புதன், 15 ஜூன், 2016

ஏ.சி.திருலோகச்சந்தர் காலமானார் ... ( வயது 87) பிரமாண்ட வெற்றிப்படங்களின் இயக்குனர்


திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் ( வயது 87) சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.>எம்.ஜி.ஆர்., சிவாஜி, சிவகுமார் என்று முந்தைய தலைமுறை நாயகர்களை வைத்து ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். சினி பாரத் என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம் பல  படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.அன்பே வா, டாக்டர் சிவா, தெய்வமகன், பாரதவிலாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய திருலோசந்தர்,  எம்.ஜி.ஆர். நடித்து 1952-ஆம் ஆண்டு வெளியான "குமாரி' படத்தில்தான் முதல் முதலாக உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். கடைசியாக சிவாஜி, நதியாவை வைத்து ’’அன்புள்ள அப்பா’’ படத்தை இயக்கினார். படம் பாராட்டுக்களைப் பெற்றாலும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் நான்கைந்து தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார்.;வேலூர் மாவட்டம் ஆற்காட்டைச்சேர்ந்த திருலோகசந்தருக்கு  இரண்டு மகன்கள். ஒரு மகள். மூவருக்கும் திருமணமாகி விட்டது.  மனைவி 2010ம்  ஆண்டு 72-வது வயதில் காலமானார்.நக்கீரன்.in

கருத்துகள் இல்லை: