செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

14 இடங்களில் காயம்... உயிரிழந்த கோல்கட்டா பெண் டாக்டரின் பிரேத பரிசோதனையில் தகவல்

 தினமலர் :  நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து, தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் சங்கத்தினர் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரேதப்பரிசோதனை அறிக்கை
இந்த நிலையில், இளம்பெண் டாக்டரின் பிரேத பரிசோதனை வெளியாகியுள்ளது. அதில், தலை, கழுத்து, முகம், கைகள் மற்றும் பிறப்புறுப்பு என 14 இடங்களில் காயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பதாகவும், கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை: