புதன், 27 ஏப்ரல், 2011

NAKKEERAN.ஜெ. ஒன்றும் தோல்வியே கண்டிராத வேட்பாளர் அல்ல.

ஸ்ரீரங்கத்தில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது

ஸ்ரீரங்கத்தில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று வாக்குப்பதிவு முடிந்ததும் தி.மு.க தரப்பு சொன்னதை நாம் வெளியிட்டிருந்தோம். ஆரம்பத்தில் அ.தி.மு.க தரப்பு இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், தொடர்ந்துவந்த தகவல்களும் மற்ற பத்திரிகைகளில் ஸ்ரீரங்கம் நிலவரம்-மதில்மேல்பூனை என்ற அளவில் செய்திகள் வெளியிடப்பட்டதும் அ.தி.மு.க தலைமையை யோசிக்க வைத்தது. நிர்வாகிகளை அனுப்பி நிலவரம் அறியச் சொன்னது கொடநாடு.

சென்னையிலிருந்த நிர்வாகிகள் உடனே ஸ்ரீரங்கம் அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டு விசாரிக்கச் சொன்னதுடன், அ.தி.மு.க ஆதரவு பத்திரிகையாளர்களை அனுப்பி, எக்ஸிட்போல் ஒன்றும் எடுக்கச் சொல்லியுள்ளனர். நிர்வாகிகளும் பத்திரிகையாளர்களும் களமிறங்கி கருத்துகளைக் கேட்டனர்.

மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியம், பரஞ்ஜோதி உள்ளிட்டோர் சந்தித்து, "உங்கள் குழு உறுப்பினர்களை உதயசூரியனுக்கு ஓட்டுப் போடச் சொல்லிட்டீங்களாமே' என்று கேட்க, ""நாங்கள் தனிப்பட்ட முறையில எந்த உத்தரவும் இட வில்லை. எல்லாம் அவரவர்களே ஏற்கனவே சொந்தமாக எடுத்த முடிவுதான். ஜெயலலிதாம்மா வந்தபோது அல்லூர் பகுதியில் நாங்கள் வரவேற்புக் கொடுக்கத் திரண்டிருந்தோம். நீங்க கண்டுக்காம போயிட்டீங்க. சிட்டிங் எம்.எல்.ஏ.வும் இதுவரை எங்களைக் கண்டுக்கிட்டதில்லை. அதே நேரத்தில் அமைச்சர் தான் (கே.என்.நேரு) இங்கே பல சுயஉதவிக்குழுக்கள் உருவாக காரணமா இருந்தார்'' என்று சொன்னதும், "நாங்க இதைத் தலைமைக்கு ரிப் போர்ட்டா கொடுக்கிறோம்' என்று சொல்லிவிட்டுச் சென் றிருக்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

மகளிர் சுயஉதவிக்குழு வுடன் பிராமணர்களில் ஒரு பிரிவினரும் ஜெ.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அ.தி.மு.க தரப்புக்குத் தெரியவந்துள்ளது. இவர்களில் பலர் உதயசூரியனுக்கும் சிலர் பி.ஜே.பி.க்கும் வாக்களித்திருப்பதாக அவர்கள் தரப்பில் பேச்சு நிலவுகிறது. அதுபோல, உடையார் சமூகத்தினர் பலர் ஐ.ஜே.கே வேட்பாளரின் மோதிரம் சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர். தங்கள் பலத்தைக் காட்ட இது ஒரு வாய்ப்பு என்கிறார்கள் உடையார் சமூகத்தின் நிர்வாகிகள். தி.மு.க வேட்பாளர் ஆனந்தன், முத்தரையர் சமுதாயத்தவர் என்ப தால், இச்சமூகத்தில் வழக்கமாக இரட்டை இலைக்கு வாக்களித்து வந்தோரில் பலர் இம்முறை தங்கள் சமுதாய வேட்பாளருக்கு சாதகமான மனநிலையில் இருந்ததாகவும் அ.தி.மு.க தரப்புக்கு ரிப்போர்ட் வந்துள்ளது.

அ.தி.மு.க நிர்வாகிகளின் கள ஆய்வும், அவர்கள் ஆதரவு பத்திரிகையின் கருத்தெடுப்பும் ரிப்போர்ட்டாக கொடநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலின் போது ஜெ.வுக்காக அ.தி.மு.க.வினர் பார்த்த வேலையில் 10-ல் 1 பங்கு வேலைகூட ஸ்ரீரங்கத்தில் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தி.மு.க தரப்பின் வேகம் புலிப்பாய்ச்சலில் இருந்திருக்கிறது என்றும் கூறப் பட்டுள்ளதாம்.


இந்த ரிப்போர்ட்டுகள், கொடநாட்டுக்கு ஃபேக்ஸ் செய்யப்பட்டிருப்பதால், அதனை உன்னிப்பாக கவனித்துவரும் ஜெ.வின் முகத் தில் பலவித மாறுபாடுகள் ஏற்படுவதாக அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் சொல்கி றார்கள்.


இந்தத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆனந்துக்காக வியூகங்களை வகுத்து, அதனைச் செயல்படுத்தியவர் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். கரை வேட்டி கட்டாமல் ஒவ்வொரு வார்டுக்கும் சென்று அதன் பொறுப்பாளர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு நெருங்கி வேலை செய்தவர் அவர். ஸ்ரீரங்கத்தில் உதயசூரியன் ஜெயிக்கவேண்டும் என்பது ஒன்றுதான் அவருடைய டார்கெட்டாக இருந்தது என்கிறார் கள் உ.பி.க்கள்.


அவரிடம் தேர்தல் பணிகள் குறித்துப் பேசினோம்.


அ.தி.மு.க.வுக்கு மிகவும் சாதகமான- தொடர்ந்து வெற்றிவாய்ப்புள்ள தொகுதி ஸ்ரீரங்கம். அந்த அடிப்படையில்தானே ஜெ இங்கு போட்டியிட்டார். அவரை தி.மு.க எதிர்கொள்ள முடியும் என்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?


அ.தி.மு.க.வுக்கு ஸ்ரீரங்கம் சாதகமான தொகுதி என்பதே தவறான முடிவு. ஜெ.வுக்கும் இதே தவறான தகவலைச் சொல்லித்தான் இங்கே அவரை போட்டியிடச் செய்துவிட்டார்கள். எம்.பி. தேர்தலில் 20,500 ஓட்டு லீடிங் காட்டியதை பெரிய பலமாக நினைக்கிறார்கள். ஆனால், போன முறை போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா, கட்சியினருடன் நல்ல அணுகுமுறை யைக் கடைப்பிடிக்க முடியவில்லை. பிரச்சாரத்திற் கும் முழு நேரத்தை ஒதுக்கவில்லை. கட்சியினரின் தேவையையும் நிறைவேற்றவில்லை. இந்த அதிருப்திதான் அ.தி.மு.க குமாரை எம்.பி.யாக் கியது.

ஜெ.வை ஜெயிக்க முடியும் என்று வியூகம் வகுத்தது எந்த நம்பிக்கையில்?

ஜெ. ஒன்றும் தோல்வியே கண்டிராத வேட்பாளர் அல்ல. ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டி ருக்கும் ரங்கநாதரே ஜெ.விடம் அப்பாயிண்ட் மென்ட் வாங்கிக்கொண்டுதான் பார்க்க வேண்டும் என்பதுபோன்ற நிலைமைதான் உள்ளது. அப்படியென்றால், பொதுமக்கள் எப்படி அவரை நெருங்க முடியும்? எங்கள் வேட்பாளர் ஆனந்தன் மிகவும் சாதாரணமானவர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவர். பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால், ஜெ.வை வெல்லமுடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.


அ.தி.மு.க. தரப்பில் மா.செ.க்களான கே.கே.பாலசுப்ரமணியம், பரஞ்ஜோதி, அண் ணாவி, எம்.பி. குமார் ஆகியோர் பொறுப் பெடுத்துச் செயல்பட்டார்கள். அது அவர் களுக்கு பலம்தானே?


அவர்கள் தினமும் ஒரு போட்டோ எடுத்து, பத்திரிகையில் வெளியிடச் செய்து, நாங் களும் வேலை பார்த்தோம் என்ற கணக்குக்காகத்தான் வேலை பார்த்தார்கள். அது தேர்தல் முடிவு வெளியாகும்போது தெரியும்.


உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது எது?


மூன்று காரணங்கள் இருக்கிறது. முதல் விஷயம், ஜெ.வின் பேச்சு. தி.மு.க. என்ற கட்சியே இருக்காத அளவுக்கு அதனைத் தோற்கடிப்போம் என்று பேசினார். அப்படிப்பட்ட ஜெயலலிதாவை ஏன் நாம் ஸ்ரீரங்கத்தில் தோற்கடித்துக் காட்டக்கூடாது என்று மனதுக்குள் ஏற்பட்ட சபதம் ஒரு காரணம். திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, ஜெ வந்தபோது பூச்செண்டு கொ டுத்து வரவேற்றார்.


முதல்வர் கலைஞர் வந்தபோது, பாதுகாப்புக்கே அவர் வரவில்லை. ஜெ வேட்பு மனு தாக்கலின்போது, தி.மு.க. தொண்டர்கள் மீது தடியடி நடந்தது. இதுபற்றி அமைச்சர், கமிஷனரிடம் போனில் கேட்ட போது, "நீங்க வேணும்னா என்னை மாற்றிக் கொள்ளுங்கள்' என்று அலட்சியமாகப் பதில் சொன்னார். ஜெ. ஆட்சிக்கு வந்தால் காவல்துறை எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். மூன்றாவது காரணம், ஸ்ரீரங்கத்திற்கு வடிவேலு பிரச்சாரம் செய்ய வந்தபோது, தே.மு.தி.க.வினர் செருப்பை வீசினர். அது பற்றி கேள்வி கேட்ட எங்க கட்சியினரைக் கைது செய்தனர். ஆனால், நாங்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை இல்லை. இந்த அராஜகம் தொடராமல் இருக்கவேண்டு மென்றால் ஜெ.வை வீழ்த்தவேண்டும் என்ற முடிவுடன்தான் இந்தத் தொகுதியில் தீவிர கவனம் செலுத்தினேன்.

உங்களுடைய வேகம், ஸ்ரீரங்கம் தி.மு.க.வினரிடமும் ஏற்பட என்ன செய்தீர்கள்?

ஸ்ரீரங்கத்தில் நாம் பார்க்கப்போகிற வேலை, வரலாற்றுச் சிறப்புமிக்கது. நாம் வகுக்கப்போகும் வியூகமும், பார்க்கபோகிற தேர்தல் பணிகளும் இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு தமிழக அரசியல் வரலாற்றில் இடம் பிடிக்கவேண்டும். ராணுவச் சிப்பாய்கள்போல வேலை பார்க்க வேண்டும். எந்த வழக்கும் அடக்குமுறையும் வந்தாலும் நான் துணையிருப்பேன்.
பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டு 100% வேலை பார்த்தார்கள். அந்தந்த சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்களுக்கும் மதிப்பளித்து செயல்பட்டோம்.

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

அ.தி.மு.க.வினரைப்போல முதலில் 50 ஆயிரம் ஓட்டு லீடிங் என்று சொல்லி, அப்புறம் படிப் படியாக குறைந்து, ஆயிரம் ஓட்டி லாவது ஜெயிப்போம் என்று சுருதியைக் குறைக்கமாட்டோம். நான் உறுதியாகச் சொல்கிறேன். வெற்றி எங்களுக்குத் தான்; தோல்வி ஜெ.வுக்குத்தான்.

தி.மு.க. வேட்பாளர் ஆனந்த் நம்மிடம், ""எனக்கு முழுத்தெம்பே, அமைச்சரின் அறிவுரையும் அவர் சகோதரரின் வியூகமும் தான். வெற்றி நிச்சயம் என்ற சூழல் உருவானதற்கு இவர்கள் இருவரும்தான் காரணம். ஸ்ரீரங்கம் தொகுதியின் முடிவு தமிழக அரசியலில் புதிய வரலாற்றை உருவாக்கும்'' என்றார்.

நம்பிக்கைதானே வாழ்க்கை!
THANKS TO NAKKEERAN.IN

கருத்துகள் இல்லை: