வெள்ளி, 18 அக்டோபர், 2024

கோவை இஷா - போலீசார் 23 பக்க விரிவான அறிக்கை தாக்கல்- பலர் காணாமல் போயுள்ளனர் - உள்ளேயே தகனமேடை - காலாவதியான மருந்துகள்

 tamil.oneindia.com -Mathivanan Maran: தமிழக போலீஸ் பகீர் பதில்- கோவை ஈஷா மைய வழக்கை இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
டெல்லி: கோவையில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் இருந்து பலரும் காணாமல் போயிருக்கின்றனர்; ஈஷா யோகா மையத்துக்குள்ளேயே தனியாக தகன மேடையும் அமைக்கப்பட்டுள்ளது; ஈஷா யோகா மையத்தில் காலவதியான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்று உச்சநீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல்களை தமிழ்நாடு போலீசார் தெரிவித்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

சசிகலா : அ.தி.மு.க.வை பலப்படுத்தி 2026-ம் ஆண்டில் நிச்சயம் ஆட்சி அமைப்போம்:

 மாலை மலர் :   சென்னையில் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
அ.தி.மு.க. தற்போது சரியாக இல்லை. அ.தி.மு.க.வில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டியுள்ளன.
கட்சியை வலுப்படுத்தி 2026-ல் நிச்சயம் ஆட்சி அமைப்போம். சொத்து பிரிப்பது போல் அரசாங்கத்தைப் பிரித்துள்ளார்கள்.
பெரிய பிள்ளைக்கு இது, கடைக்குட்டி பிள்ளைக்கு இது என அந்தக் காலத்தில் பெரியவர்கள் சொத்து பிரிப்பார்கள். அதேபோல் தான் தற்போது இவர்கள் அரசாங்கத்தைப் பிரித்து வைத்துள்ளார்கள்.

வியாழன், 17 அக்டோபர், 2024

11 நிமிடங்கள்.. உலகில் முதல்முறையாக சொர்க்கத்துக்கு போய் வந்த பெண்?

tamil.oneindia.com - Hemavandhana   :  நியூயார்க்: சொர்க்கத்தில் தன்னுடைய அப்பா, அம்மாவை சந்தித்து விட்டு வந்ததாக ஒரு பெண் கூறி, மொத்த உலக மக்களுக்கும் ஆச்சரியத்தை கிளப்பிவிட்டுள்ளார்.. இந்த அதிசய சம்பவம்தான் பரபரப்பாக மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது.
ஆன்மாவுக்கும் என்றும் அழியவே அழியாது கிடையாது என்று ஆன்மீகம் காலம் காலமாக சொல்லி வரும்நிலையில், மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? என்பதை பற்றின ஆய்வுகள் இன்னமும் உலக அளவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..
மூளை செயலுடன் இருக்கும் வரைதான் நினைவுகள் மற்றும் செயல்கள் எல்லாமே.. மூளை செயலிழந்துவிட்டால், உடலும், நினைவுகளும் அழிந்துவிடும் அழிந்துவிடுவதால், மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை இல்லை என்கிறார்கள் பெரும்பாலானோர்.

மகாராஷ்டிரா - அகிலேஷ் யாதவ்: இந்தியா கூட்டணியில் கூடுதல் இடங்கள் ...

 மாலை மலர் : மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 288 இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் நாளை மகாராஷ்டிரா செல்கிறார்.

இலங்கை வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு - 2027ஆம் ஆண்டுக்குள்.. அரசு வருமானம் 15% ஆக உயர்த்தப்படவேண்டும்!

 இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு  - 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானம் 15% ஆக உயர்த்தப்படவேண்டும்!
ரணில் இன்று ஆற்றிய, உரையின் முழு விபரம்
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17) தெரிவித்துள்ளார்.
கொழும்பு, மால் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மீது கனடா பொருளாதார தடை விதிக்க ஆலோசனை

 

 மாலைமலர் : ஒட்டாவா - கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே இவ்விவகாரத்தை மீண்டும் கனடா கிளப்பியுள்ளது.
நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து இந்திய தூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 140 பேர் உயிரிழப்பு

 மாலை மலர் : அபுஜா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் சரக்கு ரெயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
இந்நிலையில், நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

புதன், 16 அக்டோபர், 2024

கடல் அலைகளை அலையாத்தி காடுகள் எப்படி எதிர்கொள்கின்றன

சுனாமி போன்ற பாரிய கடல் அலைகளை அலையாத்தி காடுகள் எப்படி எதிர்கொள்கின்றன
என்பதை இந்த காணொளியில் தெளிவாக காணலாம்  
அலையாத்தி மரங்கள்
விக்கிபீடியா   :    அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் (mangrove) எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு (Mangrove forest) எனப்படும். நிலமும் கடலும் சேரும் பகுதிகளில், சில இடங்கள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்தித் தாவரங்கள் இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இவை வளரும் இடங்கள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

அம்மா உணவகங்களில் இலவச உணவு'- முதல்வர் உத்தரவு

 நக்கீரன் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், தேனி ஆகிய 10 மாவட்டங்களிலும் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் போய்விட்டால் உங்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடுமே என்று பிரிட்ஷ்காரன் மலையக தலைவர்களை பார்த்து......

 ராதா மனோகர் : இலங்கை இந்திய வம்சாவளி மக்களை பார்த்து நாங்கள் போய்விட்டால் உங்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடுமே என்று பிரிட்ஷ்காரன் கேட்டபொழுது
நாங்கள் இலங்கையில் இடதுசாரி சோஷலிச அரசை நிறுவுவோம்  அங்கு சிங்களவர் தமிழர் பிரச்சனையே இருக்காது
எனவே இதைக்காட்டி நீங்கள் (பிரிட்டிஷ்) இங்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று பதிலடி கொடுத்தார்கள் இடதுசாரிகள்.
அதுமட்டுமல்ல மலையக மக்களின் வாக்குவங்கி மூலம் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ்காரன் தரவந்த பாதுகாப்பு விடயங்களை உதாசீனம் செய்து . நீ போ நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் என்றார்கள் இந்த இடதுசாரிகள்
சிங்கள மக்கள் மத்தியில் பெறமுடியாத செல்வாக்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகளால் ஈடு கட்ட முடியும் என்று நம்பி ஒரே கல்லில் பிரிட்டிசாரையும் பகைத்து சிங்கள மக்களையும் பகைத்து தங்களை நம்பிய இந்திய வம்சாவளி (மலையகம்) மக்களின் வாழ்வை சூறையாடிய வரலாற்று குற்றவாளிகள் இந்த இடது சாரிகள்.
சிங்கள மக்கள் ஒருபோதும் இடதுசாரிகள் பக்கம் பெரிதாக செய்யவில்லை  அவர்கள் பௌத்த சாசனத்தையே பின்பற்றுபவர்கள்
இந்திய வம்சாவளி மக்கள் இந்த இடது சாரிகள் பின்னால் போனதன் விளைவு இவர்களை கம்யூனிஸ்டுகள் என்று  கருதி பயந்தார்கள் சிங்கள மக்கள்
இதனால்தான் முதல் அடியிலேயே வாக்குரிமை குடியுரிமைகளை அவர்கள் பறித்தார்கள்.
இன்று வரை இந்த பெரிய மோசடியை எல்லோரும் சேர்ந்து திறமையாக மறைத்து விட்டார்கள்

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

 கலைஞர் செய்திகள்  - Praveen  :  சாம்சங் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்கள்.
இதன்படி அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்தைகளை நடத்தினார்கள்.
இப்பேச்சுவார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வயநாடு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 13-ஆம் தேதி

மின்னம்பலம் -Selvam :  வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 15) அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி போட்டியிட்டார். மேலும், அவர் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், அவர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதனால், ராகுல் காந்தி வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கனடா குற்றம் சாட்டிய, இந்தியா திரும்பப் பெறும் தூதரின் (சஞ்சய் குமார் வர்மா) பின்புலம் என்ன?

இந்தியா, கனடா

bbc.com :  கடந்த ஆண்டு கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ராஜதந்திரச் சிக்கலை உருவாக்கியுள்ளது.
இம்முறை, நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மாவின் பெயரையும் மற்ற இந்தியத் தூதரக அதிகாரிகளின் பெயரையும் கனடா தொடர்புபடுத்தியுள்ளது.
கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

செவ்வாய், 15 அக்டோபர், 2024

சாம்சங் பிரச்சனை அம்பானியின் சதி- விரிவான கட்டுரை

 Marudhamuthu Radhakrishnan   :  நண்பர்களே, அரை உண்மை, அரைக்கால் உண்மை, முழுப்பொய் என சாம்சங் குறித்த பரப்புரை பல வடிவங்களில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
ஆனால் முழு உண்மையே மக்களின் தேவை.
இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரக் களம் குறித்த புரிதல் இல்லாமல் இன்று நடைபெற்றுவரும் சாம்சங் போராட்டம் பற்றிய முழு உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியாது.
இந்தப் போராட்டத்தின் மூலம் மோடியரசின் பொருளாதாரத் துறை சார்ந்த ஒரு மோசடித் திட்டத்தை  விரிவாக விளக்க ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தச் சதிக்கு எவரும் பலியாகிவிடக் கூடாது.
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அந்த மாபெரும்  தவறைச் செய்து வருகிறது.
திருமா போலத் தெரிந்தேதான் செய்து வருகிறதா என்பது நம் முன் உள்ள கேள்வி.
முதலில் இந்தப் பிரச்சினையில் குற்றவாளியாக இருக்கும் சாம்சங் பற்றி ஆய்வோம்.
இது உலக அளவிலும், இந்தியச் சந்தையிலும் உச்ச இடத்தில் இருந்து வரும் நிறுவனங்களில் ஒன்று.

இலங்கை புதிய அரசு - இந்தியா அமெரிக்கா கனடா .. என்ன நடக்கிறது?

May be an image of 3 people and text

Annesley Ratnasingham :  What could be the secret behind giving strong recognition to Sri Lanka's political transition (NPP) by Western countries including America and Canada??

May be an image of map and text that says 'Ministry of External Affairs Government of India MENU Search What'sN New Media Center RTI India expels Canadian diplomats 国 October 14, 2024 The Government f India has decided in expel the following 1.Mr. Stewart Ross Wheeler Acting High Commissioner < Canadian Diplomats: 2. Mr. Patrick Hebert, Deputy High Commissioner 3. Ms. Marie Catherine Joly, First Secretary 4. Mr lan Ross David Trites, First Secretary 5. Mr. Adam James Chuipka, First Secretary 6. Ms. Orjuela, First Secretary They have been asked to leave India by or before 11:59 PM on Saturday, October 19, 2024. New Delhi October 14, 2024'

இலங்கையின் அரசியல் மாற்றத்திற்கு ( NPP ) அமெரிக்கா ,கனடா உட்பட மேற்கத்தைய நாடுகள் கடும் அங்கீகாரம் வழங்குவதில் ரகசியம் என்னவாக இருக்கலாம் ??..
JVP அல்லது NPP ஒரு மாக்சிஸ்ட் சிந்தனையாளர்கள் என்று தெரிந்தும் அந்த தீயை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மிக மிக நெருங்கி அன்பு செலுத்துவதை வெளிப்படையான காண கிடைக்கிறது .
உண்மையில் அமெரிக்காவின் சித்தாந்தத்தின் படி ஒரு போதும் மாக்சிஸ்ட் மற்றும் சோஷலிச கொள்கை கொண்ட கட்சிகள் அரசை ஆளுவதையும் அதிகாரதுக்கு  வருவதையும் எதிர்த்து மிகவும் கடுமையாக சூழ்ச்சிகளை செய்வார்கள் ..
.காரணம் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் மார்க்ஸிசிய ,சோஷலிச அரசுகள் நாட்டை  சீர் செய்து பொருளாதாரத்திலும் ,மக்களின் நலன்களிலும் , மக்களின் வாழ்க்கை தரம் ( quality of life ) வெற்றி பெறும் போது அந்த சித்தாந்தம் பக்கத்தில் இருக்கும் சிறிய ,பெரிய நாடுகளுக்கு கடத்தப்பட கூடும் என்ற பயம் எப்போதும் மேற்கத்தைய நாடுகளுக்கு இருந்து வந்தது .

தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் பலி! சாலை விபத்தில்

மணிமாறன் / விபத்தில் உருக்குலைந்த கார்

 தினமணி : கோவில்பட்டி அருகே கண்டெய்னர் மீது கார் மோதிய விபத்தில் தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் இன்று (அக். 14) பலியானார்.
நாலாட்டின்புத்தூர் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் மணிமாறனின் மகன் சதீஷ், தலையில் பலத்த காயத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறுதிச்சடங்கில் பங்கேற்றுத் திரும்பியபோது சோகம்
மதுரை தினபூமி நாளிதழில் முதன்மைச் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய திருநாவுக்கரசு இன்று (அக். 14) அதிகாலை தோவாளையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணியளவில் தோவாளையில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது.

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சீரற்ற காலநிலையால் 2 நாட்கள் ரத்து,

 மாலை மலர்  :  நாகப்பட்டினம் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் 4 நாட்கள் பயணிகள் கப்பல்(சிவகங்கை) போக்குவரத்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம், சூறைக்காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17-ந் தேதி(வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் 6 பேர் வெளியேற்றம்! ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விசாரணை...

 bbc.com  :  இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக.
2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த, காலிஸ்தானுக்கு ஆதரவான ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவுக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியான சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது.
கனடாவின் இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல சவால்களை எதிர்கொள்வதால் இந்த விவகாரம் இப்போது அரசியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது என்று இந்தியா கூறியுள்ளது.

திங்கள், 14 அக்டோபர், 2024

இலங்கை: இந்திய சினிமா படப்பிடிப்புக்காக ரயில் சேவை ஒரு வாரம் குறைப்பால் சர்ச்சை - என்ன நடக்கிறது?

இலங்கை, இந்தியா, திரைப்படம், ரயில் சேவை

BBC News தமிழ்  :   'மக்களை விட சினிமா பெரிதா?' - இலங்கையில் இந்திய சினிமா படப்பிடிப்புக்காக ரயில் சேவை குறைக்கப்பட்டதால் சர்ச்சை
‘பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்குப் பாதுகாப்பான, நம்பகமான, மற்றும் சரியான நேரத்தில் ரயில் போக்குவரத்துச் சேவையை குறைந்த செலவிலும் திறமையான முறையிலும் வழங்குவது’ இலங்கை ரயில்வே துறையின் நோக்கம்.
ஆனால், இதுகுறித்து இலங்கை பொதுமக்கள் இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காரணம்: இந்தியத் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு மலையகப் பாதையில் ரயில் சேவையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செக்ஸ் படங்களில் ஆண்களை ஏன் காட்டுவதில்லை?

Improve Your Male Sex Drive Immediately ...
Esther Vijithnandakumar :  பொதுவெளியில்  கிடைக்கும் போர்ன் வீடியோ (Porn) சரி அல்லது செக்ஸ் தளங்களில் செகௌஸ் காட்சிகளின்  எப்போதுமே ஒரு பெண்ணையும் பெண் உடலைத்தான் மிகத் துல்லியமாக காட்டுவார்கள் .
சன்னிலியோனியின் செக்ஸ் வீடிட்யோக்களில் அவருடைட்ய உடலை எத்தனை ஆயிரம் திசைகளில் முடியுமோ அத்தனை திசைகளிலும் கமராக்காரன் தன் முழு திறமையையும் கை வேலையை காட்டியிருப்பான் (கை வேலை என்றால் தப்பா யோசிக்காதீங்க படம் எடுத்தத சொன்னேன்)
ஆனால் சன்னியைத்தான் நாம் எல்லோருக்கும் தெரியும் சன்னியோட படுத்தவனை  எவனாவது ஒருத்தனை ஒருத்தனை  எம் நினைவில் இருக்கிறானா??
அப்படி ஏன் ஓர வஞ்சனை செய்றீர்கள் ஆண்களே?
 நீங்களும் உங்களை பலவிதமான ஏங்கிலில் உங்க முகத்தின் துடிப்பு சத்தம் விளையாட்டுக்களை துல்லியமாக காட்டினால் எமக்கும் உங்களை நினைவிருக்கும் உங்களையும் அவ்வப்போது பார்த்துக்கொள்ளலாம் ஒரு ஆத்திர அவசரத்துக்கு
பெண்களை மட்டும் இதில் காட்டி நீங்க உழைப்பது உழைப்புச் சுரண்டல்தானே மகான்களே

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா மறைவு: தலைவர்கள் இரங்கல்!

 மின்னம்பலம் -Selvam :  மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் கைதாகி சமீபத்தில் விடுதலையான டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா நேற்று (அக்டோபர் 12) காலமானார்.
அவரது மறைவிற்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், ஐ.ஏ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின்
பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மறைவு மனித உரிமைச் செயற்பாட்டுச் சமூகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும்.
தனது சுதந்திரமும் உடல்நிலையும் அச்சுறுத்தலில் இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி அவர்.

மோதும் ரணில், சஜித் அணிகள் – JVP க்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிட்டுமா?

வீரகேசரி : ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் ஒரு பெரும் அலையடித்து ஓய்ந்ததைப் போன்றதொரு அமைதி ஏற்பட்டது.
ஆனால், புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் தொடர்பான பேச்சுக்கள் மீண்டும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அனைவரும் எதிர்பார்த்ததைப் போன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் அரசியல்வாதிகளதும் கட்சிகளதும் எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கும் வகையிலேயே மக்கள் தீர்ப்பு அமைந்திருந்தது.
கடந்த பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 90க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்திருந்தனர்.

இந்தியாவில் ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புக்குத் தடை- சென்னை: பேராசிரியர் உள்பட 7 பேர் கைது!

ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர், சென்னை, முஸ்லிம்

BBC News தமிழ் - விஜயானந்த் ஆறுமுகம் :இந்தியாவில் ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் (Hizb-ut-Tahrir) அமைப்பைத் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் வியாழன் (அக்டோபர் 10) அன்று அறிவித்தது.
நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் உள்பட 7 பேரை என்.ஐ.ஏ (தேசியப் புலனாய்வு முகமை) கைது செய்துள்ளது.
என்ன நடந்தது? கைது செய்யப்பட்ட பேராசிரியர் தரப்பு கூறுவது என்ன?

வடஇந்திய மாநில மொழிகள் மீது நடத்தப்பட்ட பாரிய மொழிச்சுத்திகரிப்பு!

May be an image of 5 people and text

ராதா மனோகர் : களவாடப்பட்ட இந்திய மாநில தேசிய மொழிகள்!
வடஇந்திய மாநில மொழிகள் மீது நடத்தப்பட்ட பாரிய மொழிச்சுத்திகரிப்பு!   
மீள் பதிவு ராஜஸ்தான் குஜராத் மகாராஷ்டிரம் பஞ்சாப் வங்காளம் ஒடிஷா மேலும் பல மொழி பேசும் மாநில மொழி திரைப்படங்கள் பாடல்கள் பெரும்பாலும் அழிந்தே விட்டன.
தமிழ்நாடு முன்னெடுத்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள திரைப்படங்களும் பாடல்களும் இன்றும் உயிரோடு உள்ளன.
மாநில மொழிகளை தமிழ்நாடு காப்பாற்றியதன் மூலமாக கலைத்துறையிலும் ஊடக துறையிலும் பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரமாக தென்னிந்திய கலைத்துறை உயிரோடு இருக்கிறது.
இந்திய மக்கள் தொகையில் தமிழர்களின் வீதம் 6.7 மட்டுமே .ஆனால் தமிழ் திரைப்படங்களின் வியாபாரம் 2019 கணக்கின் படி இந்தியாவில்  13 வீதமாகும்  

சனி, 12 அக்டோபர், 2024

NCP தலைவர் பாபா சித்திக் சுட்டு கொலை! மகராஷ்டிராவில் பெரும் பரபரப்பு! 3 பேரை கைது!

 tamil.oneindia.com -Rajkumar R  : மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவருமான பாபா சித்திக் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை தொடர்பாக மூன்று பேரை கைது செய்து மகாராஷ்டிரா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸில் முக்கிய சக்தியாக வளம் வந்தவர் பாபா சித்திக், மகாராஷ்டிரா பொருத்தவரை காங்கிரஸின் பலம் பொருந்திய இஸ்லாமிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார்.