புதன், 11 ஜனவரி, 2023

தமிழ்நாடு ஆளுநர் விலகக் கோரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டம். கடும் எதிர்ப்பு:

 tamilmurasu.com : தமிழ்­நாட்­டில் ஆளு­நர் ஆர்­என் ரவிக்­கும் மாநில அர­சுக்­கும் இடை­யி­லான பனிப்­போர் முக்­கிய கட்­டத்தை எட்­டி­யுள்­ளது.
தமிழ்­நாடு என்று சொல்­வ­தைக் காட்­டி­லும் தமி­ழ­கம் என்று அழைப்­பதே சரி என்று அண்­மை­யில் ஆளு­நர் ரவி பேசி­யது தமி­ழ­கம் முழு­வ­தும் எதிர்ப்­ப­லையை ஏற்­ப­டுத்­தி­யது.
அந்த எதிர்ப்பு அடங்­கு­வ­தற்­குள் நேற்று முன்­தி­னம் சட்­ட­மன்­றக் கூட்­டத்­தைப் பாதி­யில் புறக்­
க­ணித்­து­விட்டு அவர் வெளி­யே­றி­னார்.
புத்­தாண்டு தொடங்­கி­ய­தும், மாநில அரசு நிறை­வேற்­ற­வி­ருக்­கும் திட்­டங்­க­ளை­யும் கடைப்­
பி­டிக்க இருக்­கும் கொள்­கை­க­ளை­யும் சட்­ட­மன்­றத்­தில் ஆளு­நர் வாசிப்­பது வழக்­கம்.


மாநில அரசு எழு­திக் கொடுத்­ததை அவர் வாசிக்க வேண்­டும் என்­பது மரபு. அந்த வகை­யில் நேற்று முன்­தி­னம் மன்­றத்­தில் உரை­யாற்­றிய திரு ரவி, எழு­திக் கொடுத்­ததை அப்­ப­டியே படிக்­கா­மல் சில திருத்­தங்­க­ளைச் செய்­தி­ருந்­தார்.

குறிப்­பாக, அம்­பேத்­கர், காம­ரா­ஜர், கலைஞர்  உள்­ளிட்ட தலை­வர்­க­ளின் பெயர்­களை அவர் வாசிக்­கா­மல் தவிர்த்­தார். இச்­செ­ய­லுக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் சட்­ட­மன்­றத்­தி­லேயே கண்­ட­னம் தெரி­வித்­துப் பேசி­னார்.
மேலும், மன்ற விதி­க­ளைத் தளர்த்தி, ஆளு­ந­ருக்கு எதி­ராக அவ­ச­ரத் தீர்­மா­னம் கொண்டு வந்து அவர் நிறை­வேற்­றி­னார். திமுக, காங்­கி­ரஸ், விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­க­ளின் உறுப்­பி­னர்­கள் ஆளு­ந­ருக்கு எதி­ரான முழக்­கங்­களை எழுப்­பி­னர்.

‘பாஜக, ஆர்­எஸ்­எஸ் கொள்­கை­க­ளைத் திணிக்­காதே’ என்­றும் அவர்கள் உரக்­கக் கத்­தி­னர். அத­னால் எரிச்­ச­ல­டைந்த ஆளு­நர், சட்­ட­மன்­றத்­திலிருந்து வெளி­யே­றி­னார்.

இச்­சம்­ப­வம் சமூக ஊட­கங்­களில் அதி­கம் பேசப்­பட்டு வரு­கிறது. டுவிட்­ட­ரில் அண்­மைய நாள்­க­ளா­கப் பிர­ப­ல­ம­டைந்து வரும் #GetOutRavi என்­னும் ‘ஹேஷ்­டேக்’ நேற்று சென்னை நக­ரின் பல்­வேறு இடங்­களில் சுவ­ரொட்­டி­க­ளாக இடம்­பெற்­றது. தொடர்ந்து ஆளு­ந­ருக்கு எதி­ராக நேற்று சென்­னை­யில் மாநி­லக் கல்­லூரி மாண­வர்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

தந்தை பெரி­யார் திரா­வி­டர் கழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் கோவை, திருப்­பூர், புதுச்­சேரி உள்­ளிட்ட பல இடங்­களில் ஆளு­ந­ருக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டம் நடத்­திய­தோடு ஆளு­நர் ரவி­யின் உரு­வ­பொம்­மையை எரித்­துக் கைதா­யி­னர்.

ஆளு­நர் பதவி வில­கக்­கோரி ஆளு­நர் மாளி­கை­யான ராஜ் பவன் எதிரே நாளை மறு­தி­னம் (ஜன­வரி 13) ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­ போ­வ­தாக விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், நாம் தமி­ழர் கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான், தமி­ழக அர­சி­டம் ஆளு­நர் மன்­னிப்­புக் கேட்க வேண்­டும் என்று தெரி­வித்­துள்­ளார். அவர் வெளி­யிட்ட அறிக்­கை­யில், “சட்­டப்­பே­ர­வை­யில் முத­ல­மைச்­சர் உரை­யாற்­றிக்­கொண்­டி­ருக்­கும் போதே அவை மர­பு­களை மீறி, பாதி­யி­லேயே ஆளு­நர் வெளி­யேறி, பேர­வை­யை­யும் அமைச்­சர்­க­ளை­யும் உறுப்­பி­னர்­க­ளை­யும் அவ­ம­தித்­துள்­ளார்,” என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

கருத்துகள் இல்லை: