புதன், 11 மார்ச், 2020

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் நியமனம்- ஜெ.பி நட்டா அறிவிப்பு

மாலைமலர் : தமிழக புதிய பாஜக தலைவராக எல் முருகனை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். சென்னை: தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் செலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் பாஜக மாநில தலைவர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், புதிய பாஜக தலைவர் எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, எல்.முருகன் கூறுகையில், என் மீது நம்பிக்கை வைத்து பதவி கொடுத்திருக்கிறார்கள்.  அதற்கேற்ப செயல்படுவேன். பாஜக தலைவர் ஜெ.பி நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு நன்றி என தெரிவித்தார். டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் பி.எல். படிப்பும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எல். படிப்பும் படித்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 15 வருடம் வழக்கறிஞர் அனுபவம் உள்ளவர்

கருத்துகள் இல்லை: