சனி, 13 டிசம்பர், 2025

மதக்கலவரத்தை தூண்ட சங்கிகள் விரித்துள்ள உலக வலையமைப்பு! குறிவைத்துள்ள மசூதிகள் பட்டியல்!


 இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்ட சங்கிகள் குறிவைத்துள்ள மசூதிகள் பட்டியல்!
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 14 மசூதிகள் மீது ஆர் எஸ் எஸ் குறிவைத்துள்ளது 
இதற்காக பெருமளவு நிதியை பஹாமாஸ் தீவில் பதுக்கி வைத்துள்ளது.
வழறிஞர் திரு வாஞ்சிநாதன் இது பற்றி மிக தெளிவாக விபரமாக எழுதி உள்ளார்.
அவரின் அந்த கட்டுரை உங்கள் தூக்கத்தை தொலைத்து விடும்  

 நிலவினியன் மாணிக்கம் :   ஆர்எஸ்எஸ்ஸஸின் உண்மை முகம் மதக்கலவரத்தை தூண்டுவதை தோலுரித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

டி.வி. சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை.. என்ன காரணம்?

 தினத்தந்தி   :சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 39), சீரியல் நடிகை. ‘சிறகடிக்க ஆசை', ‘பனி விழும் மலர் வனம்', ‘பாக்கியலட்சுமி' போன்ற பல பிரபல டி.வி. தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஓரிரு படங்களிலும் தலைகாட்டி இருக்கிறார்.
ராஜேஸ்வரிக்கும், அவரது கணவர் சதீசுக்கும் கடந்த சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி சில நாட்களுக்கு முன்பாக சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கிருந்தபடியே சீரியல்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு ராஜேஸ்வரி தாய் வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.

வெள்ளி, 12 டிசம்பர், 2025

நடிகை பாவனா- நடிகர் திலீப் பாலியல் வன்கொடுமை வழக்கு 6 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை நடிகர் திலீப் தப்பி விட்டார்

Latest Tamil News

 தினமலர் : திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
2017ம் ஆண்டு பிப். 17ம் தேதி பிரபல மலையாள நடிகை ஒருவர், காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை கடத்திய ஒரு கும்பல், பாலியல் வன்கொடுமை, செய்து அதை செல்போனில் படம் பிடித்தது. கேரளாவில் மட்டுமல்ல, அம்மாநில திரையுலகமான மல்லுவுட்டிலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பை (வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்) நிரபராதி என்று எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Indigo Airlines ரூ.7,253 கோடி லாபம் ஈட்டிய இண்டிகோ! உறைய வைக்கும் அதிர்ச்சித் தகவல்!

Indigo Airlines Profit

 tamil.samayam.com  - ஆனந்தன் : இந்தியாவில் விமானப் போக்குவரத்து துறை தற்போது மிகக் கடினமான நிதி சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. 
பெரும்பாலான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ள நிலையில், பயணிகள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
 குறிப்பாக சமீப நாட்களில் இண்டிகோ விமானங்களில் நடந்த சேவை பாதிப்புகள் இந்தப் பிரச்சினையை மேலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.
இண்டிகோ சேவை பாதிப்பு
பணியாளர் பற்றாக்குறை, திடீர் அட்டவணை மாற்றங்கள், புதிய பணி நேர விதிமுறைகளால் வந்த குழப்பங்கள் என பல காரணங்களால் இண்டிகோ ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய நேரிட்டது.

ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

 தினமலர் : புதுடில்லி : ஆசிட் வீச்சில் ஈடுபடுபவர்கள் மீது, சாதாரண பிரிவுகளின் கீழ் அல்லாமல், இனி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இது குறித்து ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த, சாகின் மாலிக் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு : 
ஒருவர் மீது ஆசிட் வீசுவது மற்றும் ஆசிட்டை குடிக்க வைப்பது அவரது உயிருக்கே தீங்கு விளைவிக்கும் செயல். இதனை போலீசார் சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூடாது. 

வியாழன், 11 டிசம்பர், 2025

இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படும் இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen - துரித படுத்துமாறு செந்தில் தொண்டமான் நிர்மலா சீதாராமனிடம்!

 இலங்கை (மலையக) இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படும் இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen - துரித படுத்துமாறு செந்தில் தொண்டமான்  நிர்மலா சீதாராமனிடம் நேரில் கோரிக்கை!
இந்த கார்ட் ஏற்கனவே இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் வழங்கப்படுகிறது!
இந்த கார்ட் மூலம் இந்தியாவுக்கு விசா இல்லாமல் எத்தனை தடவையும்  சென்று வரமுடியும்.
 நிரந்தரமாக தங்க முடியும் நிரந்தரமாக தொழில் செய்ய முடியும் வியாபாரம் செய்ய முடியும் .கல்வி கற்க முடியும்! சொத்துக்களை வாங்கவும் விற்கவும் முடியும்!
தேர்தல்களில் வாக்கு போட முடியாது! விவசாய நிலங்களை வாங்க முடியாது!
An Overseas Citizen of India (OCI) is a foreign national of Indian origin (excluding Pakistan/Bangladesh) who gets a special lifelong visa and permanent residency status in India, offering benefits like indefinite stay, work/study rights, and financial parity with NRIs, but not political rights (voting/holding office) or agricultural land ownership, essentially a permanent visa/residency for people with Indian roots.  

பாடகி சின்மயி - டாக்டர் பால் அடித்த கூத்து . முழுநேர சங்கிகள் Chinmayi with Dr. Pal

Sivabalan Elangovan  :  டாக்டர் பால் - இவர் மீது எனக்கு தொடக்கத்தில் இருந்தேன் நம்பிக்கை இருந்ததில்லை. சில வருடங்களுக்கு முன்பு சிசேரியன்  தொடர்பாக அறிவியலுக்கு புறம்பாக ஏதோ பேசியதை கேட்டேன். ஒரு சோறு பதமென கடந்துவிட்டேன். 
சமூக வலைதளங்களின் கவனஈர்ப்புக்காக எவ்வளவோ போலி அறிவியல் தகவல்கள் வருகிறதல்லவா? அதில் இவரும் ஒருவர் என கடந்து விட்டேன். 
மருத்துவராக இருப்பதனாலேயே போலி தகவல்கள் சொல்ல மாட்டார்கள் என நம்ப முடியாதல்லவா?
ஆனால் சின்மயி அவர்களுடைய நேர்காணல் ஓன்றில் இருவரும் திட்டமிட்டு ஒரு தகவலை எப்படி Misleading செய்கிறார்கள் என பார்த்த போது அதை expose செய்ய வேண்டும் என நினைத்தேன். நேரமின்மையால் அதையும் கடந்து விட்டேன்.

ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிரான ‘இம்பீச்மெண்ட்’ நாடாளுமன்றத்தில்! பாஜக கடும் எதிர்ப்பு

 மின்னம்பலம் - Mathi :  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய கோரி நாடாளுமன்ற மக்களவையில் இந்தியா கூட்டணி சார்பில் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான தீர்ப்புகளை வழங்கி வருகிறார் என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனம். அண்மையில் திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு பெரும் மத மோதலுக்கான சூழலை உருவாக்கியது என்பதும் இந்தியா கூட்டணியின் விமர்சனம்.

புதன், 10 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம் . பின்னணியில் பாஜகவின் ஜனனம் டிவி!

May be an image of text that says "Fellow USO routube 1 திருப்பாங்குன் 1திருப்பாங்குன்ப் ஏம் @Tamil.JanamNews தமிர் Janari peatA ஜனம் டிவி யாருடையது 65K +VIEWS ਮਖ f டிவி அண்ணாமலைக்கு ட்டில் காலூன்றும் RSS கே"

 நவீன நாடோடி  : ஜனனம் டிவி பாஜக உரிமையாளர் மலையாளி
வலது படம் ஜனனம் டிவி பற்றிய செய்திகள் 
திருப்பரங்குன்றம் நேற்று நடந்த நீதிபதி தீர்ப்பு மற்றும் கலவரங்கள் ஏற்கனவே கேரளாவில் முன்கூட்டியே திட்டமிட்டு   நடத்த தயாரான செயல் என எத்தனை பேருக்கு தெரியும்? 
இதற்கு முழுவீச்சில் உடந்தை தமிழ்நாட்டில் புதிதாக தோன்றிய  பாஜக RSS மலையாளி ஜனனம் டிவி உரிமையாளான்!
6 மாதத்திற்கு முன்பே திருப்பரங்குன்றம் கோவில்  பிரச்சினை களை ஜனனம் டிவி கையிலெடுத்து இதை கேரளாவில்  பெரிய விவாத பொருளாக மாற்றி  திமுகவின் பெயரை கெடுக்க திட்டமிட்டு பெரிய டிபெட் நடத்த தயாரானபோது,
அங்குள்ள அரசியல் பேச்சாளர்களை கூப்பிடும் போது அவர்கள் மறுத்துவிட்டனர்

செவ்வாய், 9 டிசம்பர், 2025

பதுளை பேரழிவில் 14 பேரின் உயிரைக் காத்த நாய்! முன்கூட்டியே சத்தம் செய்து எச்சரிக்கை செய்தது

 மதுஷா : : பதுளை பேரழிவில் 14 பேரின் உயிரைக் காத்த நாய்! முன்கூட்டியே சத்தம் செய்து எச்சரிக்கை செய்தது 
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில், பதுளை, மாஸ்பண்ண பகுதியில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட ‘சூட்டி’ என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று, முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து சுமார் 14 மனித உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. 

ஜப்பானில் 7.6 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

 தினமணி : ஜப்பானின் வடக்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் இன்று (டிச. 8) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.5 அலகுகளாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுனாமி ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திங்கள், 8 டிசம்பர், 2025

சீனாவுக்கு விமானத்தில் செல்லும் இந்தியர்கள் (அருணாச்சல பிரதேஷ்) கவனம்! ஒன்றிய அரசு அறிவுறுத்தல் நமது சிறப்பு நிருபர்

 தினமலர் :  புதுடில்லி : சீனாவுக்கு விமானப் பயணம் செல்லும் போது இந்தியர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது . டில்லியில் மத்திய வெளியறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டி:     
ஷாங்காய் விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை ( அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் ஷாங்காய் விமான நிலையத்தில் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டார் . அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி . எனவே அவரது இந்திய பாஸ்போர்ட்டை செல்லாது என கூறி சீன அதிகாரிகள் கைது செய்தனர் ) தொடர்ந்து , சீன விமான நிலையங்கள் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் குறி வைக்கப்பட மாட்டார்கள் . அவர்கள் தன்னிச்சையாக தடுத்தும் வைக்கப்பட மாட்டார்கள் , துன்புறுத்தப்பட மாட்டார்கள் . சர்வதேச விமான பயண விதிமுறைகளை மதிப்பதாக சீன அதிகாரிகள் உத்தரவாதம் அளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்

திமுக காங்கிரஸ் கூட்டணி உடைக்கிறதா? 75 சீட் + அமைச்சரவை இடம் + 5 ராஜ்ய சபா.. காங்கிரசின் முக்கோண பார்முலா!

tamil.oneindia.com  - Shyamsundar I  :  சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திடம் (திமுக) காங்கிரஸ் கட்சி உறுதியான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. 
கணிசமான பிரதிநிதித்துவம் கோரும் காங்கிரஸ், மூன்று விதமான பார்முலாக்களை முன்மொழிந்துள்ளது. இதை கேட்டு திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த 2 நாட்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

இலங்கை டித்வா சூறாவளி பற்றி எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம் Why Cyclone Ditwah caused large-scale damage in Sri Lanka

 Shanmugam Poothappar : இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்
'டித்வா' சூறாவளி இலங்கைக்கு அண்மையிலுள்ள கடற்பரப்பில் உருவாகிய நாள் முதல் அதன் தாக்கம் தொடர்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக த இந்தியன் எஸ்பிரஸ் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி  தங்களுடன் இதனை பகிர்ந்து கொண்டதாக அந்த செய்தித் தளம் தெரிவித்துள்ளது. 
எச்சரிக்கை மற்றும் முன்னெடுப்பபுகள் என்ற தலைப்பில் கடந்த 13ஆம் திகதி இலங்கைக்கு அண்மையில் தாழழுக்க நிலை ஒன்று உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முதன்முதலில் கணித்திருந்தது, மேலும் நவம்பர் 20 ஆம் திகதி புயல்(cyclogenesis) சாத்தியம் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டது.Why Cyclone Ditwah caused large-scale damage in Sri Lanka
அதாவது சூறாவளியாக மாறி காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் அதிக மழைவீழ்ச்சி ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளது.

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

25 மாணவர்கள் சேர்ந்து அடித்தே கொன்றுவிட்டனர்! கும்பகோணம் - எங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது'' - கதறி அழுத பெற்றோர்

உயிரிழந்த அரசுப்பள்ளி மாணவன் கவியரசன்

 Vikatan  :  கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிகிச்சையில் இருந்த 12ஆம் வகுப்பு மாணவன் கவியரசன் உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 11ஆம் வகுப்பு மாணவன் மூக்கில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார்.

காஞ்சியில் பிறந்த ராவணன்.. சங்கரமடத்தில் அகழாய்வு நடத்த கோரி ஜன. 22-ல் முற்றுகை போராட்டம்!

 மின்னம்பலம் - Mathi  :  காஞ்சிபுரம் சங்கரமடம் அமைந்துள்ள இடத்தில்தான் ராவணன் பிறந்தார்; 
அதனால் சங்கர மடத்தில் அகழாய்வு நடத்த கோரி ஜனவரி 22-ந் தேதி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டணி வெளியிட்ட அறிக்கை: ராமர் அயோத்தியில் பிறந்தால், ராவணன் பிறந்த இடம் இல்லாமலா போகும். அதுவும் தமிழரின் மெய்யியல் சிந்தனைக்கூடங்கள் தழைத்தோங்கிய காஞ்சியில் இராவணன் பிறக்காமலா இருந்திருப்பார்.
காஞ்சியின் சங்கரமடத்தின் கிழே அகழ்வாராய்ச்சி செய்தால் உண்மை உலகிற்கு வருமென நாம் நம்புவது தவறா? ராமன் பிறந்த இடம் அயோத்தியின் பாபர் மசூதியின் கீழே என உச்சநீதிமன்றம் நம்புமெனில் காஞ்சிகாமகோடி சங்கரமடத்திற்கு கீழாக இராவணனின் பிறந்த இடம் இல்லாமலா போகும். ஆகவே காஞ்சி சங்கரமடத்தை தமிழர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டு சங்கராச்சாரியார் அவரது பூர்வீக ஆந்திராவிற்கு சென்று தங்குவது நல்லது.

தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தின் வாட்டர்லூ! பேரறிஞர் அண்ணா!

ராதா மனோகர் தமிழக வரலாற்றில் பேரறிஞர் அண்ணா பெற்ற புகழை இதுவரை எவரும் பெறவில்லை!
கலைஞரும் எம்ஜியாரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக மோதிக்கொண்ட போதும் அண்ணாவை புகழ்வதில் அவர்களுக்கு இடையே ஒரு போட்டியே இருந்தது என்று கூறினால் மிகையல்ல.
முழுத்தமிழ்நாடும் எந்தவிதமான தயக்கம் இன்றி தமிழ்நாடு அண்ணாநாடுதான் என்று கூறுமளவுக்கு அண்ணா மிகப்பெரிய வரலாற்று ஆளுமையாக அறியப்படுகிறார்!
பேரறிஞர் அண்ணா அப்படி என்னதான் செய்துவிட்டார்?
ஏன் எல்லோரும் அவரை அளவு கணக்கில்லாமல் புகழ்கிறார்கள்?
இதுவரை பேரறிஞர் அண்ணாவின் வரலாறு போதிய அளவு பொதுவெளியில் கூறப்படவில்லைஎன்று கூட ஒரு கருத்து உண்டு.
இன்னும் கூட அண்ணாவின்  சாதனைகள் பற்றி புரிதல் பொதுவெளிக்கு இல்லை என்ற சந்தேகம் கூட எனக்கு உண்டாவதுண்டு!

சனி, 6 டிசம்பர், 2025

இலங்கைக்கு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள்! உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு

 கலைஞர் செய்திகள் - பிரேம் குமார் : டித்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.12.2025) ‘டித்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை வாழ் மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் உதவிடும் வகையில் சென்னை துறைமுகத்திலிருந்து 650 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் டன்னும், என மொத்தம் 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

கனிமொழி : மக்களவையில் திமுகவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த மத்திய அமைச்சர்.

 minnambalam.com-Mathi  :  :திருப்பரங்குன்றம் (Thirupparankundram) விவகாரம் குறித்து மக்களவையில் திமுகவின் டிஆர் பாலு எம்.பி. பேசிய போது, “நீங்கள் பேசுவது உங்களுக்கும் நல்லதல்ல உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல”என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜு மிரட்டல் விடுத்ததாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் கனிமொழி எம்.பி. நேற்று டிசம்பர் 5-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் பல நூற்றாண்டுகளாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மக்கள் கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் சிக்கந்தர் தர்காவிற்கும் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் விதமாக மக்களிடையே மத குரோதத்தை உருவாக்கக்கூடிய விதமாக தேவையில்லாமல் சிலர் பிரச்னைகளை உருவாக்குகின்றனர்.

கனிமொழி எம்.பி : “திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜக முயற்சி!”

 hindutamil.in :  புதுடெல்லி: “உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணம். இதுபோன்ற தவறான தீர்ப்புக்குப் பிறகுதான் மணிப்பூரிலும் கலவரங்கள் வெடித்தன. திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முயற்சிக்கின்றன” என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றத்தில் பல நூற்றாண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

1927 இல் யாழ்ப்பாணத்தில் திரு சு.ராசரத்தினம் தொடங்கிய திராவிட இயக்கம்! . தந்தை பெரியார் 1944 இல் திராவிடர் கழகம் தொடங்க முதலே இலங்கையில் திராவிடம்

 ராதா மனோகர் : தந்தை பெரியார் 1944 ஆம் ஆண்டு  திராவிடர் கழகத்தை தொடங்குவதற்கு முன்பே 
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் திராவிட அமைப்பும் திராவிட பள்ளிக்கூடமும் திராவிடன் பத்திரிகையும் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து திராவிடத்தை இங்கு கொண்டுவரவேண்டாம் என்று கூறுவோர்க்கு  தெளிவாக கூறிக்கொள்கிறோம்!
இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம்  திராவிட அரசியலே! 
அதுவும்  1927 ஆம் ஆண்டிலே திராவிட கருத்தியலும் திராவிட அமைப்பும் திராவிட பத்திரிகையும் அறிமுகமாகி விட்டது!
அதன் முன்னோடியாக இருந்தவர் வழக்கறிஞர் திரு சு. இராசரத்தினம் அவர்கள்!
அவரது படங்கள் இப்போதுதான் நமக்கு கிடைத்தது.
அவற்றில் ஒன்றுதான் இப்போது நீங்கள் பார்ப்பது!   
இலங்கை வடமாகாணத்தில் இடது சாரி அரசியலுக்கு முன்பாகவே திராவிட அரசியல் கருத்துருவாக்கம் பெற்றிருக்கிறது

வெள்ளி, 5 டிசம்பர், 2025

Indigo மிரட்டலுக்கு பணிந்தது ஒன்றிய அரசு.

May be an image of aircraft and text
Sugitha Sarangaraj  Indigo மிரட்டலுக்கு பணிந்தது மத்திய அரசு. 
விமான பணியாளர்களுக்கான புதிய விதியை திரும்ப பெற்றது இந்திய பொது விமானப் போக்குவரத்து துறை இயக்ககம். 
ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய பிறகு விமான போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக Flight Duty Time limitations விதிகளை மத்திய அரசு கடந்த நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது.
அதுவும் விமானிகள் சங்கங்கள் வேலை பளுவை குறைக்கவும் , ஓய்வு நேரத்தை அதிகரித்து , பறக்கும் பணி நேரத்தை குறைக்க பல்வேறு கோரிக்கைள் வைத்த பிறகு (Director General of Civil Aviation ) இந்திய விமானப் பொது போக்குவரத்து இயக்ககம் புதிய விதியை அமல்படுத்தியது. 

வியாழன், 4 டிசம்பர், 2025

இலங்கை 1,593 கி.மீ. தொடருந்து பாதையில் 478 கி.மீ. மட்டுமே பயன்பாடு- வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தண்டவாளங்கள்

 ஹிரூ நியூஸ் : டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதம் காரணமாக, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் தொடருந்து வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார். 
இந்த சூறாவளி பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக சந்திரகீர்த்தி தெரிவித்தார். 
1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாய வீதிகள் சேதமடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஏ.வி.எம்.நிறுவனத்தின் எளிமையான முதலாளி AVM சரவணன்

AVM and its 175th film

 Abdul Samath Fayaz  · உங்கப்பா 36 வருஷமா சர்க்கரை நோயாளி!.
அவருக்கு இருக்கிற டயாபடீஸ் உனக்கும் வர வாய்ப்பிருக்கு!.ஜாக்கிரதை! 
குடும்ப டாக்டர் ரங்க பாஷ்யம் ஒரு சின்ன சர்ஜரி செய்தபோது எச்சரித்தார்!.
அதற்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதையே நிறுத்திக் கொண்டார் அந்த மனிதர்.
காபி சாப்பிடுவதில் ஆர்வமுள்ள அந்த மனுஷன் அதற்குப் பிறகு காபியில் சர்க்கரையே போடவில்லை.
மனுஷனுக்கு கட்டுப்பாடு அவசியம்.
மனம் அலை பாயும்.ஐம் புலனும் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கும்.

காங்கிரஸ் 40 சீட் + ஆட்சியில் பங்கும் கேட்கிறதாம்! காலாவதியான கட்சியின் கனவுக்கு குறைச்சல் இல்லை

 மின்னம்பலம் - Mathi  :காங்கிரஸ் கட்சிதான்.. சென்னையில இன்னைக்கு திமுக தலைவரான சிஎம் ஸ்டாலினை காங்கிரஸ் ஐவர் குழு சந்திச்சு பேசுனதை பத்தி நிறைய தகவல்கள் இருக்குய்யா..
கொட்டுகிற மழைக்கு நடுவே அனலடிக்கும் அரசியல்.. சொல்லுமய்யா
விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த போகுதுன்னு தீயா தகவல் பரவுன நேரத்துல காங்கிரஸ் கட்சி ஐவர் குழுவை அறிவிச்சது..
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர் தலைமையில அறிவிக்கப்பட்ட இந்த குழுவுல, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் இடம் பெற்றிருந்தாங்க..