புதன், 9 செப்டம்பர், 2020

நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி விலகல்

tamil.oneindia.com  - Mathivanan Maran சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியாக பங்கேற்றவர். அண்மையில் நாம் தமிழர் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தம்முடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தாம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார். அதில், அது ஒரு பேரின்ப கனாக்காலம் ...!! அனைவருக்கும் நன்றிFolded hands நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்!! என தெரிவித்துள்ளார் ராஜீவ்காந்தி.


கருத்துகள் இல்லை: