![]() |
ராதா மனோகர் : 4-1-1971 ஆம் தேதி ஈழநாடு பத்திரிகை செய்தி
தமிழ்நாட்டில் சகல சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்துள்ள முன்மாதிரியை யாழ்ப்பாண சைவ மக்களும் பின்பற்றுவார்களா என்று நல்லூர் ஞானசம்பந்த ஆதீன மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ சுவாமி நாத தம்பிரானிடம் தமிழ்நாடு தெய்வீக பேரவை தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கேட்டார்.
இத்தகவலை சுவாமிநாத தம்பிரானே தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் நாவலர் காலந்தொட்டு வைதீக சைவம் வளர்ச்சீ பெற்று வருவதனால் இத்தகைய நடைமுறைகள் யாழ்ப்பாண மக்கள் ஒருபோதும் ஒத்து கொள்ள மாட்டார்கள் என்றும் அரசாங்கம் இது விடயத்தில் தலையிட மாட்டாதென்றும் தாம் அவரிடம் கூறியதாகவும் சொன்னார்.