தினமலர் : பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் பிக்பாஸ் மாயா சகோதரி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ஓர் இசையமைப்பாளர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்து பேசியுள்ளார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாடகி ஸ்வாகதா பேசியதாவது: என்னிடம் ஒரு முன்னணி தமிழ் இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக தவறாக நடந்தார். அது ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரான், அனிருத், இமான் ஆகியோர் இல்லை. அவரால் தான், சினிமாவே வேண்டாம் என சொல்லி சென்னையில் இருந்து வெளியேறி ரிஷிகேஷில் செட்டில் ஆகிவிட்டேன். 6 வருடமாக துணி வியாபாரம் செய்து வருகிறேன். அந்த
இசையமைப்பாளரின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு கோரஸ் பாடி இருக்கிறேன். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விஷயங்களும் நடந்தது. அதை செய்திருந்தால் இப்போது பெரிய இடத்தில் இருந்திருப்பேன். எனக்கு திறமை இருக்கிறது என முயற்சித்து வாய்ப்பு தேடினேன். நான் சினிமாவில் கஷ்டப்பட்டு பெற்ற இடத்தை விட்டுவிட்டு வர ஒரு இசையமைப்பாளர் தான் காரணம்.
வியாழன், 30 ஏப்ரல், 2026
பாடகி ஸ்வாகதாவிற்கு பாலியல் தொல்லை: யார் அந்த இசையமைப்பாளர்? இசையமைப்பாளர் சாம்?
புதன், 29 ஏப்ரல், 2026
வடமாநிலம் எங்கும் கலப்படம் நீக்கமற நிறைந்திருக்கிறது
தீக்கதிர் : தாராளமாகப் புழங்கும் கலப்படப் பொருட்கள்
புதுதில்லி
கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்தியாவின் பல் வேறு மாநிலங்களில் கலப் படப் பொருட்கள் தொடர்பான நட வடிக்கைகளில் பெரும் அளவி லான போலி உணவு, மருந்து மற்றும் அன்றாடப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
தலைநகர் தில்லியில் போலி சென்சோடைன் பற்பசை தயாரித்த ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டது.
நடவடிக்கையில் 1,800 போலி பற்பசை டியூப்கள், 10,000க்கும் மேற்பட்ட காலி டியூப்கள், 130 கிலோ கலப்பட மூலப்பொருட்கள் என பெரும் அள விலான பொருட்கள் கைப்பற்றப் பட்டன.
Exit Poll 2026: 234 தொகுதிகளில் மக்கள் வாக்களித்தது எந்த கட்சிக்கு? ஆட்சி அமைக்க போவது யார்? மின்னம்பலம் Exit Poll 2026:
![]() |
மின்னம்பலம் - Mathi : 17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.
கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட்டது.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யாத தமிழ் தேசியம் அத்தனை நன்மைகளும் செய்த திராவிடம்
![]() |
ந. சரவணன் : இலங்கை தமிழர்கள் சிலர் தீவிர தமிழ்த்தேசிய பற்றாளர்களாக தங்களை காட்டிக்கொள்கின்றனர். தற்போதைய தேர்தலிலும் பங்களிப்பு செய்கின்றனர்.
தமிழ்கத்திலுள்ள இலங்கை தமிழர்களுக்கு தமிழ்த்தேசியம் என்ன செய்தது என்றால்,
இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்பதற்கு லாபி செய்கிறது.
செவ்வாய், 28 ஏப்ரல், 2026
சியோன் தேவலாயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய ஆஸாத்தின் தந்தை, LTTE இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்

Mabrook UL is in Addalachena ஈஸ்டர் தாக்குதல்: உண்மைகளைத் தேடிய களப் பயணம்/05
சியோன் தேவலாயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய ஆஸாத்தின் தந்தை, LTTE இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என்கிற தகலொன்றை, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், ஈஸ்டர் தாக்குதல் நடந்து சில மாதங்களின் பின்னர் பேஸ்புக்-இல் எழுதியிருந்தார்.
பஷீர் சேகுதாவூத் - ஈரோஸ் இயக்கத்தில் மிக நீண்டகாலம் உறுப்பினராக இருந்தவர்.
பஷீர் பகிர்ந்த அந்தத் தகவல் பலருக்கும் புதியதாக இருந்தது.
எனவே, இது தொடர்பில் மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக காத்தான்குடிக்குச் சென்றேன்.
ஆசாத்தின் தந்தை நஸார் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்கிற போதும், அவரைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு, காத்தான்குடியில் நாம் சந்தித்த அநேகர் தயக்கம் காட்டினர்.
சிலரை பெரும் பிரயத்தனங்களுக்குப் பின்னர், இது பற்றிப் பேசுவதற்கு இணங்கச் செய்த போதும், தம்மைப்பற்றிய அடையாளத்தை வெளியிடக் கூடாது என்கிற உத்தரவாதங்களை எம்மிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
விஜய் யாருடைய வாக்குகளைப் பிரிக்கிறார்? விவரிக்கும் காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்
minnambalam.com - Mathi : தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எந்த கட்சியின் வாக்குகளைப் பிரிக்கக் கூடும்?
விஜய்யின் வாக்குகள் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விவரித்துள்ளார்.
நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பீட்டர் அல்போன்ஸ் அளித்த பேட்டியில்,
விஜய் ஃபேக்டர் ஒரு மிஸ்டரி. அதுக்குப் பின்னால இருக்கிற அந்த ஃபோர்ஸினுடைய மூலம் தெரியல. வர்ற கூட்டத்தைப் பார்த்தா நமக்கு ஆச்சரியமா இருக்கு.
ராஜிவ் காந்தி கொலையாளி பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்
சட்டப்படிப்பை முடித்தவர்கள், பார் கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே நீதிமன்றங்களில் வழக்கறிஞராக ஆஜராகி வாதிட முடியும். அந்த வகையில், சட்டப்படிப்பை முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இன்று நடத்தியது.
திங்கள், 27 ஏப்ரல், 2026
2026சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் வதந்தி பதிவுகளும்
![]() |
முரசொலி_தலையங்கம் 27/04/26 : ஏப்ரல் 23 நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 84.51 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவானது அதிகரித்தே வருகிறது. அந்த வகையில் இந்தத் தேர்தலிலும் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
ஆனால், இதை வைத்து பல்வேறு வதந்திகளை பலரும் கிளப்பி வருகிறார்கள்.
ஆளும்கட்சி மீதான கோபம்’ என்று சில சில்லறைகள் முட்டாள் தனமாக ஊடகங்களில் ஊளையிட்டு வருகிறார்கள்.
கடந்த தேர்தலை விட 30 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம் ஆகி இருக்கிறது.
ஏழு ஆம் ஆத்மி ராஜ்யசாபா எம்பிக்கள் பாஜகவுக்கு தாவல் .. ஒப்புதல் தந்த மாநிலங்களவை தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்
![]() |
மின்னம்பலம் - Mathi : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவரான துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி 10 எம்.பிக்களைப் பெற்றிருந்தது. இவர்களில் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் கூண்டோடு பாஜகவுக்கு தாவினர்.
இந்நிலையில் தாங்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரிக்க கோரி மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 7 எம்.பிக்களும் கடிதம் அனுப்பினர். மேலும் 7 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆம் ஆத்மி கட்சி கோரியது.
புதுச்சேரியில் மும்மொழி கொள்கை: திமுக, அதிமுக எதிர்ப்பு
hindutamil.in - செ.ஞானபிரகாஷ் : புதுச்சேரி: புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிப்பால் போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுகவும் இரு மொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026 - 27 கல்வியாண்டு முதல், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ‘தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023’-ன் பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளனர்.
அர்ச்சுனா ராமநாதன் எம்பி! கைது: துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது
ilakkiyainfo.com : பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வந்துள்ளது.
இந்த தேர்தலில் திமுகவினர் அதிகமாக குறிவைத்தது எந்த வாக்காளர்களை
Giri Sundar : இந்தத் தேர்தலில், திமுகவின் வியூகம் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
அவர்கள் தங்கள் கவனத்தை மாற்றியிருப்பதாகத் தெரிகிறது —
'சத்தம்' அரசியலில் கவனம் சிதறாமல், கள யதார்த்தத்தில் கவனம் செலுத்துகிறார்கள்.
புதிய முகங்கள், சிறப்பு வேட்பாளர்கள் அல்லது நோட்டாவை விரும்பும் சுமார் 10-15% வாக்காளர்களைக் கொண்ட 'சத்த வாக்கு' என்று அழைக்கப்படுபவர்களை ஒவ்வொரு கட்சியும் ஈர்க்க முயற்சிக்கிறது,
ஆனால் திமுக அந்தப் பிரிவினரை நேரடியாகப் பின்தொடர்வதில் அதிக அக்கறை காட்டவில்லை.
மாறாக, அவர்களின் அணுகுமுறை தமிழ்நாட்டின் முக்கிய வாக்கு வங்கிகளை —
குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையேயான கடுமையான போட்டியை —
3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம்! விசாரணை நீதிமன்றங்களில்- நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்
hindutamil.in : சேலத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் திறந்து வைத்தார். உடன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதிகள் | படம்: எஸ். குருபிரசாத் |
சேலம்: நாடு முழுவதும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. விசாரணை நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடையாமல் இருக்க வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.59.43 கோடியில் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், இளந்திரையன், ஜெயச்சந்திரன், குமரப்பன் பங்கேற்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு! உலகநாடுகள் கண்டனம்
minnambalam.com - Mathi : அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்திற்கு (White House Correspondents’ Dinner) வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏப்ரல் 25-ந் தேதி சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 2,600 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த ஆண்டு வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்து, திடீர் துப்பாக்கிச்சூடு சப்தத்தால் நிலைகுலைந்தது. விருந்தினர்கள் மேசைகளுக்கு அடியில் பதுங்கியனர். இந்நிலையில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ஞாயிறு, 26 ஏப்ரல், 2026
விஜய் கூட்டத்தில் பாலியல் சீண்டல்கள் அரங்கேறியுள்ளன- பெண் பிள்ளைகளின் உடல் ரத்தம்கன்றி போகிற அளவுக்கு
புகச்சோவ் புகச்சோவ் : இடதுசாரி கலைஞர்களுக்கும், ஆத்தாடி கலைஞர்களுக்கும், நடத்தை மற்றும் நாகரீகத்தில் வித்யாசமிருப்பதுபோல, இடதுசாரி கலைஞர்களின் ரசிகர்களுக்கும், ஆத்தாடி கலைஞர்களின் ரசிகர்களுக்கும்கூட வித்யாசமுண்டு.
அணில் விஜயின் கேம்பெய்ன்ல பத்தாயிரம்பேர் கூடினப்போ கூட, பெண் பிள்ளைகளின் உடல் ரத்தம்கன்றி போகிற அளவுக்கு பாலியல் சீண்டல்கள் அரங்கேறியுள்ளன. தெருவெங்கும் குப்பையும், போக்குவரத்து விதிமீறல்களும், அடிதடி சண்டைகளும் , நாய்ஸ் பொலியூஷனும், பிக்பாக்கெட் முதல் செயின் ஸ்னாச்சிங் வரை நடந்திருக்கிறது.கிட்டத்தட்ட கள்ளக்காதலர்கள் சந்தித்தித்துக்கொள்ளும் களமாகவே விஜயின் கேம்பெய்ன்கள் நடத்தப்பட்டன.
கலப்பட ஐஸ்கிரீம் ஆபத்து .. உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட உத்தரவு
tamil.oneindia.com - Halley Karthik : சென்னை: கோடை வெயில் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, கலப்படம் குறித்த கவலையும் எழுந்திருக்கிறது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
வெயிலுக்கு இதமா ஜில்லுன்னு ஒரு ஜூஸ் குடித்தால், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், அதில் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கலப்படம் என்பது மெல்ல கொல்லும் விஷம். எனவே இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடற்கரையோரத்தில் நிறுவப்பட்ட solar PV கட்டமைப்பில் solar panel களை குளிரூட்டும்
![]() |
Janaki Karthigesan Balakrishnan : Solar PV மின்சார உற்பத்திக்கு மேலும் முன்னேற்றம்
இணைத்துள்ள பதிவு சூரிய ஒளிக்கதிர்களால் உற்பத்தியாக்கப்படும் மின்சாரத்திட்டத்தில் solar panel சூடாகுவது மின்சகர உற்பத்தியின் அளவைக் குறைப்பதாக இருக்கும். அந்தக் குறையை நீக்க, அவுஸ்திரேலியாவில் கடற்கரையோரத்தில் நிறுவப்பட்ட solar PV கட்டமைப்பில் solar panel களை குளிரூட்டும் வகையில் கடல்நீரைப் பயன்படுத்தும் முறையொன்றை நிறுவியுள்ளது. அதனால் உற்பத்தியாகும் மின்சாரம் 20% ஆல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருள் பாவனைகளைக் குறைத்து பூகோளம் மாசடைதலைத் தவிர்ப்பதும், பூகோளம் வெப்பமாதலைத் தடுப்பதும் நோக்கமாகக் கருதி கடந்த பல ஆண்டுகளாக உலகளாவ கற்பித்தலும், ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய திட்டங்கள் அறிமுகப்படுத்தல் எனவும் பரவலாக நடைபெற்று வருகின்றன. பலநாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் உட்பட, இவற்றைக் கடைபிடித்து வருகின்றன.
110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் 22 இலங்கை பௌத்த துறவிகள் 22 இன்று காலை கைது
![]() |
புதிய நிதர்சனம் செய்திகள் · 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் 22 இலங்கை பௌத்த துறவிகள் 22 இன்று காலை கைது
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவாகும்
சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய, நேற்று (25) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் கொண்டு
திமுகவிற்கு 43% வாக்குகள் கிடைக்கும் - திமுகவின் கடந்த தேர்தல் வாக்கு சதவீதம் திமுக கூட்டணி -20,982,088 வாக்குகள் 45.38%
![]() |
Periasamy Ponnusamy : ஏன் நான் திமுகவிற்கு 43% வாக்குகள் கிடைக்கும் எனப் பதிந்துள்ளேன்?
திமுகவின் கடந்த தேர்தல் வாக்கு சதவீதம்
திமுக கூட்டணி -20,982,088 வாக்குகள் 45.38%
அதிமுக கூட்’ணி-18,363,499 வாக்குகள் 39.71%
மற்றவை - 6,919,189 வாக்குகள் 14.9%
இதில் திமுகவிற்கு SIR அடிப்படையில் வாக்குகள் குறைக்கப்பட்டதன் தாக்கம், எல்லா அணிகளையும் பாதிக்கும், SIR ஆல் 15.2% வாக்குகள் தமிழ் நாட்டில் குறைக்கப்பட்டன.
இந்த சதவீதத்தை கடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளில் எத்துனை சதவீதத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் எனில்,
கடந்த 2021 சட்ட மன்றத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் 73.63% பதிவாகத வாக்குகள் 26.37%
15 கொலைகளை ஒப்புக்கொண்ட SF ராஜு – இலங்கை கரந்தெனியா வாக்குமூலம்
ilakkiyainfo.com : பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரரான ‘SF ராஜு’ என அழைக்கப்படும் சோபனஹந்தி சனத் டி சில்வா என்பவரது வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளன.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர், 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று காலை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 15 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
"மே 4-ல் விஜய் அவுஸ்திரேலியா பயணம்! கிரேட் எஸ்கேப் ? தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் ஏன் வெளிநாட்டு பயணம்
![]() |
Dailyhunt : "மே 4-ல் ஒரு மெகா ட்விஸ்ட். ஆஸ்திரேலியா டிக்கெட் கன்பார்ம்.. விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதான். அதிர்ச்சியில் அரசியல் களம்".!!!
தமிழக சட்டசபைத் தேர்தலில் 85.15% என்ற வரலாறு காணாத வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் இளைப்பாறுவதற்காகச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே துபாய் சென்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம் மேற்கொள்கிறார். வழக்கமாகத் தனது திரைப்படப் பணிகள் முடிந்ததும் வெளிநாடு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது தேர்தல் முடிந்தும் இன்னும் பயணத்தைத் தொடங்காமல் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சனி, 25 ஏப்ரல், 2026
நம்பிக்கையில் ஸ்டாலின், எடப்பாடி.. விஜய் கட்சியில் ’அமைச்சரவை’ கலாட்டா.. பீதியில் பாஜக! Mk
minnambalam.com - Kavi : வாருமய்யா.. எலக்ஷனை எல்லாம் ஜோரா முடிச்சுட்டீரு.. அடுத்து என்னவாம்?
ஆமாய்யா.. நான்தான் எலக்ஷன் கமிஷனர் பாரு… ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகமாக இருக்குன்னு எலக்ஷன் கமிஷன் சொன்னதுல இருந்தே எல்லா கட்சிகளிலும் ஒரே பரபரப்புதான்…
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான்னு எல்லாருமே ’கள நிலவரம்’ என்னான்னு ரொம்பவே ஆர்வமாக விசாரிச்சுகிட்டே இருக்காங்க..
இதை பத்தி சிஎம் ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “ எலக்ஷன் முடிஞ்ச உடனேயே தன்னுடைய செயலாளர்களிடம் பேசுன ஸ்டாலின், ‘நிலவரம்’ என்னான்னு கேட்டாரு.. அவங்க மாவட்ட கலெக்டர்களை கூப்பிட்டு கேட்டாங்க.. கலெக்டர்கள் மாவட்டங்களோட நிலவரம் பத்தி கொடுத்த ரிப்போர்ட்டை ஸ்டாலினுக்கு அனுப்பி வெச்சிருக்காங்க..
எப்படி பார்த்தாலும்.. விஜய்க்கு 8%தான்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. சொல்வது என்ன?
tamiloneindia : மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
முந்தைய தேர்தல்களை ஒப்பிடும்போது இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதும், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் 30 வயதுக்குட்பட்டவர்கள் திரண்டு வந்து வாக்களித்திருப்பதும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொ.செ. எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி சாதாரண கட்சிகளின் தலைவர்கள் வரை, ரிசல்ட் எப்படி இருக்கும் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். மே 4-ந்தேதி வரை இந்த டென்சன் இருக்கத்தான் செய்யும்.
பாகிஸ்தானுக்கு சென்ற ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.. அமெரிக்கா விஷயத்தில் பாசிட்டிவ் சிக்னல்!
tamil.oneindia.com - Halley Karthik : இஸ்லாமாபாத்: ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் குறையவில்லை. இப்படி இருக்கையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி பாகிஸ்தான் சென்றிருக்கிறார்.
அப்பாஸ் அராக்ச்சி உயர்மட்டக் குழுவுடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றிருக்கிறார். இவர் பாகிஸ்தானைத் தொடர்ந்து ஓமன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கொடைக்கானலில் ஸ்டாலினின் தோராய பட்டியல்! ரெஸ்ட்டில் ரெடியாகும் சீக்ரெட் லிஸ்ட்! அமைச்சரவை மாற்றம்?
Tamil Oneindia : கொடைக்கானலில் ஸ்டாலினின் தோராய பட்டியல்! ரெஸ்ட்டில் ரெடியாகும் சீக்ரெட் லிஸ்ட்! அமைச்சரவை மாற்றம்?
தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கொடைக்கானலில் முகாமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களின் வெற்றி வாய்ப்பு குறித்த சபரீசனின் ரகசிய ரிப்போர்ட் மற்றும் புதிய அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு என தமிழக அரசியலில் அடுத்தகட்ட அதிரடி மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறார்.. ராசியான இடத்தில் அமர்ந்து அவர் எடுக்கும் இந்த முடிவுகள், தற்போதைய அமைச்சர்கள் பலருக்கு கல்தா கொடுக்கப்போகிறதா அல்லது புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப் போகிறதா என்கிற பரபரப்பு அதிகரித்துள்ளது.. இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் ஒருவழியாக அமைதியடைந்திருக்கிறது.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அரசியல் கட்சிகளின் கவனம் எல்லாம் தேர்தல் முடிவுகளை நோக்கியே இருக்கிறது.
வெள்ளி, 24 ஏப்ரல், 2026
100% பொய்யை நிஜமாக்க முயலும் தற்குறிகள்- பின்னணியில் பாஜக தில்லுமுல்லு
புகச்சோவ் புகச்சோவ் : கவன ஈர்ப்பு பதிவு...வ்
நேற்று தேர்தல் முடிந்த இரவிலிருந்தே, ஒரு பொய்த்தகவலை கட்டமைக்க,
அனைதுவகை ஊடகங்களும், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்களும், தெருவுக்குத்தெரு புரளிகளை கிளப்பும் பெய்டு பிச்சைக்காரர்களும், டீக்கடைதோறும் தகவல்களை விளம்புகிற குவாட்டர் காவாலி புரோக்கர்களும், திராவிட எதிர்ப்பின் அத்தனை தலைமைகளும், நூறடிக்கு ஓரிடத்தில் அத்தகவல் பரவுகிறபடி அந்தப்பொய்யை தமிழ்நாடெங்கும் உலவ விட்டுள்ளனர்.
அந்த தகவல்களின் வெளிப்பாடு பின்வருமாறு...
1, பசங்கள சும்மா சொல்லக்கூடாதுபா...
மெரட்டிட்டானுக
2, அடேங்கப்பா! இவ்வளவுதூரம் ஏறிவருவானுகன்னு திமுககாரன் சத்தியமா நெனைச்சிருக்கமாட்டான்.
3, வந்துட்டாண்டா திமுகவ அழிக்க. இனிமே திமுக காலிதான்
4, பசங்களோட ஆரவாரமும், உற்சாகமும் பெரிபெரிய திமுக தலைங்களையே ஆட்டிருச்சிபா...
5, எப்புடியும் இந்த பசங்கள கொறசொல்லவே முடியாது. ஆட்டம் ஆரம்பமாய்டிச்சி.
தவெக தோற்கும். 200க்கும் மேற்பட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்.
![]() |
A Sivakumar 1991 தொடங்கி களத்திலும் 2011 தொடங்கி தளத்திலும் இயங்கும் எனக்கு இந்த மீடியாக்களும் நட்ட நடுநிலை நக்கிகளும் எந்த அடிப்படையில் தவெக 20% வாங்குவான்னு சொல்லுறாங்கன்னே தெரியலை, புரியலை.
What is the scale these people use to measure this percentage for TVK…?
அரசியல் தவிர வேறு எதுவும் பேசாத நமக்கே தவெகவின் 10 வேட்பாளர்களின் பெயர் தொகுதி பெயரோடு தெரியாது.
தமிழ்நாட்டின் எந்த தொகுதியிலும், எந்த ஊரிலும் வேட்பாளரின் பெயரை சொல்லி வாக்கு கேட்டு நேரடி / மறைமுக பிரச்சாரமே செய்யாத தலைவன்...
இந்த தவெக வேட்பாளர் தன் கடினமான உழைப்பால் தொகுதியை தலைகீழாக பிரித்து மேய்கிறார் என்று தமிழ்நாட்டு ஊடகங்களின் கவனம் பெறுமளவுக்கு தொகுதியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள உழைக்காத, உழைக்கத் தெரியாத 231 இதர வேட்பாளர்கள்...
எல்லாம் சேர்ந்து தங்கள் தொகுதியிலும் தமிழ்நாடு அளவிலும் எப்படி 20% வாங்குவாங்க…?
ஈரான் 8 பெண்களைத் தூக்கிலிடாது! - டிரம்பின் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றியா?
![]() |
புதிய புனல் : "8 உயிர்கள்.. ஒரு ஒப்பந்தம்! - மரண தண்டனைக் கைதிகளுக்காகக் குரல் கொடுக்கும் அமெரிக்க அதிபர்!"
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஒரு முக்கிய மனிதாபிமான நிபந்தனையாக, அந்நாட்டினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 பெண்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
"தயவுசெய்து அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! அவர்களை விடுவித்தால் நான் அதனைப் பெரிதும் பாராட்டுவேன். இது நமது பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக (Great start) அமையும்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுதலை செய்யக் கோரிய அந்த 8 பெண்களும், ஈரானில் அண்மையில் நடைபெற்ற அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றதற்காகவும், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்ததாகக் கூறப்படும்
ரஷிய அதிபர் ஜோசெப் ஸ்டாலினும் ரஷ்ய உளவு தலைவர் பெரியாவும்
மகன், மகள், குடும்பம் எல்லாம் இருந்தும் இல்லாத நிலை, அதனால் தனியாக இங்கே தங்கி ரோஜா செடிகளை வளர்ப்பதிலும், எலுமிச்சை மற்றும் தர்பூசணி பயிரிடுவதிலும் நேரம் செலவிட்டார். இது அவருக்கு ஒருவித மன அமைதியைத் தந்ததாகக் கூறப்படுகிறது. அவரது தட்சாவில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நூலகம் இருந்தது. அவர் தினமும் பல மணிநேரம் வாசிப்பதில் செலவிடுவார். மேலும், கிராமபோன் இசைத்தட்டுகள் கேட்பதிலும் அவருக்கு விருப்பம் அதிகம்.
வியாழன், 23 ஏப்ரல், 2026
மே முதல் வாரத்தில் உதயசூரியன் உதிக்கும்.வெற்றி - DMK பெறுவார்கள் -என்.ராம் உறுதி
ராஜா ஜி : வாக்கு சதவிகிதம் கூடினால் ஆளும்கட்சிக்கு பாதிப்பு என்கிறார்களே என்று பலரும் கேட்கிறார்கள்!
பல முறை நடந்தது போல் இதும் கொஞ்சம் உண்மைதான்.
SIR நடந்ததற்குப் பிறகு கிட்டத்தட்ட 15% வாக்காளர்கள் நீக்கம்!
இதன் படி பார்த்தால் இப்போது கிடைக்கும் வாக்குகள் சதவீதத்தோடு 15% கழித்து விட்டு பாருங்கள் உண்மை தெரியும்!
90% என்றால் 75%
80% என்றால் 65%
அப்படி பார்த்தாலும் 5% அதிகமாக வாக்கு எண்ணிக்கை தெரியும், இதுவும் உண்மைதான்.
என்னப்பா குழப்புற என்பீர்களே.
இதுதான் 18 முதல் 30 வயது வரை எப்போதும் வாக்களிக்காத இளைஞர்களில் சிலர் விசைக்கு வாக்காளித்திருப்பார்களே அவர்களின் எண்ணிக்கை!
TN Election 2026 தமிழக வாக்குப்பதிவு நிறைவு... மொத்த வாக்கு சதவீத பட்டியல்
tamil.news18.com : தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல், வாக்குப்பதிவு குறித்த இன்றைய முக்கிய செய்திகளை நியூஸ் 18 தமிழ்நாட்டில் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்பில் இருங்கள்..
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குறிப்பாக இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே அதிகப்படியான வாக்குப் பதிவு பதிவாகிவருகிறது. காலை முதலே இளைஞர்கள் முதல் 100 வயது கடந்த, உடல் நலன் நலிவுற்ற முதியவர்கள் வரை தங்கள் ஜனநாயக கடமையை செய்துவருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குறிப்பாக இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே அதிகப்படியான வாக்குப் பதிவு பதிவாகிவருகிறது. காலை முதலே இளைஞர்கள் முதல் 100 வயது கடந்த, உடல் நலன் நலிவுற்ற முதியவர்கள் வரை தங்கள் ஜனநாயக கடமையை செய்துவருகின்றனர்.
புதன், 22 ஏப்ரல், 2026
நடிகன் விஜய்யின் வீரதமிழச்சிகளும் அலாதி அபிலாஷைகளும்
![]() |
![]() |
Mugil Bharathi : வீரதமிழச்சிகளும் அலாதி அபிலாஷைகளும்
சோம்பேறி பொறுக்கி நடிகன் அரசியலுக்கு வந்ததில் ஒரு மிகப்பெரிய நன்மை இருக்கு. தமிழ்நாட்டில் நிலவிய ஒரு பலநாள் Myth உடைஞ்சிருக்கு..!!
எதோ தமிழ்நாட்டில் ஆண்கள் எல்லாரும் நடிகைகள் மீது காமரீதியான மோகம் கொண்டவர்கள்.
"ஒரு நடிகை பொதுவெளியில் வந்துரக்கூடாதே, உடனே முண்டி அடித்துக்கொண்டு எலும்பை கண்ட நாயை போல் நாக்கை தொங்க போட்டுகொண்டு அலைபவர்கள் இந்த ஆண்கள்" என்று எகத்தாளமும் ஏளனமும் செய்த்தவர்கள்தான் இந்த மங்கையற்கரசிகள்..!! மூச்சுவிடக்கூட இடமில்லாத நகர பேருந்துகளில் தப்பி தவறி ஒரு ஆணின் கை மேலேபட்டுவிட்டால் அப்பிடியே கண்ணகியாய் அலறி துடித்து காளி அவதாரமெடுத்து அவனை துவம்சம் செய்துவிடுவார்கள் இந்த குலக்கொழுந்துகள்..!!
அப்பிடியாய்ப்பட்ட வீர தமிழச்சிகள்தான், இதோ, தங்கள் ஆதர்ச நாயகனை காணும் ஆவலில்... தப்பு, தப்பு... ஆதர்ச நாயகனை காணும் "வெறியில்", இவ்ளோ கும்பலையும் பொருட்படுத்தாது, பாதுகாப்பு பணியில் உள்ள காவலரைக்கூட துச்சமாக மதித்து, மிதித்து கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் விஜய்-ன் ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது!
பாலகணேசன் அருணாசலம் : நடிகர் விஜய்-ன் ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது!
முதலில் வருமான வரித் துறையை வைத்து விஜய்-ஐ வளைத்தது பா.ஜ.க!
அடுத்து... அந்த விஜய்-ஐ 'ஜோசப் விஜய்' என்று. எச். ராஜாவை ஏவி விட்டு மத அடையாளப்படுத்தியது பா.ஜ.க!
அதனை தொடர்ந்து விஜய்-ஐ கட்சி தொடங்க கட்டளையிட்டது பா.ஜ.க!
₹1,000 கோடி மோசடியில் அமலாக்கப் பிரிவிடம் சிக்கிய லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் தொடங்கி,
விஜய் மீதான வருமான வரி சோதனையை முன்னின்று நடத்திய I.R.S., அதிகாரி அருண்ராஜ், பா.ஜ.க-விடம் அரசியல் அபயம் தேடி டெல்லிக்கு ஓடி வந்த செங்கோட்டையன்,
வெறுப்பு அரசியலும் யாழ்ப்பாண அரசியலும்!
![]() |
ராதா மனோகர் : Prof. E.C.W. Ludowyke எழுதிய ஹி கம்ஸ் பிறோம் ஜாப்னா என்ற ஆங்கில நாடகம் இலங்கை நாடக வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு கலைப்படைப்பு
இந்த நாடகம் யாழ்ப்பாண சமூகத்தின் வாழ்வியலை கொஞ்சம் நகைச்சுவையாக வெளிக்கொண்டு வருவதில் பெரும் வெற்றி பெற்றது!.
அன்றாட வாழ்வியலில் காணப்படும் அடிப்படை பண்புகளை மிக நுணுக்கமாக அதே சமயம் மிக ஆழமாக காட்சி படுத்தியது
கடுமையான விமர்சனங்களையும் கூட நல்ல நகைச்சுவையால் இலகுவாக கடந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகளாக இன்னும் அடிக்கடி மேடையேறும் பெருமை பெற்ற நாடகமாகும்!
கொஞ்சம் அசந்தாலும் இலகுவாக சமூக எதிர்ப்பை கிளறி விடக்கூடிய விடயங்கள் இதன் உள்ளடக்கமாக இருந்தது!
இந்த நாடகத்தில் மனிதர்கள் வந்து போயினர்! நல்லவர் கெட்டவர் என்று யாரும் வந்து போகவில்லை
செவ்வாய், 21 ஏப்ரல், 2026
சூரத்தில் வேலையை இல்லை - குஜராத் ரயில் நிலையத்தில் கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்
bbc.com : உத்னா: சூரத்தில் வேலையை இல்லை - குஜராத் ரயில் நிலையத்தில் கும்பலாக கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடியது ஏன்? வீடியோவின் பின்னணி
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சூரத்தின் உத்னா ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் 'லேசான' தடியடியைப் பிரயோகிக்கும் சூழல் உருவானது. இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.
தோழர் மகாலிங்கத்தின் சிகிச்சையை தடை செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கியூ உளவு பிரிவு
![]() |
Suresh Vijaya Rajan : தோழர் மகாலிங்கத்தின் முறையான சிகிச்சையை தடை செய்து,
அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்
கியூ உளவு பிரிவின் அராஜகங்களை #கண்டிப்போம்!
தோழர் மகாலிங்கம் மாவோயிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டுள்ள, 70 வயது முதியவர் ஆவார்.
இவர் இருதய நோய் காரணமாக நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த போதும், சிறைச்சாலை நிர்வாகம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை வழங்கவில்லை.
இதய நோய் முற்றிய நிலையில், கடந்த மாதத்தில் சிறைச்சாலையில் டிஐஜி பார்வையிட்ட போது, தோழர் மகாலிங்கம் மயங்கி விழுந்ததால், வேறு வழியின்றி அவரை மதுரை பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
மதுரை மருத்துவமனையில் பரிசோதனைகளுக்குப் பிறகு, மருத்துவர்கள் அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை (open heart surgery) செய்தாக வேண்டும் என்று முடிவு செய்தனர். இப்போது செய்யவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாக மாறும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
திங்கள், 20 ஏப்ரல், 2026
இந்திய delimitationனும் இலங்கை GG.POnnambalam த்தின் fify fifty கோரிக்கையும்
ராதா மனோகர் : இந்திய ஒன்றியத்தின் delimitationனும் இலங்கை பொன்னம்பலத்தின் fify fifty கோரிக்கையும்
மணிமேகலை பிரசுரமானது அமரர் ஜி ஜி பொன்ன்னம்பலம் அவர்களின் நீண்ட பேச்சை முன்பு நூலாக வெளியிட்டிருக்கிறது
இந்நூலின் பெயர் The Marathon Crusade for 'Fifty, Fifty'
1939 இல் இலங்கையில் பிரித்தானியவின் சோல்பரி கமிஷன் முன்பாக தோன்றி திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு 50 வீத உறுப்புரிமை வேண்டும் என்று கோரிகை விடுத்தார்
சுமார் 9 மணித்தியாலங்கள் இது பற்றிய நீண்ட உரையை அவர் நிகழ்த்தி இருந்தார்
![]() |
இந்த நீண்ட உரையில் அவர் கூறிய முக்கிய விடயமானது ஒரு பெரும்பான்மை இனமானது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் பலத்தை மட்டும் கொண்டு இன்னொரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதாகும்
ஒரு உண்மையினை ஜனநாயக அமைப்பில் இனரீதியான அல்லது மதரீதியான பெரும்பான்மைவாதம் என்பது காலப்போக்கில் வரை முறையற்ற அதிகார வரம்பு மீறலுக்கு வழிவகும் என்று குறிப்பிட்டிருந்தார்
ஈரானில் அதிகார சண்டை..? மூத்த தலைவர்களை ஓரம்கட்டம் IRGC மேஜர் ஜெனரல்.. என்ன நடக்குது?
tamil.oneindia.com : ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய புரட்சிக் பாதுகாப்பு படையின் (IRGC) கமாண்டர் மேஜர் ஜெனரல் அஹ்மத் வஹிதியும் அவரது தலைமையிலான முக்கிய குழுவும், கடந்த 48 மணி நேரத்தில் ஈரானின் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமின்றி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் தற்காலிகமாக கட்டுப்படுத்தி வருவதாக போர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம், ஈரானின் அரசியல் தலைவர்களுக்கு இருந்த பேச்சுவார்த்தை அதிகாரத்தை IRGC பக்கம் திருப்பியுள்ளது. இதனால் ஈரான் அரசியலில் புதிய குழப்பமும், அதிகார சண்டையும் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிறு, 19 ஏப்ரல், 2026
DELIMITATION BILL: மின்னம்பலம் சொன்ன ‘ஆல் இந்தியா ஸ்கெட்ச்’.. விரிவாக விளக்கிய முதல்வர் ஸ்டாலின்! Mathi
![]() |
minnambalam.com : - Mathi : நமது மின்னம்பலத்தில், “டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் போட்ட ‘ஆல் இந்தியா’ ஸ்கெட்ச்.. |அதிர்ந்த மோடி- அமித்ஷா! என நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை இதில் நாம் பதிவு செய்திருந்தோம்.
இது தொடர்பாக சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் சொல்லி இருந்த ‘ஆல் இந்தியா ஸ்கெட்ச்’ குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
சன் நியூஸ் முதன்மை செய்தி ஆசிரியர் மு.குணசேகரனின் முதல்வர் ஸ்டாலினுடனான உரையாடலில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டையே உலுக்கிய விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து
dinamalar.com : சென்னை: பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை; விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்த 20 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு, ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
திரு.ஆலாலசுந்தரம் திரு. தர்மலிங்கம் - அந்நியரின் கூலிப்படைகளான உள்ளூர் ஆயுதக்குழுக்களால் கொலை செய்யப்பட தலைவர்கள்
ராதா மனோகர் : 1985 செப்டம்பர் 5 ஆம் தேதி இனம் தெரியாத போராளிகளால் மானிப்பாய் எம்பி தர்மலிங்கமும் கோப்பாய் எம்பி (Advocate) ஆலாலசுந்தரமும் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்
தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் உயிர் பயத்தில் தமிழகத்திலும் வேறு பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்
ஆனால் இந்த இருவர் மட்டும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து தமிழர் விடுதலை கூட்டணிக்கு உயிர் கொடுத்து கொண்டிருந்தார்கள்
குறிப்பாக யாழ் வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உலக ஊடக நிருபர்கள் போன்றவர்களோடு கலந்து பேசி போரில் பாதிக்கப்படும் மக்களின் விடயங்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் அரும்பணியை செய்து கொண்டிருந்தார்கள்
ஈழத்தமிழர்களின் எஞ்சிய ஜனநாயக அமைப்பின் தூண்களாக இந்த இருவர் மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தாரக்ள்
இவர்களின் இந்த வகிபாகத்தை முடக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது?
இயக்கங்களை சந்தேக படலாம்.
சனி, 18 ஏப்ரல், 2026
திமுக விஜய்யை குறைத்து எடைபோடுகிறது - மு.க.அழகிரி மகள் கயல்விழி
தினத்தந்தி : சென்னை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியை தவிடுபொடியாக்கும் என்று மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“ஸ்டாலினை பணியவைக்க மோடி, அமித் ஷாவால் முடியாது” - திருச்சியில் ராகுல் காந்தி பேச்சு
hindutamil.in- எம்.கே.விஜயகோபால் : திருச்சி: “தமிழக முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது” என்று திருச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “டெல்லியில் தமிழக மக்களின் சிப்பாயாக செயல்படுவேன்” என்றும் உருக்கமாக கூறினார்.
திருச்சி துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத், திமுக வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு, கதிரவன், கருணைராஜா, சேலம் ஆத்தூர் வேட்பாளர் அர்த்தநாரி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
வெள்ளி, 17 ஏப்ரல், 2026
'பேமென்ட் 1 லட்சம்; 2 AC ரூம் கட்டாயம்' - பில் போடும் நாஞ்சில் சம்பத்! ஒரு காலி டப்பாவுக்கு வந்த வாழ்வு!
விகடன் : கட்சி சார்பில் பரப்புரைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத். பரப்புரையில் ஈடுபட வேண்டியது அவரது பொறுப்பு. அதற்கு இத்தனை கறாராக பில் போடுவது என்ன நியாயம்? என்கின்றனர் நிர்வாகிகள்.
தவெகவின் பரப்புரைச் செயலாளரான நாஞ்சில் சம்பத் வாகன பிரசாரங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பேச விதிக்கும் கண்டிஷன்களாலும் பாக்கெட்டை பதம் பார்க்கும் அளவுக்கு போடும் பில்லாலும் தவெக வேட்பாளர்களும் நிர்வாகிகளும் விழிபிதுங்கி போயிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் கட்சி வட்டாரத்தினர்.
நாஞ்சில் சம்பத்தை தங்கள் ஊர் பிரசாரத்திற்கு பேச அழைத்து அனுபவப்பட்ட தவெக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், 'எங்கள் தலைவர் எல்லா ஊருக்கும் எல்லா தொகுதிக்கும் போய் பிரசாரம் செய்வார் என எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை. பொதுச்செயலாளர் தொடங்கி இரண்டாம் கட்ட தலைவர்கள் வரைக்கும் ஏன் தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் செய்தித் தொடர்பாளர்கள் வரைக்கும் எல்லாரும் ஆளுக்கொரு தொகுதியை பிடித்துக் கொண்டு வேட்பாளராக நிற்கிறார்கள்.
“டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!” - மசோதா தோல்விக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் பதிவு
hindutamil.in - வேட்டையன் : சென்னை: மத்திய பாஜக அரசு மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!” என பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவின் கீழ் மசோதா நகலை தீயிட்டு எரித்த படத்தை பகிர்ந்துள்ளார்.
வியாழன், 16 ஏப்ரல், 2026
கிருஷ்ணகிரி கணவன் சுரேஷ் மனைவி காவியாவை கத்தியால் குத்திக்கொலை - தற்கொலை, மூன்று வயது மகள் உயிருடன் கண்டெடுக்கப்பட்டார்.
News18 : கருத்து வேறுபாட்டில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தொட்டமெட்டரை கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் 30 வயதான சுரேஷ். ஓசூரில் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி காவியா டாட்டா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு மூன்று வயதில் வைஷ்ணவி என்ற பெண் குழந்தை உள்ளது.
பிரேமலதா திருமாவை அவமதித்தாரா?
Mkishore Kumar : ஒரு காலத்தில சேரிகளில் எம்.ஜி.ஆருக்கு பிறகு கேப்டன் விஜய்காந்திற்கு தான் அதிக ரசிகர் மன்றங்கள் இருந்துச்சு... படங்கள் மூலம் தன்னை உழைக்கும் மக்களில் ஒருவரா பிரதிபலிச்சாரு ஆரம்ப காலங்கள...
பட்டியல் மக்களின் பேரன்ப கொண்டவரா இருந்தாரு..
இருந்து ஒரு பயனுமில்ல பட்டியல் மக்களுக்காக என்ன போராடினாரு, சாதி ஒழிப்புக்கு எதிராக என்ன போராடினாரு கேட்டா எந்த ஒரு பெரும் வரலாறும் கிடையாது.
பட்டியல் மக்களின் நம்பிக்கையை சுரண்டி கொண்ட மற்றுமோர் சாதி இந்து சூப்பர் ஸ்டார் சொல்லலாம் விஜய்காந்த். ஆனா வெளிப்படையான தன் சாதிய அதிகாரத்தை எங்கையும் மக்கள் மீது திணிச்சதான சம்பவங்கள் தெரிஞ்சி இல்ல.
ஆனா ப்ரேமலதா படுபயங்கரமான சாதி வெறியர் என்பதை மேடை போட்டு அவரே தன்னை பிரசூரபடுத்தியுள்ளார்.
மின்னம்பலத்தின் கருத்து கணிப்பு - உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.யார்? எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? ஆட்சி அமைக்கப் போவது யார்?
minnambalam.com - Mathi : உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.யார்? எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? ஆட்சி அமைக்கப் போவது யார்? மின்னம்பலத்தின் விரிவான சர்வே முடிவுகள்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 முடிவுகள் குறித்து நமது மின்னம்பலம் மீடியா தொடர்ந்து கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியின் கள நிலவரத்தை துல்லியமாக நாம் வெளியிட்டு வருகிறோம்.
மின்னம்பலம் மீடியா இந்த சர்வேவை எப்படி மேற்கொண்டது?
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- SIR ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியின் வாக்காளர் விவரங்களை வெளியிட்டது.
2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம்- அதாவது SIR- க்கு முன்னர் தமிழக வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை 6.41 கோடி.
SIR- மேற்கொள்ளப்பட்டதால் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 97.30 லட்சம் பேர்.
SIR-க்குப் பின்னர் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அத்துடன் தேர்தல் ஆணையம்
வயது வாரியாக
18 – 29
30 – 39
40 – 49
50 – 59
60 – 69
70 – 79 வயது உள்ள வாக்காளர்கள் விவரங்களை வெளியிட்டிருந்தது. இந்த தரவுகளை நாம் எடுத்துக் கொண்டோம்.
அடுத்ததாக ஜாதி அடிப்படையிலானது. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் தேர்வில் ஜாதி முக்கிய காரணியாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் வெளிப்படையாக ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவிப்பது இல்லை. ஆனால் அதைத்தான் நடைமுறையில் பின்பற்றுகின்றன.
“நாளை தமிழ்நாட்டின் வீடு, வீதி, கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
tamil.news18.com Karthi K ; தொகுதி மறுவரையறை எதிர்ப்பில், தமிழர் உரிமை பாதிக்கப்படும் என கூறி, மு.க.ஸ்டாலின் நாளை தமிழ்நாடு முழுவதும் வீடுகள் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றுமாறு அழைப்பு விடுத்தார்
CM MK Stalin : சண்டை செய்ய நான் ரெடி, பக்கபலமாக இருக்க நீங்கள் ரெடியா?
வார இறுதி கோடை விடுமுறைக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம், முன்பதிவு www.tnstc.in மொபைல் ஆப் மூலம் கேட்டுக்கோள்
புதன், 15 ஏப்ரல், 2026
இலங்கை வடகிழக்கு மாகாண அரசும் இந்திய ஆதிக்கமும்
ராதா மனோகர் : இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாண அரசு பற்றிய சில விடயங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம் என்றெண்ணுகிறேன்.
இந்த மாகாண அரசு உருவாவதற்கு முன்பே ஒரு முக்கிய இந்திய தலையீடு ஈ பி ஆர் எல் எப் இயக்கத்திற்குள் இருந்திருக்கிறது என்று நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது..
ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தோழர் பத்மநாபா தோழர் கேதீஸ்வரன் போன்ற பலர் இருந்தாலும் இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்பவே ஒருவரை இந்தியா திணித்தது என்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
எந்த அரசியல் கட்சியும் சார்பற்று உருவாகிய தமிழ் மாணவர் பேரவைக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணியால் செயற்கையாக தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டது
இது பின்னர் இயக்கங்களுக்குள் ஊடுருவியது எல்லோரும் அறிந்ததே.
தமிழர் விடுதலை கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த தோழர் வரதராஜ பெருமாள் ஈ பி ஆர் எல் எப்க்குள் வந்தார்
தோழர் டக்ளஸ் தேவானந்தாவே இவரை அழைத்து வந்தார்
ஈரானின் பாரசீக விரிவாக்க திட்டம்தான் அரபு நாடுகளை இஸ்ரேலை நோக்கி தள்ளியது
ஈரானின் பாரசீக விரிவாக்க திட்டம்
Ahmed Ashraff : எமிரேட்ஸ்சை, இஸ்ரேலுடன் உறவு ஏற்படுத்தும் நிலைக்கி தள்ளிவிட்டது யார் ?
வளைகுடா நாடுகள் , இஸ்ரேலுடன் எந்தவிதமான உறவுகளையும் கொண்டிருக்கவில்லை . ,
ஈராக் , லெபனான் , சிரியா , யமன் நாடுகளை, ஈரான் , கூலிப்படைகள் மூலம் தனது ஆதிக்கத்துக்கு உட்படுத்தியது .
இதைக் கண்டு, எமிரேட்ஸ் சிறிய நாடு என்ற வகையில் பயந்தது .
குறிப்பாக ஈரான் , எமிரேட்ஸுக்கு சொந்தமான அபூ மூஸா , தன்புல் குப்ரா , தன்புஸ் ஸுக்ரா என்ற மூன்று தீவுகளை ஆக்கிரமித்துள்ளது .
நேரடி பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ அல்லது சர்வதேச மத்தியஸ்த்தம் மூலமாகவோ சர்ச்சையைத் தீர்க்க ஈரான் மறுக்கின்றது .
காரணம் உத்மானிய , பிரிட்டிஷ் ஆவணங்கள் எமிரேட்ஸுக்கு சொந்தமானவை எனஉறுதிப்படுத்துகின்றன
செவ்வாய், 14 ஏப்ரல், 2026
90 லட்சம் கொடுத்தால் தான் உடலுறவு!” முதலிரவில் பெண் சொன்ன வார்த்தை.. கதி கலங்கிய மாப்பிள்ளை ஆக்ரா
மாலைமலர் : ஆக்ரா: திருமணத்திற்குப் பிறகு முதலிரவுக்கு ஆசையாகச் சென்ற இளைஞருக்கு இளம்பெண் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
இந்த மாப்பிள்ளைக்கு அந்த இரவு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு ‘க்ரைம் த்ரில்லர்’ படமாகவே மாறியுள்ளது. 90 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் உடலுறவு என மணமகள் போட்ட கண்டிஷனை கேட்டு அவர் அதிர்ந்து போனார்.
கல்யாணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்டது என பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், அனைவருக்கும் சொர்க்கத்தைப் போன்ற வாழ்க்கை கிடைப்பதில்லை.
மாறாகச் சிலருக்கு மிக மோசமான வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவங்கள் நடந்துவிடுகிறது. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
ஆபரேஷன் பூமாலையை கண்டு மிரண்ட பிரபாகரன்
ராதா மனோகர் : 1987 ஆண்டு மே மாதத்தில் இலங்கை ராணுவம் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் வெற்றியின் விளிம்பில் நின்றது.
அச்சுவேலி வரை வந்துவிட்டது ராணுவம்.
இலங்கை ராணுவத்தின் ஆபரேஷன் லிபேரேஷன் என்ற ராணுவ முன்னெடுப்பு வடமராட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் நடத்தப்பட்டது
சுமார் 4000 படையினர் குவிக்கப்பட்டு ஈவு இரக்கம் இல்லாமல் கடுமையாக ராணுவம் போரிட்டது
அன்றைய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலீயின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட்டது (லலித் அத்துலத் முதலி ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தின் மாணவர் தலைவராக இருந்தவர்)
அந்த ஆபரேஷன் லிபேரேஷன் ஈழப்போராட்டத்தின் முடிவுரையை எழுதி கொண்டிருந்த காலம் அது.
இலங்கை சிங்கள இனவாதிகளோடு கைகோர்த்த சிங்கள இடதுசாரிகள் - வரலாறு
![]() |
![]() |
Sarawanan Komathi Nadarasa : 1966 - மொழிப்போராட்ட தியாகி ரதனசார தேரர்!
1966 இல் மொழிப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகியாக அறியப்படுபவர் தம்பராவே ரதனசார தேரர். 1966 ஜனவரி 8 கொண்டு வரப்பட்ட தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை எதிர்த்து அன்றே பேரினவாத சக்திகள் நடத்திய மாபெரும் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பிக்கு கொள்ளுபிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி இறந்தார்.
இந்த நிகழ்வுகளைப் பற்றி விரிவான ஒரு கட்டுரையை தொடங்கினேன். அது ஒரு சிறு நூலாக உருப்பெருமளவுக்கு நீண்டுவிட்டது.
தமிழர்களுக்கு மொழி அந்தஸ்து கிடைக்கக்கூடாது என்று போராடிய அந்தத் “தியாகியை” ஆண்டுதோறும் ஜனவரி 8 அன்று நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
இடதுசாரிக் கட்சிகளின் அழிவு ஆரம்பமான இடம் அந்த சட்டமே. அந்த சட்ட விவாதம் 1966 ஜனவரி 8 ஆரம்பித்து ஜனவரி 11 நள்ளிரவு வரை நீண்டது.
ஈரானிய துறைமுகங்களுக்கு அமெரிக்கா முற்றுகை: சர்வதேச கடற் பகுதியில் பதற்றம்
hirunews.lk : ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழித் தடை ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் பொருளாதாரத்தை முடக்கவும், அவர்கள் ஹோர்முஸ் நீரிணையில் வசூலிக்கும் கட்டணங்களைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கையை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தத் தடையை மீறும் அல்லது அமெரிக்கக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் எவரும் கடுமையாகத் தாக்கப்படுவார்கள் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஐஸ்கிரீம் கடையில் மின்சார வாகன பாட்டரி வெடித்து தீ . தம்பதி உயிரிழப்பு . ஆற்காட்டில் சோகம்!
News18 on ஆற்காடு தேவி நகர் மகாவீர் ஐஸ்கிரீம் கடையில் மின்சார வாகன பேட்டரி வெடித்து தீ, உரிமையாளர் பவன்லால் மனைவி சுந்தரி உயிரிழப்பு, போலீஸ் விசாரணை தொடர்கிறது
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் ஐஸ்கிரீம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், தம்பதி உயிரிழந்தனர்.
ஆற்காடு அடுத்த தேவி நகர் பகுதியில் 'மகாவீர் ஐஸ்கிரீம்' என்ற பெயரில் கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளரான பவன்லால் மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர் திங்கள்கிழமை அதிகாலை ஐஸ்கிரீம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கடையின் உள்ளே இருந்த மின்சார வாகனத்தின் பேட்டரி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வருகிறார்! புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் - அட்லீ அல்லது நெல்சன் இயக்குவார் என்று தெரிகிறது
James Vasanthan : விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருந்து அவரைப்பற்றிய எல்லாம் அறிந்த பிறகு வெளியேறிய ஒருவருடன் நேற்று பேசிக்கொண்டிருந்தேன்.
"முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்கிற அதிகார வெறியில்தானங்க அவர் அரசியலுக்கே வந்தாரு. He just wants power to show his might. உதயநிதியின் வளர்ச்சியை அவரால் தாங்கமுடியல."
"போதாததுக்கு அங்க இங்க இருந்து கூட ஒட்டிக்கொண்ட எல்லாரும் அவருக்கு ஆசை வார்த்தை காட்ட, தான் அந்த இடத்தை சந்தேகமே இல்லாமல் எளிதாகப் பிடித்துவிடுவோம் என்று நினைத்து, அவர்கள் சொன்னதையெல்லாம் நம்பி களத்தில் இறங்கினார்."
"முதலில் ரொம்ப நம்பிக்கையாகத்தான் இருந்தார். போகப்போகத்தான் அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பித்தது. நிச்சயம் இது நடக்காது என்று தெரியத் தொடங்கும்போது, பல பித்தலாட்டங்களைச் செய்யத் தொடங்கினார்."
"திமுகவால் தனக்குத் தொல்லை என்பது போல பொய்யாகப் பேசத் தொடங்கினார். அவருடைய ரசிகர்களும் அதை நம்பினார்கள். கூட இருக்கிற நரிகளின் ஆலோசனைப்படி 'ஜனநாயகன்' படத்தையும் leak செய்தார்."
திங்கள், 13 ஏப்ரல், 2026
சவுக்கு சங்கரின் தாயார் கமலா காலமானார்
hindutamil.in -வேட்டையன் : சென்னை: சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா காலமானார். சவுக்கு சங்கர் சிறையில் உள்ள நிலையில் தன் மகனை பார்க்காமலேயே அவரது உயிர் பிரிந்தது.
சவுக்கு மீடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் 2 மோசடி வழக்குகளைப் பதிவு செய்து கடந்த டிச.13 அன்று கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
யாழ் – தொல்புரம் கோயிலில் இளைஞர் அடித்து கொலை
வீரகேசரி யாழ்ப்பாணம் – தொல்புரத்தில் இரு இளைஞர் குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று (12) இரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஒரே கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக முரண்பாடு நிலவி வந்துள்ளது.
இந்நிலையில் அங்குள்ள ஆலயம் ஒன்றின் நிர்மாணப்பணிகளின் போது, நேற்று மேலும் இரண்டு இளைஞர்களுடன் வந்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வவுனியா ஓமந்தை இந்திய ராணுவ முகாமில் புலிக்கொடி!. 7-august 1987
ராதா மனோகர் : ராஜிவ் ஜேயார் ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கை வந்த இந்திய அமைதி படையை புலிகள் கோலாகலமாக வரவேற்றார்கள்!
இவர்களுக்கு இடையே ஒரு கல்யாண வீட்டுக்கு நிகரான கொண்டாட்டம் இருந்தது
இந்திய ஹெலிகாப்டர்களில் தங்கள் தளபதியின் மணப்பெண்ணை அழைத்து வந்த கூத்தெல்லாம் கூட நடந்தது.
பரஸ்பரம் உணவு பரிமாறினார்கள்.
இந்திய படையினரும் கூட புலிகளை இட்டு பெருமிதம் கொண்டிருந்தனர்
ஒருவேளை புலிகளை ஒரு இந்து வீரர்கள் என்ற நோக்கத்தில் அணுகினார்களோ தெரியவில்லை.
இவர்களுக்கு இடையேயான அந்த தேன்நிலவு எப்படி கசந்தது?
பச்சையாக சொன்னால் புலிகளுக்கே உரித்தான பேராசையும் முரட்டுத்தனமும் கத்துக்குட்டித்தனமும் எல்லையற்ற பாசிச குணாம்சம் அதில் அடங்கி இருக்கிறது!
.7-august 1987 -ஈழநாடு பத்திரிகை
வவுனியாவில் இந்திய இராணுவத்தினர்
ஓமந்தை ராணுவ முகாமில் புலிக்கொடி!
ஞாயிறு, 12 ஏப்ரல், 2026
நீங்கள் ஏன் பதவி இறக்கப்பட்டீர்கள்? - பழனிவேல் தியாகராஜனுக்கு குஷ்பு கேள்வி
hindutamil.in - ஒய்.டேவிட் ராஜா : மதுரை: “நீங்கள் ஏன் பதவி இறக்கப்பட்டீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்” என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் 3வது முறையாக போட்டியிடுகிறார். இவருக்கும், இவரை எதிர்த்து புதிய நீதி கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆஷா போஸ்லே காலமானார் – 9 வயத்தில் இருந்து 92 வயது வரை
BBCTamil : 9 வயதில் தொடங்கிய இசைப் பயணம்.. யார் இந்த ஆஷா போஸ்லே.? கடந்துவந்த பாதை!
இசை உலகில் கொடிக்கட்டிப்பறந்த பாடகி ஆஷா போஸ்லே தன்னுடைய 92 வயதில் வயதுமூப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
ஆஷா போஸ்லே.. இந்திய இசையின் மயக்கும் குரல். இசை உலகில் பல சாதனைகள் புரிந்த குரலை இன்று மரணம் மௌனமாக்கி இருக்கிறது. ஏகப்பட்ட பாடல்கள் மூலம் அனைத்து மொழி ரசிகர்களின் மனங்களிலும் இடம்பெற்றவர், வாழ்க்கை பயணமும், இசைபயணமும் கவனிக்க தக்கது.
டொமினிக்கன் குடியரசும் மிராபேல் சகோதரிகளும் - வரலாறு
Neander Selvan : டொமினிக்கன் குடியரசை 31 ஆண்டுகள் (1930 - 1961) தனது இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தவர் ரஃபேல் ட்ருஜிலோ. சுமார் 50,000 பேரின் கொலைகளுக்குக் காரணமான இவர், பயப்பட்டது இருவருக்கு மட்டுமே. ஒன்று கத்தோலிக்க திருச்சபை, இரண்டு மிராபெல் சகோதரிகள்.
டொமினிக்கன் ரிபப்ளிக்கின் சகல சக்திகளும் வாய்ந்த அந்தச் சர்வாதிகாரி ஒருமுறை, "எனக்கு இருக்கும் இரண்டு பெரிய பிரச்சினைகள் கத்தோலிக்க திருச்சபையும், மிராபெல் சகோதரிகளும்தான்" என்று குறிப்பிட்டார். ஆனால் அவர் பயந்தது போலக் கத்தோலிக்க சபை அவரை வீழ்த்தவில்லை, மிராபெல் சகோதரிகள் தான் வீழ்த்தினார்கள்.
நல்லதொரு சைவ உணவகம் KMS மெஸ்
![]() |
![]() |
ந. சரவணன் : மதிய உணவிற்கு அருகில் உணவகம் இருக்கிறதா என்று அலுவலக தோழர் ஒருவரிடம் கேட்க விபரம் கூறி அனுப்பி வைத்தார்.
ஆனால் அவர் கூறிய உணவகம் இன்று விடுமுறை. அருகிலிருந்தவர்களிடம் வேறு உணவகம் இருக்கிறதா என கேட்க, இன்னும் சற்று முன்னே செல்லுங்கள் இடப்புற ஒழுங்கையில் உணவகங்கள் இருக்கிறது என்றார் ஒருவர்.
சென்று பார்த்தால், சுமாரான முகப்பு தோற்றத்துடன் KMS மெஸ் என இருந்தது. சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்திற்கு பின்புறம் இருக்கும் பெரும்பாலான கட்டிடங்கள் மேன்சன்களாக இருப்பதால் அநேக மெஸ் இருக்கிறது. சென்னை வந்த ஒரு வாரத்தில் பல்வேறு மெஸ்களில் சாப்பிட்டு மெஸ் இப்படிதான் இருக்கும் எனும் அனுமானம் இருந்தது. திருச்சி அனுபவமும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் மெஸ் அனுபவமும் இருந்ததால் கற்பனையில் இப்படித்தான் இருக்கும் சமாளித்துக்கொள்ளலாம் என்று சென்று சாப்பாட்டிற்கான டோக்கன் வாங்கியதும் நெய் பருப்பு வேண்டுமா என கேட்டு அதற்கும் தனியாக டோக்கன் கொடுத்தார் ஒருவர். ஒரு இடம் காலியாக இருக்க அங்கு அமரப்போகையில், காத்திருங்கள் அனைவரும் எழுந்த பின் அமரலாம் என்றார். பசி அதிகமாக இருந்தது. டோக்கன் வாங்கியாயிற்று என அங்கேயே நின்றுக்கொண்டிருந்தேன்.
























