கள்) நான் ஒட்டக வியாபாரக் கூட்டத்தாரிடமிருந்து தெரிந்து கொண்டிருந்ததால் என்னை விட அதிகமாகக் குர்ஆன் ஓதத் தெரிந்தவர் யாருமிக்கவில்லை. எனவே தொழுகை நடத்த என்னை முன்னிறுத்தினர். அப்போது நான் ஆறு அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன். என் மீது ஒரு போர்வை இருந்தது. நான் ஸஜ்தாச் செய்யும் போது அது என்னை விட்டு விலகி (எனது பின்புறம் தெரிந்து) விடும். அப்போது கூட்டத்தில் உள்ள ஒரு பெண், ‘உங்கள் இமாமின் பின்புறத்தை மூட (ஒரு துணி கொடுக்க) வேண்டாமா?’ என்று கேட்டார். உடனே அவர்கள் எனக்கு ஒரு சட்டையை அளித்தனர். அந்தச் சட்டையைக் கொண்டு நான் அடைந்த சந்தோஷத்தைப் போன்று வேறு எதைக் கொண்டும் சந்தோஷம் அடைந்ததில்லை.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரலி)
நூல்: புகாரி 4302
ஏழு வயது பொடியன் புட்டத்தை காட்டி தொழுவித்து இருக்கிறான்  கழக சார்பில் ஒரு ஜட்டியாவது வாங்கி கொடுங்கள் .
இங்கே இஸ்லாத்தில் ஏகன் என்ற ஒரு கருத்தை கூறி புல்லரித்து இருந்தீர்கள் அங்கே இருப்பது ஏகனா அனேகனா என்பதை வேறொரு பதிவில் கூறுகிறேன் .
நன்றி வணக்கம்
சாதிக் சமத்

கருத்துகள் இல்லை: