சனி, 30 ஏப்ரல், 2011

அமெரிக்காவில் இந்திய மருந்துக் கடை அதிபர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் ட்ரென்டன் நகரில் ஆந்திராவைச் சேர்ந்த மருந்துக்கடை அதிபர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.


52 வயதான அர்ஜூன் தியாப ரெட்டி என்ற அவர் ட்ரென்டன் நகரில் புருன்ஸ்விக் பார்மஸி என்ற மருந்துக் கடையை நடத்தி வந்தார். அவரை அடையாளம் தெரியாத சிலர் கடைக்குள் புகுந்து சுட்டுக் கொன்றனர்.

துப்பாக்கிச் சத்தம் கேட்ட அடுத்த சில வினாடிகளில் 18 வயதான கருப்பின வாலிபர்கள் சிலர் கடையைவிட்டு வெளியே ஓடியதை சிலர் பார்த்துள்ளனர். அவர்கள் தான் ரெட்டியைக் கொலை செய்ததாகத் தெரிகிறது.

கொள்ளை முயற்சியில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியில் தூரத்து உறவினரான அர்ஜூன், 2009ம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மெஹ்பூப் நகர் மாவட்டத்தில் கல்வாகுர்தி தொகுதியில் போட்டியிட முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Once again an NRI has become the victim of brutality abroad. 52-year-old Arjun Dyapa Reddy has been killed in USA on Friday, Apr 29. Mr Reddy was shot in chest, local newspaper reported on Saturday, Apr 30. Mr Reddy, who hailed from Andhra Pradesh, was the owner of Brunswick Pharmacy. Though, the intention behind the murder has not yet been clear, Police sources suspects a 18-19 year-old black man with dreadlocks who was seen running out of the shop soon after the murder.

கருத்துகள் இல்லை: