வெள்ளி, 9 ஜூன், 2023

சுப.வீ' மீது லண்டனில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சீமான் !! ஆதாரத்துடன் அம்பலம் !!

Manoj Kumar :  ஆமா !! நாம் தமிழரும்,அய்யா சுப.வீயும் நட்பு சக்திகளா இருக்காங்க,,நான் சண்டை மூட்டி விடறேன்,,
சீமான் வந்து என்கிட்ட வாங்கிய கடனை திருப்பி தராம ஏமாத்தீட்டாரு,,
என்னுடைய சொத்தை எல்லாம் ஆட்டைய போட்டுடாரு,,அதனால சீமான் மேல எனக்கு தனிப்பட்ட வன்மம் !!
எங்கிருந்துயா வர்றீங்க !!
சீமானை எதிர்ப்பதன் நோக்கமே சீமான் பெரியாரை இழிவுபடுத்தறான்,,,கால காலமாக உழைத்த திராவிடர் இயக்க தலைவர்களின் உழைப்பை திருடறான்னு தான்,,,
இதுல சுப.வீ'யை தூண்டி விடறனாம்,,,தூண்டி விட்டா நாளைக்கே சுப.வீ போய் சீமானை தாக்க போறாரா ??
சுப.வீ உள்ளிட்ட எமது திராவிடர் இயக்க தலைவர்கள் எல்லாம் ரொம்ப நாகரீகம் பாக்கறாங்க,,,அவங்க தரத்திற்கு சீமானை எல்லாம் ஒரு ஆளா மதிக்கக் கூடாதுனு இருக்காங்க,,,இந்த அயோக்கிய பையனை அடிப்பதற்கு மூத்தவர்களின் பாணி சரி வராதுனு தான் இவ்வளவு பெரிய வேலையை நான் தனி ஆளா பண்ணீட்டு இருக்கேன்,,,


ஆக அவர்கள் செய்ய வேண்டிய  வேலையை நான் கையில் எடுத்து செய்து கொண்டுள்ள போது,அவர்களை தூண்டி விட்டு எனக்கு ஒரு பயனும் இல்லை,,,
அய்யா சுப.வீ அவர்களுக்கு எதிராக நாம் தமிழர் கும்பல் எதாவது செய்தால் அதற்கு முதல் எதிர்வினையாற்றக்கூடியவனாக நான் தான் இருப்பான் ஒழிய,திராவிடர் இயக்க தமிழர் பேரவையினரை இங்கே எதிர்வினையாற்ற சொல்ல மாட்டேன்,,,
சொல்லப் போனால் அய்யா சுப.வீ அவர்கள் தான் என்னை பொறுமைகாக்கச் சொல்வாரே ஒழிய,நீங்க போய் சண்டை போடுங்க அய்யா என நான் சொல்ல மாட்டேன்,,,
இதை எழுதியவருக்கு இவை எல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை,,,அவர் இன்னைக்கு சொம்பு தூக்கிற சிலர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள்,,,ஆக அவர்களிடம் விஸ்வாசத்தை காட்ட தான் இப்படி தினுசா உருட்டீருக்கார்,,,
இதுல என்ன காமடினா இவர் அறிவுரை சொல்லக் கூடிய திராவிடர் இயக்க தமிழர் பேரவையில் இருந்து இவரை நீக்கியே பல ஆண்டுகளாச்சு,,,இப்ப ஏதோ இயக்கத்தின் மீது அக்கறை உள்ளவர் போல என் மீதான வன்மத்தை கக்கீட்டு இருக்காரு,,,
எது எப்படியோ "இந்த சிறு வயதிலேயே இவ்வளவு ஆபத்தானவராக இருக்கிறார்" என்று சொன்னதை எனக்கான கிரெடிட்டாக எடுத்துக் கொள்கிறேன்,,,
ஆனால் நான் அய்யா சுப.வீக்கு ஆபத்தானவன் கிடையாது,,,பெரியாரை எதிர்க்கின்ற,திராவிடத்தை எதிர்கின்ற பார்ப்பன கைக்கூலிக்களுக்கு மட்டுமே நான் ஆபத்தானவன் அய்யா !!
அது எப்படி நாம் வாட்ஸ் அப் குழுக்களில் ரகசியமாக பகிர்ந்த செய்தி இவனை வந்தடைந்தது என குழம்ப வேண்டாம்,,,நாம் தமிழர் குழுக்களுக்குள்ளேயே எனக்கான ஆட்கள் இருக்கும் போது,திராவிடர் இயக்க குழக்களில் இருக்க மாட்டார்களா ??

கருத்துகள் இல்லை: