செவ்வாய், 16 டிசம்பர், 2025

இலங்கை அரகலய போராட்டத்தை 45 நிமிடங்களுக்குள் அடக்கி விட முடியும் என்று இந்திய தூதுவர் .....

May be an image of dais and text
Gopal Baglay -   Mahinda Yapa Abeywardena 

சபாநாயகர் மகிந்த யாப்பா அபாயவர்தனா அவர்கள் ஜனாதிபதி பதவியை ஏற்க ஒப்புக்கொண்டால், 45 நிமிடங்களுக்குள் (அரக்கலய) நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்ற த உறுதி மொழியை  இந்திய தூதுவர் திரு கோபால் பாக்ளே அவர்கள் சபாநாயகருக்கு வழங்கினார்! 
இந்த அதிர்ச்சிகரமான தகவலை பேராசிரியர் சுனந்தா மதுமபண்டார அவர்கள் எழுதிய  அரக்கலயா பலாய என்ற சிங்கள மொழி நூலில் குறிப்பிட்டுள்ளார். 
இது பற்றி மேலதிக விபரங்களை லங்காவேப் என்ற பழம் பெரும் இணையத்தளத்தில் காணலாம்!
 .
lankaweb Lastly, the former parliamentarian has revealed that it was then Indian High Commissioner, in Colombo, Gopal Baglay (May 2022 to December 2023) who asked him to accept the presidency immediately. Professor Sunanda Maddumabandara, who served as Senior Advisor (media) to President Ranil Wickremesinghe (July 2022 to September 2024), disclosed Baglay’s direct intervention in his latest work, titled ‘Aragalaye Balaya’ (Power of Aragalaya).

திங்கள், 15 டிசம்பர், 2025

தவெக? திமுக? டெல்லி காங். மீட்டிங்கில் பரபர வியூகம்! - TVK? DMK? Congress

 மின்னம்பலம் -Mathi  :  டெல்லியில இன்னைக்கு காங்கிரஸ் கட்சியோட முக்கியமான மீட்டிங் நடந்துச்சு.. கூட்டணி விவகாரங்களுக்கான ஐவர் குழுதான் இந்த மீட்டிங்கை நடத்துச்சு.. கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார்தான் அந்த ஐவர் குழு..
ஏற்கனவே சென்னையில சிஎம் ஸ்டாலினை சந்திச்சு பேசி திமுகவுடனான கூட்டணியை உறுதி செஞ்சிருந்தது இந்த ஐவர் குழு.. அதே நேரத்துல காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்திச்சு பேச கூட்டணி பத்தி லேசா குழப்பம் ஏற்பட்டுருச்சு..
இப்படியான நிலையில்தான் ராகுல் காந்தி, கார்கே, ஐவர் குழு எல்லாம் சேர்ந்து தமிழக தலைவர்களுடன் ஆலோசிக்கிறதுன்னு முடிவெடுத்தாங்க..

H-1B விசாவில் மாபெரும் முறைகேடு.. இந்தியாவில் - முன்னாள் அமெரிக்க அதிகாரி பேட்டி பகீர்

 tamil.oneindia.com   : Vigneshkumar  ; வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசா என்பது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்கு அமெரிக்கா பல கடுமையான விதிகளை விதித்து வருகிறது. 
சிலர் அதற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் ஹெச்-1பி விசா குறித்து முன்னாள் விசா அதிகாரி ஒருவர் கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். குறிப்பாக ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்குக் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறார்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

ஆர்.எஸ்.பாரதி : தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்!

 மின்னம்பலம் - கவி : தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான காலஅவகாசம் நாளை (டிசம்பர் 14) உடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்க திமுகவின் சட்டத்துறையும் தொண்டர்களும் தீவிரமாகப் பணியாற்றினர். கட்சி சார்பின்றி பணியாற்றினர்.

சனி, 13 டிசம்பர், 2025

கொத்மலை நீர்த்தேக்கம் - மனிதப்பேரழிவு - அதிகாரிகளின் அலட்சியம் இலங்கை அரசின் அனுபவம் இன்மை

 கம்பளயான் - Gampalayan  :  கொத்மலை - மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக ஆபத்தான நீர்த்தேக்கம்!
6.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள, கடல் மட்டத்திலிருந்து 640 - 703 மீட்டர் உயரம்.
174 மில்லியன் கன மீட்டர் நீர் கொள்ளளவு.
முழுமையாகக் கறுப்புக் கற்களால் அடுக்கப்பட்டது.
15 மீட்டர் உயரம் மற்றும் 14 மீட்டர் அகலம் கொண்ட மூன்று வான்கதவுகள் மற்றும் ஒரு வான்கதவு கொண்டது.
இவை மூலம்  வினாடிக்கு 1850 கன மீட்டர் நீரை வெளியேற்ற முடியும்.
87 மீட்டர் உயரம், 600 மீட்டர் நீளம் மற்றும் உச்சியில் 10 மீட்டர் அகலம் கொண்ட அணையுடன், 544 சதுர கிலோமீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டது  இந்த நீர்த்தேக்கம். 
1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
கொத்மலை ஓயா மகாவலி கங்கையில் கலப்பதற்கு 6.6 கிலோமீட்டருக்கு முன்னர், 

பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியது! காங்கிரஸ் கோட்டையை கூட்டிக்கொடுத்த காங்கிரஸ் எம்பி சசி தரூர்

 tamil.oneindia.com  - Vignesh Selvaraj  : “பாஜகவின் வெற்றி தெளிவான சிக்னல்”- தனது கோட்டையில் பாஜக வென்றதை பாராட்டிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள உள்ளாட்சி தேர்தலில் சசி தரூரின் கோட்டையான திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சியினருக்கு ஷாக் கொடுத்துள்ள நிலையில் இது மக்களின் தெளிவான ஆணை என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் இடதுசாரி முன்னணி பின்னடைவை சந்தித்துள்ளது.
Shashi Tharoor Lauds BJP s Historic Thiruvananthapuram Civic Polls Win

மதக்கலவரத்தை தூண்ட சங்கிகள் விரித்துள்ள உலக வலையமைப்பு! குறிவைத்துள்ள மசூதிகள் பட்டியல்!


 இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்ட சங்கிகள் குறிவைத்துள்ள மசூதிகள் பட்டியல்!
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 14 மசூதிகள் மீது ஆர் எஸ் எஸ் குறிவைத்துள்ளது 
இதற்காக பெருமளவு நிதியை பஹாமாஸ் தீவில் பதுக்கி வைத்துள்ளது.
வழறிஞர் திரு வாஞ்சிநாதன் இது பற்றி மிக தெளிவாக விபரமாக எழுதி உள்ளார்.
அவரின் அந்த கட்டுரை உங்கள் தூக்கத்தை தொலைத்து விடும்  

 நிலவினியன் மாணிக்கம் :   ஆர்எஸ்எஸ்ஸஸின் உண்மை முகம் மதக்கலவரத்தை தூண்டுவதை தோலுரித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

டி.வி. சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை.. என்ன காரணம்?

 தினத்தந்தி   :சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 39), சீரியல் நடிகை. ‘சிறகடிக்க ஆசை', ‘பனி விழும் மலர் வனம்', ‘பாக்கியலட்சுமி' போன்ற பல பிரபல டி.வி. தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஓரிரு படங்களிலும் தலைகாட்டி இருக்கிறார்.
ராஜேஸ்வரிக்கும், அவரது கணவர் சதீசுக்கும் கடந்த சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி சில நாட்களுக்கு முன்பாக சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கிருந்தபடியே சீரியல்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு ராஜேஸ்வரி தாய் வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.

வெள்ளி, 12 டிசம்பர், 2025

நடிகை பாவனா- நடிகர் திலீப் பாலியல் வன்கொடுமை வழக்கு 6 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை நடிகர் திலீப் தப்பி விட்டார்

Latest Tamil News

 தினமலர் : திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
2017ம் ஆண்டு பிப். 17ம் தேதி பிரபல மலையாள நடிகை ஒருவர், காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை கடத்திய ஒரு கும்பல், பாலியல் வன்கொடுமை, செய்து அதை செல்போனில் படம் பிடித்தது. கேரளாவில் மட்டுமல்ல, அம்மாநில திரையுலகமான மல்லுவுட்டிலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பை (வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்) நிரபராதி என்று எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Indigo Airlines ரூ.7,253 கோடி லாபம் ஈட்டிய இண்டிகோ! உறைய வைக்கும் அதிர்ச்சித் தகவல்!

Indigo Airlines Profit

 tamil.samayam.com  - ஆனந்தன் : இந்தியாவில் விமானப் போக்குவரத்து துறை தற்போது மிகக் கடினமான நிதி சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. 
பெரும்பாலான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ள நிலையில், பயணிகள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
 குறிப்பாக சமீப நாட்களில் இண்டிகோ விமானங்களில் நடந்த சேவை பாதிப்புகள் இந்தப் பிரச்சினையை மேலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.
இண்டிகோ சேவை பாதிப்பு
பணியாளர் பற்றாக்குறை, திடீர் அட்டவணை மாற்றங்கள், புதிய பணி நேர விதிமுறைகளால் வந்த குழப்பங்கள் என பல காரணங்களால் இண்டிகோ ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய நேரிட்டது.

ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

 தினமலர் : புதுடில்லி : ஆசிட் வீச்சில் ஈடுபடுபவர்கள் மீது, சாதாரண பிரிவுகளின் கீழ் அல்லாமல், இனி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இது குறித்து ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த, சாகின் மாலிக் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு : 
ஒருவர் மீது ஆசிட் வீசுவது மற்றும் ஆசிட்டை குடிக்க வைப்பது அவரது உயிருக்கே தீங்கு விளைவிக்கும் செயல். இதனை போலீசார் சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூடாது. 

வியாழன், 11 டிசம்பர், 2025

இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படும் இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen - துரித படுத்துமாறு செந்தில் தொண்டமான் நிர்மலா சீதாராமனிடம்!

 இலங்கை (மலையக) இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படும் இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen - துரித படுத்துமாறு செந்தில் தொண்டமான்  நிர்மலா சீதாராமனிடம் நேரில் கோரிக்கை!
இந்த கார்ட் ஏற்கனவே இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் வழங்கப்படுகிறது!
இந்த கார்ட் மூலம் இந்தியாவுக்கு விசா இல்லாமல் எத்தனை தடவையும்  சென்று வரமுடியும்.
 நிரந்தரமாக தங்க முடியும் நிரந்தரமாக தொழில் செய்ய முடியும் வியாபாரம் செய்ய முடியும் .கல்வி கற்க முடியும்! சொத்துக்களை வாங்கவும் விற்கவும் முடியும்!
தேர்தல்களில் வாக்கு போட முடியாது! விவசாய நிலங்களை வாங்க முடியாது!
An Overseas Citizen of India (OCI) is a foreign national of Indian origin (excluding Pakistan/Bangladesh) who gets a special lifelong visa and permanent residency status in India, offering benefits like indefinite stay, work/study rights, and financial parity with NRIs, but not political rights (voting/holding office) or agricultural land ownership, essentially a permanent visa/residency for people with Indian roots.  

பாடகி சின்மயி - டாக்டர் பால் அடித்த கூத்து . முழுநேர சங்கிகள் Chinmayi with Dr. Pal

Sivabalan Elangovan  :  டாக்டர் பால் - இவர் மீது எனக்கு தொடக்கத்தில் இருந்தேன் நம்பிக்கை இருந்ததில்லை. சில வருடங்களுக்கு முன்பு சிசேரியன்  தொடர்பாக அறிவியலுக்கு புறம்பாக ஏதோ பேசியதை கேட்டேன். ஒரு சோறு பதமென கடந்துவிட்டேன். 
சமூக வலைதளங்களின் கவனஈர்ப்புக்காக எவ்வளவோ போலி அறிவியல் தகவல்கள் வருகிறதல்லவா? அதில் இவரும் ஒருவர் என கடந்து விட்டேன். 
மருத்துவராக இருப்பதனாலேயே போலி தகவல்கள் சொல்ல மாட்டார்கள் என நம்ப முடியாதல்லவா?
ஆனால் சின்மயி அவர்களுடைய நேர்காணல் ஓன்றில் இருவரும் திட்டமிட்டு ஒரு தகவலை எப்படி Misleading செய்கிறார்கள் என பார்த்த போது அதை expose செய்ய வேண்டும் என நினைத்தேன். நேரமின்மையால் அதையும் கடந்து விட்டேன்.

ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிரான ‘இம்பீச்மெண்ட்’ நாடாளுமன்றத்தில்! பாஜக கடும் எதிர்ப்பு

 மின்னம்பலம் - Mathi :  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய கோரி நாடாளுமன்ற மக்களவையில் இந்தியா கூட்டணி சார்பில் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான தீர்ப்புகளை வழங்கி வருகிறார் என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனம். அண்மையில் திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு பெரும் மத மோதலுக்கான சூழலை உருவாக்கியது என்பதும் இந்தியா கூட்டணியின் விமர்சனம்.

புதன், 10 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம் . பின்னணியில் பாஜகவின் ஜனனம் டிவி!

May be an image of text that says "Fellow USO routube 1 திருப்பாங்குன் 1திருப்பாங்குன்ப் ஏம் @Tamil.JanamNews தமிர் Janari peatA ஜனம் டிவி யாருடையது 65K +VIEWS ਮਖ f டிவி அண்ணாமலைக்கு ட்டில் காலூன்றும் RSS கே"

 நவீன நாடோடி  : ஜனனம் டிவி பாஜக உரிமையாளர் மலையாளி
வலது படம் ஜனனம் டிவி பற்றிய செய்திகள் 
திருப்பரங்குன்றம் நேற்று நடந்த நீதிபதி தீர்ப்பு மற்றும் கலவரங்கள் ஏற்கனவே கேரளாவில் முன்கூட்டியே திட்டமிட்டு   நடத்த தயாரான செயல் என எத்தனை பேருக்கு தெரியும்? 
இதற்கு முழுவீச்சில் உடந்தை தமிழ்நாட்டில் புதிதாக தோன்றிய  பாஜக RSS மலையாளி ஜனனம் டிவி உரிமையாளான்!
6 மாதத்திற்கு முன்பே திருப்பரங்குன்றம் கோவில்  பிரச்சினை களை ஜனனம் டிவி கையிலெடுத்து இதை கேரளாவில்  பெரிய விவாத பொருளாக மாற்றி  திமுகவின் பெயரை கெடுக்க திட்டமிட்டு பெரிய டிபெட் நடத்த தயாரானபோது,
அங்குள்ள அரசியல் பேச்சாளர்களை கூப்பிடும் போது அவர்கள் மறுத்துவிட்டனர்

செவ்வாய், 9 டிசம்பர், 2025

பதுளை பேரழிவில் 14 பேரின் உயிரைக் காத்த நாய்! முன்கூட்டியே சத்தம் செய்து எச்சரிக்கை செய்தது

 மதுஷா : : பதுளை பேரழிவில் 14 பேரின் உயிரைக் காத்த நாய்! முன்கூட்டியே சத்தம் செய்து எச்சரிக்கை செய்தது 
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில், பதுளை, மாஸ்பண்ண பகுதியில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட ‘சூட்டி’ என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று, முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து சுமார் 14 மனித உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. 

ஜப்பானில் 7.6 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

 தினமணி : ஜப்பானின் வடக்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் இன்று (டிச. 8) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.5 அலகுகளாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுனாமி ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திங்கள், 8 டிசம்பர், 2025

சீனாவுக்கு விமானத்தில் செல்லும் இந்தியர்கள் (அருணாச்சல பிரதேஷ்) கவனம்! ஒன்றிய அரசு அறிவுறுத்தல் நமது சிறப்பு நிருபர்

 தினமலர் :  புதுடில்லி : சீனாவுக்கு விமானப் பயணம் செல்லும் போது இந்தியர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது . டில்லியில் மத்திய வெளியறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டி:     
ஷாங்காய் விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை ( அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் ஷாங்காய் விமான நிலையத்தில் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டார் . அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி . எனவே அவரது இந்திய பாஸ்போர்ட்டை செல்லாது என கூறி சீன அதிகாரிகள் கைது செய்தனர் ) தொடர்ந்து , சீன விமான நிலையங்கள் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் குறி வைக்கப்பட மாட்டார்கள் . அவர்கள் தன்னிச்சையாக தடுத்தும் வைக்கப்பட மாட்டார்கள் , துன்புறுத்தப்பட மாட்டார்கள் . சர்வதேச விமான பயண விதிமுறைகளை மதிப்பதாக சீன அதிகாரிகள் உத்தரவாதம் அளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்

திமுக காங்கிரஸ் கூட்டணி உடைக்கிறதா? 75 சீட் + அமைச்சரவை இடம் + 5 ராஜ்ய சபா.. காங்கிரசின் முக்கோண பார்முலா!

tamil.oneindia.com  - Shyamsundar I  :  சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திடம் (திமுக) காங்கிரஸ் கட்சி உறுதியான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. 
கணிசமான பிரதிநிதித்துவம் கோரும் காங்கிரஸ், மூன்று விதமான பார்முலாக்களை முன்மொழிந்துள்ளது. இதை கேட்டு திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த 2 நாட்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

இலங்கை டித்வா சூறாவளி பற்றி எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம் Why Cyclone Ditwah caused large-scale damage in Sri Lanka

 Shanmugam Poothappar : இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்
'டித்வா' சூறாவளி இலங்கைக்கு அண்மையிலுள்ள கடற்பரப்பில் உருவாகிய நாள் முதல் அதன் தாக்கம் தொடர்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக த இந்தியன் எஸ்பிரஸ் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி  தங்களுடன் இதனை பகிர்ந்து கொண்டதாக அந்த செய்தித் தளம் தெரிவித்துள்ளது. 
எச்சரிக்கை மற்றும் முன்னெடுப்பபுகள் என்ற தலைப்பில் கடந்த 13ஆம் திகதி இலங்கைக்கு அண்மையில் தாழழுக்க நிலை ஒன்று உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முதன்முதலில் கணித்திருந்தது, மேலும் நவம்பர் 20 ஆம் திகதி புயல்(cyclogenesis) சாத்தியம் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டது.Why Cyclone Ditwah caused large-scale damage in Sri Lanka
அதாவது சூறாவளியாக மாறி காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் அதிக மழைவீழ்ச்சி ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளது.

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

25 மாணவர்கள் சேர்ந்து அடித்தே கொன்றுவிட்டனர்! கும்பகோணம் - எங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது'' - கதறி அழுத பெற்றோர்

உயிரிழந்த அரசுப்பள்ளி மாணவன் கவியரசன்

 Vikatan  :  கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிகிச்சையில் இருந்த 12ஆம் வகுப்பு மாணவன் கவியரசன் உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 11ஆம் வகுப்பு மாணவன் மூக்கில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார்.

காஞ்சியில் பிறந்த ராவணன்.. சங்கரமடத்தில் அகழாய்வு நடத்த கோரி ஜன. 22-ல் முற்றுகை போராட்டம்!

 மின்னம்பலம் - Mathi  :  காஞ்சிபுரம் சங்கரமடம் அமைந்துள்ள இடத்தில்தான் ராவணன் பிறந்தார்; 
அதனால் சங்கர மடத்தில் அகழாய்வு நடத்த கோரி ஜனவரி 22-ந் தேதி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டணி வெளியிட்ட அறிக்கை: ராமர் அயோத்தியில் பிறந்தால், ராவணன் பிறந்த இடம் இல்லாமலா போகும். அதுவும் தமிழரின் மெய்யியல் சிந்தனைக்கூடங்கள் தழைத்தோங்கிய காஞ்சியில் இராவணன் பிறக்காமலா இருந்திருப்பார்.
காஞ்சியின் சங்கரமடத்தின் கிழே அகழ்வாராய்ச்சி செய்தால் உண்மை உலகிற்கு வருமென நாம் நம்புவது தவறா? ராமன் பிறந்த இடம் அயோத்தியின் பாபர் மசூதியின் கீழே என உச்சநீதிமன்றம் நம்புமெனில் காஞ்சிகாமகோடி சங்கரமடத்திற்கு கீழாக இராவணனின் பிறந்த இடம் இல்லாமலா போகும். ஆகவே காஞ்சி சங்கரமடத்தை தமிழர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டு சங்கராச்சாரியார் அவரது பூர்வீக ஆந்திராவிற்கு சென்று தங்குவது நல்லது.

தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தின் வாட்டர்லூ! பேரறிஞர் அண்ணா!

ராதா மனோகர் தமிழக வரலாற்றில் பேரறிஞர் அண்ணா பெற்ற புகழை இதுவரை எவரும் பெறவில்லை!
கலைஞரும் எம்ஜியாரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக மோதிக்கொண்ட போதும் அண்ணாவை புகழ்வதில் அவர்களுக்கு இடையே ஒரு போட்டியே இருந்தது என்று கூறினால் மிகையல்ல.
முழுத்தமிழ்நாடும் எந்தவிதமான தயக்கம் இன்றி தமிழ்நாடு அண்ணாநாடுதான் என்று கூறுமளவுக்கு அண்ணா மிகப்பெரிய வரலாற்று ஆளுமையாக அறியப்படுகிறார்!
பேரறிஞர் அண்ணா அப்படி என்னதான் செய்துவிட்டார்?
ஏன் எல்லோரும் அவரை அளவு கணக்கில்லாமல் புகழ்கிறார்கள்?
இதுவரை பேரறிஞர் அண்ணாவின் வரலாறு போதிய அளவு பொதுவெளியில் கூறப்படவில்லைஎன்று கூட ஒரு கருத்து உண்டு.
இன்னும் கூட அண்ணாவின்  சாதனைகள் பற்றி புரிதல் பொதுவெளிக்கு இல்லை என்ற சந்தேகம் கூட எனக்கு உண்டாவதுண்டு!

சனி, 6 டிசம்பர், 2025

இலங்கைக்கு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள்! உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு

 கலைஞர் செய்திகள் - பிரேம் குமார் : டித்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.12.2025) ‘டித்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை வாழ் மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் உதவிடும் வகையில் சென்னை துறைமுகத்திலிருந்து 650 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் டன்னும், என மொத்தம் 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

கனிமொழி : மக்களவையில் திமுகவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த மத்திய அமைச்சர்.

 minnambalam.com-Mathi  :  :திருப்பரங்குன்றம் (Thirupparankundram) விவகாரம் குறித்து மக்களவையில் திமுகவின் டிஆர் பாலு எம்.பி. பேசிய போது, “நீங்கள் பேசுவது உங்களுக்கும் நல்லதல்ல உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல”என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜு மிரட்டல் விடுத்ததாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் கனிமொழி எம்.பி. நேற்று டிசம்பர் 5-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் பல நூற்றாண்டுகளாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மக்கள் கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் சிக்கந்தர் தர்காவிற்கும் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் விதமாக மக்களிடையே மத குரோதத்தை உருவாக்கக்கூடிய விதமாக தேவையில்லாமல் சிலர் பிரச்னைகளை உருவாக்குகின்றனர்.

கனிமொழி எம்.பி : “திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜக முயற்சி!”

 hindutamil.in :  புதுடெல்லி: “உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணம். இதுபோன்ற தவறான தீர்ப்புக்குப் பிறகுதான் மணிப்பூரிலும் கலவரங்கள் வெடித்தன. திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முயற்சிக்கின்றன” என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றத்தில் பல நூற்றாண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

1927 இல் யாழ்ப்பாணத்தில் திரு சு.ராசரத்தினம் தொடங்கிய திராவிட இயக்கம்! . தந்தை பெரியார் 1944 இல் திராவிடர் கழகம் தொடங்க முதலே இலங்கையில் திராவிடம்

 ராதா மனோகர் : தந்தை பெரியார் 1944 ஆம் ஆண்டு  திராவிடர் கழகத்தை தொடங்குவதற்கு முன்பே 
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் திராவிட அமைப்பும் திராவிட பள்ளிக்கூடமும் திராவிடன் பத்திரிகையும் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து திராவிடத்தை இங்கு கொண்டுவரவேண்டாம் என்று கூறுவோர்க்கு  தெளிவாக கூறிக்கொள்கிறோம்!
இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம்  திராவிட அரசியலே! 
அதுவும்  1927 ஆம் ஆண்டிலே திராவிட கருத்தியலும் திராவிட அமைப்பும் திராவிட பத்திரிகையும் அறிமுகமாகி விட்டது!
அதன் முன்னோடியாக இருந்தவர் வழக்கறிஞர் திரு சு. இராசரத்தினம் அவர்கள்!
அவரது படங்கள் இப்போதுதான் நமக்கு கிடைத்தது.
அவற்றில் ஒன்றுதான் இப்போது நீங்கள் பார்ப்பது!   
இலங்கை வடமாகாணத்தில் இடது சாரி அரசியலுக்கு முன்பாகவே திராவிட அரசியல் கருத்துருவாக்கம் பெற்றிருக்கிறது

வெள்ளி, 5 டிசம்பர், 2025

Indigo மிரட்டலுக்கு பணிந்தது ஒன்றிய அரசு.

May be an image of aircraft and text
Sugitha Sarangaraj  Indigo மிரட்டலுக்கு பணிந்தது மத்திய அரசு. 
விமான பணியாளர்களுக்கான புதிய விதியை திரும்ப பெற்றது இந்திய பொது விமானப் போக்குவரத்து துறை இயக்ககம். 
ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய பிறகு விமான போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக Flight Duty Time limitations விதிகளை மத்திய அரசு கடந்த நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது.
அதுவும் விமானிகள் சங்கங்கள் வேலை பளுவை குறைக்கவும் , ஓய்வு நேரத்தை அதிகரித்து , பறக்கும் பணி நேரத்தை குறைக்க பல்வேறு கோரிக்கைள் வைத்த பிறகு (Director General of Civil Aviation ) இந்திய விமானப் பொது போக்குவரத்து இயக்ககம் புதிய விதியை அமல்படுத்தியது. 

வியாழன், 4 டிசம்பர், 2025

இலங்கை 1,593 கி.மீ. தொடருந்து பாதையில் 478 கி.மீ. மட்டுமே பயன்பாடு- வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தண்டவாளங்கள்

 ஹிரூ நியூஸ் : டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதம் காரணமாக, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் தொடருந்து வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார். 
இந்த சூறாவளி பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக சந்திரகீர்த்தி தெரிவித்தார். 
1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாய வீதிகள் சேதமடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஏ.வி.எம்.நிறுவனத்தின் எளிமையான முதலாளி AVM சரவணன்

AVM and its 175th film

 Abdul Samath Fayaz  · உங்கப்பா 36 வருஷமா சர்க்கரை நோயாளி!.
அவருக்கு இருக்கிற டயாபடீஸ் உனக்கும் வர வாய்ப்பிருக்கு!.ஜாக்கிரதை! 
குடும்ப டாக்டர் ரங்க பாஷ்யம் ஒரு சின்ன சர்ஜரி செய்தபோது எச்சரித்தார்!.
அதற்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதையே நிறுத்திக் கொண்டார் அந்த மனிதர்.
காபி சாப்பிடுவதில் ஆர்வமுள்ள அந்த மனுஷன் அதற்குப் பிறகு காபியில் சர்க்கரையே போடவில்லை.
மனுஷனுக்கு கட்டுப்பாடு அவசியம்.
மனம் அலை பாயும்.ஐம் புலனும் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கும்.

காங்கிரஸ் 40 சீட் + ஆட்சியில் பங்கும் கேட்கிறதாம்! காலாவதியான கட்சியின் கனவுக்கு குறைச்சல் இல்லை

 மின்னம்பலம் - Mathi  :காங்கிரஸ் கட்சிதான்.. சென்னையில இன்னைக்கு திமுக தலைவரான சிஎம் ஸ்டாலினை காங்கிரஸ் ஐவர் குழு சந்திச்சு பேசுனதை பத்தி நிறைய தகவல்கள் இருக்குய்யா..
கொட்டுகிற மழைக்கு நடுவே அனலடிக்கும் அரசியல்.. சொல்லுமய்யா
விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த போகுதுன்னு தீயா தகவல் பரவுன நேரத்துல காங்கிரஸ் கட்சி ஐவர் குழுவை அறிவிச்சது..
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர் தலைமையில அறிவிக்கப்பட்ட இந்த குழுவுல, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் இடம் பெற்றிருந்தாங்க..

ஏவிஎம் சரவணன் காலமானார்

May be an image of text that says "In loving memory M. SARAVANAN Dec 3, 1939- Dec 4, 2025 For last respects: Floor No.3, AVM Studios, 7:30am onwards, Dec 4, 2025 AVM ITUDIOS AVM Family & Staff AVM PRODUCTIONS"

 Meenakshi Sundaram :  திரு.ஏவி.எம்.சரவணன்  அவர்கள் இன்று அதிகாலை சென்னை ஏவி எம் ஸ்டூடியோவில் உள்ள வீட்டில் காலமானார். இன்று மாலை இறுதி சடங்கு!
தமிழ் திரையுலகின் மிகப் பெரிய தூண்களில் ஒருவராக திகழ்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சாரவணன் ஐயா (86) இன்று அதிகாலை வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் . 
இந்திய திரையுலகில் ஒரு யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இழப்பாக அவரது மறைவு கருதப்படுகிறது.
நேற்று தான் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்த ஏ.வி.எம். சாரவணன் ஐயா, 
பல தலைமுறைகளுக்கு திரை உலகை வடிவமைத்த எண்ணற்ற வெற்றிப் படங்களை ஏ.வி.எம். நிறுவனத்தின் கீழ் உருவாக்கிய முக்கிய சக்தியாக இருந்தார். 
தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அளவிட முடியாதவை.

திருப்பரங்குன்றம் வழக்கு . 28 நிமிடம், 36 விநாடிகளுக்குள் விசாரித்து வாதங்களை கேட்டு தீர்ப்பை வெளியிட்ட உலகமகா அதிசயம் சுவாமிநாதன் என்ற பிரகிருதி

May be an image of text

 Giri Sundar : ஜி.ஆர்.சுவாமிநாதன் எனும் கலவர  மனிதன்.
இன்று தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை,
மாலை 5 மணிக்கே விசாரணைக்கு எடுத்தது மட்டுமின்றி, 
மாலை 5 மணி முதல் 6.05 மணி வரை ஏற்கனவே 01/12/25-ஆம் தேதியன்று மலை உச்சி மீது விளக்கு ஏற்ற வழங்கப்பட்ட தீர்ப்பை,
 நடைமுறைப் படுத்துகிறார்களா என கால அவகாசம் கொடுத்து பொறுமையாக பார்த்த பின்னர், 
அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதி செய்து, 
மீண்டும் வழக்கு விசாரணையை 6.05 மணிக்கு தொடங்கி இருதரப்பு வாதங்களை கேட்டு, 
உச்சநீதிமன்றம் மற்றும் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்புகளை மட்டும் துணைக்கு அழைக்காமல், 
இங்கிலாந்து நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் கடன் வாங்கி 
13 பக்கம் கொண்ட தீர்பை தயார் செய்து 
மாலை 6.33.36 PM மணிக்கு எல்லாம் அந்த தீர்பை இணையத்தில் பதிவேற்றம் செய்து, 
அதனை நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிப்பது எல்லாம் அவ்வளவு எளிதான காரியமா ?

புதன், 3 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றத்தில் வெடித்த பதற்றம்... 144 தடை உத்தரவு : அரசு அவசர முறையீடு!

 மின்னம்பலம் - Kavi : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க கேட்டு தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளது. 
 கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபமேற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்  அனுமதி வழங்கினார். 
சிஐஎஸ்எப் படை வீரர்களுடன் சென்று தீபம் ஏற்றுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சூழலில் இந்து முன்னணியினரும் பாஜகவினரும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, போலீசார் தடுப்புகளையும் மீறி சென்றனர். 

ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்காவுக்கு எதிரான அவதூறு! சமூக ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பொலிஸாருக்கு உத்தரவு!

 ilakkiyainfo.com : ஜனாதிபதிக்கு எதிரான அவதூறு: சமூக ஊடகப் பரப்புரையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பொலிஸாருக்கு உத்தரவு!
Mathdusha
நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையைப் பயன்படுத்திச் சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடுகல, பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அறிவுறுத்தல்: பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவசரகாலச் சட்டத்தின் கீழ் அனர்த்த சூழ்நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Milk Mafia பால் மாபியா

இனமொன்றின் குரல்  :  இலங்கை தீவு ஆண்டு தோறும் பால்மா பவுடர் (Milk Powder) இறக்குமதிக்கு 300- 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை  செலவழித்து வருகின்றது.
இங்கு சுமார் 1.2 மில்லியன் கால்நடைகள் இருந்தும், உற்பத்தியாகும் பால் சுமார்  450 மில்லியன் லிட்டர்களாக மட்டுமே உள்ளது.
இந்த உற்பத்தி தேசிய தேவையின் 40% ஐ மட்டும்  பூர்த்தி செய்வதால் , ஆண்டுக்கு 75,000 மெட்ரிக் டொன் பால் பவுடர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆனால், உள்ளூரில்  பால் உற்பத்திக்கு  (Fresh Milk) பங்களிக்க கூடிய வடக்கு மற்றும் கிழக்கு பண்ணையாளர்களை தொடர்ந்தும் வஞ்சிக்கின்றார்கள் .
குறிப்பாக, இந்தப் பகுதிகளில் கால்நடை உற்பத்திக்கு  ஆதாரமான மேய்ச்சல் நிலங்களை பெற்று கொடுப்பதில்  ஜேவிபி ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன.
அதேபோல் மன்னாரில் 140,000 கால்நடைகள், வவுனியாவில் 130,000 கால்நடைகள் உள்ளன.

செவ்வாய், 2 டிசம்பர், 2025

இலங்கைக்கு உதவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வெறும் 4 மணிக்கூறுகளை மட்டுமே இந்தியா வழங்கியது? இலங்கை எம்பி கடும் ஆட்சேபம்!

 இலங்கைக்கு நிவாரண பொருட்களை ஏற்றி கொண்டுவரும் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்கு  வெறும் 6 மணிக்கூறுகளை மட்டுமே  ஒன்றிய அரசு வழங்கி உள்ளது.
ராவல் பிண்டி விமான நிலையத்தில் இருந்து இலங்கை வருவதற்கு குறைந்தது 4 மணிக்கூறுகளும்  30 நிமிடங்களும் தேவை.
இந்த விமானங்கள் இலங்கையில் இறங்கி பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் செல்வதற்குமாக குறைந்த பட்சம் 24 மணித்தியாலங்கள் தேவை.
இது பற்றி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு முஜிபுர் ரஹ்மான்  இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளார்! 

கோ.சி.மணி பெயரில் துரைமுருகன் ஆடிய ஆட்டம்.. கடுப்பான ஸ்டாலின்.. கதிர் ஆனந்துக்கு கட்சி பதவி கிடைத்த பின்னணி!

கோ.சி.மணி

 மின்னம்பலம் - Mathi :  திமுகவின் சோழமண்டலத் தளகர்த்தர் என்று கலைஞரால் பாராட்டப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் திமுக அடையாளமான முன்னாள் அமைச்சர், முன்னாள் தஞ்சை மாவட்டச் செயலாளர், டெல்டா மண்டல பொறுப்பாளர் கோ.சி.மணியின் 9 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று டிசம்பர் 2 அனுசரிக்கப்படுகிறது.
கோ.சி. மணி மறைந்து 9 ஆண்டுகள் ஆன பின்னாலும், திமுகவில் அவரது தடமும், அவரது முத்திரையும் இன்னும் அப்படியே உள்ளது.
அண்மையில், திமுகவின் வேலூர் மாவட்டப் பொறுப்பாளராக கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டதில் கூட கோசி.மணியின் பங்கு இருக்கிறது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா?

இலங்கை பேரழிவு பற்றி ஆய்வு நடத்த திரு .ரணில் விக்கிரமசிங்கே அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்கிறார்

Ranil Wickremesinghe – Keynote Speaker ...

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு  நிலைமையை ஆய்வு செய்யும் பொருட்டு  அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்திருக்கிறார்!
இயற்கை அழிவை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது  .
இந்த கூட்டம் வருகின்ற  புதன்கிழமை (03) கொழும்பில் உள்ள மல்பாரா அரசியல் அலுவலகத்தில் நடைபெறும்!
 Ranil calls all party leaders the day after
Former President Ranil Wickramasinghe has called a party leader meeting to discuss the steps that Sri Lanka should be taken due to the extreme adversity faced by the hurricane.
Accordingly, all party leaders are scheduled to meet at Malpara political office in Colombo on Wednesday (03).

திங்கள், 1 டிசம்பர், 2025

அரசுப் பள்ளிகளில் வாரம் ஒரு ‘சினிமா’: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!

 மின்னம்பலம் - Santhosh  : “பள்ளிக்கூடம் என்றாலே பாடம், பரீட்சை, வீட்டுப்பாடம் மட்டும்தானா? கொஞ்சம் ஜாலியாக இருக்கக் கூடாதா?” என்று ஏங்கும் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை ஒரு இனிப்பான செய்தியைச் சொல்லியுள்ளது. 
இனி அரசுப் பள்ளிகளில் வாரம் ஒரு திரைப்படம் திரையிடப்படும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகக் குழந்தைகள் அதிக நேரம் டிவி அல்லது போனில் படம் பார்ப்பதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. ஆனால், “நல்ல சினிமா என்பது ஒரு பாடம்” என்பதை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஒரு புதிய முன்னெடுப்பைக் கையில் எடுத்துள்ளது.

cyclone ditwa: பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

  tamil.oneindia.com  -Rajkumar R  : சென்னை: டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.12.2025) தலைமைச் செயலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தினார்.
டிட்வா புயல் நேற்று பின்னிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 30 நவம்பர், 2025

50 குடும்பங்களும் வீடுகளும் மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை!

 இலக்கியா : : ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை! நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம்.
நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது.
இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது? இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள்.

பதுளையில் ஏற்பட்ட பேரழிவு : வெளியானது அச்சமூட்டும் அறிவிப்பு

 தமிழ் மிரர் :பதுளை மாவட்டத்தில் இன்று (30) பிற்பகல் நிலவரப்படி, நிலச்சரிவு, மண்சரிவு, பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட பேரழிவுகளால் 71 பேர் உயிரிழந்துள்ளனர், 53 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 7,973 குடும்பங்களைச் சேர்ந்த 32,762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக சிறி பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
மாவட்டத்தில் நிறுவப்பட்ட 181 தங்குமிடங்களில் 5,524 குடும்பங்களைச் சேர்ந்த 22,373 பேர் தற்போது தங்கியுள்ளனர், மீதமுள்ளவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். பேரிடர்களில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 151 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன, 1,073 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார்.

சனி, 29 நவம்பர், 2025

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யாழ் பேருந்திலிருந்து அனைவரும் மீட்பு – யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றிய ராணுவம்

 தமிழ் மிரர் :கலா ​​ஓயா பாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்
யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி
யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 28 நவம்பர், 2025

கொழும்பு அடுத்த 24 மணி நேரத்தில் மூழ்கும் அபாயம் – நீரியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!

Sri lanka Flood:வீரகேசரி : சமீபத்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வெள்ளம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொழும்பு முழுவதும் பெரும் அளவில் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
களனி நதிப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என்று நீரியல் & பேரிடர் மேலாண்மைக்கான இயக்குநர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இயற்கை அழிவுகளுக்கும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு

 ராதா மனோகர் :  இயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆரம்பம் ...
Collective Consciousness ... become  Collective Unconsciousness.  Then it will create material realities
தனி மனிதர்களுக்கு இருக்கும் மன நிலை அவர்களை வாழ்வை தீர்மானிக்கும் என்பதை பற்றி பல தடவைகள் எழுதி உள்ளேன்.
அவற்றை பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டலும் அதுதான் உண்மை.
பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது.  இங்கே நான் சொல்ல வரும் விடயம் அது அல்ல.
உலக வரலாற்றில் எங்கெல்லாம் இயற்கை அழிவுகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் அதை தொடர்ந்து அல்லது அதற்கு முன்பாகவே மக்கள் அமைதி இழந்து  நாட்டில் குழப்பங்கள் நிலவுவதை காணலாம்.
இதை ஒரு தற்செயலான நிகழ்வு என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள் . பிரபஞ்சம் இயங்கும் பொறி முறையை பற்றிய போதிய புரிதல் இன்றைய உலகுக்கு  கிடையாது என்பதே உண்மை

ஐராவதம் மகாதேவனும் தமிழும்!

May be a black-and-white image of one or more people and glasses

 Giri Sundar  : நவம்பர் 26, ஐராவதம் மகாதேவன் அவர்களின் நினைவுநாள். அவர் கல்வெட்டு ஆய்வாளர் என்பது பலரும் அறிந்தது. ஆனால் அவர் தினமணி ஆசிரியராகத் தமிழுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. அதனைத் தம் கட்டுரையில் நினைவுகூர்ந்திருக்கின்றார் தினமணி நாளிதழின் இணை ஆசிரியரும் கட்டுரையாளருமான திரு. எம். பாண்டியராஜன். அதனை இங்கே பகிர்ந்திருக்கிறேன்!
தமிழும் ஐராவதம் மகாதேவனும்!
-எம். பாண்டியராஜன்
அறிஞர் ஐராவதம் மகாதேவன் என்றதும் பெரும்பாலும் தொல்லியல், ஆரியர் வருகைக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம், புகளூர்த் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைப் பேசி, மிகக் குறைவாகவே தினமணி பற்றிக் குறிப்பிட்டு விட்டுவிடுகிறார்கள்.

வெள்ளக் காடாக மாறிய இலங்கை - இதுவரை 70 க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு பதுளையில் மட்டும் 31 பேர் உயிரிழப்பு

 bbc.com : திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை
இலங்கையில் இயற்கை சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள நிலவரம், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் நிலை ஆகியவற்றைக் காட்டும் சில புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
கொழும்பு - பதுளை பிரதான சாலையில் உள்ள ஒய் சந்திப்பில் இருந்து பண்டாரவெல செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தியத்தலாவ வழியாகச் செல்லும் சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அம்பாறை கால்வாயில் கார் வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

 தினகரன் :அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று, பொலிவேரியன் குடியிருப்புப் பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்ததும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ செயற்படையணி மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது கால்வாயில் மூழ்கிய கார் மீட்கப்பட்டது.

வியாழன், 27 நவம்பர், 2025

1951 கலைஞரின் கார் -.மணமகள் - சுப்பிரஜா - கலைவாணர்!

May be an illustration of text that says "KARUNANDHI AND ANNADURAI seated beside the car gifted to Karunanidhi by N.S. Krishnan for penning the creenplay of the film "Manamagal" in 1951. எெங்கே கொக்கேபிவிம்ாரின் பிலிம்ாரின் மணமகள்"

ஆனந்த்குமார் சித்தன்  :  கலைவாணர் என் எஸ் கே பொருளாதார ரீதியாக தோல்விகளை சந்தித்த காலம்..
லட்சுமி காந்தன் என்கிற பத்திரிகையாளர் கொலை வழக்கில் இவரையும் சேர்த்து விட்ட பின்னர், போராடி வெளியே வந்த காலம்..
அப்போது
1950 களில் மலையாளத்தில் சுப்ரபா என்று ஒரு நாடகம் மிகப் பிரபலமாக இருந்தது.. அந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க நினைத்தார் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்.
அதை அப்போதைய நண்பரான கலைஞரிடம் சொன்னார்..
பின்னர்
சுப்ரபா நாடகத்தின் எழுத்தாளர் அடூர் முன்ஷி பரமேஸ்வரன் பிள்ளையும், கலைஞரும் இணைந்து திரைக்கதை உருவாக்கினர்.
படத்தின் வசனம் முழுமையாக கலைஞர் எழுதினார்..
கட்டாயத்திருமணமும், பெண் சுதந்திரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை என் எஸ் கே தயாரித்து இயக்கினார்.

ஹாங்காங் பிரமாண்ட குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! 36 பேர் உயிரிழப்பு .. பலரின் நிலை தெரியவில்லை

நக்கீரன் : ஹாங்காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! பலர் உயிரிழப்பு .. பலரின் நிலை தெரியவில்லை 
ஹாங்காங்கின் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காக்கில் உள்ள பல அடுக்குமாடி கொண்ட குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனைத்து தளங்களிலும் தீப்பற்றி எரிந்த நிலையில், இந்த விபத்தில் 36  பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

புதன், 26 நவம்பர், 2025

‘செங்கோட்டையன் தவெவில் -பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ்...’ - திருமாவளவன் சந்தேகம்

 hindutamil.in -  தமிழினி   : சென்னை: “செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்குப் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கைகளும் நீண்டிருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “அதிமுகவின் மூத்த தலைவராக இருந்தவர் செங்கோட்டையன். அவருக்கு நெடிய அனுபவம் உள்ளது. ‘
அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பது அதிமுகவுக்கும், எடப்பாடிக்கும் பின்னடைவாகத்தான் இருக்கும். தனிப்பட்ட முறையில், தன்னிச்சையாக அவர் இந்த முடிவை எடுத்திருந்தால், நாம் எதுவும் சொல்ல முடியாது.

சிறையில் உள்ள புலிகள் ஆதரவு பெண்ணுக்கு எஸ்.ஐ.ஆர்., படிவம்

https://images.dinamalar.com/data/large_2025/Tamil_News_lrg_4092141.jpg

 தினமலர் -சென்னை: சிறை கைதியாக உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு வினியோகம் செய்ய, எஸ்.ஐ.ஆர்., படிவம் அச்சடித்து இருப்பதும், அவரிடம் நம் நாட்டு பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் என, சகல விதமான ஆவணங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, 45. இவர், 2019ல், சுற்றுலா விசாவில் தமிழகம் வந்து, சென்னை அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த இவர், 2021ல், விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல முயன்றார். அவரை, தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விஜய்.. செங்கோட்டையனை வாண்டடாக கேட்டது ஏன்? விஜயகாந்த் எடுத்த அதே ரூட்!

 tamil.oneindia.0Rajkumar R  :  சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது/ ஏற்கனவே பல தலைவர்கள். குறிப்பாக செஞ்சி ராமச்சந்திரன், மருது அழகராஜ், காளியம்மாள் ஆகியோர் விஜய் தரப்பை அணுகிய நிலையில் அவர்கள் கட்சியில் இணைவதற்கு விஜய் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் செங்கோட்டையனை விஜய் தரப்பே அணுகி கட்சியில் சேர வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குப் பின்னணி என்ன என்பது குறித்தான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது.

செவ்வாய், 25 நவம்பர், 2025

5 வயது சிறுவனை மரத்தில் கட்டி தொங்க விட்ட ஆசிரியைகள்- சத்தீஸ்கர் மாநிலம்

Teachers hang student from tree

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy  :சத்தீஸ்கரில் வீட்டுப்பாடம் முடிக்காத நான்கு வயது மாணவனை ஆசிரியைகள் மரத்தில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் பகுதியில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் வாஹினி வித்யா மந்திர் பள்ளி செயல்பட்டு வருகிறது. நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் திங்களன்று காலை வழக்கம் போல் பள்ளி தொடங்கியது. அப்போது நர்சரி வகுப்பு ஆசிரியை காஜல் சாகு என்பவர் குழந்தைகளுக்கு அளித்த வீட்டுப்பாடத்தை சரிபார்த்தார். அப்போது அவரது வகுப்பில் ஒரு மாணவர் மட்டும் வீட்டு பாடங்களை முடிக்காதது கண்டு ஆத்திரம் அடைந்தார்.

“கொழும்பு ஹோட்டலில் தாக்குதல் சம்பவம் – வாடிக்கையாளர்கள் மீது இனவாதக் குற்றச்சாட்டு தவறு”

 மதுஷா : கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளில் ஹோட்டல் ஊழியர்களால், வாடிக்கையாளர்கள் தாக்கப்படுவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
எனினும் உண்மையில் வாடிக்கையாளர்களால் கொடூரமான முறையில் ஊழியர்கள் தாக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீது தாக்குல் மேற்கொண்டதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் சம்பவத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஊழியர்கள் மீது தாக்குதல்

திங்கள், 24 நவம்பர், 2025

திமுகவிடம் காங்கிரஸ் 45 தொகுதி கேட்கிறது - டபிள் டிஜிட்டாவது கிடைக்குமா?

 மின்னம்பலம் : 45 சீட்.. காங்கிரஸ் ஐவர் குழு 'அதிரி புதிரி’.. திமுக ‘ஷார்ப்’ ரியாக்சன் என்ன? 
கூட்டணி விவகாரத்துல காங்கிரஸ் ரொம்ப வேகமா இருக்கேன்னு டெல்லி மேலிடத்துக்கு நெருக்கமான சீனியர்களிடம் நாம் பேசிய போது, “பீகார் தேர்தல் முடிஞ்ச கையோடு டெல்லியில 12 மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பொறுப்பாளர்கள், சீனியர் லீடர்ஸை ராகுல் அழைச்சு பேசுனாரு.. SIR பத்தி பேசுறதுக்குன்னு சொன்னாலும் ஒவ்வொரு ஸ்டேட்டுலயும் எலக்‌ஷன் வரப் போறதால அதுபத்தியும் டிஸ்கஷன் போனது..
இந்த கூட்டத்துல, தமிழகத்துல காங்கிரஸ் வேற கூட்டணி ஆப்சனை எதுவும் பார்க்குதுன்னா சிலர் கேட்டுப் பார்த்தாங்க.. அதுக்கு கார்கேவும் ராகுலும், திமுக கூட்டணியைத் தவிர வேற சான்ஸே இல்லை.. ஆனா எத்தனை சீட், எந்த தொகுதிங்கிற விவகாரம் எல்லாத்தையும் நீங்களே பார்த்துக்கனும் என கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாங்க..

இலங்கை கடுகண்ணாவ மண்சரிவில் 6 பேர் உயிரிழப்பு


 ஜாப்னா முஸ்லீம் : கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தவர் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது.
அனர்த்தத்தில் சிக்கியிருந்த நிலையில் காயமடைந்து மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த தேடுதல் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி வீதியிலுள்ள பஹல கடுகண்ணாவ மற்றும் மாவனெல்லவுக்கு இடையிலான பகுதியில் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

ஞாயிறு, 23 நவம்பர், 2025

கார்த்தி சிதம்பரம் : சென்னையை தவிர மற்ற நகர்களுக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை!

 தினமலர் : திருப்புத்தூர் : ''தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை,'' என,காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் அவர் அளித்த பேட்டி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஏற்கக் கூடியதே. 
ஆனால் வாக்காளர் நீக்கப்பட தகுந்த ஆதாரங்கள், ஆவணங்கள் அளிக்க வேண்டும். முப்பது நாட்களுக்குள் வாக்காளர் பட்டியலை திருத்த முடியுமா என்பது தான் கேள்வி. 
தேர்தல் கமிஷனுக்கு, 2026ல் தமிழக சட்டசபைத்தேர்தல் வரும் என்பது தெரியும். 

இலங்கை இந்தியா பாகிஸ்தான்- குடியுரிமையும் பொய் பிரச்சாரங்களும்

Prime Minister Jawahalal Nehru Prime Minster D.S.Senanayaka

ராதா மனோகர்
: இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை குடியுரிமை  பற்றி இந்த நிமிடம் வரை ஏராளமான வரலாற்று பொய்கள் கட்டமைக்கப்படுகிறது.
அதில் கவனிக்க வேண்டிய சில விடயங்களை பற்றி இப்போது பாப்போம்.
இலங்கை இந்தியா பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் பிரித்தானியாவிடம் இருந்து ஏறக்குறைய சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகளாகும்.
இந்த மூன்று நாடுகளின் பல பிரச்சனைகள் பெரிதும் பொதுவானவை.
அந்த பிரச்சனைகள் எப்படி எதிர்கொள்ள பட்டன என்பது ஆய்வுக்கு உரியது.
இந்தியாவும் பாகிஸ்தானும் ( பங்களாதேஷ் உள்ளிட்ட) ஒரு போர்முனையில் பிரியவேண்டிய சூழ்நிலை உருவானது.
இரு பகுதி எல்லைகளும் பிரிக்கப்பட்ட போது இரத்த ஆறு ஓடியது.
மேற்கு பாகிஸ்தான்  எல்லையிலும் கிழக்கு பாகிஸ்தான்  எல்லையிலும் ஒரு வரை ஒருவர் வெட்டி கொன்றார்கள்.
இதில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது 
அண்ணளவாக  இரண்டு கோடி மக்கள் இடம்பெயர்ந்ததாக கூறப்படுகிறது..
கோடிக்கணக்கான குடும்பங்கள் ஈவு இரக்கம் இல்லமால் நிரந்தரமாக பிரிக்கப்பட்டன.

மன்மோகன்சிங் வழக்கின் தீர்ப்பை மீறும் தேர்தல் ஆணையம்- பீகாரிகள் தமிழக வாக்காளர்களாக முடியுமா?

Election Commission Biar Voters
மின்னம்பலம் 0 -வி. அருண்  2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் மே மாதத்திற்குள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் 27.10.2025 ஒரு ஆணையை வெளியிட்டது. அதில், தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களின் வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர சீர்த்திருத்தம் SIR மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையானது, 04.11.2025 முதல் 04.12.2025-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 4.11 2025 அன்று வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் 27.10 2025ல் அறிவித்த போதிலும், தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 41 லட்சத்து வாக்காளர்களுக்கு, ஒரு வாக்காளருக்கு இரண்டு படிவங்கள் என்ற வகையில் நான்கு பக்கங்கள் கொண்ட கணக்கீட்டு படிவம் (Enumeration,Form) கொடுக்க வேண்டும். ஆனால் 4. 11.2025 தேதியில், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், முறையாக BLO-க்களுக்கு தேவையான அளவுக்கு பயிற்சி கொடுக்காமல், அவசரகதியிலும் இதை நடைமுறைப்படுத்த ஆணையிட்டது

ஈரோடு தமிழன்பன் காலமானார் .

 Annamalai Arulmozhi  : திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் இரங்கல் அறிக்கை!!
நமது அருமைத் தோழர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் தமது 92ஆம் வயதில் (22.11.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரின் இழப்பு எளிதில் ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பாகும். 
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பரம்பரை என்று போற்றத் தகுந்த கவிஞர்களுள் முதல் வரிசையில் திகழ்ந்தவர். முற்போக்குச் சிந்தனையாளர்! இன உணர்வாளர்! சமூகநீதியாளர்! மானுடநேயர்!
சென்னிமலையில் பிறந்தாலும் எந்தச் சிறப்பைப் பெற்றாலும் எந்த விருதினை ஏற்றாலும், அவை அத்தனையும் ஈரோட்டுப் புகழே என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தன்னுடைய பெயருக்கு முன்னால், ஈரோட்டை இணைத்துக்கொண்டு, வெறும் பெயரோடு என்றில்லாமல் அந்த உணர்வோடு கலந்துவிட்ட பெரியார் பற்றாளர், அற்புதமான ஒப்பற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

சனி, 22 நவம்பர், 2025

திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு அறிவிப்பு

 மின்னம்பலம் - Mathi  : 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுகவுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த காங்கிரஸ் கட்சி 5 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது.
இந்த குழுவில்
1) கிரிஷ் ஜோடங்கர் (தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்)
2) செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்)
3) சூரஜ் ஹெக்டே (காங்கிரஸ் செயலாளர்)
4) நிவேதித் ஆல்வா (காங்கிரஸ் செயலாளர்)
5) ராஜேஷ்குமார் (தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்)
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் தீர்ப்பு! பவாரியா கொள்ளையர்கள் குற்றவாளிகள்

 மின்னம்பலம் - Kavi  : முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கே. சுதர்சனம் கொலை வழக்கில், இன்று (நவம்பர் 21) சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
18 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், பவாரியா கொள்ளையர்களான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் அறிவித்தார்.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் நவம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் நடந்த கொலை

“விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்” - அப்பாவு கருத்து

 hindutamil.in  - அ.அருள்தாசன் :  திருநெல்வேலி: “விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கை அளித்துள்ள நிலையில், அவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது:
 “இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்தளவுக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 ஆண்டு காலமாக மசோதாவை ஆளுநர் நிலுவையில் வைத்து வந்துள்ளார்.

கரிகாலன் : எல்லாவித அநியாயங்களையும் வக்கிரத்தோடு அரங்கேற்றி வரும் திரு.ஷபீர் அகமது,

 Karikalan Kiru  : எல்லாவித அநியாயங்களையும் வக்கிரத்தோடு அரங்கேற்றி வரும் திரு.ஷபீர் அகமது, அவரை நோக்கி வரும் விமர்சனங்களையும் கேள்விகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் "மத ரீதியான தாக்குதல்" என்று 'victim' வேடம் போட்டு  தப்பிக்கப் பார்க்கிறார். வேறு வழி? துரோகம் செய்யும் அனைத்து கோடாரிக் காம்புகளும், தங்கள் குட்டு வெளிப்பட்டவுடன் கைகொள்ளும் அதே அரதப் பழசான வழியைத் தான் திரு.ஷபீரும் தேர்ந்தெடுத்துள்ளார்.
இவருக்கு ஆதரவாக 2 சங்கங்கள் அறிக்கை வெளியிட்டு,கோதாவில் குதித்துள்ளன.
1. தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் 
2. சென்னை பத்திரிகையாளர் சங்கம் 
இதில் தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் மற்றும் அதன் நிர்வாகிகளின் பின்னணியை பார்த்தாலே திரு.ஷபீரின் victim card தானாகவே டார் டாராக கிழிந்துவிடும். 

கைதிகளின் பற்களை உடைத்த ஐபிஎஸ் அதிகாரி பல்பீந்தார் சிங் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

பல்வீர் சிங் | கோப்பு படம்

 hindutamil.in - கி.மகாராஜன்  : மதுரை: விசாரணைக் கைதிகளின் பற்களை உடைத்தது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “அம்பை டிஎஸ்பியாக பணிபுரிந்த போது அருண்குமார் என்பவரை சட்டவிரோதமாக காவலில் வைத்து பல்லை உடைத்ததாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இதுபோன்ற சம்பவங்களை குறிப்பிட்டு என் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வெள்ளி, 21 நவம்பர், 2025

அனில் அம்பானியின் ரூ.1,452 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

 தினமலர் : புதுடில்லி: வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில், அனில் அம்பானிக்கு சொந்தமான 1,452 கோடி மதிப்பு சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
'ரிலையன்ஸ்' குழும தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66, வங்கி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 
ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றம்சாட்டப்பட்டது.

வியாழன், 20 நவம்பர், 2025

மாநில சட்டமன்றங்களின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் உச்ச நீதிமன்றம்?

 Vasu Sumathi  :  "சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் இல்லை என்றாலும், ஆளுநர்களுக்கும் ஜனாதிபதிக்கும் ஒப்புதல் வழங்க காலக்கெடுவை நிர்ணயித்த இருவர் அடங்கிய அமர்வின் ஏப்ரல் 8 தீர்ப்பில் உள்ள உத்தரவுகள் செல்லாது.  அவை அரசியலமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது." -  ஐவர் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு. 
இதற்கு முன் கொஞ்சம் நியாயமாக தீர்ப்பு வழங்கிய உநீம.. இப்போது பல்டியடித்து, மீண்டும் அரசுக்கு சாதகமாகவே உப்பு சப்பில்லாத ஒரு முடிவை சொல்லியிருக்கிறது. முழு ஆணையும் வந்த பிறகு விரிவாக அலசலாம். ஆனால் இது ஆரோக்கியமான தீர்ப்பாக இல்லை. 
"ஆளுநரிடம் 3 அரசியலமைப்பு சார்ந்த வாய்ப்புகள் உள்ளன - ஒப்புதல், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைத்தல், சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புதல். 
ஆளுநர் இந்த மூன்று வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தன் விருப்புரிமையைப் பயன்படுத்துகிறார். 

ரூ.100 லஞ்ச வழக்கில் 39 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டவரின் கதை

 பிபிசி தமிழ் : 'மனைவி இல்லை, மரியாதை போய்விட்டது'- 
ரூ.100 லஞ்ச வழக்கில் 39 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டவரின் கதை
ராய்ப்பூரின் அவதியா பாராவின் வளைந்த குறுகிய தெருக்களில், ஒரு பழைய வீடு இருக்கிறது. சுமார் 84 வயதான ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா அந்த வீட்டில்தான் வசிக்கிறார்.
இந்த வீட்டின் பாழடைந்த சுவர்களில் பெயர்ப் பலகைகள் ஏதுமில்லை, வெற்றியின் அறிகுறிகள் ஏதுமில்லை. ஆனால் இந்த சுவர்களால் பேச முடிந்தால், ஒரு மனிதர் 39 ஆண்டுகள் நீதியின் கதவைத் தட்டிய கதையை அவை சொல்லும். அந்தக் கதவு இறுதியில் திறந்தபோது, அவரது வாழ்க்கையின் பெரும்பாலான ஜன்னல்கள் ஏற்கனவே மூடியிருந்தன.

புதன், 19 நவம்பர், 2025

திருகோணமலையில் ஒரு உணவகத்தை வைத்து பௌத்த சைவ சண்டைக்கு தூபம் போடும் இனவாதிகள்

 ராதா மனோகர் : இலங்கை ஏறக்குறைய 70 ஆண்டுகளாக இனவாத மதவாத சேற்றுக்குள் இருந்து மெதுவாக மேலெழுந்து வருகிறது!
இப்போது என்ன காரணம் கொண்டும் வெறுப்பு அரசியலை தூண்டி விடுவது சரியல்ல.
எல்லாவற்றிலும் மேலாக பௌத்தம் தமிழர்களின் மதமும்தான் சிங்கள மொழியும் தமிழர்களின் மொழிதான்.
அது பௌத்தத்தை பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ரகசிய மொழி,
பார்ப்பனர்கள் கடலை கடக்க கூடாது என்ற அந்த காலத்து வழக்கப்படி அவர்கள் இலங்கைக்கு வரவில்லை.
எனவே இலங்கையில் அவர்களால் ஆபத்து இல்லை. 
இந்த காரணத்தால்தான் அது ஓரளவு மக்கள் பேசும் மொழியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது .
மேலும் தமிழ் மொழியை சைவர்கள் கைப்பற்றி தமிழும் சைவமும் ஒன்று என்ற ரீதியில் மன்னர்களின் ஆதரவோடு அதை நடைமுறைப்படுத்தினர்.
அதனால்தான் தமிழர்களின் திருக்குறளையே எந்த காலத்திலும் சைவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

பொன்ராஜ் : பாஜகவை வீழ்ந்த தெருவில் இறங்கி போராடவேண்டும்!

 Rebel Ravi : பாஜக + தேர்தல் ஆணைய கூட்டணியை வீழ்த்த பொன்ராஜ் அவர்கள் கடந்த ஆறுமாதமாக ஊடகங்களில் தொடர்ந்து வலியுறுத்தும் தீர்வு இதுதான்…!
ராகுல்காந்தி அவர்கள் வாக்கு திருட்டை வெளிப்படுத்துவதால் மட்டும் பாஜகவை வீழ்த்த முடியாது…!
ராகுல் காந்தியும் பல மாநில கட்சிகளின் தலைவர்கள் தனிதனியாக போராடுவதாலும் பாஜகவை வீழ்த்த முடியாது…!
உச்ச நீதிமன்றத்தில் வாக்கு திருட்டு மற்றும் S.I.R. உள்ளிட்டவற்றை எடுத்து சென்றாலும் அது கிடப்பில் போடப்படும். அதனாலும் பாஜகவை வீழ்த்த முடியாது…! 
தேர்தல் ஆணையர் பாஜக நிர்வாகியாக செயல்படுவதால் பாஜகவை வீழ்த்த முடியாது…! 

செவ்வாய், 18 நவம்பர், 2025

இலங்கை சிறைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்

 jaffnamuslim.காம் : "வெடிக்கத் தயாராக" மெகசின் சிறைச்சாலை
இலங்கையின் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாக கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவு தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயங்களை முன்வைத்தார்.
நாட்டின் சிறைச்சாலைகளின் உத்தியோகபூர்வ கொள்ளளவு 10,750 ஆக இருக்கும் நிலையில், தற்போது சுமார் 37,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.110 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா- கைவிடப்பட்ட சூட்கேசில்

file video :   

 ஹிரூ நியூஸ் : கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட ஒரு சூட்கேஸை சுங்கத்துறையினர் சோதித்தபோது, அதில் ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார், சூட்கேஸில் 11.367 கிலோ கஞ்சா இருந்ததாகவும், அதன் சந்தை மதிப்பு ரூ.113,670,000 எனப் பதிவாகியுள்ளதாகவும்.
இந்த சூட்கேஸ் மார்ச் 17ஆம் திகதி விமான நிலையத்தில் கைவிடப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் நேற்று (17) போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிகார் - காங்கிரஸ் அதிக தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் மிரட்டி வாங்கி எதிர்கட்சிகளை வெற்றி பெற வைக்கிறது

May be an image of text that says "DALTI MEMERS 3 O GALIT MEMES 1d Dalit Memers Collective X Broomin privilege: Nobody questions his incompetence. All blame is conveniently shifted to the EVMs."

 Rebel Ravi :   பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். - என்ன செய்யப் போகிறது திமுக?
பிஹார் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களைக் கேட்டு ஆர்ஜேடி-யுடன் ஆரம்பத்திலிருந்தே மல்லுக்கு நின்றது காங்கிரஸ். கடைசியில், 61 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும், 7 தொகுதிகளில் ஆர்ஜேடி-யுடனேயே நட்புடன்(!) மோதியது காங்கிரஸ். கடைசியில், காங்கிரஸுக்கு கைவசமானது என்னவோ 6 தொகுதிகள் தான்.
தமிழகத்திலும் 1996 முதல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்ட போதெல்லாம் அபாரமான தோல்விகளையே சத்தித்திருக்கிறது
1996 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. 
இதேபோல், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வுக்கு அழுத்தம் கொடுத்து 63 இடங்களை பெற்ற காங்கிரஸ், ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது. ஓர் இடத்தில் காப்புத் தொகையையும் காவுகொடுத்தது.
இதேபோல், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 41 இடங்களை தந்தது திமுக. அதில் எட்டில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. 

SIR மூலமாக தமிழக வாக்காளர் பட்டியலில் பீகாரிகள்? தேர்தல் ஆணையத்துக்கு திமுக கேள்வி Biharis in Tamil Nadu

 மின்னம்பலம் -  Mathi :  இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக பீகார் வாக்காளர்களையும் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க முயற்சி நடைபெறுவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது.
திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட அறிக்கையில், தேர்தலை முறையாக, ஒழுங்காக, நேர்மையாக, உண்மையாக நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் ஒரே வேலை. ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நடப்பது எல்லாம் குளறுபடிகளின் உச்சமாக இருக்கிறது.
இதற்கு முன்பு தேர்தல் நடந்த மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் வாக்காளராக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்திற்கு வந்து வாக்களித்திருக்கிறார்கள்.

வட இந்தியா தோற்றது ஏன்? அரசியல் கோட்பாடு வறுமையே முதன்மை காரணம்


 ராதா மனோகர்
  : வட இந்தியாவில் இன்று  நடக்கும் அத்தனை அவலங்களுக்கும் மூல காரணம் அங்குள்ள அரசியல் கோட்பாட்டு வறுமைதான்.
மறுபுறத்தில் தமிழ்நாடு எல்லா விதத்திலும் முன்னேறி செல்வதற்கும் எத்தனையோ காரணங்களை கூறினாலும்,
நீதிக்கட்சியில் இருந்து இன்றைய திமுக வரை வளர்ச்சி பெற்ற அரசியல் கோட்பாடுதான் காரணம்  என்று நான் கருதுகிறேன்.
தமிழக அரசியல் கட்சிகளும் ஏராளமான இயக்கங்களுக்கும் கடும்  அரசியல் சமூக விவாதங்களை தொலைக்காட்சிகளில் நடத்துவதை  அன்றாடம் நாம்   காண்கிறோம்.
இப்படிப்பட்ட காட்சிகளை இந்த அளவுக்கு இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாது.
தென்னக மாநிலங்களில் கொஞ்சம் காணலாம்..
வடமாநில தொலைக்காட்சிகள் இன்னும் ஒரு வளர்ச்சி அடையாத மக்களின் மூட நம்பிக்கைகளுக்கு மலிவு தீனி போடுவதையே 24 மணிக்கூறும் செய்கின்றன.