செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி

 தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியின் போது காப்பாற்றப்பட்டுள்ளனர்.
 மாலைமலர் : தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, 3 குழந்தைகள் என 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிணற்றுக்குள் இருந்து குழந்தைகளின் அழுகுரல் கேட்டு, அப்பகுதியில் வேலை செய்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
போடியில் இருந்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துகள் இல்லை: