வியாழன், 16 பிப்ரவரி, 2017

முதல் குற்றவாளியை போற்று .. இரண்டாம் குற்றவாளியை தூற்று ... !

Sivasankaran.Saravanan: ஜெயலலிதா மிடாஸ் மதுபான தொழிற்சாலையை நடத்திவந்தார். இல்லையே அது சசிகலாவுடையதாச்சே என கேட்கலாம். Wait! சசிகலா வோடு ஜெயலலிதா விற்கு மனஸ்தாபம் ஏற்படுகிறது . எனவே மிடாஸ் கம்பெனி பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்குகிறார். சசியை நீக்கிவிட்டு சோ ராமசாமிக்கு அந்த பொறுப்பைத் தருகிறார். ஏன் சோ ராமசாமிக்கு தந்தார் என்றால் சோ ராமசாமியின் அப்பா, உடையார் சாராய கம்பெனியை பார்த்துவருகிற வேலையைத்தான் செய்தார்.
சரியா, சசிகலா ஓனராக இருந்தால் எப்படி ஜெயலலிதா சசிகலாவை நீக்கிவிட்டு சோ ராமசாமிக்கு தரமுடியும்? ஆனால் பாருங்கள், சோ ராமசாமிக்கும் ஜெயலலிதா விற்கும் கிடைக்காத திருட்டுப்பொறிக்கி பட்டம் சசிகலாவுக்கு மட்டும் தருவோம் என்பவர்கள் பின்னால் இருப்பது ஊழல் மீதான கோபமா?
அந்த கோபம் ஏன் ஜெயலலிதா மீது இல்லை? எது அவர்களைத் தடுக்கிறது என்பதை உணர்ந்துகொண்டால் நீயும் ஒரு சுயமரியாதைக்காரனே..!

Ganeshkumar-kp Kavipuyal : முதல் குற்றவாளியே ஜெயலலிதாதான் என்றுதான் இறுதி தீர்ப்பே வாசிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் யாரும் சசி குற்றவாளி என்று சொல்ல தகுதியற்றவர்களாகிறார்கள். ஜெயலலிதா குற்றவாளி அல்ல என யார் வாதிட்டாலும் அவர்கள் தமிழ்நாட்டு பிரஜையே அல்ல. அவர்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்று அர்த்தம். சட்டத்தை மதிக்காதவன் தேசதுரோகி. Admk MLA க்கள் சோத்துல உப்புபோட்டு திங்கறவங்களா இருந்தா, உண்மையில் மானரோசம் இருந்தால் , உண்மையில் மக்கள் பணி செய்வதே கடமை என்று எண்ணினால்- ஒரு குற்றவாளியின் தலைமையில் பெற்ற MLA பதவியை ராஜீனாமா செய்துவிட்டு மக்களை சந்திக்கவரட்டும்.

முகநூல் பதிவுகள்

கருத்துகள் இல்லை: