சனி, 22 ஜூலை, 2023

தங்கையின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த அண்ணன்! மத ஆணவக்கொலை

தாய்நாடு  : தங்கையின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த அண்ணன்!
மாற்று மத இளைஞரை காதலித்த தங்கையின் தலையை வெட்டிய அண்ணன், தலையுடன் பொலிஸ் நிலையம்  சென்ற சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஆசிபா (வயது 18). இவரது சகோதரர் ரியாஸ் (வயது 22).
இதனிடையே, ஆசிபாவும் அதே கிராமத்தை சேர்ந்த சந்த் பாபு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

காதலர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து, ஆசிபாவின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஆசிபாவையும் அவரது காதலன் சந்த் பாபுவையும் கண்டுபிடித்தனர். ஆசிபாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார் சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மாற்று மதத்தை சேர்ந்த நபரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக ஆசிபாவுக்கு அவரது அண்ணன் ரியாசுக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தங்கை ஆசிபாவின் தலையை வெட்டியுள்ளார்.

பின்னர் வெட்டி எடுத்த ஆசிபாவின் தலையுடன் வீட்டில் இருந்து நடந்தே போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து, ரியாசை கைது செய்த போலீசார் ஆசிபாவின் தலையை அவரிடமிருந்து கைப்பற்றினர். பின்னர், வீட்டில் கிடந்த ஆசிபாவின் தலையில்லா உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கை மாற்று மதத்தை சேர்ந்த நபரை காதலித்ததால் அண்ணனே தங்கையின் தலையை வெட்டி எடுத்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: