ஞாயிறு, 21 டிசம்பர், 2025

மென்டல் செல்வராகவனை விட்டு கீதாஞ்சலி பிரிய காரணம் இதுதானா?

 tamil.oneindia.com - Hema Vandhana : சென்னை: தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன்.. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள செல்வராகவனின் அனைத்து போட்டோக்களையும் கீதாஞ்சலி நீக்கியிருந்தார். இதன் மூலம் இவர்கள் பிரிய இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், செல்வராகவன் பற்றி திண்டுக்கல் வெங்கடேஷ் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Aramnaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேஷ், "சொன்ன நேரத்துக்கு படங்களை செய்யாததால் சில தயாரிப்பாளர்கள் பாதிப்புக்கு ஆளாகிவிட்டார்கள்..
Geethanjali Selvaraghavan dhanush

ராமேஸ்வரத்துக்கு ரயில் டிக்கெட் எடுக்காமல் வந்த 300 உ.பி. பக்தர்கள் பலரும் தப்பி ஓட்டம்

 மின்னம்பலம் - மதி : ராமேஸ்வரத்துக்கு மதுரையில் இருந்து ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 300க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் மற்றும் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வட மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் வந்த ரயிலில் 300க்கும் மேற்பட்ட உத்தரப்பிரதேச மாநில பக்தர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள நடிகர் திரைப்பட கதை வசனகர்த்தா ஸ்ரீநிவாசன் காலமானார்

ராதா மனோகர் :   இன்று இந்திய திரை உலகம் ஒரு மிக பெரிய ஆளுமையை "ஸ்ரீநிவாசன்" இழந்து விட்டது 
மறைந்த மலையாள நடிகர் திரைப்பட கதை வசனகர்த்தா ஸ்ரீநிவாசன் விட்டு சென்ற இடத்தை நிச்சயமாக வேறு எவராலும் நிரப்ப முடியாது!
திரு ஸ்ரீநிவாசன் படங்களை பற்றி பேசும்போது அவரின் கதை வசனங்களை பற்றி பேசுவதா அவரின் நடிப்பை பற்றி பேசுவதா என்ற குழப்பம் நிச்சயமாக எல்லோருக்கும் ஏற்படும்.
மிக சாதாரண மக்களின் உள்ளத்தை உள்ளபடி தொட்டு பேசிய மகா மகா நடிகன் . அதை விட ஒரு கதை வசன மேதாவி!
அவரின் ஒவ்வொரு படங்களும் திரைப்பட பாடங்களாக பயில்வதற்கு உரியது.
சமூகத்தின் நலிந்த பிரிவினரின் வாழ்வியலை வெறும் சோக காவியங்களுக்காக படைக்காமல் நகைச்சுவையோடு காட்சி படுத்துவது ஸ்ரீனிவாசனின் தனி சிறப்பு.
ஸ்ரீனிவாசனின் ஏராளமான படங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.