தினமலர் : பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் பிக்பாஸ் மாயா சகோதரி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ஓர் இசையமைப்பாளர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்து பேசியுள்ளார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாடகி ஸ்வாகதா பேசியதாவது: என்னிடம் ஒரு முன்னணி தமிழ் இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக தவறாக நடந்தார். அது ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரான், அனிருத், இமான் ஆகியோர் இல்லை. அவரால் தான், சினிமாவே வேண்டாம் என சொல்லி சென்னையில் இருந்து வெளியேறி ரிஷிகேஷில் செட்டில் ஆகிவிட்டேன். 6 வருடமாக துணி வியாபாரம் செய்து வருகிறேன். அந்த
இசையமைப்பாளரின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு கோரஸ் பாடி இருக்கிறேன். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விஷயங்களும் நடந்தது. அதை செய்திருந்தால் இப்போது பெரிய இடத்தில் இருந்திருப்பேன். எனக்கு திறமை இருக்கிறது என முயற்சித்து வாய்ப்பு தேடினேன். நான் சினிமாவில் கஷ்டப்பட்டு பெற்ற இடத்தை விட்டுவிட்டு வர ஒரு இசையமைப்பாளர் தான் காரணம்.
வியாழன், 30 ஏப்ரல், 2026
பாடகி ஸ்வாகதாவிற்கு பாலியல் தொல்லை: யார் அந்த இசையமைப்பாளர்? இசையமைப்பாளர் சாம்?
புதன், 29 ஏப்ரல், 2026
வடமாநிலம் எங்கும் கலப்படம் நீக்கமற நிறைந்திருக்கிறது
தீக்கதிர் : தாராளமாகப் புழங்கும் கலப்படப் பொருட்கள்
புதுதில்லி
கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்தியாவின் பல் வேறு மாநிலங்களில் கலப் படப் பொருட்கள் தொடர்பான நட வடிக்கைகளில் பெரும் அளவி லான போலி உணவு, மருந்து மற்றும் அன்றாடப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
தலைநகர் தில்லியில் போலி சென்சோடைன் பற்பசை தயாரித்த ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டது.
நடவடிக்கையில் 1,800 போலி பற்பசை டியூப்கள், 10,000க்கும் மேற்பட்ட காலி டியூப்கள், 130 கிலோ கலப்பட மூலப்பொருட்கள் என பெரும் அள விலான பொருட்கள் கைப்பற்றப் பட்டன.
Exit Poll 2026: 234 தொகுதிகளில் மக்கள் வாக்களித்தது எந்த கட்சிக்கு? ஆட்சி அமைக்க போவது யார்? மின்னம்பலம் Exit Poll 2026:
![]() |
மின்னம்பலம் - Mathi : 17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.
கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட்டது.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யாத தமிழ் தேசியம் அத்தனை நன்மைகளும் செய்த திராவிடம்
![]() |
ந. சரவணன் : இலங்கை தமிழர்கள் சிலர் தீவிர தமிழ்த்தேசிய பற்றாளர்களாக தங்களை காட்டிக்கொள்கின்றனர். தற்போதைய தேர்தலிலும் பங்களிப்பு செய்கின்றனர்.
தமிழ்கத்திலுள்ள இலங்கை தமிழர்களுக்கு தமிழ்த்தேசியம் என்ன செய்தது என்றால்,
இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்பதற்கு லாபி செய்கிறது.
செவ்வாய், 28 ஏப்ரல், 2026
சியோன் தேவலாயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய ஆஸாத்தின் தந்தை, LTTE இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்

Mabrook UL is in Addalachena ஈஸ்டர் தாக்குதல்: உண்மைகளைத் தேடிய களப் பயணம்/05
சியோன் தேவலாயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய ஆஸாத்தின் தந்தை, LTTE இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என்கிற தகலொன்றை, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், ஈஸ்டர் தாக்குதல் நடந்து சில மாதங்களின் பின்னர் பேஸ்புக்-இல் எழுதியிருந்தார்.
பஷீர் சேகுதாவூத் - ஈரோஸ் இயக்கத்தில் மிக நீண்டகாலம் உறுப்பினராக இருந்தவர்.
பஷீர் பகிர்ந்த அந்தத் தகவல் பலருக்கும் புதியதாக இருந்தது.
எனவே, இது தொடர்பில் மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக காத்தான்குடிக்குச் சென்றேன்.
ஆசாத்தின் தந்தை நஸார் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்கிற போதும், அவரைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு, காத்தான்குடியில் நாம் சந்தித்த அநேகர் தயக்கம் காட்டினர்.
சிலரை பெரும் பிரயத்தனங்களுக்குப் பின்னர், இது பற்றிப் பேசுவதற்கு இணங்கச் செய்த போதும், தம்மைப்பற்றிய அடையாளத்தை வெளியிடக் கூடாது என்கிற உத்தரவாதங்களை எம்மிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
விஜய் யாருடைய வாக்குகளைப் பிரிக்கிறார்? விவரிக்கும் காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்
minnambalam.com - Mathi : தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எந்த கட்சியின் வாக்குகளைப் பிரிக்கக் கூடும்?
விஜய்யின் வாக்குகள் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விவரித்துள்ளார்.
நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பீட்டர் அல்போன்ஸ் அளித்த பேட்டியில்,
விஜய் ஃபேக்டர் ஒரு மிஸ்டரி. அதுக்குப் பின்னால இருக்கிற அந்த ஃபோர்ஸினுடைய மூலம் தெரியல. வர்ற கூட்டத்தைப் பார்த்தா நமக்கு ஆச்சரியமா இருக்கு.
ராஜிவ் காந்தி கொலையாளி பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்
சட்டப்படிப்பை முடித்தவர்கள், பார் கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே நீதிமன்றங்களில் வழக்கறிஞராக ஆஜராகி வாதிட முடியும். அந்த வகையில், சட்டப்படிப்பை முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இன்று நடத்தியது.
திங்கள், 27 ஏப்ரல், 2026
2026சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் வதந்தி பதிவுகளும்
![]() |
முரசொலி_தலையங்கம் 27/04/26 : ஏப்ரல் 23 நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 84.51 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவானது அதிகரித்தே வருகிறது. அந்த வகையில் இந்தத் தேர்தலிலும் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
ஆனால், இதை வைத்து பல்வேறு வதந்திகளை பலரும் கிளப்பி வருகிறார்கள்.
ஆளும்கட்சி மீதான கோபம்’ என்று சில சில்லறைகள் முட்டாள் தனமாக ஊடகங்களில் ஊளையிட்டு வருகிறார்கள்.
கடந்த தேர்தலை விட 30 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம் ஆகி இருக்கிறது.
ஏழு ஆம் ஆத்மி ராஜ்யசாபா எம்பிக்கள் பாஜகவுக்கு தாவல் .. ஒப்புதல் தந்த மாநிலங்களவை தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்
![]() |
மின்னம்பலம் - Mathi : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவரான துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி 10 எம்.பிக்களைப் பெற்றிருந்தது. இவர்களில் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் கூண்டோடு பாஜகவுக்கு தாவினர்.
இந்நிலையில் தாங்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரிக்க கோரி மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 7 எம்.பிக்களும் கடிதம் அனுப்பினர். மேலும் 7 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆம் ஆத்மி கட்சி கோரியது.
புதுச்சேரியில் மும்மொழி கொள்கை: திமுக, அதிமுக எதிர்ப்பு
hindutamil.in - செ.ஞானபிரகாஷ் : புதுச்சேரி: புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிப்பால் போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுகவும் இரு மொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026 - 27 கல்வியாண்டு முதல், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ‘தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023’-ன் பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளனர்.
அர்ச்சுனா ராமநாதன் எம்பி! கைது: துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது
ilakkiyainfo.com : பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வந்துள்ளது.
இந்த தேர்தலில் திமுகவினர் அதிகமாக குறிவைத்தது எந்த வாக்காளர்களை
Giri Sundar : இந்தத் தேர்தலில், திமுகவின் வியூகம் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
அவர்கள் தங்கள் கவனத்தை மாற்றியிருப்பதாகத் தெரிகிறது —
'சத்தம்' அரசியலில் கவனம் சிதறாமல், கள யதார்த்தத்தில் கவனம் செலுத்துகிறார்கள்.
புதிய முகங்கள், சிறப்பு வேட்பாளர்கள் அல்லது நோட்டாவை விரும்பும் சுமார் 10-15% வாக்காளர்களைக் கொண்ட 'சத்த வாக்கு' என்று அழைக்கப்படுபவர்களை ஒவ்வொரு கட்சியும் ஈர்க்க முயற்சிக்கிறது,
ஆனால் திமுக அந்தப் பிரிவினரை நேரடியாகப் பின்தொடர்வதில் அதிக அக்கறை காட்டவில்லை.
மாறாக, அவர்களின் அணுகுமுறை தமிழ்நாட்டின் முக்கிய வாக்கு வங்கிகளை —
குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையேயான கடுமையான போட்டியை —
3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம்! விசாரணை நீதிமன்றங்களில்- நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்
hindutamil.in : சேலத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் திறந்து வைத்தார். உடன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதிகள் | படம்: எஸ். குருபிரசாத் |
சேலம்: நாடு முழுவதும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. விசாரணை நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடையாமல் இருக்க வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.59.43 கோடியில் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், இளந்திரையன், ஜெயச்சந்திரன், குமரப்பன் பங்கேற்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு! உலகநாடுகள் கண்டனம்
minnambalam.com - Mathi : அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்திற்கு (White House Correspondents’ Dinner) வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏப்ரல் 25-ந் தேதி சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 2,600 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த ஆண்டு வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்து, திடீர் துப்பாக்கிச்சூடு சப்தத்தால் நிலைகுலைந்தது. விருந்தினர்கள் மேசைகளுக்கு அடியில் பதுங்கியனர். இந்நிலையில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ஞாயிறு, 26 ஏப்ரல், 2026
விஜய் கூட்டத்தில் பாலியல் சீண்டல்கள் அரங்கேறியுள்ளன- பெண் பிள்ளைகளின் உடல் ரத்தம்கன்றி போகிற அளவுக்கு
புகச்சோவ் புகச்சோவ் : இடதுசாரி கலைஞர்களுக்கும், ஆத்தாடி கலைஞர்களுக்கும், நடத்தை மற்றும் நாகரீகத்தில் வித்யாசமிருப்பதுபோல, இடதுசாரி கலைஞர்களின் ரசிகர்களுக்கும், ஆத்தாடி கலைஞர்களின் ரசிகர்களுக்கும்கூட வித்யாசமுண்டு.
அணில் விஜயின் கேம்பெய்ன்ல பத்தாயிரம்பேர் கூடினப்போ கூட, பெண் பிள்ளைகளின் உடல் ரத்தம்கன்றி போகிற அளவுக்கு பாலியல் சீண்டல்கள் அரங்கேறியுள்ளன. தெருவெங்கும் குப்பையும், போக்குவரத்து விதிமீறல்களும், அடிதடி சண்டைகளும் , நாய்ஸ் பொலியூஷனும், பிக்பாக்கெட் முதல் செயின் ஸ்னாச்சிங் வரை நடந்திருக்கிறது.கிட்டத்தட்ட கள்ளக்காதலர்கள் சந்தித்தித்துக்கொள்ளும் களமாகவே விஜயின் கேம்பெய்ன்கள் நடத்தப்பட்டன.
கலப்பட ஐஸ்கிரீம் ஆபத்து .. உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட உத்தரவு
tamil.oneindia.com - Halley Karthik : சென்னை: கோடை வெயில் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, கலப்படம் குறித்த கவலையும் எழுந்திருக்கிறது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
வெயிலுக்கு இதமா ஜில்லுன்னு ஒரு ஜூஸ் குடித்தால், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், அதில் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கலப்படம் என்பது மெல்ல கொல்லும் விஷம். எனவே இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடற்கரையோரத்தில் நிறுவப்பட்ட solar PV கட்டமைப்பில் solar panel களை குளிரூட்டும்
![]() |
Janaki Karthigesan Balakrishnan : Solar PV மின்சார உற்பத்திக்கு மேலும் முன்னேற்றம்
இணைத்துள்ள பதிவு சூரிய ஒளிக்கதிர்களால் உற்பத்தியாக்கப்படும் மின்சாரத்திட்டத்தில் solar panel சூடாகுவது மின்சகர உற்பத்தியின் அளவைக் குறைப்பதாக இருக்கும். அந்தக் குறையை நீக்க, அவுஸ்திரேலியாவில் கடற்கரையோரத்தில் நிறுவப்பட்ட solar PV கட்டமைப்பில் solar panel களை குளிரூட்டும் வகையில் கடல்நீரைப் பயன்படுத்தும் முறையொன்றை நிறுவியுள்ளது. அதனால் உற்பத்தியாகும் மின்சாரம் 20% ஆல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருள் பாவனைகளைக் குறைத்து பூகோளம் மாசடைதலைத் தவிர்ப்பதும், பூகோளம் வெப்பமாதலைத் தடுப்பதும் நோக்கமாகக் கருதி கடந்த பல ஆண்டுகளாக உலகளாவ கற்பித்தலும், ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய திட்டங்கள் அறிமுகப்படுத்தல் எனவும் பரவலாக நடைபெற்று வருகின்றன. பலநாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் உட்பட, இவற்றைக் கடைபிடித்து வருகின்றன.
110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் 22 இலங்கை பௌத்த துறவிகள் 22 இன்று காலை கைது
![]() |
புதிய நிதர்சனம் செய்திகள் · 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் 22 இலங்கை பௌத்த துறவிகள் 22 இன்று காலை கைது
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவாகும்
சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய, நேற்று (25) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் கொண்டு
திமுகவிற்கு 43% வாக்குகள் கிடைக்கும் - திமுகவின் கடந்த தேர்தல் வாக்கு சதவீதம் திமுக கூட்டணி -20,982,088 வாக்குகள் 45.38%
![]() |
Periasamy Ponnusamy : ஏன் நான் திமுகவிற்கு 43% வாக்குகள் கிடைக்கும் எனப் பதிந்துள்ளேன்?
திமுகவின் கடந்த தேர்தல் வாக்கு சதவீதம்
திமுக கூட்டணி -20,982,088 வாக்குகள் 45.38%
அதிமுக கூட்’ணி-18,363,499 வாக்குகள் 39.71%
மற்றவை - 6,919,189 வாக்குகள் 14.9%
இதில் திமுகவிற்கு SIR அடிப்படையில் வாக்குகள் குறைக்கப்பட்டதன் தாக்கம், எல்லா அணிகளையும் பாதிக்கும், SIR ஆல் 15.2% வாக்குகள் தமிழ் நாட்டில் குறைக்கப்பட்டன.
இந்த சதவீதத்தை கடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளில் எத்துனை சதவீதத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் எனில்,
கடந்த 2021 சட்ட மன்றத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் 73.63% பதிவாகத வாக்குகள் 26.37%
15 கொலைகளை ஒப்புக்கொண்ட SF ராஜு – இலங்கை கரந்தெனியா வாக்குமூலம்
ilakkiyainfo.com : பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரரான ‘SF ராஜு’ என அழைக்கப்படும் சோபனஹந்தி சனத் டி சில்வா என்பவரது வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளன.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர், 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று காலை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 15 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
"மே 4-ல் விஜய் அவுஸ்திரேலியா பயணம்! கிரேட் எஸ்கேப் ? தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் ஏன் வெளிநாட்டு பயணம்
![]() |
Dailyhunt : "மே 4-ல் ஒரு மெகா ட்விஸ்ட். ஆஸ்திரேலியா டிக்கெட் கன்பார்ம்.. விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதான். அதிர்ச்சியில் அரசியல் களம்".!!!
தமிழக சட்டசபைத் தேர்தலில் 85.15% என்ற வரலாறு காணாத வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் இளைப்பாறுவதற்காகச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே துபாய் சென்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம் மேற்கொள்கிறார். வழக்கமாகத் தனது திரைப்படப் பணிகள் முடிந்ததும் வெளிநாடு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது தேர்தல் முடிந்தும் இன்னும் பயணத்தைத் தொடங்காமல் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.







