

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்க
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென கட்சி தலைமையிடம் தெரிவிக்காமல் வெளியேறினர். அவர்கள் பெங்களூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளன
இந்த
குழப்பத்திற்கு பாஜகவே காரணம் என்றும், கமல் நாத்தின் ஆட்சியை கவிழ்க்க
பாஜக முயற்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கமல் நாத்துடன்
ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில்
இருந்து வெளியேறி பாஜகவில் இணையலாம் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்த
பரபரப்பான சூழ்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் பிரதமர்
மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதேசமயம்
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சி
தலைவர் சோனியா காந்திக்கு ஜோதிராதித்யா சிந்தியா கடிதம் அனுப்பினார்.
ஆனால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் கட்சியில் இருந்து
நீக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சிந்தியாவின்
ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் இன்று ராஜினாமா
செய்தனர். அவர்கள் ஆளுநருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். 19 பேர்
ஒட்டுமொத்தமாக விலகியதால், காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக