தினமலர் : கொழும்பு : அதானி நிறுவனத்தின் எரிசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், இந்தியா உடனான இலங்கையின் வர்த்தக உறவு பாதிக்கப்படும் என, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவியபோது, அதிபராக இருந்தவர் ரனில் விக்ரமசிங்கே. அவரது ஆட்சியின்போது, இந்தியாவுடன் எரிசக்தி, வேளாண்மை, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் மேற்கொண்டு பொருளாதார நிலையை சீரமைத்தார்.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
செவ்வாய், 25 மார்ச், 2025
அதானி நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்வதா; இலங்கை அதிபருக்கு ரனில் கண்டனம்
திங்கள், 24 மார்ச், 2025
சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்
![]() |
Hindu Tamil : : “ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில், அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள். இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்துக்குரியது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (மார்ச் 24) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்துக்குரியது.
ஞாயிறு, 23 மார்ச், 2025
நீயா நானா .. தடை செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நடந்தது என்ன? கலந்து கொண்டவரின் அனுபவம்
![]() |
Ravishankar Ayyakkannu : நீயா நானாவில் கலந்து கொள்ளப் போகிறேன் என்று சொன்ன போதே "நமக்கு எதுக்குப்பா இந்த அரசியல் வம்பு எல்லாம்?
இது தேவையா? பார்த்துப் பேசுப்பா" என்று தான் வீட்டில் சொன்னார்கள்.
"இது பதிவு செய்து edit பண்ணி ஒளிபரப்புகிற நிகழ்ச்சி. நாம வில்லங்கமா பேசினாலும் அவங்க அதையெல்லாம் நீக்கிட்டுத் தான் ஒளிபரப்புவாங்க.
நம்மைவிட TVக்குத் தான் இதில் risk அதிகம்"னு சொல்லித் தான் அவங்களைச் சமாதானப்படுத்தினேன். ஆனால், முழு நிகழ்ச்சியே ஒளிபரப்பப்படாமல் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஏனென்றால், அப்படித் தடை செய்யப்படுகிற அளவுக்கு அங்கு எதுவும் பேசப்படவில்லை. எல்லாமே ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி விவாதங்களிலும் சமூக ஊடகங்களிலும் எல்லோரும் அடித்துத் துவைத்துக் காயப் போட்ட அதே வாதங்கள்தாம்.
சனி, 22 மார்ச், 2025
கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு! 'புலிகளை எதிர்த்து வெற்றியடைந்தவர்கள் நாங்களே' கூட்டாக அறிவிப்பு
BBC News தமிழ் : விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் 21 வருடங்களின் பின்னர் அரசியல் ரீதியில் இணைந்துள்ளனர்.
மட்டக்களப்பில் இன்று (22) இடம்பெற்ற சந்திப்பின் போது, இருவருக்கும் இடையில் கனவான் என்ற பெயரிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தாம் மீண்டும் இணைந்துக்கொண்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
அநீதியான ச மத்திய அரசு செயல்படுமானால், அது கூட்டாட்சியை மாற்றிவிடும்! கர்நாடக டிகே சிவகுமார்!
hindutamil.in : சென்னை: “தொகுதி மறுரையறை என்பது எண்களைப் பற்றியது அல்ல; அது நமது அடையாளத்தைப் பற்றியது.” என்று கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய டிகே சிவகுமார், “தமிழக முதல்வர் சகோதரர் மு.க.ஸ்டாலின் கூட்டி இருக்கும் இந்த கூட்டத்தில், தென் மாநிலங்கள் ஒன்றுபட்டு நிற்கின்றன. இது பாராட்டுக்குரியது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காலில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக இன்று கூட்டத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
வெள்ளி, 21 மார்ச், 2025
லண்டன் விமான நிலையம் மூடப்பட்டது- தீ விபத்து -பயணிகள் வெளியேற்றம்-
மாலை மலர் : லண்டன் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் உள்ளது.
இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் உலகின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடிய துணை மின் நிலையத்தில் நேற்று இரவு 11.23 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் கடுமையான புகை மூட்டமாக இருந்தது.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.
கல்வி இனி மாநிலங்களின் பொறுப்பில்தான் .அமெரிக்காவில் அதிரடி காட்டிய அதிபர் டொனால்ட்!
ராதா மனோகர் : கல்வி இனி மாநிலங்களின் பொறுப்பில்தான் . டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!
அமெரிக்க மத்திய அரசின் பொறுப்பில் இதுவரை காலமும் இருந்த கல்வியை மாநிலங்களுக்கு அளிக்கும் முடிவை அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!
நீண்ட காலங்களாக மாநிலங்கள் வலியுறுத்தி வந்த இந்த உரிமையை,
மாநிலங்களுக்கு வழங்குவதன் மூலம் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரலாற்றில் முக்கிய இடத்தை பெறுகிறார்
வேல்முருகனை எச்சரித்த ஸ்டாலின்... சட்டமன்றத்தில் நடந்தது என்ன?
மின்னம்பலம் - Selvam : சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 20) சபாநாயகர் அப்பாவு இருக்கை முன்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கோஷமிட்டதால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. stalin warned velmurugan assembly
அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு, தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும் என்பது குறித்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ பேசிய கருத்துக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இதனையடுத்து தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்த வேல்முருகன், சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக வந்து கோஷம் எழுப்பினார்.
உத்தர பிரதேசம் - 0மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல - அலகாபாத் உயர்நீதிமன்றம் !
மாலை மலர் : பெண்ணின் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வியாழன், 20 மார்ச், 2025
தமிழ்நாடு - அதிரடி ரிப்போர்ட்...... ஒன்றிய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!
![]() |
Maha Laxmi : இது ஒன்றை கழித்து விட்டால் நிர்வாகமே ஆட்டம் கண்டு விடும்..!!அவர்களை சீண்ட வேண்டாம்.!
ஆங்கில இணையம் கொடுத்த அதிரடி ரிப்போர்ட்......
மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!
தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்.. தனியாக பிரித்து விட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்....
ஒட்டு மொத்த இந்தியாவின் ஜி.டி.பி அளவையும் ஒப்பிடும் போது வடகிழக்கு மாநிலங்கள் மொத்தமாக சேர்ந்து அளிக்கும் வருமானத்தை விட தமிழ்நாட்டின் வருமானம் அதிகம் என்கின்றது புள்ளி விவரம்...
அமெரிக்காவில் 60 ஆயிரம் ராணுவ ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்
தினத்தந்தி : உலகின் சக்தி வாய்ந்த ராணுவ கட்டமைப்பு கொண்ட நாடு அமெரிக்கா! . ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்த நாட்டில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசாங்கத்தின் செலவை குறைக்கும் வகையில் அரசுத்துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
உலகின் சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்ட அமெரிக்காவின் ராணுவ தலைமை கட்டிடமாக பென்டகன் உள்ளது. இந்த ராணுவ தலைமையிடத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
PTR : இந்தியாவின் பிற பகுதிகள் தமிழ்நாட்டிடமிருந்து ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?
![]() |
மின்னம்பலம் : 1990இல் இந்தியாவும் சீனாவும் கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருந்தன. தனிநபர் வருமானங்கள் முறையே $368, $318 ஆக இருந்தன.
1970களின் பின்பகுதியில் சீனா தாராளமயமாக்கலைத் தொடங்கினாலும் வளர்ச்சி உச்ச வேகத்தை அடையாமல் இருந்தது;
ஆனால் அடுத்த 30 ஆண்டுகள் சீன யுகமாக விளங்கின: உலகளாவிய உற்பத்தி, வர்த்தகம், கரன்சி கையிருப்பு ஆகியவை மூலம் உலகம் இதுவரை கண்டிராத செல்வத்தை அந்நாடு குவித்தது.
சீனாவின் தனிநபர் வருமானம் $12614 – தற்போதைய இந்தியாவின் தனிநபர் வருமானமான $2480-ஐ விட ஏறத்தாழ 5 மடங்கு – என விஸ்வரூபமெடுத்தது.
காவலாளியை சிறை பிடித்த யானைகள்! வன அதிகாரிகளால் மீட்கப்பட்டார்! இலங்கையில் சம்பவம்
வீரகேசரி : யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்
காட்டு யானைகளின் ஆக்கிரமிப்பினால் வயல் வெளியில் காவல் நின்றவர் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) மாலை இடம்பெற்றது.
சுமார் 50 க்கும் அதிகமான யானைகள் வயல் அறுவடையின் பின்னர் மேற்குறிப்பிட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உட்புகுந்து அங்கு புதிதாக முளைத்துள்ள புற்களை உண்டு வருவதுடன் சட்டவிரோதமான குப்பைக்கூளங்களும் நாடி வயல் வெளிகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றன.
புதன், 19 மார்ச், 2025
சுனிதா வில்லியம்ஸ்: ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் கடலில் இறங்கியது எப்படி? புகைப்படத் தொகுப்பு - BBC News தமிழ்
![]() |
புளோரிடா கடலில் டிராகன் கலன் இறங்கியதும் அதனைச் சுற்றிலும் டால்பின்கள் துள்ளிக் குதித்த காட்சி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியுள்ளார். இந்திய நேரப்படி, இன்று (19/03/2025) அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.
மது அதிகம் விற்பனையாகும் மாநிலம் உத்தரபிரதேசம் மிக குறைந்தளவு தமிழ்நாடு
![]() |
ராதா மனோகர் : இந்தியாவில் அதிகமாக மது விற்பனையாகும் மாநிலம்
1 உத்தரபிரதேசம் 21.8
2 கர்நாடகம் 20.6
3 மத்திய பிரதேசம் 19.9
4 மேற்கு வங்காளம் 17.7
5 தெலுங்கானா 15.7
6 ராஜஸ்தான் 14.2
7 ஹரியானா 13.7
8 ஆந்திர பிரதேஷ் 11,3
முழு இந்திய புள்ளி 12.5
தமிழ்நாடுதான் ஆக குறைந்த அளவு மதுவிற்பனை மாநிலம் 5 8
உதவித்தொகை நிறுத்தமா? - கூடையில் ஊனமுற்ற மகனை தூக்கிக்கொண்டு ஓடிவந்த பெற்றோர்
மின்னம்பலம் - vanangamudi : கடந்த 6 மாதமாக ஊனமுற்றோர் உதவித்தொகை கிடைக்காததால், தங்களது மாற்றுத்திறனாளி மகனை கூடையில், தூக்கிக்கொண்டு கலெக்டரிடம் உதவிக்கேட்டு வந்த சம்பவம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள மேல் காரணை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் – காளியம்மாள் தம்பதியர். இவர்களின் மகன் கோவிந்தன் (வயது 25). disability scholarship is stop or not?
இந்த நிலையில் மாற்றுத்திறனாளியான அவரது மகனுக்கு உதவித்தொகை கடந்த ஆறு மாதமாக வரவில்லை.
செவ்வாய், 18 மார்ச், 2025
ஜாஹீர் உசேன் கொலை - ஓய்வுபெற்ற காவல் அதிகாரி - ஸ்டாலினுக்கு எதிராக குவியும் கண்டனம்!
மின்னம்பலம் - christopher : ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அரசியல் தலைவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எஸ்.ஐ ஜாஹீர் உசேன். நெல்லை டவுன் தடிவீரன் கோயில் தெருவில் வசித்து வந்தார்.
ரம்ஜான் நோன்பு இருந்து வரும் அவர், இன்று (மார்ச் 18) அதிகாலை அப்பகுதியில் உள்ள தர்காவுக்கு தொழுகை நடத்தச் சென்றார். தொழுகை முடித்து தெற்கு மவுண்ட் ரோடு பகுதி வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது, அவரை வழிமறித்த கும்பல், ஜாஹீர் உசேனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
கனடிய அமைச்சர் திரு கரி ஆனந்தசங்கரி! புலிகளால் வேட்டை ஆடப்பட்ட குடும்பத்தின் வாரிசு
![]() |
Mr.Ananda sangaree |
![]() |
Mr.Gary Ananda sangaree |
ராதா மனோகர் : திரு வீரசிங்கம் ஆனந்தசங்கரி (முன்னாள் எம்பி) அவர்களுக்கு 2006 ஆண்டுக்கான உலக சமாதானம் வன்முறை தவிர்ப்பு ஆகியவற்றிற்காக யுனெஸ்கோ பரிசு கொடுத்து கௌரவப்படுத்திய நிகழ்வு நடந்தது.
புலிகளுக்கு எதிராக அவர் மேற்கொண்ட தொடர் சமாதான முயற்சிக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது!
பல தடைவைகள் திரு ஆனந்த சங்கரி அவர்களை தேடி எம்பி அமைச்சர் மற்றும் ஆளுநர் பதவிகள் வந்தன.
அவற்றை அவர் ஏற்கவில்லை!
பதவிக்காக எந்த தூரமும் செல்ல தயாராக இருக்கும் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் திரு ஆனந்தசங்கரி அவர்கள் தனித்துவமாகத்தான் தெரிகிறார்
புலிகளின் ஹிட் லிஸ்டில் அவர் இருந்ததால் ஏனையோரின் தாராளமான விமர்சனங்களை இப்போதும் கூட அவர் எதிர்கொள்கிறார்.
ஆபத்தில்லாத இடத்தில தாராளமாக கோபமும் விமர்சனமும் வரும்தானே?
திங்கள், 17 மார்ச், 2025
பல மாணவிகளை 20 வருடங்களாக பாலியல் வன்கொடுமைகள் செய்த அரசு பேராசிரியர் ..உத்தர பிரதேசம்
![]() |
மாலை மலர் : உத்தரப் பிரதேசத்தில் 59 வயதான கல்லூரி அரசுக்கல்லூரி பேராசிரியர் பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) ஆக உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).
இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார். இதுதொடர்பாக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்படாத பின், உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.
பட்டலந்த -1988-90 களில் ஜேவிபி கிளர்ச்சியில் நடந்த கொடுமைகள் பற்றிய ஆணைக்குழு அறிக்கைக்கு ரணில் விக்கிரமசிங்க பதில்
மலையோரம் செய்திகள் : பட்டலந்த அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றி அதனை நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.
1988-90 காலகட்டத்தில் ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாத செயல்கள் குறித்து ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் : திமுகவுடன் கை கோர்க்க தயார்!
tamil.samayam.com - பவித்ரன் : : தொகுதி மறுசீரமைப்பு பெயரில் எம்.பி. சீட் குறைக்கப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராக தேமுதிக இறங்கி தமிழக மக்களுக்காக போராடும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை தான் உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு வெளிக்கொண்டு வர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
காதல் திருமணம்; தாலியை அறுத்தெறிந்த பெற்றோர்; உயிரிழந்த பெண் – இலங்கை அகதிகள் முகாம்

விகடன் : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி தமிழ்ப்பிரியா. இவர்களின் 21 வயது மகள் பூஜா.
பள்ளிப்படிப்பை கும்மிடிப்பூண்டியில் முடித்த பூஜா, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கஸ்தம்பாடியில் உள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பு முகாமில் வசிக்கும் தனது பெரியம்மா தமிழ்ச்செல்வியின் வீட்டில் தங்கி, ஆரணியில் உள்ள நர்சிங் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படித்துவந்தார்.
டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு நகைக்கடை ஒன்றிலும் வேலை செய்துவந்த பூஜாவுக்கு கஸ்தம்பாடி முகாமைச் சேர்ந்த சரண்ராஜ் என்ற 19 வயது இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டது.
தமிழர்களை அழிக்கும் வேலையை தமிழ் இயக்கங்களே போட்டி போட்டுகொண்டு செய்தன!
![]() |
Vetri Chelvan ; ஆரம்பகால தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டு தொடர்புகளும் பகுதி 9
நான் இதுவரை எனது எந்த பதிவுகளிலும் இந்தியா எங்களை ஏமாற்றி விட்டது,
எங்களை அழித்துவிட்டது என்று பதிவு செய்யவில்லை.
காரணம் இப்படி எல்லாம் நடக்கும் என்று எல்லா விடுதலை இயக்கத் தலைவர்களுக்கும் தெரியும்.
அவர்கள் இந்தியாவை எப்படி சமாளித்து எங்கள் லட்சியத்தை நோக்கி பயணிப்பது என்று யோசித்ததை விட, மற்ற மற்ற இயக்கங்களை அழித்து தானும் தனது இயக்கமும் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
ஞாயிறு, 16 மார்ச், 2025
பாகிஸ்தான் உட்பட 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல தடை?
மின்னம்பலம் - Raj : பாகிஸ்தான் உட்பட 41 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்க முன்மொழிவு தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி புலம் பெயர்ந்து சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமான வழிகள் மூலம் நாட்டுக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். List of 41 countries banned by US
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வசிக்கும் சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இந்தியாவும் ஒன்று.