திங்கள், 11 ஏப்ரல், 2022

இலங்கை அருந்ததியர் சங்கமும் இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் .. வரலாறு 9 - 11 - 1957

சுதந்திரன்  :  யாழ் நகரில் இலங்கை திராவிட முன்னேற்ற கழக மாநாட்டில் அகில இலங்கை அருந்ததியர் சங்கம் கலந்து கொள்கிறது
அகில இலங்கை அருந்ததியர் சங்க கமிட்டி கூட்டம் சென்ற 9 - 11 - 1957 ல் கொழும்பு கிரீன்ஸ் லேனில் உள்ள சங்க காரியாலயத்தில் திரு . மா மு. இராஜகோபால் தலைமையில் நடைபெற்றது
அவ்வமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 . திரு நல்லையா செனட்டராக நியமிக்க பட்டதற்கு இச்சங்கம் தனது பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறது
2 . தமிழ் சமூகமெங்கு புரையோடி போயிருக்கும் தீண்டாமை தொழு நோயை வேரறுக்க யாழ் நகரில் இலங்கை

திராவிட முன்னேற்ற கழகம் டிசம்பர் 28 - 29 ஆகிய நாட்களில் நடத்தும் சமூக சீர்திருத்த மாநாட்டை இச்சங்கம் வரவேற்பதோடு பொதுச்செயலாளர் ஏ சுந்தரராசனின் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழுவொன்றையும் அனுப்புவதென தீர்மானிக்கிறது  

3 -  கொழும்பு முழுவதற்கும் வட்டார கமிட்டி உறுப்பினர்கள் தெரிவு செய்து  அருந்ததிய மக்களை சங்க அங்கத்தவர்களாக்குவதற்கும் சங்கத்தின் சார்பில் பத்திரிகை வெளியிடுவதற்கும்   திருவாளர்களான பெ கி .சண்முகம் ,  மா செ .அருள் . சே சேதுபதி , சே. சங்கர் ஆகியோரை கொண்ட கமிட்டி ஒன்றும் நிறுவப்பட்டது

கருத்துகள் இல்லை: