புதன், 15 பிப்ரவரி, 2017

குஜராத் தெருக்களில் குஜராத்தி! ... தமிழக தெருக்களில் இந்தியா?

குஜராத்தில் உள்ள மைல்கல்களில் குஜராத்தி மொழி !
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மைல்கல்களில் ஹிந்தி மொழியா?
நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அவரின் தாய் மொழியான குஜராத்தி மொழியை நெடுஞ்சாலை மைல்கற்களில் எழுதியுள்ள அவர் ஆளும் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டில் தமிழ் எழுத்துக்களை அழித்து அதன் மீது ஹிந்தி எழுத்துக்களை எழுதி தமிழ் மொழி அழிப்பு வேலையை செய்து வருகிறது.
குஜராத்தில் உள்ள நெடுஞ்சாலை தூரம் மற்றும் திசை காட்டும் அறிவிப்புப்பலகைகள் ஆங்கிலத்திலும், குஜராத்தி மொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. அங்கு ஹிந்தி மொழியில் எழுதப்படவில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலை தூர அறிவிப்பு பலகைகளில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மட்டுமே எழுதி தமிழை அழித்துள்ளது மத்திய பா.ஜ.க. மோடி அரசு .
பிரதமர் மோடியின் தமிழக வருகையை காரணம் காட்டி தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழி அழிப்பு வேலையையும், தமிழ்நாட்டில் இந்தி திணிப்பையும் செய்யும் மத்திய பா.ஜ.க அரசை வன்மையாக கண்டிக்கிறோம். முகநூல் பதிவு வெளிச்சம்_தகவல்

கருத்துகள் இல்லை: