வெள்ளி, 15 அக்டோபர், 2021

நோர்வேயில் அம்பு வில் மூலம் தாக்குதல் பலர் காயம் ஐவர் உயிரிழப்பு

 jayanewslive.com : நார்வேயில் வில் அம்புகளை எய்து பலரை கொலை செய்த கொடூர சம்பவம் - மர்மநபர் கைது
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் காங்ஸ்பெர்க் நகரில், மர்மநபர் ஒருவர் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் வில் மூலம் அம்புகளை டன் வந்த எய்தி தாக்கியுள்ளான்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், போலீசார் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள மக்களை வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: