ஞாயிறு, 17 ஜூலை, 2022

கள்ளக்குறிச்சி மாணவி பாலியல் பலாத்காரம் கொலை?

ஓரம்போ சுரேஷ் :  மாணவியின் இறப்பிற்க்கு மாணவியின் அம்மா தான் காரணம்
    - பள்ளியின் தாளாளர் சாந்திரவிக்குமார்....
மாணவியின் மர்ம உறுப்பில் ரத்தம் வழிந்ததற்க்கும் மாணவியின் அம்மா தான் காரணமா....?
மாணவியின் பின்னந்தலையில் அடிபட்டு காயம் இருந்ததற்கும் மாணவியின் அம்மா தான் காரணமா...?
மார்பகங்களில் நகக் கீறல்கள் இருந்ததற்கும் மாணவியின் அம்மா தான் காரணமா....?
பள்ளியின் வகுப்பறை சுவர்களில் ரத்தக்கரை படிந்த அந்த மாணவியின் ரேகைகள் பதிந்து இருந்ததற்க்கும் மாணவியின் அம்மாதான் காரணமா....?
மாணவிக்கு காய்ச்சல் என்று கூறி ஆஸ்பத்திரியில் சேர்க்க சென்ற பொழுது  நூற்றுக்கணக்கான போலீஸார்  ஆஸ்பத்திரியில் எதற்காக குவித்து வைக்கப்பட்டனராம்...
காய்ச்சலில் உள்ள மாணவி எப்படி திடீரென உயிரிழப்பார்?...
மாணவி இறந்தது பற்றி உங்களுக்கு வருத்தம் இல்லை பள்ளியின் பொருட்கள் போயிற்றே என்று தான் வருத்தம்...


மாணவியின் அம்மா தான் காரணம் என்றால் எதற்காக 5 நாட்களுக்கு முன்பே 30 லட்சம் தருகிறோம் என்று பெற்றோர்களிடம்  பேரம் பேசினார்களாம் பள்ளி நிர்வாகத்தினர்....?
சரி இந்த குழந்தையை விட்டு விடுங்கள் இந்த மாணவியை விட்டு விடுங்கள் இதற்கு முன்பு இறந்த ஏழு பேருக்கு என்ன காரணம் சொல்வீர்கள் தொடர்ச்சியாக இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் தான் பொதுமக்கள் கொந்தளித்து எழுந்தனர் இதற்கு என்ன விளக்கம் தர போகிறார்கள் பள்ளி நிர்வாகம்.....
இதோடு மட்டுமில்லாமல் உங்கள் பள்ளியில் ஆசிரியைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக தகவல் வருகிறது அதற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்...?

கருத்துகள் இல்லை: