வியாழன், 22 மார்ச், 2018

824 கோடிரூபாய் வங்கிகளில்... பூபேஷ்குமார் ஜெயின் தம்பதிகள் ஓட்டம் . சென்னை கனிஷ்க் நகை கடை

14 வங்கிகளில், சென்னை, நகைக்கடை, அதிபர்கள், மோசடி ரூ.824 கோடி!
14 வங்கிகளில், சென்னை, நகைக்கடை, அதிபர்கள், மோசடி ரூ.824 கோடி!தினமலர் :சென்னை உட்பட, பல இடங்களில் செயல்பட்டு வந்த, கனிஷ்க் நகை கடையின் அதிபர்கள், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, 14 வங்கிகளில், 824.15 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக, டில்லி சி.பி.ஐ.,யில், புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வருமானத்தையும், விற்பனையையும் பூதாகரமாக்கி, இவ்வளவு பெரிய மோசடியை, அவர்கள் அரங்கேற்றியது, விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு அளித்துள்ள புகாரில், இந்த நகைக்கடை நிறுவனம், 20 கோடி ரூபாய்க்கு மேல், கலால் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் கூறியுள்ளது. இதுபோன்ற வங்கி கடன் ஊழல்கள், அடுத்தடுத்து வெளியாவதால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர், பூபேஷ்குமார் ஜெயின்; இவரது மனைவி, நீடா. இருவரும், கே.ஜி.பி.எல்., எனப்படும், 'கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் பெயரில், காஞ்சிபுரம் மாவட்டம், நடராஜபுரம், புக்கதுறை கிராமத்தில், நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்தனர்.
சென்னை உட்பட, நாடு முழுவதும் உள்ள, பிரபல ஜுவல்லரிகளுக்கு, விதவிதமான டிசைன்களில் நகை தயாரித்து, சப்ளை செய்தும் வந்தனர்.கனிஷ்க் என்ற பெயரில், தங்கம் மற்றும் வைர நகை விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வந்தனர்.இவர்களின் தொழில் கூட்டாளிகளாக, சென்னை, யானைக் கவுனியைச் சேர்ந்த தேஜாராஜ், அஜய்குமார், சுமித் உள்ளிட்டோர் செயல்பட்டு வந்தனர்.


ரூ.10 கோடி:

பூபேஷ்குமாரும், அவரது மனைவியும், கூட்டாளிகளுடன் சேர்ந்து, 2008ல், சென்னையில் உள்ள, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், தங்கள் நிறுவனம், 50 கோடி ரூபாய் லாபம் ஈட்டிஇருப்பதாக, போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, 10 கோடி ரூபாய் கடன் வாங்கினர்.பின், அடுத்தடுத்த ஆண்டு களில், பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருப்பதாக, போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, எஸ்.பி.ஐ., வங்கியில் மட்டும், 240.46 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி என, 14 வங்கிகளில், 824.15 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்து உள்ளனர்.மோசடி பணத்தில், பூபேஷ் குமார், நீடா மற்றும் அவர்களது கூட்டாளிகள், சென்னை, என்.எஸ்.சி., போஸ் சாலை, மும்பை, ஐதராபாத், கொச்சி மற்றும் துபாயில், தங்கம் மற்றும் வைர நகை கடைகளை திறந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: