ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தீண்டாமையை கடைப்பிடித்த காஞ்சி விஜயேந்திரன்! பொன்னாடையை பொத்தென்று போட்ட ஆரிய...

News18 Tamil  : : பொன்னாடையை கையில் கொடுக்காததன் மூலம், துவை துணைநிலை ஆளுநர் என இரு பெரிய பொறுப்புகளை வகிக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம் ஆசிர்வாதம் பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019ம்  ஆண்டு தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இதை தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு தற்போது இரு பதவிகளையும் தமிழிசை வகித்து வருகிறார்.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்தபோது கருத்து ரீதியிலான விமர்சனங்களை கடந்து உருவ கேலி விமர்சனங்கள் போன்றவை தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக அதிகம் பரபரப்பட்டது. எனினும், அவை குறித்து தமிழிசை பெரிதாக பேசியது இல்லை. தன்னை உருவக்கேலி செய்து மீம் போடுவது மூலம் ஒருவருக்கு வருமானம் கிடைத்தால் தராளமாக அதனை செய்துகொள்ளட்டும் என்று பொது நிகழ்ச்சிகளிலேயே கூறியவர்.

கருத்துகள் இல்லை: