திங்கள், 17 அக்டோபர், 2022

திருவிளையாடல் புராணம் “ஹலாஸ்ய மகாத்மியம்” என்ற வடமொழி நூலின் மொழி மாற்றமே! ~ தினகர ஞானகுருசாமி

Dhinakaran Chelliah  : இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் எழுப்பிய கேள்விகளில், திருவிளையாடல் புராணம் எப்படி வடமொழியாகும்.மதுரைக் கதைக் களம் எப்படி வடநாடு ஆகும்?  
என்ற கேள்வியும் ஒன்று.
மதுரையைக் கதைக் களமாகக் கொண்டு வடமொழியில் எழுதப்பட்ட நூல்தான் “ஹலாஸ்ய மகாத்மியம்” எனும் நூல்.
இந்த நூலின் தமிழ் வடிவமே “திருவிளையாடற் புராணம்”. இந்த ஒரு புராணம் மட்டுமே வடமொழியிலிருந்து எழுதப்படவில்லை,
ஏகப்பட்ட நூல்கள் உண்டு. முடிந்த வரையில் எனது முகநூல் பக்கங்களில் பழைய வடமொழி புராணங்களை (புராணங்கள் மற்றும் தல புராணங்கள்) பதிவு செய்துள்ளேன்.
இனியும் பதிவு செய்ய நூற்றுக் கணக்கில் நூல்கள் உண்டு. ஹலாஸ்ய மகாத்மியம் நூலின் அட்டைப் படத்தை பிண்ணூட்டத்தில் இணைத்துள்ளேன்.
வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை: