வெள்ளி, 29 மார்ச், 2024

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை- இலங்கையில் சம்பவம்

 hirunews.lk: கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!
முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்து வெளியிட்டதாக குற்றம்  சுமத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை: