
குறுகிய பாலத்தில் பலரும் முண்டியடித்து கொண்டு ஓடியுள்ளனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி, 109 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர், பாலத்தில் இருந்து, ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களை தேடும் பணியில் தோல்வி ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த பக்தர்கள், போலீசார் மீது, கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து,போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைந்து போகும்படி செய்தனர். இந்த சம்பவத்தில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.காயம்அடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, தலா, 1.5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் மாநில அரசு அறிவித்துள்ளது. இத்துயர சம்பவம் குறித்து, மாநில முதல்வர், பா.ஜ.,வை சேர்ந்த, சிவராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக