வியாழன், 13 நவம்பர், 2025

சீனாவில் ரூ.50,000 கோடி மோசடி: லண்டனில் சிக்கிய யாடி ஷாங்!

 தினமலர் : லண்டன்: சீனாவில் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிவிட்டு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தஞ்சம் புகுந்த மோசடி ராணி, விரைவில் தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார்.
கடந்த 2021ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்க முயன்றார்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், அவ்வளவு பெரிய தொகையை லண்டனில் முதலீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவர் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்கவில்லை.
இதையடுத்து, லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத் அருகே, மாதம் 18 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து அவர் வசித்த ஆடம்பர மாளிகையில் போலீசார் சோதனை நடத்தினர்.

பீகாரில் தேஜஸ்வி ஆட்சி அமைக்கிறார்! அடித்து சொல்கிறார் தேஜஸ்வி

 மாலை மலர்  :  பாட்னா  பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலா 101 தொகுதிகள், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

கொழும்பு கொலையில் யாழ்ப்பாண போதைப்பொருள் கடத்தல் குழு தொடர்பு! கைக்குண்டு வாள் அகப்பட்டது

ceylonmirror.net  : வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகக் கைது – நேற்றும் இருவர் வாள், கைக்குண்டு, ஹெரோயினுடன் சிக்கினர்.
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பிரபல வன்முறைக் கும்பல் ஒன்றின் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட நபரும், அவரது சகாவும் நேற்று இணுவில் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேற்படி இருவரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, வன்முறைக் கும்பலின் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட நபரின் உடைமையில் இருந்து 2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

திருமாவளவன் : மக்களின் குடியுரிமை பறிக்கும் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம்- Thirumavalavan Slams Election Commission and deep speech on SIR

தமிழகத்தில் 78 சதவிகிதம் SIR படிவங்கள் விநியோகம்

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : தமிழகத்தில் 78 சதவிகிதம் SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதைபோல் தமிழகத்திலும் நடைபெறும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

புதன், 12 நவம்பர், 2025

எஸ் வி சேகர் இந்திய தேர்தல் ஆணையருக்கு அதிரடி கேள்விகள்

May be an image of one or more people and people smiling

 Rebel  Ravi  : சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்கும்படி கோரிக்கை வைத்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்! 
தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6 கோடியே 36 லட்சம்.
ஒருவருக்கு இரண்டு எஸ்ஐஆர் விண்ணப்பம் கொடுத்தால் 12 கோடியே 72 லட்சம் விண்ணப்பம் பிரிண்ட் செய்தாகி விட்டதா? 
இந்த பணியில் எத்தனை ஊழியர் பயன்படுத்தப்படுகிறார்கள்? 
ஒருவர் ஒரு நாளில் எத்தனை வாக்காளர்களை தொடர்பு கொள்வார்கள்? 
சனி, ஞாயிறு வேலை செய்வார்களா? 
குறைந்தது இருமுறை ஒரு வாக்காளரை தொடர்பு கொள்ள வேண்டும்.
விண்ணப்பம் கொடுக்க, திரும்ப வாங்க எத்தனை நாள் ஆகும்? 
எழுதப்படிக்காதவர்கள் 50 லட்சம் பேர் இருந்தால்,
அவர்களின் விண்ணப்பங்களை எப்படி, யாரை வைத்து நிரப்புவீர்கள்? 
வாக்காளரின் அனைத்து விவரங்களும் ஆதார் அட்டையில் உள்ளபோது அதை ஏன் வாக்காளர் அட்டையுடன் இணைக்கவில்லை? 

செவ்வாய், 11 நவம்பர், 2025

விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள் - டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் !

 BBC News தமிழ் : டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெடிப்பு நடந்த இடத்தில் புலனாய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திங்கட்கிழமை மாலையில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் எட்டு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த உடனேயே காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் சம்பவ இடத்தை அடைந்தன.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால் பின்வரும் நான்கு கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

டெல்லி கார் குண்டு வெடிப்பு 13 பேர் உயிரிழப்பு

 மின்னம்பலம் மதி : டெல்லி செங்கோட்டை அருகே 10 பேரை பலி கொண்ட கார் குண்டு வெடிப்பு நிகழ்விடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்.
டெல்லியில் இன்று இரவு சுமார் 7 மணியளவில் செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்ட கார் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் அருகே இருந்த வாகனங்களும் தீ பிடித்து எரிந்தன. பயங்கர சப்தத்துடன் கார்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் அங்கிருந்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

திங்கள், 10 நவம்பர், 2025

ராகுல் காந்தி : வாக்குத் திருட்டிற்காக மோடியும், அமித் ஷாவும் பிடிபடுவார்கள்.

 மாலை மலர்  :  பீகாரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நிலையில் கிஷன்கஞ்ச் தொகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
அவர் கூறியதாவது, "எங்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்தப் பதிலும் இல்லை. ஏனெனில் உண்மை இப்போது மக்களுக்கு முன்னால் வந்துவிட்டது.
பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் பிடிபடுவார்கள்.

ஞாயிறு, 9 நவம்பர், 2025

70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம் - நவ. 10ல் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

 hindutamil.in  : சென்னை: 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நாளை தொடங்கி வைக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாளை (10.11.2025) சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து, திருக்கோயில் சார்பில் ரூ. 3.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை திறந்து வைக்கிறார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெரும் குற்றக்கும்பல் புலிகளுடன் கூட்டணி: உளவு பிரிவு கடும் எச்சரிக்கை

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%3A+%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

 hirunews.lk  : இந்தியாவில் இயங்கும் தாவூத் இப்ராஹிம் குற்றக்கும்பல் (டி-சிண்டிகேட்) மற்றும் விடுதலைப் புலிகளின் எஞ்சிய பிரிவினருக்கும் இடையே உருவாகி வரும் புதிய, அபாயகரமான கூட்டணியைக் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வட இந்தியாவில் காவல்துறை நடவடிக்கைகளால் பெரும் இழப்பைச் சந்தித்த டி-சிண்டிகேட்,தற்போது தமது போதைப் பொருள் வர்த்தகத்தை விரிவுபடுத்த தென்னிந்தியா மற்றும் இலங்கையை குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக அந்த அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் பழைய வலையமைப்பை நாடிச் சென்றுள்ளது.
இந்தக் கூட்டணியில், டி-சிண்டிகேட் தமது பணபலத்தையும் சர்வதேச அணுகலையும் வழங்குகிறது. பதிலுக்கு, விடுதலைப்புலிகளின் எஞ்சிய குழுக்கள் பாக்கு நீரிணை உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் குறித்த ஆழமான உள்ளூர் அறிவு மற்றும் தளவாட ஆதரவை வழங்குகின்றன.

சனி, 8 நவம்பர், 2025

“ரவுடி நாகேந்திரன் இறக்கவில்லை” : நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர் குற்றச்சாட்டு!

 மின்னம்பலம் - Kavi  :  ரவுடி நாகேந்திரன் மரணமடையவில்லை… பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக காவல்துறை தப்பவைத்துவிட்டது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏ1 ஆக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதியான ரவுடி நாகேந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த அக்டோபர் 9ஆம் தேதி மரணமடைந்தார்.
அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்து.

பர்தா அதுவும் முழு முகத்தை மூடுற பர்தா இஸ்லாமிய உடை இல்லை.

 Ponni Brinda  :  இதை எத்தனை தடவை சொல்றது அப்படின்னு தெரியல. 
ஆனா இஸ்லாமியர்களே இது புரியாம இருக்கிறது ஆச்சரியமா இருக்கு. 
பர்தா அதுவும் முழு முகத்தை மூடுற பர்தா இஸ்லாமிய உடை இல்லை. 
அது இஸ்லாம் தொடங்குவதற்கு முன்னாடியே அங்க அரபு நாட்டில் இருந்த ஒரு ஆடை..
அந்த நாட்டுல இருந்த பணக்கார பெண்கள் புனிதமானவர்கள் அப்படின்னு காமிக்கிறதுக்காக இந்த மாதிரி திரைக்குப் பின்னால இருப்பாங்க. 
ஏழை பெண்கள் இந்த உடையை போட மாட்டாங்க.
 (வட இந்திய இந்துக்களிலும் இந்த பழக்கம் இருந்தது). 
முகத்தை மறைக்கிற மாதிரி ஆடை போடணும்னு எங்கும் குர்ஆனில் கூட சொல்லலை. 
இந்திய இஸ்லாமியர்கள் இந்த உடையை போட்டதும் இல்லை. 
தமிழ்நாட்டுல இஸ்லாம் வந்தது எட்டாம் நூற்றாண்டு. 
அன்னைக்கில இருந்து 1980 வரைக்கும் இஸ்லாமிய பெண்கள் இந்த பர்தாவை பெருசா போட்டதில்லை. 

வெள்ளி, 7 நவம்பர், 2025

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வந்த சுப்பிரமணியம் சாமி . தடுத்த சந்திரஹாசன்

May be an image of one or more people
Subramaniam Swamy
No photo description available.
Sjv.Chandrahasan 
May be an image of one or more people and body of water

ராதா மனோகர்  திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் 10 November 1990 – 21 June 1991 காலப்பகுதியில் இந்திய சட்ட அமைச்சராக பணியாற்றினார்!
இந்தியாவில் தங்கி இருந்த இலங்கை தமிழர்களை பொறுத்தவரை இது ஒரு முக்கியமான காலக்கட்டம்,
(மேலே குறிப்பிட்ட காலப்பகுதியைவிட மேலும் சில மாதங்கள் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் காபந்து அரசிலும் care taker government அதே பதவியில் இருந்தார்)
அப்போதுதான் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் இந்தியாவில் தங்கி இருந்த சுமார் ஒரு இலட்சத்திற்கு அதிகமான இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க முன்வந்தார்.
அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மகன் திரு எஸ் சி சந்திரகாசனிடம் தெரிவித்தார்.
அதற்கு திரு எஸ் சி சந்திரஹாசன் அவர்களுக்கு குடியுரிமை தேவை இல்லை என்றும் அவர்களுக்கு ஊரில் சொந்த வீடு நிலம் சொத்துக்கள் எல்லாம் உண்டென்றும் அவர்கள் பிரச்சனை தீர்ந்ததும் ஊருக்கு திரும்பி செல்லவே வ்ளரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
தமிழகத்தில் தங்கி இருந்த இலங்கை தமிழர்கள் சார்பில் பேச இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

கனடாவில் இலங்கை குடும்பமே கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்- ஆயுள் தண்டனை

May be an image of smiling and text that says '7APPy BIRT BIRTH 7APPYBIRTHAKKEN TΗRKBΝ નગે <BN BATTNAATHAM BATTI NAATHAM 07.11.2025 TOMMY HILFIGER கனடாவில் இலங்கை குடும்பமே படுகொலை- குற்றத்தை ஒப்புக்கொண்ட 20 வயது இளைஞன் 0777705362/ 706605362 www.battinaatham.net info.battinaatham.r'

 நித்தியானந்தன் உங்கள் தோழன் : கனடாவின் ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டையும் சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் தாய், 04 பிள்ளைகள் மற்றும் அவர்களின் நண்பர் உள்ளிட்ட 06 பேர் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி குத்தி கொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஒட்டாவா நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தம்மீது சுமத்தப்பட்ட 06 குற்றச்சாட்டுக்களில், 04 குற்றச்சாட்டுக்களை இலங்கையரான சந்தேக நபர் டி சொய்சா ஏற்றுக் கொண்டுள்ளார்.

சூடான்: உள்நாட்டு போரில் லட்சக்கணக்கில் செத்து மடியும் உயிர்கள்-ஆப்பிரிக்காவின் கண்ணீர்க் கதை!

 மின்னம்பலம் - Mathi  : ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகிழக்கில் அமைந்திருக்கும் சூடான், இன்று உலக வரைபடத்தில் ஒரு துயரச் சின்னமாய் நிற்கிறது.
எகிப்து, லிபியா, சாட், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தென் சூடான், எத்தியோப்பியா, எரித்திரியா மற்றும் செங்கடல் எனப் பல நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்த தேசம், நைல் நதியால் இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, வரலாற்றின் நீண்டகால மோதல்களால் செதுக்கப்பட்டுள்ளது. கார்ட்டூம் நகரைத் தலைநகராகக் கொண்ட சூடான், ‘கறுப்பர்களின் நிலம்’ எனப் பொருள்படும் அரபுப் பெயரிலிருந்து உருவானது. ஆனால், அதன் நிலப்பரப்பில் இன்று கண்ணீர் மட்டுமே ஓடுகிறது.
மதமும் கலாச்சாரமும்: ஒரு மோதல் வரலாறு

வியாழன், 6 நவம்பர், 2025

தமிழக அரசின் முடிவே அவலங்களுக்கு காரணம்” - தூய்மைப் பணி பிரச்சினையில் சு.வெங்கடேசன் எம்.பி

 Hindu Tamil  : மதுரை: ”தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடிய தமிழக அரசின் முடிவே அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம்” என்று சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்க கூடிய தமிழக அரசின் முடிவு, அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம். தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். நகரங்களின் தூய்மையையும், வசிக்கும் மக்களின் சுகாதாரத்தையும் பாழாக்கும். கூடுதலான பிரச்சினை என்றால், மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணி ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்படுகிறது.

ஸ்டாலினை கொலை செய்வது அல்லது நிரந்தரமாக முடக்குவது இதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.

May be an image of one or more people

 Arul Ezhilan :  அந்த இரவில் மேயர் ஸ்டாலினை வேட்டையாடுவதுதான் ஜெயலலிதாவின் நோக்கம்!
முரசொலி மாறன் முன்னால் நின்று ரிக்கார்டரை நோண்டிக் கொண்டிருக்கும் ஆள் நான் தான். 
கலைஞர் கைது என்றால் எனக்கு பேஜர் காலம்தான்  நினைவுக்கு வரும். 
விகடனில் சேர்ந்த புதிது, நள்ளிரவில் அசோகன் சார் என்னை அழைத்து ”கலைஞரை  கைது செய்துட்டாங்க நீங்களும் போய் கவர் பண்ணிட்டு வாங்க” என்று அனுப்பினார். 
அது பேஜர் காலம் விகடன் அலுவலகத்தில் எனக்கொரு பேஜர் கொடுத்திருந்தார்கள். 
நான் அதை நான் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு  கலைஞரை கைது செய்து கொண்டு சென்ற இடமெல்லாம் அலைந்தேன்.  அரசினர் தோட்டத்துக்குள் CBCID  அலுவலகம்  

புதன், 5 நவம்பர், 2025

சொஹ்ரான் மம்தானி நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி! முதல் இஸ்லாமியர்!

 மின்னம்பலம் Kavi  : உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி அமோக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
34 வயதே ஆன இளம் முற்போக்கு சிந்தனையாளரான இவர், நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர், இளம் வயது மேயர், மற்றும் முதல் தெற்காசிய வம்சாவளி மேயர் என்ற பெருமைகளை ஒரே நேரத்தில் தட்டிச் சென்றுள்ளார்.
நவம்பர் 4, 2025 அன்று நடைபெற்ற இந்த தேர்தல், அமெரிக்க அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

செவ்வாய், 4 நவம்பர், 2025

ஒரு கொலை ? ஒரு தற்கொலை? ஒரு தமிழ் எம்பி? என்னதான் நடக்கிறது?

Ramanathan Archchuna : சர்வதேசரீதியில் இந்த youtubeர்களை செல்வம் அடைக்கலநாதன் எம்பி அவர்களால் சட்ட நடவடிக்கைகள் உட்படுத்த முடியாதா? இதில் நடந்த விடயங்கள் உண்மையா இல்லையா என்பதை பொதுமக்கள் கருத்துக்கே விடுகிறேன்!

பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு : மு.பெ.சாமிநாதனும் துணை பொதுச்செயலாளராக நியமனம்!

 மின்னம்பலம் - Kavi  : திமுகவில் 5 துணை பொதுச்செயலாளர்கள் இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை 7ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு. பெ.சாமிநாதன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 4) வெளியிட்டுள்ள அறிவிப்பில்
திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த மு.பெ.சாமிநாதன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக பத்மநாபன் திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராகவும்,

கோவை மாணவியை சீரழித்த குற்றவாளிகளை சுட்டு பிடித்த காவல்துறை

 Vasu Sumathi :  அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி 12 மணிநேரத்தில் கண்டுபிடித்து கைது. 5 மாதத்தில் வழக்கு முடிந்து, 30 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவேற்றல். 
கோவை சம்பவத்தில், ஒரு மணி நேரத்தில் 50 போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 
இரவு முழுக்க 100 போலீசார் தேடுதல் வேட்டை. 30 மணிநேரத்தில் குற்றவாளிகள் சுட்டு பிடிப்பு.
கூடிய விரைவில் அவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
விரைந்து செயல்பட்ட தமிழ்நாடு அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் பாராட்டுக்கள்! 

திங்கள், 3 நவம்பர், 2025

335 கிலோ போதைப் பொருள் பறிமுதல்; 6 பேர் கைது: இலங்கை கடற்படை விசாரணை - இந்தியப் பெருங்கடலில்

 hindutamil.in :ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் கடத்தப்பட்ட 335 கிலோ போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கை கடற்படை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து சர்வதேச கடற்பகுதியில் போதைப்பொருட்களை ஏற்றிச் செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி!

 tamil.mykhel.com   Javid Ahamed  : மும்பை: இந்திய மகளிர் அணி, ஐசிசி உலக கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது இத்தனை ஆண்டுகளாக கடுமையாக போராடியும் தற்போது தான் இந்த கனவு இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு நிறைவேறி இருக்கிறது. இதற்கு வீராங்கனைகளின் திறமை முதன்மையான காரணமாக இருந்தாலும், இந்த கனவை கட்டி பாதுகாத்தது யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஒரு அணியில் திறமையான வீராங்கனைகள் இருந்தால் மட்டும் கோப்பையை வென்று விட முடியாது. அதற்கு மேல் பல விஷயங்கள் இருக்கின்றது. குறிப்பாக ஒரு அணி என்றால் ஒற்றுமை இருக்க வேண்டும். இந்த ஒற்றுமை இல்லாமல் இந்திய மகளிர் அணி பல உலக கோப்பையை இழந்திருக்கிறது.

மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள் களப்பிரர்கள்- ஆட்சி செய்த (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகள்

May be an image of temple and text that says 'น นมร ma pa TΑ yo 14 தமிழக வரலாற்றில் விவ்டன் Seepo களப் களப்பிரர் va காலம் 1a mしよと いり ህ pa Tл ΜyΝ もっもであががいしがでいいしみ டி.கே இரவந்தி ட.கே.இரவீந்திரன் 160T 수0000053'
May be a doodle of ‎map and ‎text that says '‎களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி. வேங்கடசாமி கநர் கிரே ஊகை கொங்கு நார 의 நாரு பல்வவச் காஞ்சி சி .ಕವಿ ொ பான்னி தொண்டி சிறி கரூர் சோழி நாடு 41000 உகையூர் புகார் பாண்டிய ሜበፍ கொற்கை همن குமரிக்டடல் எழும் அவ்ராதபு 949 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்‎'‎‎

 Vimalaadhithan Mani : பிராமணீயத்துக்கு பலமான சாவு மணி அடித்த களப்பிர மன்னர்கள் வரலாறு பற்றிய ஆழ்ந்த வாசிப்பில் நான் அறிந்து கொண்ட வரலாற்று உண்மைகளே இந்த பதிவு .
களப்பிரர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள் இந்த களப்பிரர்கள்.
 இவர்கள் ஆட்சி செய்த  (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகள் மட்டுமே 
தமிழகம் பிராமணீயத்திலிருந்து விடுபட்ட காலகட்டம். பிராமணீயத்தை அடக்கி ஒடுக்கி உட்கார வைத்த ஒரே காரணத்திற்காகவே தமிழகத்தை ஆண்ட  களப்பிரர்களின்  ஆட்சி பிராமணீய அடிவருடிகளான 
 வரலாற்று ஆய்வாளர்களால் தமிழகத்தின் இருண்ட காலமாக வருணிக்கப்படுகிறது.