tamil.oneindia.com - Velmurugan P : சென்னை: சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வுகள் எல்லாமே சாதாரணமாக கடந்து போகக்கூடிய நிகழ்வு கிடையாது. ஏனெனில் வழக்கமாக திமுக ஆட்சியில் ஆளுநர் ரவி இருக்கும் போது சட்டசபை கூடினாலோ போர்க்களம் போல் பிரச்சனை வெடிக்கும்.. தமிழ்தாய் வாழ்த்து தான் முதலில் வாசிப்பார்கள். தேசிய கீதம் வாசிக்க சொல்வார் ஆளுநர். ஆனால் அதனை ஏற்க சபாநாயகர் மறுப்பார். இதனால் ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்வார். அதேபோல் அப்படியே வாசித்தாலும், பல வார்த்தைகளை பேச மாட்டார். ஆனால் இன்றுதவெக அரசின் நடவடிக்கையும், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரின் நடவடிக்கையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளி, 19 ஜூன், 2026
கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்
மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று(ஜூன் 18) தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று (ஜூன் 18) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஊழலை ஒழிக்க முடியும் என்ற பெரும் நம்பிக்கையை தமிழக முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். தற்போதைய சமூகம் மேல் தட்டு மக்களுக்கான,
புதன், 17 ஜூன், 2026
தத்தளிக்கும் விஜயபாஸ்கர்.. கதவுகளை மூடும் திமுக, தவெக? கைமாறும் டிவி சேனல்கள்
மின்னம்பலம் : வாங்க ப்ரோ.. அங்கிட்டும் இங்கிட்டும் தத்தித் தாவுற கேரக்டர் யாராம்?
வேற யாரு.. விராலிமலை விஜயபாஸ்கர்தான்.. அவரோட ஒவ்வொரு மூவ் பத்தியும் நாம டிஜிட்டல் திண்ணையில பேசிகிட்டு இருக்கிறோம்..
விஜயபாஸ்கர் நேத்து திடீர்னு சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்திச்சு தான் கைப்பட எழுதுன ராஜினாமா கடிதத்தை கொடுத்தாரு.. சபாநாயகரும் அதை ஏத்துகிட்டாரு..
அதோட நிற்காத விஜயபாஸ்கர், ”தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
துரை வைகோ : “தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல்.
hindutamil.in - க.ராதாகிருஷ்ணன்: கரூர்: “தவெக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. ஆளுங்கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ரூ.13.18 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்பபட்டுள்ளது. இது இதுவரை இல்லாத கடன் அளவாகும்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 17) நடந்த கிருஷ்ணராயபரம் மதிமுக பேரூர் செயலாளர் வெங்கடாசலம் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
1995 இல் யாழ்ப்பாணத்தை கட்டி எழுப்பிய சந்திரிகா பண்டாரநாயக்க
![]() |
ராதா மனோகர் : 1995 இல் நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெரும் தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று கொண்டே இருந்தது.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் முடிவோடு யாழ்ப்பாணத்தை பல முனைகளிலும் முற்றுகை இட்டு நகர்ந்த ராணுவம் பல இழப்புக்களின் மத்தியில் 1995 ஆக்டொபர் மாதம் யாழ்ப்பாணத்தை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது
தென்னிலங்கையிலும் பலவிதமான பங்கரவாத செயல்கள் இடம்பெற்ற வண்ணமே இருந்தது
எளிதில் விளங்க வைக்க முடியாத அளவு மிக பயங்கரமான சூழல் எங்கும் நிலவியது.
சந்திரிகா அம்மையாரின் நிலைமையும் படுமோசமாக இருந்தது
ஆளும் கட்சியிலும் பலர் அதிருப்தியோடு இருந்தார்கள்
நாட்டின் நிச்சயமற்ற தன்மையும் பாதுகாப்பு தளம்பல்களும் சேர்ந்து பல அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஆட்டி படைத்தன.
மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக
tamil.oneindia.com - Velmurugan P : சென்னை: அனைத்து அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் அலப்பறை போடுகிறார்களே, நாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறோமே என்ற விரக்தியில் "வெள்ளை அறிக்கை" என வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன் . தி.மு.கழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே வருவாய் & நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன், வருவாய் வரவினங்கள், மாநில அரசின் சொந்த வரி வருவாய், ஒன்றிய வரிகளில் மாநில அரசின் பங்கு, வருவாய் செலவுகள்,மூலதனக் கணக்கு எவ்வளவு, வரும் காலங்களில் இவை எவ்வளவு இருக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என திமுக ஐடி விங்க் விமர்சித்துள்ளது.
2 மாதங்களுக்கு பின்னர் கடலுக்குச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்: ரூ.10 கோடி மதிப்புள்ள மீன்களை அள்ளி வந்தனர்
hindutamil.in -எஸ்.முஹம்மது ராஃபி : ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் அதிக மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் ஜுன் 14 அன்றுடன் முடிவடைந்த நிலையில் விசைப்படகு மீனவர்கள் தற்போது கடலுக்குச் சென்று வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சுமார் 3,500 மீனவர்கள் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றனர்.
செவ்வாய், 16 ஜூன், 2026
கும்மிடிப்பூண்டியில் 3 குழந்தையை வன்புணர்வு சென்ற பிகாரி கைது
நக்கீரன் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பலவேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வெறும் 3 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் மனதை உலுக்கி, பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவுவைப்பு; ரூ.2,500 எப்போது கிடைக்கும்? - பெண்கள் எதிர்பார்ப்பு
hindutamil.in : தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று கடந்த மே மாதம் ஆட்சியமைத்தை தொடர்ந்து, சட்டப்பேரவை விவாதத்தில் முதல்வர் விஜய் பேசும்போது, திமுக அரசின் திட்டங்கள் தொடரும் என்று அறிவித்தார். அதேபோல், தவெக அறிவித்த மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்.
ஞாயிறு, 14 ஜூன், 2026
AIIMS Bhopal -F எழுத்தால் விபரீதம்! மருந்துக்கு பதிலாக உடலில் இறங்கிய விஷம்! துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுவன்
Vigneshkumar Oneindia Tamil இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், ரத்தப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுவன்,
செவிலியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருந்துக்கு பதிலாக உடலில் செலுத்தப்பட்ட ஒரு நச்சு திரவம் அந்தச் சிறுவனின் உயிரைப் பறித்துள்ளது. நமது நாட்டில் பல மருத்துவர்கள் 24 மணி நேரமும் பொதுமக்களை காக்க வேலை செய்கிறார்கள். இருப்பினும்,
சில நேரங்களில் அவர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் குறித்த தகவல்கள் தான் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்தாண்டு இறுதியில் நடந்த இந்த சம்பவத்தின் விசாரணை அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. Bhopal AIIMS Medical Negligence
சனி, 13 ஜூன், 2026
புலிகளின் ஓயாத அலைகள் 4 - பாகிஸ்தான் ஆயுதங்களை இந்தியா இலங்கைக்கு கொண்டு சென்ற வரலாறு
![]() |
![]() |
ராதா மனோகர் : 2000 இலங்கை போரில் ஒரு முக்கியமான காலகட்டம்
குறிப்பாக புலிகளுக்கு எதிராக பலநாடுகள் ஒற்றுமையாக செயல்பட தொடங்கியது இந்த காலக்கட்டத்தில்தான்.
இந்த திருப்பத்தை சரியாக கணித்திருந்தால் ஒரு சிலவேளை பின்பு நடந்த அவலங்களை புலிகள் தவிர்த்திருக்க முடியும்.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்கத்தில் புலிகளின் ஓயாத அலைகள் 4 செப்டெம்பர் மாதம் ஆரம்பித்தது
கருணாவின் ஜெயந்தன் படையணி யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் முனைப்புடன் எழுதுமட்டுவாளில் நிலை கொண்டிருந்தது..
கிழக்கு முனையில் நாகர் கோவில் வாசலில் காத்து நின்றது
மேற்கு பக்கமான கிளாலி முனையில் தயார் நிலையில் நின்றது.
2000 ஆண்டு எப்பிரல் 30 ஆம் தேதி பலாலி ராணுவத்தளத்தின் மீது புலிகளின் கனரக ஆர்டிலரி குண்டு தாக்குதல் செய்வதற்கு இன்னும் சரியாக ஐந்து கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது என்று அமைச்சர் மங்கள சமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதை கேட்டு முழு இலங்கையும் அதிர்ச்சி அடைந்தது,
பலாலியில் நிலை கொண்டிருந்த (40000) நாற்பதாயிரம் ராணுவத்தினருக்கு உரிய உணவு மருந்து மற்றும் ஆயுதங்கள் கொண்டு செல்வதற்கு உரிய வழிகள் பெரும்பாலும் அடைக்க பட்டுவிட்டன.
பாரதிராஜாவின் 500 கோடி சொத்து- குடும்பத்தில் சொத்து தகராறு- நீலாங்கரை பங்களா யாருக்கு
oneindia.tamil : சென்னை: பாரதிராஜா தனியாகக் கஷ்டப்பட்டு, தூக்கத்திலேயே அவரது ஆன்மாவும் பிரிந்துவிட்டது. இது மிகவும் கொடுமையான விஷயம். அவர் மறைந்தாலும், தனது மகன் மனோஜின் குடும்பத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அவரது கடைசி ஆசையாவது இனி நிறைவேற்றப்பட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள வெங்கடேச்ன், "பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் கங்கை அமரன், அங்கிருந்த குடும்பத்தினரை நோக்கி, "கடைசியில எல்லாரும் அவரை அனாதையாகத் தவிக்க விட்டுட்டு போயிட்டீங்க இல்லை?" என்று ஆவேசமாகத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சுயமரியாதை பற்றி 1929 யிலேயே வெளிவந்த நூல் - C.P.R.பாரதி எனும் திரு.ஸி.பி.ராஜகோபால பாரதி.
![]() |
![]() |
Dhinakaran Chelliah · : சுயமரியாதைச் சமரசச் சடங்கு விளக்கம்
அங்கிங் கெனாதபடி எனத்தொடங்கும் தாயுமானவரின் பாடலையும், ‘ஏகமாய்ப் பலவாய்’ எனத்தொடங்கும் அ.சிவப்பிரகாசரின் பாடலையும்,’உலகம் யாவையுந்’ எனத்தொடங்கும் கம்பனின் பாடலையும்,’பூநுலாய வைந்துமாய்’ எனத்தொடங்கும் திருமழிசையாழ்வாரின் பாடலையும் கடவுள் வாழ்த்தாக நூலிற்கு வைத்துள்ளார் ஆசிரியர் C.P.R.பாரதி எனும் திரு.ஸி.பி.ராஜகோபால பாரதி.
இந்நூலின் பெயர் ‘சுயமரியாதைச் சமரசச் சடங்கு விளக்கம்’ ஆகும்.
1929 ல் வெளிவந்த நூல்.
நீண்ட முன்னுரைக்குப் பின், சுயமரியாதை வழியில் விவாகம் எனும் மணம் எப்படி நடக்கவேண்டும் அதன் வழிமுறை விளக்கங்களை எழுதியியுள்ளார்.
விஜய்க்கு திமுக குடும்பங்களில் இருந்து சுமார் 10 வீத வாக்குகள் சென்றிருக்கிறது?
ராதா மனோகர் : ஜீவா டுடே ஜீவா சகாப்தன் அவர்கள் ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது நடிகர் விஜய்க்கு திமுக குடும்பங்களில் இருந்து சுமார் 10 வீத வாக்குகள் சென்றிருக்கிறது என்றார்.
இது உண்மையாக இருக்க கூடும் ஏனெனில் ஏற்கனவே இது பற்றி செய்திகள் உள்ளன.
இதற்கு பலரும் பல காரணங்களை கூறக்கூடும்
முன்பெல்லாம் திமுக குடும்பங்கள் என்ற பெரிய திமுக கிளைகள் இருந்தன.
ஒவ்வொரு திமுக குடும்பமும் ஒரு திமுக கட்சி கிளைபோல் செயல் பட்டன
இந்த திமுக குடும்பங்களில் இருந்துதான் திமுக ஆட்சிக்கு வந்தது மட்டுமல்ல
திமுக படுமோசமாக தோற்றபோதும் திமுகவின் வேர்களை காப்பாற்றி அதற்கு நீரூற்றி
மீண்டும் ஆட்சிக்கு திமுகவை கொண்டுவந்தது இந்த திமுக குடும்பங்கள்தான்
இந்த குடும்பங்களில் யாரவது ஒருவர் அல்லது இருவர் திமுகவோடு கொஞ்சம் நெருங்கிய தொடர்பில் இருப்பார்
வெள்ளி, 12 ஜூன், 2026
4,000 EVM–கள் எரிந்தன.. 2026 மேற்கு வங்க தேர்தல் ரிசல்ட்டே அதுக்குள்ளத்தான்..
tamil.oneindia.com - Nantha Kumar R ; கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக முறைகேடு செய்து ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்நிலையில் தான் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வாக்குகள் பதிவாகி இருந்த 4 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் எரிந்து கருகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் 2026 மே 4ம் தேதி வரை 3 முறை முதல்வராக இருந்தவர் மம்தா பானர்ஜி. இந்நிலையில் தான் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது.
வியாழன், 11 ஜூன், 2026
வயிற்றில் போதைப்பொருள் கப்சுயூல் வெடித்ததில் ஆள் அவுட்
ilakkiyainfo.com : வயிற்றில் போதைப்பொருள் கப்சுயூல் வெடித்ததில் ஆள் அவுட்
இவ்வாறு உயிரிழந்தவர் மொதரவான, ருக்தெனகஹ கொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பஸ்நாயக்ககே குணரத்ன (வயது 51) என்பவர் ஆவார்.
தங்காலையிலிருந்து மாகும்புர வரை பயணிக்கும் தனியார் பேருந்தொன்றில் தற்காலிக நடத்துனராகப் பணியாற்றி வந்த இவர், கொழும்புப் பகுதியில் இரவைக் கழித்துவிட்டு, பின்னர் மாகும்புரவிலிருந்து தங்காலை நோக்கிப் பேருந்தில் வந்துள்ளார்.
பேருந்து தங்காலை வந்தடைந்ததும், அதன் உரிமையாளரிடம் பேருந்தின் சாவி மற்றும் அன்றைய தினத்திற்கான பணத்தை ஒப்படைத்துவிட்டு, தங்காலை நகரில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் நடைபெற்ற மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளார்.
புதன், 10 ஜூன், 2026
அரபு நாட்டு - இலங்கை பணிப்பெண்களின் உயிரிழப்புக்கள் தொடர்கதையா?
![]() |
ராதா மனோகர் : வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பலஸ்தீன் பலஸ்தீன் என்று மூச்சு விடும் எலைட் மனிதர் உரிமையாளர்கள் ஒருபோதும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இப்படி வரும் பிரேத பெட்டிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை
இந்த பெட்டிகளின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்க எந்த எஞ்சியோவும் பணம் தாராது
இந்த பெட்டிகளுக்காக எந்த வெளிநாடுகளும் மனித உரிமை சுற்றலா வாய்ப்பு தராது
இந்த பெட்டிகளுக்காக எந்த நாடும் எந்த ஸ்காலர்ஷிப்பும் தராது
இந்த பெட்டிகளுக்காக பேசினால் எந்த தொலைக்காட்சியும் மைக்கோடு வந்து உங்களை மொய்க்காது
இந்த பெட்டிகள் எந்த ஊடகத்திற்கு ஒரு கவர்ச்சிகரமான செய்திகள் அல்ல
வெளுத்து’விட்ட அகிலேஷ், தேஜஸ்வி.. 'வெளிறிப்போன’ ராகுல் காந்தி.. இந்தியா கூட்டணி
மின்னம்பலம் -Mathi : இந்தியா கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன?
“வீட்டுக்கு கூட்டியாந்து விருந்து வெச்சா விளாசிட்டுப் போறாங்க”ன்னு சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. சொலவடையோடு ஆரம்பிக்கிறீங்க.. யாரு விருந்து வெச்சதாம்?
நம்ம ஜென்சி யூத்ஸ்-க்கு இதுவும் தெரியனுமே.. நீங்க கேட்ட கேள்விக்கு வர்றேன் ப்ரோ.. டெல்லியில இந்தியா கூட்டணி கூட்டத்தை நேத்து காங்கிரஸ் கூட்டியிருந்துச்சு… இந்த கூட்டத்துல திமுக (DMK) கலந்துக்க முடியாதுன்னு சொல்லிடுச்சு இல்லையா?.
டெல்லியில நேத்து இந்த கூட்டம் நடக்குறதுக்கு முன்னாடி 2 சம்பவங்கள் நடந்துச்சு.. ஒன்னு சிபிஎம் தேசிய செயலாளர் எம்ஏ பேபி , மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஒரு லெட்டர் அனுப்பினாரு..
இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்
தினத்தந்தி :‘16 வயதினிலே’ மூலம் இயக்குநராக அறிமுகம்
1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கிய அவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்
செவ்வாய், 9 ஜூன், 2026
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு பாய்ச்சல் : உச்ச நீதிமன்றத்தை நாடிய முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்!
மின்னம்பலம் - Kavi : எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நான்கு பேர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், எஸ் ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக்கழகம், குதிரை பேரத்தில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினர்களை தன் வசப்படுத்திக் கொண்டது என குற்றம்சாட்டப்பட்டது.
சொத்து முடக்க நடவடிக்கைக்கு எதிராக லாட்டரி மார்ட்டின் தொடர்ந்த வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம்
hindutamil.in - ஆர்.பாலசரவணக்குமார் : கேரளா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.
சோதனையின் முடிவில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது. அந்த முடக்கத்தை அமலாக்கத் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது.
திங்கள், 8 ஜூன், 2026
பழநி இடும்பன் கோயிலில் 17 பவுன் தங்க நகைகள், வெள்ளி வேல் மாயம்
hindutamil.in -ஆ.நல்லசிவன் : திண்டுக்கல்: பழநியில் உள்ள இடும்பன் கோயிலில் 17 பவுன் தங்க நகைகள், 52 கிராம் வெள்ளி வேல் மாயமானது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பழநி அடுத்த சிவகிரிப்பட்டியில் இடும்பன் கோயில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் மூலவர் இடும்பன் ஜடா முடியோடும், இடது தோளில் சிவகிரி, சக்திகிரி ஆகிய 2 மலையை காவடி தூக்கிக் கொண்டு, கையில் அரிவாளும், பிரம்ம தண்டத்தோடும் அருள்பாலிக்கிறார்.
விவேகானந்தரின் உண்மை முகம்!(2) அம்பலமான ஜாதீய விவேகானந்தர்
![]() |
Dhinakaran Chelliah விவேகானந்தரின் உண்மை முகம்!(2)
வங்காளத்தில் இந்து சமூகம் பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரண்டு வர்ணங்களாக மட்டுமே பிரிக்கப்பட்டது.
வங்காள காயஸ்தர்களும் வைத்யாக்களும்(பரம்பரை வைத்தியர்கள்) பிராமணர்களுடன் சேர்ந்து உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தவர்கள்.
காயஸ்தர்கள் தங்களை பிரணர்களுக்கு அடுத்த நிலையில் ஆனால் க்ஷத்திரியர்களுக்கு மேலானவர்கள் எனக் கூறிக்கொள்வார்கள்.
விவேகானந்தருக்கு ஹைதராபாத் நிஜாம் உட்பட பொருளுதவி செய்த மன்னர்கள் பலர் இருந்தனர்.
அதில் பெரும்பாண்மையினர் ஹிந்து க்ஷத்திரிய மன்னர்கள் அதிகம்.
அதற்கு முக்கிய காரணம் அந்த மன்னர்களைச் சந்திக்கும் போதெல்லாம் கடிதம் எழுதும்போதெல்லாம் க்ஷத்திரியர்களின் புகழை விவேகானந்தர் பாடியதுதான்.
இந்த வகையில்,இராஜஸ்தானில் உள்ள Khetri (கேத்ரி) மஹராஜாவிற்கு விவேகானந்தர் எழுதிய கடிதம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதுகிறேன்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தவெக எம் எல் ஏவும் கூட்டாளிகளும்
Bala Bharathi ·: பாதிக்கப்பட்டவர் ஓர் இளம்பெண்.
தவெக வைச்சேர்ந்தவர்.
அவரிடம் பாலியல் குற்றம் புரிந்தவர்கள்
குற்றவாளிகள்.
அவர்களும் தவெகவைச்சேர்ந்தவர்கள்.TVK’s Thoothukudi west district youth wing organisers Balasubramanian and Jeyabal of Ramanathapuram for sexual assault of the survivor,
இந்தக் குற்றவாளிகளை கேரளாவில் மறைத்து வைத்தவர் ஒரு MLA.
இவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த தவெக எம்எல்ஏ.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டுப் போராடியது ஜனநாயக மாதர்சங்கம்.
ஞாயிறு, 7 ஜூன், 2026
மு.க.ஸ்டாலின் : மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி.
hindutamil.in -தமிழினி : சென்னை: மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற, செய்யூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பனையூர் பாபு தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றும் போது, '' திமுகவைப் பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வேலை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் உழைப்பதற்குத் தயாராக நாங்கள் இருக்கிறோம், "நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கிறோம்" என்று நமக்கு இன்றைக்குத் துணையாக வந்து சேர்ந்திருக்கும் பாபுவை வரவேற்கிறேன்.
கரப்பான் பூச்சி - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு லண்டனில் சாத்துப்படி
தினமலர் : புதுடில்லி: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பிர்க்பெக் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, நம் உச்ச நீதிமன்ற த லைமை நீதிபதியிடம், அவரது கரப்பான்பூச்சி கருத்து குறித்து சிலர் கேள்வி கேட்டதால் சர்ச்சை வெடித்தது.
கடும் கண்டனம் இந்த சம்பவத்திற்கு லண்டனில் உள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி, ஒரு வழக்கில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வாய்மொழியாக சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
அப்போது அவர், 'வேலையில்லாத இளைஞர்கள் சிலர், சமூக வலைதளங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். கரப்பான்பூச்சிகள் போல சமூகத்தை சீரழிக்கின்றனர்' என, விமர்சித்து இருந்தார்.
சிங்கள மொழி திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்ததுதான் விரிவான ஆய்வறிக்கை
சிங்களரும் தமிழரும் ஒன்றே இலங்கை சிங்கள மக்களின் மரபணு கூறுகள் வரலாறு
May be a doodle of text that says "சிங்கள மக்களின் மரபணு வரலாறு GENE GENETICHISTORYOFTHESINHIALESE GENETICHISTORYOF TIC HISTORY OF SINHALESE का Z ጣ த ர ma 斗 ಇ यी 99 தாம் கி எ"
Rajasekar Pandurangan : சிங்களரும் தமிழரும் ஒன்றே
இலங்கை சிங்கள மக்களின் மரபணு வரலாறு: புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் என்ன?
இலங்கைத் தீவானது பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் இனங்களின் சங்கமமாகத் திகழ்ந்து வருகிறது.
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த அழகிய தீவு,
வரலாற்றின் பக்கங்களில் எப்போதும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கையின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிங்கள மக்கள் ஆவர். இவர்களின் தோற்றம், வரலாறு மற்றும் இவர்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் சிங்களவர்களின் தோற்றத்தை வட இந்தியாவுடன் இணைக்கின்றன. அதேவேளையில், புவியியல் ரீதியாக அவர்கள் தென் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இந்த இரண்டு கருத்துக்களில் எது சரியானது?
அல்லது இரண்டுமே உண்மையானதா?
சனி, 6 ஜூன், 2026
தவேவில் அதிமுக இரண்டு எம் எல் எம் கம்பனிகளின் வரலாற்று பின்னணி
ராதா மனோகர் : தவேகவை நோக்கி அதிமுக தலைவர்கள் தொண்டர்கள் என்று ஏராளமானோர் படை எடுக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகள் பிரேக்கிங் நியூஸ்களாக காட்டி கொண்டிருக்கின்றான்
தவேக என்ற கட்சி அடிப்படையில் ஒரு அரசியல் கட்சியே கிடையாது
தமிழகம் இப்போது சந்தித்திருப்பது ஒரு அரசியல் விபத்து.
எந்த விதமான கொள்கையோ கோட்பாடுகளோ கட்சி கட்டமைப்புக்களோ எதுவுமே இல்லாத ஒரு சமூக ஊடக விளையாட்டில் தமிழகம் சிக்கி விட்டது.
4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தவேகவில் சேர்ந்தனர்
மின்னம்பலம் -Mathi : தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) அதிமுகவின் (AIADMK) 4 முன்னாள் அமைச்சர்கள் இணைந்துள்ளனர்.
பனையூரில் தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான
உடுமலை ராதாகிருஷ்ணன்
கடம்பூர் ராஜூ
எம்.சி. சம்பத்
சிவபதி
உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். அதேபோல அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாப்பிரெட்டிபட்டி; கோவிந்தசாமி; கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேர் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
மு.க.ஸ்டாலின் அதிரடி : மறந்து விடாதீர்கள்... தவெக ஆட்சி நடப்பதே நமது தயவில் தான்!
hindutamil.in - தமிழினி : சென்னை: “நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடுதான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடந்தது.
அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “எப்போதுமே ஓர் இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்துக்குப் பிரிந்து போகிறார்கள் என்று சொன்னால், ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்து, ஏதோ வசதியை மனதில் கொண்டு, ஆளுங்கட்சியை நோக்கித்தான் அதிகமாகப் போவது உண்டு. அதைத்தான் நாமும் பார்த்திருக்கிறோம்.
ரஞ்சித் முன்னெடுக்கு பறையர் ஜாதி பெரும்பான்மை ஆதிக்க அரசியல்
Amudhan R P : சென்னை மேயர் - திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்காக மட்டும் தாக்கப்படவில்லை.
அவர் கறாராக, வழக்கமான, இயல்பான அரசாங்க நடைமுறையைக் கடைபிடித்தார் என்பதற்காக மட்டுமல்ல.
சென்னை மேயர் மாதிகா எனும் தெலுங்கு பேசும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் விசிக தலைவர்களாலும் தாக்கப்படுகிறார்.
எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அதுவே நடந்துவிட்டது.
பா ரஞ்சித் போன்றோர்கள் ஆசைப்பட்டது நடந்துவிட்டது.
இண்டியா கூட்டணி திமுக விலகல் ... பாஜகவுக்கு சாதகம் ஏன்? - எக்ஸ்ப்ளைனர்
hindutamil.in : ஜூன் 8-ம் தேதி டெல்லியில் கூடும் இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்திருக்கிறது திமுக. காங்கிரஸின் துரோகத்தால் மனக்காயமுற்றிருக்கும் தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருக்கும் திமுக, காங்கிரஸ் பங்கேற்கும் எந்தக் கூட்டத்திலும் இனி பங்கேற்கமாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறது.
திமுக-வின் இந்த முடிவு ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். அதேசமயம் இந்த விஷயத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை சத்தமில்லாமல் அடித்துச் சாய்த்துவிட்ட திருப்தியில் இருக்கிறது பாஜக. இதன்மூலம், தொடக்கம் முதலே தங்களுக்கு தொல்லை கொடுத்து வரும் இண்டியா கூட்டணியையும் கலகலக்க வைத்துவிட்ட சந்தோஷத்தில் திளைக்கிறது அந்தக் கட்சி. இதன் பின்புல அரசியலை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.
கர்நாடக முதல்வர் டி கே சிவகுமார் : காங்கிரஸுக்கும் இன்றைய தமிழ்நாடு அரசுக்கும் சம்பந்தம் இல்லை!
![]() |
Dev JB : நான் திரு DKS, இப்போதைய கர்நாடகா முதலமைச்சரை 4-5 முறை நேரில் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். பேசுவதை கேட்டிருக்கிறேன்.
பேசும் போது அனைவரையும் கேட்க வைக்கும் ஆற்றல் உள்ளவர். பொம்மையின் போன அரசை 40% கமிஷன் அரசுனு கூட சொல்லியிருக்கிறார்.
ஆனால் யாரையும் இன்சல்ட்லாம் செய்து நான் பார்த்ததில்லை.
எதுக்கு ஓப்பனாக ரோஸ்ட் பண்றார்னு கூட சொல்லமுடியாமல் கேவலமாக பேசறார்னு தெர்ல. சென்னையிலிருப்பவர் இதுவரை கர்நாடகாவில் இருக்கும் க வையோ அல்லது காங்கிரஸில் இருக்கும் கா வையோ கூட சொல்லாத போது... இம்மெஸ்சூர்டுங்கிறார். அதுவும் காங்கிரஸுக்கும் இன்றைய தமிழ்நாடு அரசுக்கும் சம்பந்தம் இல்லைங்கிறார்.
வெள்ளி, 5 ஜூன், 2026
சுன்னாகம் திராவிடர் சங்க அங்கத்தவர்கள் பட்டியல் இது 1927 february 11
ராதா மனோகர் ; : திராவிடன் பத்திரிகை
11 ஆம் தேதி பெப்ருவரி மாதம் 1927 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர் சங்கத்தினால் இந்த திராவிடன் பத்திரிகை வெளியிடப்பட்டது
இந்த அமைப்பின் சார்பாகத்தான் திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் ஆரம்பிக்கப்பட்டது
அச்சங்கந்தின் சார்பாக திராவிட வித்தியா சாலை என்ற பள்ளிக்கூடமும் நடத்தப்பட்டது
சுன்னாகம் திராவிடர் சங்க அங்கத்தவர்கள் பட்டியல் இது
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம்
சங்கத்தின் தலைவர் அப்புக்காத்து ஸ்ரீமான் mr சு.ராசரத்தினம் அவர்கள்
சங்கத்தின் உபதலைவர்
ஸ்ரீ டி எஸ் நாகலிங்கம் அவர்கள் ஸ்ரீ கே முருகப்பா , ஸ்ரீ எம் .மண்டலம் அவர்கள்
சங்கத்தின் காரியதரிசிகள்
ஸ்ரீ பி கிருஷ்ணசாமி முதலியார் அவர்கள், ஸ்ரீ வி எஸ் பூதப்பிள்ளை அவர்கள்
வியாழன், 4 ஜூன், 2026
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 80 லட்சம் பேர் நீக்கமா?
minnambalam.com- Pandeeswari Gurusamy : தமிழகத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் 80 லட்சம் பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி எனத் தமிழக அரசின் தகவல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 80 லட்சம் பேர் நீக்கமா? – தமிழக அரசு விளக்கம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அப்போதைய திமுக அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் சுமார் 1.31 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
திமுக இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்கிறது - காங்கிரஸ் பங்கேற்பதால் இந்த முடிவு!
hindutamil.in : சென்னை: டெல்லியில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி இண்டியா கூட்டணிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பங்கேற்கும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பின், திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் விளக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு வருமாறு திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்து மாணவன் உட்பட மூவர் மரணம்! - நாவலப்பிட்டியில் அதிகாரிகளின் அலட்சியம்
ceylonmirror.net : ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்து மாணவன் உட்பட மூவர் மரணம்! – நாவலப்பிட்டியில்.
கண்டி, நாவலப்பிட்டி, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோ மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 6:45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், இதில் ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண்ணே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விபத்திலிருந்து ஓட்டோவின் சாரதி அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.
புதன், 3 ஜூன், 2026
நடிகர் விஜய் மீது இப்போது உள்ள பிம்பம் வெறும் பலூன் போன்றதுதான்
![]() |
முறை கேடான காதலையும் ரசிப்பார்கள்
அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு கூட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு முழங்கி விட்டு
அடுத்த நாளே ஊழலை விலாவாரியாக காட்டும் மங்காத்தாவையும் விழுந்து விழுந்து ரசிப்பார்கள்
ஓவராக பண்பு குடும்ப ஒழுக்கம் தூய்மையான காதல் அரசியல் நேர்மை கொள்கை என்றெல்லாம் வாய் வலிக்க வகுப்பெடுப்பார்கள். மனைவியையும் இரு பிள்ளைகளையும் அம்போ என்று விட்டு விட்டு ஊர் அறிந்த திரை மகளோடு பொதுவெளியில் பிலிம் காட்டுவதையும் ரசிப்பார்கள்
போனால் போகட்டும் ரசித்து விட்டு போகட்டும்
ஆனால் இப்படி பட்ட ஒரு ஓடுகாலியிடம் நாட்டை ஒப்படைத்தது மட்டுமல்லாமல் அவனுக்காக உருகி உருகி வழிவதை எந்த ரகத்தில் சேர்ப்பது
கர்நாடகா புதிய அமைச்சரவையில் சித்தராமையா கை ஓங்கியது - மகன் உட்பட பல சித்தராமையா ஆதரவாளர்கள்
tamil.oneindia.com - Nantha Kumar R : பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா
பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக டிகே சிவக்குமார் இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் மொத்தம் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பரமேஸ்வர் துணை முதல்வராகவும், மற்ற 12 பேர் அமைச்சர்களாகவும் செயல்பட உள்ளனர். இதில் சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்களாக பதவியேற்ற எம்எல்ஏக்களின் ஜாதி விவரங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மல்லை சத்யா : “தவெக பக்கம் செல்ல பெட்டி படுக்கையுடன் தயாராகிவிட்டார் வைகோ!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, “தவெக பக்கம் செல்வதற்கு பெட்டி படுக்கையெல்லாம் கட்டி வைகோ தயாராக உள்ளதாகவே அவரின் பேச்சின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. முதல்வர் விஜய்யை அண்ணாவுடன் வைகோ ஒப்பிட்டு பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம் மூத்த தேரர் கைது - அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்
ilakkiyainfo.com : 14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை (2) மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன்போது விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகில் 3 இளம் பிக்குகள் அண்மையில் தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கலைஞர் புதிய தமிழகத்தின் நிர்மாண சிற்பி Kalaignar is an Architect of Modern Thamizhnaadu.
Kandasamy Mariyappan : கலைஞரின் ஒவ்வொரு பிறந்தநாளிலும், இந்த பதிவை எழுதுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக, 19 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சி செய்த தலைவர் கலைஞர்.....
நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார்.
மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப்படுத்தினால்.....
ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும்.
காற்று,
தண்ணீர்,
முத்துவேலர் மகன் கலைஞருக்கு இன்று (ஜூன் 3)பிறந்த நாள் 103 ஆவது பிறந்த நாள்!
![]() |
ராதா மனோகர் : தமிழ்நாட்டின் அச்சாணி திராவிட முன்னேற்ற கழகம்தான்! ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி திராவிட முன்னேற்ற கழகம்தான்
இந்த பாரம்பரியம் இன்று நேற்று வந்ததல்ல.
அந்நியராலும் மதவாதிகளாலும் ஜாதிவாதிகளாலும் வீழ்த்தப்பட்டு தரையோடு தரையாக கிடந்த திராவிட மக்களின் சுயமரியாதையை தட்டி எழுப்பி திருப்பள்ளி எழுச்சி பாடிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்.
இந்த சுயமரியாதை இயக்கத்தின் அடுத்தடுத்த படைகளாக திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்ற கழகமும் வரிசை கட்டி வந்தன.
திராவிடப்படை கட்டி வந்த ஒப்பற்ற தளகர்த்தர்களின் வரிசையில் பேரறிஞர் அண்ணாவின் தம்பி என வந்த முத்துவேலர் மகன் கலைஞருக்கு இன்று (ஜூன் 3)பிறந்த நாள் 103 ஆவது பிறந்த நாள்!
கலைஞர் நடந்து வந்த பாதையில் அவரின் கால்களில் குத்திய முட்கள் ஏராளம்.
கடல் நீர் குடிநீரானது - அதிகமாக பேசப்படாத கலைஞரின் அரிய சாதனைகளில் ஒன்று.
![]() |
Muralidharan Pb : கலைஞர் பக்கம் பதிவு 13 கடல் நீர் குடிநீரானது
கலைஞரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்டால்?
நிலைமை இதுதான் இதற்கு மேல் நம்மிடம் சாத்தியங்கள் இல்லை,வசதிகள் இருக்காது. இதிலிருந்து எப்படி நமக்கு என்ன தேவையோ எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? என்று வினவினால்
நமக்குத் தேவையானதை நாம் எடுத்துக் கொண்டு அதனை வைத்து எவ்வாறு பயன் பெறுகிறோம் என்று சிந்திப்பதே அவருடைய பேராற்றல்.
ஆற்றல் மிக்க பகுத்தறிவுவாதிகளுக்கு Optimistic Rationlist மட்டுமே இப்படித் தோன்றும். அதனால் தான் அதை பலமுறை low resources இருந்தும் அதைவைத்து maximum output சாத்தியம் என அதை பல்வேறு முறை நடைமுறைப்படுத்தியவர் தலைவர் கலைஞர்.
தமிழ் மொழி விதிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிங்கள இடதுசாரிகளின் கறைபடிந்த வரலாறு
![]() |
ராதா மனோகர் : இலங்கையில் எப்போதும் இடது சாரிகள் எனப்படுவோர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடுமையான சிங்கள இனவாதிகளாகவே செயல்பட்டுள்ளனர்
இவர்களுக்கு அவ்வப்போது முட்டு கொடுக்கும் வேலையை தமிழ் இடது சாரிகளும் செய்துள்ளனர்
இவர்கள் என்னதான் குத்தி முறித்து திரிபு வாதங்களில் ஈடுபட்டாலும் வரலாறு இவர்களை அம்பலமாகி கொண்டே வருகிறது
பச்சை
இனவாதிகளான பண்டராநாயகக்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் அவர்களோடு
சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் எதிராக
விஷம் கக்கியதுதான் இலங்கை இடதுசாரிகளின் வரலாறு
அதிலும் இவர்களில் பலர் லண்டனில் படித்த அசல் மேட்டுக்குடி கனவான்கள்
இலங்கையின்
முதல் இடதுசாரி அரசியல் கட்சியின் நிறுவனரான டாக்டர் என் எம் பெரேராவின்
தமிழ் இன வெறுப்பு அரசியல் வரலாறு பற்றிய பதிவு இது
செவ்வாய், 2 ஜூன், 2026
குமரி முத்து பற்றி நடிகை ஊர்வசி உருக்கம் - திமுக பேச்சாளர் நடிகர்
tamil.oneindia.com - V Vasanthi : சென்னை: தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகைகளில் முக்கியமானவர் ஊர்வசி. ஹீரோயினாக அறிமுகமாகி, இன்று குணச்சித்திர நடிகையாகவும் தேசிய விருது வென்ற கலைஞராகவும் திகழும் அவர், சமீபத்தில் பகிர்ந்த ஒரு சம்பவம் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
விரைவில் வெளியாகவுள்ள 'பரிமளா & கோ' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஊர்வசி, மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து குறித்து பகிர்ந்த நினைவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அதிமுக தொண்டரின் விபரீத முடிவு… கண்ணீர் மல்க குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஈபிஎஸ்
மின்னம்பலம் - Kavi : அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறி உயிரை மாய்த்துக்கொண்ட தொண்டரின் உடலுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் உப்புக்கார தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். அதிமுகவில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணியின் மாவட்ட இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இவரது மனைவி முனீஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
ஆதவ் அர்ஜுனா + மனைவி டெய்சி (லாட்டரி மார்டினின் மகள்) நடத்தும் 59 நிறுவனங்கள்!
![]() |
Anbalagan Manivannan : ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டினின் மகள்)தற்போது நடத்தும் நிறுவனங்கள் மொத்தம் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38. (ஒரே நாளில் 20 நிறுவனங்கள் ஆரம்பித்து வேறொரு நாளில் 10 நிறுவனங்களை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுங்க. அனைத்தும் Shell companies. அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனால் நடப்பது போல காட்டி கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.)
20க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்.
ஆட்டோ மொபைல் ,
மொத்த வியாபாரம் ,
சில்லறை வியாபாரம்
இப்படி கணக்கு காட்டப்படும் இந்த நிறுவனங்கள் எதுவும் அதற்காக நடத்தப்படுவது இல்லை. ஏறக்குறைய அனைத்துமே மார்டின் கும்பல் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படும் நிறுவனங்கள். அம்பானி கூட இத்தனை நிறுவனம் ஆரம்பித்து நடத்த மாட்டாண்டா..
இவற்றில் ஒன்று தான் ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED... இதுவும் மார்டினின் கறுப்புபப் பணத்தை 2016களில் வெள்ளையாக மாற்றுவதற்கு நடத்தப்பட்ட வட்டிக்கடை.. பின் வருவன இவன் மனைவி பெயரில் இருக்கும் நிறுவனங்கள்.
BEST AND CO DISTRIBUTORS LLP
BEST & CO GAMING SOLUTION LLP
BEST & CO GAMING TRADERS LLP
MAGNETIC REALCON LLP
GROOVY INFRACOM LLP
ஒன்றரை வயது குழந்தையை தெருவில் அடித்து கொலை செய்த காதலன் - உத்தர பிரதேச கொடுமை
அந்த குழந்தையின் தாயை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினான் அவள் அதற்கு மறுத்தாள்
அந்த கோபத்தில்தான் இந்த கொடுமையை செய்தான் என்று தெரிகிறது
இப்போது போலீஸ் இவனை கைது செய்துள்ளது
இவனை உடனே கொல்லவேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது UP man kills toddler after mother rejects marriage proposal
Brutal killing: Police allege Jitendra Pathak killed a toddler by slamming him to the ground after the child’s mother rejected his marriage proposal.
CCTV evidence: Disturbing footage shows the accused carrying the child before attacking him, sparking outrage and shock in the community.
Gunfight arrest: Pathak was caught after opening fire on police, sustaining leg injuries before being taken into custody.
திங்கள், 1 ஜூன், 2026
முதல்வரான பிறகு முதல் கூட்டத்தில் விஜய் பேசிய 7 விஷயங்கள் என்ன?
BBC News தமிழ் : திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தேர்தலில் அளித்த ஆதரவுக்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தான் கோட் சூட் போடுவது, தவெகவுக்கு யாருக்கு போட்டி, தவெக தொண்டர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம், திமுக மீது விமர்சனம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேசினார்.
ஸ்டாலின் ஒன்றிய அரசியலுக்கு செல்கிறார்! மம்தாவை பிரதமர் வேட்பாளராக பிரகடனப்படுத்தும் ஸ்டாலின்? மத்திய அமைச்சர் ஆவாரா?
tamilminutes.com : மம்தாபானர்ஜியுடன் இணைந்து காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணி? மம்தாவை பிரதமர் வேட்பாளராக பிரகடனப்படுத்தும் ஸ்டாலின்? ஜெயித்தால் மத்திய அமைச்சர் ஆவாரா?
தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதுமே எதிர்பாராத அதிரடி திருப்பங்களுக்கும் வியூகங்களுக்கும் பெயர் போனதாகும்.அந்த வகையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட போவதில்லை என்ற ஒரு தகவல் தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாகப் பரவி, மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதன் பின்னணியில், மிக ஆழமான ஒரு நீண்ட கால அரசியல் கணக்கு இருப்பதாக அறிவாலய முக்கியப் புள்ளிகள் தெரிவிக்கின்றனர். ஒரு மாநில இடைத்தேர்தல் வெற்றியை விட, இந்திய அளவில் தற்பொழுது எழுந்துள்ள அரசியல் மாற்றங்களை எதிர்கொள்வதே கட்சியின் எதிர்காலத்திற்கு முக்கியம் என தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது.
திமுகவை கைப்பற்ற புலிகளும் வைகோவும் தீட்டிய திட்டங்களும் கனவாய் போன கதையும்
ராதா மனோகர் வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை
ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை
இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர்
திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி
தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினர்
அது ஓரளவு பயனளித்தது ஆனாலும் அதன் முழு பயனை இவர் அடையவில்லை
அந்த சோகம் வாழ்நாள் முழுவதும் இவருக்கு உண்டு ..பாவம்
புலிகளை பயன்படுத்தி திமுகவை கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும்
அந்த முயற்சிக்கு புலிகளின் பூரண ஒத்துழைப்பை இவர் பெற்றுக்கொண்டமை இவரின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று எண்ணுகிறேன்
புலிகள் இவரின் திறமையை இவரின் செல்வாக்கை இவரின் விசுவாசத்தை எல்லாம் பூரணமாக நம்பினார்கள்
உலகில் எவருக்குமே உண்மையாகவோ விசுவாசமாகவோ இருந்தே பழக்கப்படாத புலிகள் இவரிடம் உண்மையிலேயே விசுவாசமாகவே நடந்து கொண்டார்கள்
தங்கள் கஜானாவையும் விளம்பர வெளிச்சத்தையும் தாராளமாக வழங்கினார்கள்
ஞாயிறு, 31 மே, 2026
யாழ்ப்பாண பணிக்கர்களும் கேரள பணிக்கர்களும்
Aiyoob Azmin
பணிக்கர், சோனகந்தோப்பு, காக்காக்கடை, அவுலியா வீதி
Maha Laxmi
பார்பனர்ல பணிக்கர் எனும் பிரிவு உள்ளது
Maha Laxmi
கேரளாவில் தான் பணிக்கர் பிரிவு பிரபலம்
Annesley Ratnasingham
Maha Laxmi ...அதுதான் உண்மை - அதை தான் மற்றவர்களிடம் கேட்டிருக்கிறேன் ...."பணிக்கர்" என்பது கேரளாவில் உள்ள ஒரு சாதீய பிரிவு ..
Krishna Kannan
Annesley Ratnasingham யானை பராமரிக்கும் கேரளர்கள்
புகச்சோவ் புகச்சோவ்
பணிக்காரர். வேலைக்காரர்.
பரந்தூர் Airport நிறுத்தம் . சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!
tamil.oneindia.com - Prasanna Venkatesh·: பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு விஜய் தலைமையிலான அரசு முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கட்டுவதற்கான பேச்சுவாத்தை நடப்பதாகவும், அதேவேளையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் எவ்விதமான முடிவும் எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் DMK GENZ MEET UP திமுக ஆலோசனைக் கூட்டம்
Khaleel Syed: என்னவோ புள்ளைங்க, நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்துறாங்க போல, னு ஒரு யோசனையுடன் தான் கிளம்பினேன்.
கலைஞர் அரங்கத்தை அடையும் போதே உள்ளிருந்து பறந்த கைதட்டல்களும் ஆராவாரமும் நடையை வேகமாக்கியது.
போன பிறகு தான் இது வழக்கமான “தீர்மானம் வாசிப்பு கூட்டம் இல்ல, Political Reboot Event மாதிரியான சந்திப்பு என்பது புரிந்தது.
நாங்க தான்டா இன்னும் இப்பவும் கேம்ல இருக்கோம் என்று உறுதியோட இருந்தது அத்தனை பேருடைய கண்களும்.
இளைஞர்களிடம் நம் கருத்துக்களை டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ற வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம் அத்தனை பேச்சிலும் வெளிப்பட்டது.
சனி, 30 மே, 2026
தமிழ்நாட்டில் சமத்துவபுரங்கள் 145 - ஜாதிக்கொரு ஊரும் வீதியும் இருந்த நாட்டில் எல்லா ஜாதிக்கும் ஒரே ஊர் அதுதான் சமத்துவபுரம்
![]() |
Muralidharan Pb : கலைஞர் பக்கம் பதிவு 9 - சமூக நீதி என்பது யாது?
தலைலர் கலைஞர் எப்படி ஒரு திட்டத்தை வடிவமைத்தார்?
சமூக நீதியை அவர் எங்கிருந்து எடுக்கிறார்?
வள்ளுவரின் குறளின் வாயிலாக.
சங்கீத வித்வான்கள் சிலர் பாடுவதை காது கொடுத்து கேட்கவே முடியாது, சிலருடைய பாடல்கள் கேட்கவே அமிர்தமாக இருக்கும். தொழிலில் இருவருமே ஒரே வகை. ஆனால் தொழிலுக்குள்ளே இருக்கிற சிறப்பால் அவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள்.
அதைத்தான் திருவள்ளுவர்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்
இக்குறளின் படி, யார் ஒருவர் தான் மேற்கொண்ட தொழிலில் சிறந்தவராக உள்ளாரோ அவரே உயர்ந்தவர். அப்படி தனது தொழிலை சிறப்படைய செய்யாமல் இருப்பவர் தாழ்ந்தவர் என்கிறார். அதுதான் கலைஞர் குறிப்பிட்ட உதாரணம்.
வெள்ளி, 29 மே, 2026
குழந்தைகளைத் தூண்டுதல்: தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, தவெக பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
hindutamil.in -ஆர்.பாலசரவணக்குமார் : சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும்படி பெற்றோரை நிர்பந்திக்க வேண்டும் என குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்தது, பணப் பட்டுவாடா நடந்துள்ளது ஆகியவை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், தவெக, திமுக, அதிமுக ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த பொது நல மனுவில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக திமுக, அதிமுக-வுக்கு எதிராகவும், பெற்றோரை தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி சிறுவர்களிடம் செல்வாக்கை செலுத்தியதாக தவெக கட்சியினருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுள்ளார்.
பௌத்த பிக்குகளை குற்றங்களில் இருந்து பாதுகாக்க புதிய தர்ம நீதிமன்றம் அமைக்கப்படும்?இலங்கை
ilakkiyainfo.com : “தர்ம நீதிமன்றம்” மற்றும் சட்டத்தின் சமத்துவம்
ஜனாதிபதி அரசாங்கத்தின் புதிய கொள்கை முயற்சி சமூகத்தில் எழுப்பும் கேள்விகள்
-சட்டத்தின் முன் அனைவரும் சமமா?
“ஒரே சட்டம், ஒரே நாடு என்றால், ஏன் ஒரு மதத்திற்காக தனி நீதிமன்றம்?”
-அரசியல் அழுத்தமா? மத அழுத்தமா?
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தி, பௌத்த தேரர்களின் ஒழுக்காற்று பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கொண்ட “தர்ம நீதிமன்றம்” ஒன்றை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்திருப்பது, நாட்டின் அரசியல், சட்ட மற்றும் சமூக தளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
விஜய் கூட டெல்லி போன ஆந்திரா முதலாளிகள் - அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம்
tamil.oneindia.com : விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன்
விஜய் கூட டெல்லிக்கு போனது யார், அவர்களுக்கும் தமிழக அரசியலுக்கு என்ன சம்பந்தம் உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. ஏன் அமைச்சர்களை அவர் அழைத்துச் செல்லவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அரசியல் என்பது அதிகாரத்திற்கான யுத்தம்; இங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற யதார்த்தமான உண்மையுடன் உரையாடலைத் தொடங்குகிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
மலையக தோட்டங்களில் நடப்பது என்ன? சர்வதேச அமைப்பு அதிர்ச்சி குற்றச்சாட்டு!
![]() |
![]() |
Esther L Shanmugham :சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டிருக்கும் (தென்னிலங்கை) மலையக மக்களின் நிலைமை! எஸ்தர் - கவிஞர் /எழுத்தாளர் மலையகம் இலங்கை
மலையக தோட்டங்களில் நடப்பது என்ன? சர்வதேச அமைப்பு அதிர்ச்சி குற்றச்சாட்டு!
தற்போது ஊடகங்களில் பேசப்படும் முக்கியமான விடயமாக, மலையக மக்கள் தென்னிலங்கை தனியார் தோட்டங்களில் எதிர்கொள்ளும் சுரண்டல், அடாவடித்தனம் மற்றும் குறைந்த கூலி தொடர்பான பிரச்சினைகள் உள்ளன.
குறிப்பாக பெண் தொழிலாளர்களின் நலன்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் மனிதர்களாகவும் மனிதாபிமானம் அற்றவர்களாகவே தனியார் தோட்டகம்பனிகள் மக்க ளை நடத்துகிறார்கள்
ஆனால் இது இன்றோ நேற்றோ உருவான பிரச்சினையல்ல; காலம் காலமாக மலையகப் பகுதிகளில் இடம்பெற்று வரும் பெரும் மனித வதை
வியாழன், 28 மே, 2026
திமுக அதிமுக இணைப்பு சாத்தியமா
ராதா மனோகர் : கலைஞர் எம்ஜியார் என்ற இரு தலைவர்களுக்கு இடையேயான பிரச்சனைதான் அதிமுக திமுக பிரச்சனை!
இவர்களின் பிரச்னை கொள்கை சார்ந்தது அல்ல.
விரும்பத்தகாத பல விடயங்கள் நடந்து முடிந்து போய்விட்டன.
இப்போது இருவரும் உயிரோடு இல்லை
ஆனால் இருவரின் கட்சிகளுக்கும் இருவரின் திரைப்படங்களும் இன்றும் உயிர்துடிப்போடு உள்ளன
எனவே இருவரும் தமிழக வாழ்வியலில் தொடர்ந்து இருப்பார்கள்
சுமார் 40 வருடங்கள் ஒன்றாக ஒரே கொள்கையில் பயணித்த இரு தலைவர்களின் இயக்கங்கள்,
இன்று வடவர் பேராபத்தை எதிர்கொண்டு நிற்கிறது
முன்னெப்போதையும் விட இப்போது வரலாற்று பகைவர்கள் பெரும் பலத்தோடு உள்ளார்கள் .
வாசல் படி வரை வந்துவிட்டார்கள்
“காவலர் மீது தவெக குண்டர்கள் தாக்குதல்... ” - அரசு மீது வானதி சீனிவாசன் காட்டம்
hindutamil.in - வெற்றி மயிலோன் : சென்னை: “கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறிய காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
காவலர்கள் மீதே தாக்குதல் நிகழ்த்தும் அளவிற்கு தவெகவில் குண்டர்கள் உருவாகி வருவது இந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
மட்டக்களப்பில் hotel அறையில் தீப்பரவல் - மூச்சுத்திணறி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு
hirunews.lk : மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர்.
பதுளைப் பகுதியிலிருந்து மருத்துவத் தேவை ஒன்றிற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்த குடும்பமொன்றே, அங்குள்ள விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளது.
இச்சம்பவம் நடந்த வேளையில், குறித்த குழந்தைகளின் தாய் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், தந்தை தங்கியிருந்த விடுதி அறையைப் பூட்டிவிட்டு, வெளியில் உணவு வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
Victim syndrome விக்டிம் சின்றோம் திருமாவளவனுக்கு நீண்ட நாளாக உண்டு
ராதா மனோகர் : ஒருவர் எப்போதும் நான் பாதிக்கப்பட்டேன் என்னை எல்லோரும் துன்புறுத்துகிறார்கள்
என்று பிறரின் கவனத்தை கவர்வதற்காக அல்லது பிறரின் அனுதாபத்தை பெறுவதற்காக ஓயாமல் கூவிக்கொண்டே இருப்பது ஒரு உளவியல் நோய்!
இது வெறும் நோய் மட்டுமல்ல .இது ஒரு வியாபாரம் .. முதல் இல்லாத வியாபாரம்
இதில் ருசி கண்டவர்கள் ஒரு போதும் இதை கைவிட மாட்டார்கள்
இந்த விக்டிம் சின்றோம் திருமாவளவனுக்கு நீண்ட நாளாக உண்டு
ருசி கண்ட பூனை அல்லவா . இலகுவில் விட்டு விடாது .
தமிழ்நாட்டின் ஒரு முக்கிய சாபக்கேடு இவர்
ஏன் திருமாவை இப்படி கூறுகிறேன் என்பதை முன்பே கொஞ்சம் விபரமாக எழுதியுள்ளேன்
திருமாவளவன் வைகோ விஜயகாந்த்
மீள்பதிவு 28 செப்டெம்பர் 2020 நாம் சம காலத்தில் கண்டு வியக்கும் நம் தமிழ்நாடு பெற்றெடுத்த மிகப் பெரிய அறிவுச்சொத்து என்று கட்டுக்கடங்காத தொண்டர்களையுடைய விசிக கட்சி தலைவர் திருமாவளவனை சிலர் குறிப்பிட்டுள்ளனர் .
ஆனால் வரலாறு அப்படி இல்லையே?
புதன், 27 மே, 2026
பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு - தமிழக அரசின் கோரிக்கைகள் மனு அளிப்பு
hindutamil.in : புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் அளித்தார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த அவரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையும் விஜய்க்கு அளிக்கப்பட்டது.
பேருந்து அரசுடமை - ஏழை மக்களின் வாழ்வை திருப்பி போட்ட கலைஞர்
![]() |
Muralidharan Pb : கலைஞர் பக்கம் பதிவு 7! பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கியவர்
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானபோது திமுக 138 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையைக் காட்டிலும் அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி அகற்றப்பட்டது.
சைதாப்பேட்டையில் பதினோரு லட்சம் (கலைஞர்) வெற்றிபெற்றிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு அபாரவெற்றி. 25 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது திமுக. தென் சென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து பேரறிஞர் அண்ணா வெற்றி .
முக்தார் கைது ! பிரபல ஊடகவியலாளர் முக்தார் கைது செய்யப்பட்டுள்ளார் பழிவாங்கும் நடவடிக்கை
நக்கீரன் -து. ராஜா : நடிகர் விஜய், த.வெ.க. என்கிற அரசியல் கட்சி தொடங்கியது முதல் கொள்கையற்ற அரசியலை பலரும் விமர்சனம் செய்யத் துவங்கினர். பத்திரிகை, மீடியாக் கள், சோசியல் மீடியாக்கள் வழியாக விமர்சித்தவர்களை முதலமைச்சர் என்கிற அதிகார நாற்காலியில் அமர்ந்த பின் பழிவாங்கும் படலத்தை துவங்கியுள்ளார் ஜோசப் விஜய்.
"மை இன்டியா 24/7' என்கிற பெயரில் யூடியூப் சேனல் நடத்துகிறார் பத்திரிகையாளர் முக்தார் அஹமத். வேலூர் சத்துவாச்சாரியில் வசித்துவரு கிறார். கடந்த மே22ஆம் தேதி இரவு ஒரு நேர்காணலை முடித்துவிட்டு வீட்டிலிருந்து காரில் தனது மனைவி, பிள்ளைகள், தனது மனைவியின் தங்கை, அவரின் இரண்டு குழந்தைகளோடு இரவு 11.30 மணிக்கு வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா விலகுகிறார்? சிவகுமாருக்கு விட்டுத்தர ஒருவழியாக ஒப்புதல்
dinamalar.com : பெங்களூரு: 'கர்நாடக முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டு கொடுத்தால், உங்களை ராஜ்யசபா எம்.பி., ஆக்குவதுடன், உங்கள் மகன் யதீந்திராவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குகிறோம்' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதை அடுத்து, முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுத்தர சித்தராமையா ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக சித்தராமையா, துணை முதல்வர் சிவ குமார் இடையில் நிலவும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கட்சி மேலிடம் இருவரையும் டில்லிக்கு அழைத்தது. நேற்று முன்தினம் இரவே, இருவரும் தனித்தனி விமானங்களில், தங்கள் ஆதரவாளர்களுடன் டில்லிக்கு பறந்தனர்.
விவசாயிகள் பெரும் ஏமாற்றம்- யார் யாருக்கு கடன் தள்ளுபடி? விவசாயிகள் கடும் எதிர்ப்பு
minnambalam.com - Mathi : முதல்வர் விஜய் அறிவித்த பயிர் கடன் தள்ளுபடியால் பெரும் ஏமாற்றம்- விவசாயிகள் போராட்டம்- தலைமை செயலகம் முற்றுகை- சிபிஐ, சிபிஎம் கண்டனம்!
முதல்வர் விஜய் (Vijay) வெளியிட்ட பயிர் கடன் தள்ளுபடி (Farm Loan) குறித்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு தரும் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
முதல்வர் விஜய் நேற்று விவசாயிகளின் பயிர் கடன் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில்,
ரூ.50,000 வரை கடன் தொகை முழுவதும் (100%) தள்ளுபடி செய்யப்படுகிறது.
இடைத்தேர்தல்கள் ஆட்சியை காப்பாற்றுமா அல்லது காவு வாங்குமா? மில்லியன் டாலர் கேள்வி
tamil.oneindia.com சியாம் சுந்தர் ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய அதிரடிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 107 இடங்களைப் பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருந்தாலும், தவெக அரசுக்கான ஆபத்து இன்னும் விலகவில்லை என்பதை தற்போதைய அரசியல் நகர்வுகள் காட்டுகின்றன.
செவ்வாய், 26 மே, 2026
அன்னா ஹாசாரேக்களும் மங்காத்தாக்களும் அடிமை வரலாற்று மிச்சம் மீதிகள்
![]() |
ராதா மனோகர் : நவம்பர் 2011 - சென்னை மெரீனா பீச்சில் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தமிழர்களை பற்றி கொண்டது. குறிப்பாக நடுத்தர வர்க்கமும் படித்தவர்களும் உணர்ச்சியோடு அங்கு கூடி முழக்கங்களை எழுப்பினார்கள். ஊழலை ஒழித்து விட்டுத்தான் இனி காலை உணவே உண்பார்கள் என்ற ரேஞ்சில் இருந்தது
அதற்கு அடுத்த நாளே அஜித் அர்ஜுன் நடித்த மங்காத்தா பிளாக் காமடி படம் வெளியானது
இந்த அன்னா ஹாசாரேயின் கூட்டத்திற்கு நிகரான கூட்டம் மங்காத்தா படத்திற்கும் டிக்கெட் கிடைக்காமல் தெருவெங்கும் மிரண்டு கொண்டிருந்தது
அன்னா ஹாசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை மங்காத்தா என்கவுண்டர் செய்து விட்டது என்று தோழர் மருதையன் குறிப்பிட்டிருந்தார்
மோசடியை ஊழலை அதுவும் நாட்டை காக்க வேண்டியே போலீஸ் திறமையாக கொலை கொள்ளைகளை செய்வதை அழகியலாக்கி படமாக்கினார்கள் .
எங்க மீது அவதூறு பரப்பினால் ஆயுள் தண்டனை கிடைக்கும்.. திமுக பகிரங்க எச்சரிக்கை
மின்னம்பலம் - மதி : சமூக வலைதளங்களில் திமுக (DMK) மீது திட்டமிட்டு அவதூறு பரப்பினால் ஆயுள் தண்டனை கிடைக்கக் கூடிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சி எச்சரித்துள்ளது.
சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று மே 25-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட அந்த சம்பவத்தை திசைதிருப்புகிற வகையில் ஒரு பெண் சோஷியல் மீடியாவிலே பேட்டியளித்து, அது வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கொழும்பில் சினிமா பாணி கடத்தல்... தங்கம் கொள்ளை! சிக்கிய எஸ்.ஐ!
![]() |
Kanakanayakam Vijaypiragaash · சினிமா பாணி கடத்தல்... தங்கம் கொள்ளை! சிக்கிய எஸ்.ஐ – கொழும்பில் அதிரடி திருப்பம்!
மக்களைக் காக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே, பட்டப்பகலில் சினிமா பட பாணியில் கடத்தலில் ஈடுபட்டு 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! இந்த மெகா கொள்ளை வழக்கில் தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஒருவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் வெளிவந்துள்ள சுவாரசியமான பின்னணி இதோ...
பிளான் போட்ட ‘வடக்கு’ போலீஸ்!
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் திகதி, கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றிய போதுதான் இந்த "தங்க வேட்டை" அரங்கேறியுள்ளது. நபர் ஒருவரைக் கடத்தி, அவரிடமிருந்த 2 கிலோ தங்கத்தை இந்த அதிகாரி சத்தமில்லாமல் அள்ளியுள்ளார்.
மட்டக்களப்புக்கு எஸ்கேப்... ஆனால்?
திங்கள், 25 மே, 2026
இலங்கையில் JVP அதிகார மோதல் ... இரண்டு ராஜாக்கள்: அனுர - டில்வின் Episode
அரசியல் பேசலாம் ·ஒரு சிம்மாசனம்... இரண்டு ராஜாக்கள்: அனுர - டில்வின் எபிசோட்!
இலங்கை அரசியல் என்பது எப்போதுமே முடிவில்லாத ஒரு 'மெகா சீரியல்' தான். இதில் "கட்சி அதிகாரம் vs அரசாங்க அதிகாரம்" என்ற பழைய சீசன் இப்போது மீண்டும் புதுப் பொலிவுடன் ஆரம்பமாகியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இம்முறை கதைக்களத்தில் இருப்பவர்கள்: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா!
ஜே.ஆர். போட்ட 'மாஸ்டர் பிளான்'
"முடிவு எடுத்தாச்சு. ஒத்துவந்தா இருங்க, இல்லனா கதவு திறந்தே இருக்கு, தாராளமா வெளியேறலாம்!" - இதை ஏதோ கோபத்தில் ஜே.ஆர். ஜயவர்த்தன சொல்லவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் போது நாடாளுமன்றக் குழுவை கூட்டி மிக 'கூல்' ஆகச் சொன்னார். இதைக் கேட்டதும் எம்.பிக்கள் எல்லாம் காற்றிறங்கிய பலூன்கள் போல கப்சிப் என உட்கார்ந்திருந்தார்கள்.
தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா ?
Gowtham Sham : கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலையை கவனித்தால், முதலில் பலருக்கும் தோன்றுவது ௮ ஒரு visible political presence இல்லாத வெற்றிடம்.
சமூக பதற்றங்கள், சட்ட ஒழுங்கு விவாதங்கள், இணையத்தில் தீவிரமாக பேசப்படும் பிரச்சனைகள், அரசியல் சர்ச்சைகள் ௮ எல்லாமே ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அந்த நேரத்தில், “அரசியல் தலைமையே இப்போது எங்கே இருக்கிறது?” என்ற கேள்வி பொதுமக்களிடையே இயல்பாக எழ ஆரம்பிக்கிறது.
ஏனெனில் தமிழ்நாடு அரசியல், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில், ஒரு தொடர்ச்சியான public presence-க்கு பழகியிருந்தது.
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு
tamil.oneindia.com - Vishnupriya R :கோயமுத்தூர்: நானே குழந்தையை பறிகொடுத்துவிட்டு இருக்கும் நிலையில் என்னை பற்றி தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோவை சூலூர் சிறுமியின் தாய் விளக்கம் அளித்துள்ளார். அதாவது குழந்தையின் தாய்க்கு மதுப்பழக்கம் இருப்பதாகவும், குழந்தையை காணவில்லை என்பது கூட தெரியாமல் போதையில் படுத்திருந்ததாகவும் பெண் ஒருவர் வீடியோவில் கூறியிருக்கும் நிலையில் மறுத்துள்ளார்.
திமுக தலைவர்கள் மீது கடும் கோபத்தில் எகிறி பாயும் உடன்பிறப்புக்கள்
Kandasamy Mariyappan : அன்பின் திமுக மூத்த தலைவர்களே..வணக்கம்.! நீங்கள் நலமாக வாழ வாழ்த்துகள்.
உங்களில் பலரும் கட்சியின் முக்கிய பொறுப்புகளை வைத்துள்ளீர்கள்.!
நீங்கள் அனைவரும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக (MLA, MP) உள்ளீர்கள்.!
உங்கள் பலரின் பிள்ளைகளும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக (MLA, MP) அல்லது கட்சி பொறுப்புகளில் உள்ளார்கள்.!
உங்களில் பலர் அமைச்சர்களாக உள்ளீர்கள்.!
நீங்கள் அனைவரும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் வைத்துள்ளீர்கள்.!
இந்த வசதிகள் எல்லாமே, கட்சியால் உங்களுக்கு கிடைத்தது.!
திரு. ஸ்டாலின் திமுகவை விட்டு விலகி புதிய கட்சி ஆரம்பித்து அதில் நீங்களெல்லாம் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டாலும், 15-20% வாக்குகளை மட்டுமே பெற முடியும்.!
நாயகன் வெற்றி படத்தினால் எந்த இலாபமும் தயாரித்த முக்தா பிலிம்ஸுக்கு கிடைக்கவில்லை
ராதா மனோகர் : நாயகன் படத்தை தயாரித்தது முக்தா பிலிம்ஸ்
முக்தா வி ராமசாமி முக்தா வி சீனிவாசன் ஆகியோர்கள் தயாரித்தார்கள்
படத்தின் மொத்த நெகட்டிவ் உரிமையை ஜி வெங்கடேசனுக்கு விற்றுவிட்டார்
அந்த காலத்திலேயே சுமார் ஒரு கோடி பட்ஜெட்டில் உருவான படம்
நாயகன் வரை இன்றுவரை மக்களால் பேசப்படும் ஒரு கல்ட் மூவி என்று கூறலாம்
ஜி வெங்கடேசனுக்கு பெரும் வசூலை அள்ளிக்கொடுத்த படம்
படத்தை வெளியிடும் போது பலரும் அது வெங்கடேசனின் ஜி வி பிலிம்ஸ் படம் என்றுதான் கருதினார்கள்
அந்த அளவுக்கு ஜிவி பிலிம்ஸ் விளம்பரம் இருந்தது
விசிகவுக்கு பனையூர் பாபு குட்பை.. ஸ்டாலினை சந்தித்த ஆளூர் ஷாநவாஸ்.. ராஜ்யசபா எம்.பி.
மின்னம்பலம் - Mathi : என்ன ப்ரோ.. யாரு எங்க தாவப் போறாங்களாம்?
நான் அப்படி சொல்லலையே ப்ரோ.. ஆனா அந்த மாதிரி சம்பவங்கள் நடக்குதே..
இன்னைக்கு விசிகவில இருந்து மாஜி எம்.எல்.ஏ. பனையூர் பாபு (Panaiyur Babu) விலகிட்டாரு.. அதே மாதிரி ஆளூர் ஷாநவாஸை (Aloor Shanavas) பத்தியும் பல தகவல்கள் பரவுது..
சட்டசபை தேர்தலில் விசிக ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காததால ஏகப்பட்ட சர்ச்சைகள்.. யூகங்கள்.. எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி விசிகவின் முதன்மை செயலாளர் பதவியை கொடுத்தாரு திருமா..
உதயநிதி ஸ்டாலின் : "பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்; முதுகில் குத்துவிட்டார்கள்!
தினமணி ஜீவகணேஷ்.ப : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் திமுக முதுகில் குத்திவிட்டதாகப் பேசியிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டிக்கு ஆதரவு வழங்குவதாக, தவெக-வுடன் கூட்டணி சேர்ந்தது காங்கிரஸ் கட்சி.
இதனைத் தொடர்ந்து திமுகவினர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் திமுக முதுகில் குத்திவிட்டதாகப் பேசியிருக்கிறார்.
ஞாயிறு, 24 மே, 2026
நேரு காலத்திற்கு முன்பிருந்தே ஆர் எஸ் எஸ் சங்கிகளின் ஆதிக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் நிறைந்திருந்தது
![]() |
![]() |
![]() |
ராதா மனோகர் : காங்கிரஸ் கட்சிக்குள் நேரு காலத்திற்கு முன்பிருந்தே ஆர் எஸ் எஸ் சங்கிகளின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருந்தது
இந்திய வாழ்வியலின் ஒவ்வொரு பக்கத்திலும் இந்துத்துவா கருத்துக்களை இந்த காங்கிரஸ் சங்கிகள் விதைத்து கொண்டே வந்துள்ளார்கள்
இதற்கு பல உதாரணங்கள் உண்டு
இந்திய ஒலிபரப்பு சேவைக்கு ஆகாஷ்வாணி என்று பெயர் சூட்டியது பாஜக அல்ல காங்கிரஸ்தான்
ராமாயணம் பாரதம் போன்ற இந்துத்துவா புராணங்களை அரசு செலவில் பிரமாண்ட தொலைக்காட்சி சீரியல்களாக தயாரித்து மக்களை சங்கிகளாக்கியது பாஜக அல்ல காங்கிரஸ்தான்
இதற்கெல்லாம் ஒரு ஆரம்பம் உண்டல்லவா!

























