புதன், 21 டிசம்பர், 2011

வைகோ கைது: சாலை மறியலில் பொதுமக்கள்


முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து மதிமுக சார்பில் 13 இடங்களில் இன்று மறியல் போராட்டமும், கண்டன பேணியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேனியில் இருந்து காலை 10 மணிக்கு குமுளியை நோக்கி புறப்பட்டார். அப்போது, சீலையம்பட்டி என்ற இடத்தில் போலீசார் அவரை தடுத்தனர். வைகோ மற்றும் அவருடன் வந்த பழ.நெடுமாறனையும் போலீசார் ûது செய்தனர்.
வைகோவை கைது செய்து கொண்டுபோகும்போது, சீலையம்பட்டி கிராம மக்கள் ஒன்றுதிரண்டு போலீசார் வேனை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வைகோவை விடுதலை செய்யக் கோரி கோஷம் எழுப்பினர். வைகோவை பேச அனுமதிக்குமாறும் கோஷம் எழுப்பினர்.
பின்னர் வைகோ, தனது கட்சி வாகனமான டெம்போ டிராவலர் வானத்தில் ஏறி பொதுமக்கள் மத்தியில் பேசினார். முல்லைப் பெரியாறு அணை பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும், அணையால் 5 மாவட்ட மக்கள் நலன் குறித்தும் விவரித்து பேசினார்.

கருத்துகள் இல்லை: