வியாழன், 20 அக்டோபர், 2022

எம்ஜியாரும் எம் ஆர் ராதாவும் ஒருவரை ஒருவர் ஏன் சுட்டுக்கொண்டார்கள்?

Ananda Vikatan - 07 November 2007 - நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு இது  நூற்றாண்டு விழா! | - Vikatan

ராதா மனோகர் : எம் ஆர் ராதா மட்டும் சுடவில்லை  எம்ஜியாரும் திருப்பி சுட்டார்   
இருவரும் துப்பாக்கி வைத்திருக்கும் பழக்கம் உள்ளவர்கள்   
எம் ஆர் ராதா மறைக்க மாட்டார் ,, எம்ஜியார் கொஞ்சம் மறைப்பார்  
எம் ஆர் ராதாவின் துப்பாக்கியை பறித்து அல்லது தனது துப்பாக்கியால் எம்ஜியாரும் எம் ஆர் ராதாவை சுட்டார்
ஒரு வேளை எம் ஆர் ராதாவுக்கு ஏதாவது பாரதூரமாக நேர்ந்திருந்தால் மாட்டுப்படுவது எம்ஜியார்தான்  
அதனால்தான் மருத்துவ மனையில் ராதா அண்ணேக்கு என்னாச்சு எப்படி இருக்கிறார் என்று எம்ஜியார் பதற்றத்தோடு கேட்டார் .


இதைப்போய் எம்ஜியார் தன்னை சுடவந்த ராதாவையும் அக்கறையோடு விசாரித்தார் என்ன ஒரு பொன்மனம் என்று ஊளையிட்டன ஊடகங்கள் ..
தன்னை சுட்டுவிடும் அளவு கோபத்தோடு பலர் இருக்கிறார்கள் என்பது எம்ஜியாருக்கு தெரியும்  
அவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணியிருக்கிறார் அவர்
எம் ஆர் ராதாவை இதுவரை எவரும் அப்படி குற்றம் சாட்டியதில்லை
உண்மையில் எம் ஆர் ராதாதான் பொன்மன செம்மல் ..

கருத்துகள் இல்லை: