செவ்வாய், 15 ஏப்ரல், 2025

மாநில சுயாட்சி களத்தை முதல்வர் ஸ்டாலின் கவனமாக அதேசமயம் மிக துணிவோடு திறந்து விட்டுள்ளார்!

 ராதா மனோகர் : தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்
ஆற்றிய உரை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாகத்தான் எனக்கு தோன்றுகிறது!
வெறும் தேர்தல் அரசியலை தாண்டி உபகண்ட மாநிலங்களின் ஒட்டு மொத்த நலனையும் கருத்தில் கொண்டு அளந்து அளந்து எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் மிக பெறுமதி வாய்ந்தவை
எவராலும் இலகுவில் கடந்து போக முடியாத காத்திரம் நிரம்பிய மாநில சுயாட்சி களத்தை இதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து விட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த உரையை இந்திய ஒன்றிய மக்கள் மட்டுமல்லாது
முழு உலகிலும் உள்ள பல ராஜதந்திர மட்டங்கள்  கவனமாக செவி மடுத்திருக்கும் என்பதில் எனக்கு துளி கூட சந்தேகம் கிடையாது!  

12 ஆம் நூற்றாண்டு சிங்கள கற்பாறை! பௌத்தத்தை காப்பாற்றிய திராவிட மொழி என்ற பெருமை சிங்கள மொழிக்கு உண்டு

ராதா மனோகர்  சிங்கள மொழியின் ஒரு ஆதார கல்வெட்டாக 12 ஆம் நூற்றாண்டு கற்பாறை!
இலங்கை பொலநறுவை என்ற இடத்தில்,
ஒரு நீண்ட கற்பாறை மீது சிங்கள மொழியில் பல செய்திகளை செதுக்கி வைத்திருக்கிறார்கள்
சிங்கள மொழியை கற்க விரும்பும் எவருக்கும் சரியான வழி காட்டியாக இந்த கல் புத்தகம் பேருதவியாக  இருக்கும் என்று இந்த காணொளியில் சிங்கள மொழியில் கூறப்படுகிறது
இது மன்னர் நிசங்க மல்லாவின் (1187-1196) புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும், இதில்  நிசங்க மன்னரின்  ஆட்சி பற்றிய விபரங்களும்
அவர்  இலங்கையின் அரசராக இருப்பதற்கான தகுதியை விவரிக்கிறது.
26'10 "அடி (8.2 மீட்டர்) நீளமும், 4'7" அடி (1.4 மீட்டர்) நீளமும் கொண்ட இந்த பாரிய கற்பாறை
மஹியங்கனா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இப்பாறையில்  3 நெடுவரிசைகளில் எழுதப்பட்டுள்ளது
மொத்தமாக  7200 வரிகளில் 4300 க்கும் மேற்பட்ட சொற்களை கொண்டுள்ளது.

. இந்திய இலங்கை அரசமைப்பு சட்டங்கள்

May be an image of 1 person

 Kulitalai Mano:  அரசியலமைப்பு சாசன  குழு என்பது 22குழுக்கள்
அதில் ஒன்றான வரைவுக்  குழுவில்,
அல்லாடி கோபால்சாமி
மிட்டர் முன்ஷி  ராவ்
பீமாராவ் அம்பேத்கார்
சதாயுல்லா  கேதான்
என சடடம் தெரிந்த மேதைகள் பலர் இருந்தனர்.
ஆனாலும்  இந்த மேதைகள்  எழுதிய அரசியல் சட்டம் அல்ல இது!
1935ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆங்கிலேய அரசின் அரசியல் சாசனத்தை காப்பி அடித்தும்
உலக நாடுகள் பலவற்றின் சிறந்த சட்டங்களை சேர்த்தும்
இன்று இருக்கும் அரசியல் சட்டம் எழுதப்பட்டது
இந்த ஒட்டு போட்ட சட்டையை இத்தனை தையலர்கள் தைத்தும் கடைசியில் அணிந்த போதுதான் பாரதமாதாவிற்கு கோட் சூட் தைத்திருக்கிறார்கள் என்பதே தெரிந்தது

டாக்டர் பெஞ்சமின் ( மலையகம்) கந்தன் கருனையில் படுகொலை செய்யப்பட்டு 27 வருடங்கள் ....(13.04.1987

No photo description available.

மீராபாரதி வ.க.செ :  டாக்டர் பெஞ்சமின் ( மலையகம்)  அவர்கள் கந்தன் கருனையில் படுகொலை செய்யப்பட்டு 27 வருடங்கள் முடிந்து விட்டன....(13.04.1987) அதன் நினைவாக... தற்செயலாக திகதியைக் கண்டபோது....
இவர் அட்டன் ஹைலன்ஸ் கல்லுரியின் எனக்கு சிரேஸ்ட மாணவராக 80களில் கல்வி கற்றவர்.
பின் அப்பா ஈபிஆர்எல்எவ் உடன் வேலை செய்தபோது மீண்டும் அறிமுகமானார். ஆனால் விரைவில் அவரை இழந்தோம்.....
குறிப்புக்கு நன்றி இளங்கோ.

மீராபாரதி வ.க.செ : தமிழ்ப் பெண்புலியும், என்/எங்கள் அனுபவங்களும்...
http://tinyurl.com/aztn99p
"நிரோமியின் தாயார் இந்திய வம்சாவளியினராய் இருந்தததால் நிரோமியின் தாயை, தகப்பனின் உயர்சாதி சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே இருக்கின்றது.

மாநில சுயாட்சி என்பது மாநில நலன் மட்டுமல்ல. இந்திய நலனும் சார்ந்ததும் தான். Surya Xavier!

May be an image of 10 people and text that says 'BREAKING NEWS SUN ANEWS முக்கிய அறிவிப்பு! மாநில சுயாட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் மாநில சுயாட்சியை உறுதி செய்ய நடப்பு கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். SUNNEWSTAMIL ® SUNNEWS sunnewslive.in 15 AP APR 2025'

Surya Xavier :  *மாநில சுயாட்சி!    -ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு!.
* இந்தியா என்பது தேசமல்ல.  பல தேசங்களின் ஒன்றியம் தான்!.
* இந்தியா என்றால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பார்கள்.
1947 ஆகஸ்ட்-15 இந்தியா விடுதலையடையும் போது காஷ்மீரும், கன்னியாகுமரியும் இந்தியாவோடு இல்லை என்பதே வரலாறு.
* கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டிலும், காஷ்மீர் ஹரிசிங் மன்னனால் அங்குள்ள சமஸ்தானத்திலும் இருந்தது.
* வெள்ளையர்கள் வருகைக்கு முன்பு இந்தியா என்ற இன்றைய நிலப்பரப்பு முழுமையும் எவராலும் ஆளப்படவில்லை.
* கி.மு.5- 6 நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த மகதப் பேரரசு தொடங்கி,
மௌரியப் பேரரசு 

தமிழ்நாடு மாநில சுயாட்சி தீர்மானம் சட்டமன்றத்திற்கு இன்று வருகிறது

 tamil.news18.com = l akshmanan G : 5 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டுக்கான நிதிஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவருவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த 25-ஆம் தேதி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை உறுதிசெய்து மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில், விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஆங்கில பாடபுத்தகங்களுக்கு இந்தியில் பெயர்கள் - வடநாட்டு இந்தி வியாதி - NCERT naming English textbooks in Hindi

ஆங்கில பாடப் புத்தகங்களுக்கு சத்தமில்லாமல் இந்திப் பெயர்கள் சூட்டல் - சர்ச்சையைக் கிளப்பிய NCERT

மாலை மலர் :  மத்திய அரசின் பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய சர்சையில் சிக்கி உள்ளது. NCERT பாடமுறையின் கீழ் தமிழநாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கும் இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டுகளில் ஹனிசக்கிள் மற்றும் ஹனி கோம்ப் என்று பெயரிடப்பட்ட ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் இந்த முறை பூர்வி என்று பெயரிடப்பட்டுள்ளன. பூர்வி என்ற இந்தி வார்த்தைக்கு கிழக்கு என்று பொருள்.

திங்கள், 14 ஏப்ரல், 2025

ரூ.13,500 கோடி மோசடி: வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது

BBC tamil :  இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ வேண்டுகோளின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானது.. தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு

 tamil.oneindia.com  - Mani Singh S :  சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர் என் ரவி அனுப்பியது தவறானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஆளுநர் ஆர் என் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
10 மசோதாக்களும் சட்டமானதால் துணைவேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசின் வசமானது.

சனி, 12 ஏப்ரல், 2025

ஆரிய மனுவாதமும் திராவிட கோட்பாடும் நேரெதிராக மோதிக்கொண்ட London privy council வழக்கு

 ராதா மனோகர் : 1868 இல் ராமநாதபுரம் ஜாமீன் அரசு வாரிசுரிமை  வழக்கு லண்டன் பிரிவி கவுன்சிலில் நடந்தது பற்றி  தோழர் அருள்மொழி தெளிவாக கூறியதை பார்த்தேன்.
ஆரிய மனுவாதமும் திராவிட கோட்பாடும் நேரெதிராக மோதிக்கொண்ட வழக்கு அது!
திராவிட கோட்பாட்டின் மனித உரிமை விழுமியம் வெற்றி பெற்ற வரலாறு அது.
ஏறக்குறைய இதே போன்றொதொரு வழக்கு 1971 ஆக்டொபர் மாதம் யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் நுழைவு பற்றியும் நடந்தது.
ஒடுக்க பட்ட மக்களின் கோயில் நுழைவுக்கு எதிராக ஆதிக்க ஜாதியினர் ஆரிய மனுவாதிகளின் ஏவல் பேய்களாக அடக்குமுறையை அவிழ்த்து விட்டிருந்தார்கள்!
நீதிமன்றங்களிலும் இது எதிரொலித்தது. 

இவ்வழக்கின் உச்ச நிகழ்ச்சியாக கோயில் நுழைவிக்கு எதிராக  லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தார் முன்னாள் அமைச்சர் சி சுந்தரலிங்கம்!  

அண்ணாமலை -. சரத்குமார் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு!

 tamil.oneindia.com - Halley Karthik : சென்னை: அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது சரத்குமாருக்கும் பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 17 ஆண்டுகளாக தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் கடந்த ஆண்டு சரத்குமார் இணைத்திருந்தார். இதற்கு பலனாக தேசிய ஜனநாயக கூட்டணியில் ராதிகா சரத்குமாருக்கு எம்பி சீட் வழங்கப்பட்டது.

அதிமுக - பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி தலைமையில் - சென்னையில் அமித் ஷா!

 Hindu Tamil  : சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக - பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித் ஷாவை, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா கூறியது: “பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். அதிமுக -பாஜக மற்றும் பிற கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும். இதை அறிவிக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு.

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா! பொன்முடி விடுவிக்க படுகிறார்

 Hindu Tamil :   திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கழக சட்டதிட்ட விதி: 17 - பிரிவு :3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி.யை, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது புதிதாக 15 வழக்குகள்! பெண் காவலர்கள் குறித்து அவதூறு|

 Hindu Tamil  : கோவை மாநகர சைபர் க்ரைம் பிரி​வில் உதவி ஆய்​வாள​ராகப் பணி​யாற்றி வந்த சுகன்யா கடந்த​ஆண்டு மே மாதம் அளித்த புகாரில், ‘பெண் காவலர்​கள், உயர​தி​காரி​கள் குறித்து அவதூறாகப் பேசிய சவுக்கு சங்​கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று கூறி​யிருந்​தார்.
 அதன் பேரில், போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து சங்​கரை கைது செய்தனர்.
தொடர்ந்​து, பல்​வேறு காவல் நிலை​யங்​களில் சங்​கர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

உதயநிதி- செந்தில்பாலாஜி உரசலா?

minnambalam.com -   Aara :  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களிலும் பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான்.
யாருக்கு தேதி கொடுக்கிறாரோ இல்லையோ அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டால் எத்தகைய நெருக்கடியான சூழலாக இருந்தாலும், செந்தில்பாலாஜி கேட்ட தேதியை கொடுத்து விடுவார் துணை முதல்வர்.
ஆனால் சமீப நாட்களாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருவார் வருவார் என சொல்லப்பட்டு, அந்த நிகழ்ச்சிக்காக போடப்பட்ட பிரம்மாண்ட பந்தலும் கூட, காத்திருந்து சில நாட்களுக்கு முன்புதான் அது பிரிக்கப்பட்டது. Ud
இதை சுட்டிக்காட்டி கோவை, கரூர், சென்னை அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

இசை நிகழ்ச்சியில் கூரை இடித்ததில் 200 பேருக்கு மேல் உயிரிழப்பு - டொமினிக்கன் ரிபப்லிக் Domican republic

malaimaalrமாலை மலர் :  சாண்டோ டொமிங்கோ:கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது.
இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள்.
அந்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வியாழன், 10 ஏப்ரல், 2025

லண்டன் நீதிமன்றத்தில் ராமநாதபுரம் ஜாமீனை அன்று காப்பாற்ற்றிய திராவிட சித்தாந்தம்!

 ராதா மனோகர் : தோழர் அருள்மொழியின் இந்த காணொளியை கண்டிப்பாக பாருங்கள்.
கடந்து போய்விடாதீர்கள். இதில் முக்கிய வரலாற்று செய்தி இருக்கிறது.
1868 இல் ராமநாதபுரம் ஜாமீன் அரண்மனையில் நடந்த  ஒரு வழக்கு!
1850 களில் ஜமீன்தார் இறந்துவிட்டார்
அப்போது ஜாமீன் இளவரசராக திரு முத்துராமலிங்கம் என்பவர் தத்து எடுக்கப்படுகிறார்.
அப்போது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி  ஒரு சட்டம் போடுகிறது!
அது டாக்ட்ரின் ஆப் லாஷ் என் குளோஸஸ் (The doctrine of laches)
அதாவது ஒரு மன்னரோ ஒரு ஜமீனோ வாரிசு இல்லாமல் காலமாகி விட்டால் அந்த பகுதியின் மீது அவர்களின் உரிமை போய்விடும்
அது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கு முற்று முழுதாக  சொந்தமாகி விடும்.
அவர் மனைவி உயிரோடு இருக்கும் காலம் வரைக்கும் அவர் இருக்கலாம்.
அதன் பின்பு அந்த பகுதி  பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியோடு இணைக்கப்படும்.

அரசியல்னா CBI, ED, IT, EC, Supreme Court மாநில கட்சிகளை மிரட்டி, கட்சியை உடைத்து, பணம் பறிக்கிற வேலை?

May be an image of 1 person and text

 Kandasamy Mariyappan :  அரசியல்னா என்னான்னு தெரியுமா..!?
டெல்லியில் உட்கார்ந்து கொண்டு CBI, ED, IT, EC, Supreme Court,  ராணுவத்தை வைத்து, மாநில கட்சிகளை மிரட்டி, கட்சியை உடைத்து, பணம் பறிக்கிற வேலை என்று நினைத்தாயா...!!!
May be an image of 2 people

பணக்காரரான நடேசன் முதலியார், மருத்துவம் படித்துவிட்டு, Practice பண்ணலாம் என்று வந்தால்......
கல்லூரி, மருத்துவமனை, நீதிமன்றம், அரசியல் என்று எல்லா இடங்களிலும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே உட்கார்ந்து கொண்டு ஆதிக்கம் செய்ததை சகிக்க முடியாமல்..,
நம்ம பசங்களையும் படிக்க வைப்போம் என்று, எல்லோரும் வாங்க, படிங்கன்னு விடுதியை கட்டி...
பிறகு பார்ப்பனர்கள் இல்லாதவர்கள் சங்கம் என்று உருவாக்கி, அதை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று மாற்றி...
டாக்டர் மாதவன் நாயரையும், கபாலீசுவரர் கோவிலில் அவமானப்பட்ட பணக்காரர் திரு. தியாகராயரையும் சேர்த்துக்கொண்டு Justice partyஐ தொடங்கி அதை நீதிக்கட்சியாக மாற்றி, சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேண்டும் என்று கேட்டு,
உடல்நிலை சரியில்லாமல் இருந்த பொழுதும் நம்ம மக்களோட எதிர்காலம் முக்கியம் என்று இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கே சென்று சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேண்டும் என்று கேட்டு, அங்கேயே டாக்டர் மாதவன் நாயர் தன் உயிரை விட்டு...
மான்டேக் - செம்ஸ்ஃபோர்ட் கொடுத்த Quashi Federalஐ பயன்படுத்தி தேர்தலில் நின்று ஆட்சியை பிடித்து...

புதன், 9 ஏப்ரல், 2025

திமுக எம்.பி.வில்சன் : நீதிமன்ற தீர்ப்பு அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும்:

 hindutamil.in : நீதிமன்ற தீர்ப்பு அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும்: திமுக எம்.பி.வில்சன் தகவல்
சென்னை: தமிழக அரசு - ஆளுநர் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக ஆளுநருக்கு மட்டுமின்றி, அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்று திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி - தமிழக அரசு இடையிலான வழக்கின் தீ்ர்ப்பு நேற்று வெளியான நிலையில், தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, திமுக எம்.பி. வில்சன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கை வடபகுதிக்கு மகாவலி நீர் - 27 கிலோமீட்டர் நீளமான நீர் சுரங்க பாதை!

May be an image of train and railroad


Mohamed Ali Yaseer Arafath  : இலங்கை வடபகுதிக்கு மகாவலி நீர் செல்வதற்காக  நிர்மாணிக்கப்பட்டு வரும் 27 கிலோமீட்டர் நீளமான நீர் சுரங்க பாதை!
தெற்காசியவிலேயே மிக நீளமான Northcentral Canal நீர்ச்சுரங்கம் இது!.
இதுதான் உண்மையான வடக்கின் வசந்தம்!
நூறு ஆண்டுகளுக்கு முதல் யாழ்ப்பாண புத்திசாலி சமூகம் ( மகாதேவா அறிக்கை) பரிந்துரை செய்த வடக்கு திசையில் மஹாவலி திசைதிருப்பம் படிப்படியாக நிறைவேறுகிறது.
மொரகஹகந்த நீர் மஹாகனதராவை அடைந்து,
 பின்னர் கனகராயன் ஆறு வழியாக,
 யாழ்ப்பாணம் நீரேரி தொண்டமானாறு வரை சென்று,
 பருத்தித்துறை முனைக்கு அண்மையில் மஹாவலி நீர் வெளியேறும்,
 யாழ்ப்பாணம் சுண்ணாம்பு பாறை நிலத்தடி நீர் உப்பாதலை தடுக்கும்

சமூக ஊடகங்களை விட்டு Shalin Maria Lawrence ஏன் ஒதுங்க முடிவு செய்தார்?

May be an image of 1 person and text

Ponni Brinda :  It's such a pity. நம்மூரில் அரசியல் பேசுற பெண்களே ரொம்ப கம்மி. எனக்கு எல்லாத்துலயும் உடன்பாடு இல்லை என்றாலும் இவுங்க நிறைய நல்ல கருத்துக்கள் பதிவு செய்வாங்க. கட்சி சார்ந்து அரசியல் பேசுற பெண்கள் மத்தியில் இவுங்களோட சொந்த குரல் எனக்கு பிடிக்கும்.  ஆனா நான் சாதாரணமா ஒரு கேள்வி கேட்க போய் அவங்களுக்கு பதில் சொல்ல மறுக்க நானும் வழக்கம் போல் திருப்பி திருப்பி கேள்வி கேட்க விவாதம் முத்தி unfriend செஞ்சுட்டாங்க என்னை.   அதுக்கப்புறம் இவங்க பதிவுகளை நான் பார்த்ததில்லை. சிலது நியாயமான விமர்சனமா இருந்தாலும், unfortunately, நிறைய பேர் online bullying இவங்கள செஞ்சாங்கனு நினைக்கிறேன். தனியாளாய் இருந்து அதை எதிர்கொண்டது பாராட்டுக்குரிய விஷயம் தான் but it takes a mental toll. Every silenced voice is a loss for us.

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

தமிழக சட்ட மன்ற வரைவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது! உச்ச நீதிமன்ற தீர்ப்பு

 Hindu Tamil :  தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.
‘தமிழக ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அரசியலமைப்பை நீர்த்துப் போகச் செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி’ என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள்:

ஒரு முன்னாள் புலியின் ஒப்புதல் வாக்குமூலம்! கூர்வாளின் நிழலில் இருந்து..

May be an image of 4 people

பொன். கரிகாலன் :  கூர்வாளின் நிழலில் இருந்து..
புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி எழுதிய நூலில் இருந்து
ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த சமாதான முன்னெடுப்புகள் ஒரு புறம் இருக்க, இயக்கத்தின் உள் கட்டமைப்புகளில் பல மாறுதல் கள் ஏற்ப்பட தொடங்கின.
அதில் முக்கியமானது இயக்கத்தின் ஆளணி பலத்துடன் தொடர்பு டையது, இயக்கத்தின் ஆணி வேரே அதில்தான் அடங்கியிருந்தது.
அது கொஞ்சம் கொஞ்ச மாக ஆட்டம் காணத் துவங்கி இருந்தது.
கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா அம்மான் தன்னுடைய கட்டுப் பாட்டில் இருந்த ஆயிரக்கணக் கணக்கான போராளிகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கத் தில் இருந்து பிரிந்து செல்வ தாக அறிவித்து இருந்தார்.

அமைச்சர் நேரு வீட்டில் ED ரெய்டு... 12 ஆண்டுகளுக்கு பிறகு சோதனை ஏன்? - என்.ஆர்.இளங்கோ கேள்வி! -

nnambalam.co - Selvam : அரசியலமைப்பின் படி தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பும் போதெல்லாம் அதனை எதிர் கொள்ள முடியாமல் காலங்கடந்து சட்டத்தை மீறி திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுகின்றன என்று திமுக சட்டத்துறை செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ எம்.பி தெரிவித்துள்ளார். ED Raids in Minister KN Nehru House
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பலூர் எம்பியுமான அருண் நேரு, அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை நேற்று (ஏப்ரல் 7) சோதனை நடத்தியது.

அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றுத் திறனாளிகள் கண்டனம்

 hindutamil.in : சென்னை: தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஊனமுற்றவர்களை மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு `ஊனமுற்றோர்' என்ற சொல்லையே தவிர்த்து `மாற்றுத் திறனாளிகள்' என குறிப்பிட்டதோடு, அத்துறையின் பெயரையும் மாற்றுத் திறனாளிகள் துறை என மாற்றினார்.
மேலும், அத்துறைக்கு அவரே பொறுப்பான அமைச்சராகவும் இருந்தார். அதேபோன்று, தற்போதும் திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பாளராக உள்ளார்.