சிலோன் மிரர் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளார் என்று அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினாக இருக்கும் சிவஞானம் சிறீதரன், தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடமாட்டார் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் போட்டியிடவுள்ளார் சுமந்திரன் கூறியுள்ளார்.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
சனி, 17 மே, 2025
வடமாகாண முதல்வர் வேட்பாளராக எம் ஏ சுமந்திரன் போட்டி இடுகிறார்
பாமக ராமதாஸின் திட்டங்களை சல்லி சல்லியாக நொறுக்கிய மகன் அன்புமணி- = ஒரே ஒரு மிஸ்டு கால்.
மின்னம்பலம் : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ராமதாஸின் மகன் அன்புமணியும் அவரது ஆதரவாளர்களும் ஒட்டுமொத்தமாக இந்தக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டனர். மேலும் வன்னியர் சங்கத்தின் தலைவராக பேரன் முகுந்தனை நியமிக்கும் திட்டமும் தவிடுபொடியானதால், பாமக கையைவிட்டுப் போய்விட்டதே என ராமதாஸ் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளாராம்.
அப்படி என்னதான் இன்றைய பாமக கூட்டத்தில் நடந்தது?
வெள்ளி, 16 மே, 2025
பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதாக பலூச்சிஸ்தான் மக்கள் அறிவித்துள்ளனர்
Ilakkiyaa : பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதாக பலூச்சிஸ்தான் மக்கள் அறிவித்துள்ளனர்
-ஐ.நா.வை ‘பலூசிஸ்தான் ஜனநாயகக் குடியரசாக’ அங்கீகரிக்க வலியுறுத்துகின்றனர்.
பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டாக போராடி வருகின்றனர்.
SRI LANKA’S WAR HAD WITNESSES : INDIAN JOURNALIST B. MURALI REDDY
![]() |
Thus, Murali Reddy’s Last Hours covers from 3p.m. 16h May to 12:30p.m. 19th May 2009.
10th May LTTE realizing their fate
11th May LTTE destroying their belongings
12/13th May LTTE allows civilians to leave
15th May Important events .
No civilians in 1.5sq.km that LTTE was boxed into
ICRC suspends operations because there are no civilians.
No civilians from 16th to 19th May – How could there have been 40,000 to 125,000 civilians?
16th May · 50,000 civilians escape (could this be the figure that is being alleged as dead?)
President Rajapakse informs ICRC that his Government will offer an unconditional surrender which LTTE refuse.
17-18th May · Pitch battle between LTTE and Sri Lankan Army
19th May · Announcement of Prabakaran’s death
Last batch showed that the LTTE by 10th May had realized they approached their Waterloo and that there was no purpose in holding on to the civilians.
வியாழன், 15 மே, 2025
வடக்கு முஸ்லிம்களுக்கு LTTE செய்த கொடூர இன அழிப்பு!
![]() |
Aly Sabri ex Minister of justce |
jaffnamuslim : கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் என்று அழைக்கப்படும் ஒன்றை சமீபத்தில் திறந்து வைத்ததற்காக கனடாவை விமர்சித்து முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையில் எப்போதாவது ஒரு இனப்படுகொலை நடந்திருந்தால், அது வடக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களை LTTE கொடூரமாக இன அழிப்பு செய்தது.
1990 அக்டோபரில், சக சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு, தங்கள் மூதாதையர் வீடுகளை விட்டு வெளியேற 24 மணிநேரம் மட்டுமே வழங்கப்பட்டது. சுமார் 75,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
: நியூ சிலாந்து ஹக்கா முழக்கமிட்ட 3 பழங்குடியின எம்.பிக்கள் இடைநீக்கம்
மலையோரம் செய்திகள் : நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மவோரி பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து, இளம் மவோரி பாராளுமன்ற உறுப்பினர் ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் (வயது 22), பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பி தனது எதிர்ப்பைக் வெளியிட்டார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கேள்விகளை எழுதி கொடுத்த பார்ப்பன அதிகாரிகள்
Kulitalai Mano : மசோதாக்கள் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக, ஆளுநருக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், 2 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 142-ல் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.
அதோடு, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பும் நிர்ணயித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம், மசோதாக்கள் மீதான நடவடிக்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு தானாக குடியரசுத் தலைவருக்கும் பொருந்தியது.
இந்தியாவை ஆதரிக்க ரஷ்யா தயங்கியது ஏன்? பாகிஸ்தான் மீது பாசமா?
பி பி சி ராஜேஷ்குமார் : ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் என்றாலே சோவியத் ஒன்றியத்தின் அரவணைத்துச் செல்லும் பாங்கும், இரு நாட்டு உறவுகளும் நினைவில் வருவதைத் தவிர்க்கமுடியாது.
1955 ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் தலைவர் நிகிதா குருசேவ் இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். தனது இந்தியப் பயணத்தின்போது அவர் சொன்னவை இன்றும் நினைவு கூரத்தக்கவை. "நாங்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்" என்று கூறிய அவர், "நீங்கள் மலை உச்சியிலிருந்து எங்களை அழைத்தாலும், அங்கும் உங்கள் பக்கம் நாங்கள் இருப்போம்" என்றார்.
செவ்வாய், 13 மே, 2025
·ஏழு திமுக மண்டல பொறுப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள்
தி.மு.க சமூக வலைத்தள செயல்பாட்டாளர்கள் குழு
க. வீரமணி ·ஏழு மண்டல பொறுப்பாளர்களுக்கு கீழ்க்கண்ட மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டதாக தகவல்.
அமைச்சர் திரு.கே.என்.நேரு.
தொகுதிகள்:40
1,திருச்சி 2,அரியலூர் 3,பெரம்பலூர் 4,தஞ்சாவூர் 5,திருவாரூர் 6,மயிலாடுதுறை 7,நாகை 8,கடலூர்.
அமைச்சர் எ.வ.வேலு. தொகுதிகள்:43 1, திருவண்ணாமலை 2,தர்மபுரி
3, கிருஷ்ணகிரி 4, திருப்பத்தூர் 5, ராணிப்பேட்டை 6,வேலூர்
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளியை பாதுகாத்த அ.தி.மு.க : வெளியான அதிர்ச்சி தகவல்!
கலைஞர் செய்திகள் : முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் நாட்டையே உலுக்கிய பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த விவகாரத்தை கண்டும் காணாமல் இருந்து வந்தது. பின்னர் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!

![]() |
hindutamil.in : கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், குற்றவாளிகள் 30 நாட்களுக்குள் மேல் முறையீட்டுக்குச் செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் தெரிவித்தார்.
வழக்கும், தீர்ப்பும்: கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார்.
மியான்மர் ராணுவம் வீசிய வெடிகுண்டு 20 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு /
தினமலர் : தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ராணுவ ஆட்சி நடக்கிறது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர், சிறையிலும், வீட்டுக் காவலிலும் அடைக்கப்படுகின்றனர்.
அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில், அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் போர் நடத்தி வருகின்றன.
கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில், ராணுவம் போர் விமானங்களை பயன்படுத்தி உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கூட, போர் விமானங்களில் சென்று தாக்குதல் நடத்துவதை மியான்மர் ராணுவம் நிறுத்தவில்லை. இதுவரை தாக்குதல் சம்பவங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளின் கூடாரமா? – ரவிகரன் எம்.பி
இலக்கியா இன்போ : : குருந்தூர்மலை அடிவாரத்தில் தமது பூர்வீக விவசாய நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 10.05.2025 அன்று தமிழ் விவசாயிகள் மூவர் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபோது, தொல்லியல் பகுதிக்குள் பண்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பௌத்த பிக்குகள் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிசார் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இந் நிலையில் குறித்த நிலங்கள் முழுவதும் தமிழ் மக்களின் நிலங்கள் எனக்குறிப்பிட்டுள்ள வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தொல்லியல் பகுதிக்குள் குறித்த விவசாயிகளால் பண்படுத்தல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தால்கூட, அதுதொடர்பில் தொல்லியல் திணைக்களமே முறைப்பாடு செய்திருக்கவேண்டும்மெனவும், இது தொடர்பில் பௌத்த பிக்குகள் முறைப்பாடு செய்வார்களானால் தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளது கூடாரமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய இசை என்பதே தமிழ் இசைதான் ..
![]() |
Siva Ilango : "தமிழ் இசையின் கொடையே இந்திய இசை"
"தமிழிசை" என்பது தமிழ் மண்ணில் மலர்ந்த தமிழர்களின் இசைமுறை. இசைப்பதற்கு என்றே தமிழில் இயற்றப்பெற்ற அத்தகைய இசைப் பாக்களின் தொகுதியே "இசைத்தமிழ்" எனப்படுகின்றது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்தர் போன்றோரின் இசைத்தமிழ் ஆய்வுகளால் தமிழ் இசையின் பெருமை உணரப்பட்டு, அதுவே ஓர் இயக்கமாக உருவெடுத்தது. அண்ணாமலை அரசர், ஆர். கே. சண்முகம் ஆகியோரின் முயற்சியால் 1942 ஆம் ஆண்டில் தமிழிசை இயக்கம் தோன்றியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக் கல்லூரியும், சென்னையில் தமிழிசைச் சங்கமும் உருவாக்கப்பட்டன.
திங்கள், 12 மே, 2025
5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு ! இது உண்மையா?
அப்போது ஆபரேசன் சிந்தூர நடவடிக்கையின் போது ரஃபேல் விமானம் உட்பட ஏதேனும் தளங்களை இந்தியா இழந்ததா என்று ஏ.கே.பாரதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அவர்களின் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது இலக்கை நாம் அடைந்துவிட்டோமா? என்பது தான்.
அதற்கான பதில் ஆம். இழப்புகள் என்பது போரின் ஒரு பகுதியாகும்.
நாம் இன்னும் போர் சூழ்நிலையில் இருப்பதால், நாம் இழந்தது குறித்து நான் ஏதாவது கருத்து தெரிவித்தால், அது எதிரிக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.
ஞாயிறு, 11 மே, 2025
இலங்கையில் முதல் தர கிராபைட் இருந்தும் ஏன் பென்சில் தயாரிக்க முடியாமல் உள்ளது?
![]() |
ராதா மனோகர் :With the best graphite in the World, we do not make our pencils yet. What a shame!
லங்கா வெப் - Posted on May 10th, 2025 By Garvin Karunaratne, former GA Matara!
லங்காவேப் இணையத்தில் முன்னாள் அரச அதிபர் திரு கார்வின் கருணாரத்னா அவர்கள் பென்சில் தயாரிப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்!.
இலங்கையில் முதல் தர கிராபைட் இருந்தும் ஏன் இலங்கையில் பென்சில் தயாரிக்க முடியாமல் உள்ளது?
இது ஒரு வெட்க கேட்டன விடயம் என்று நீட்டி முழக்கி எழுதி உள்ளார்!
இவரை போன்றவர்கள் வசதியாக வரலாற்றை மறந்து விட்டதாக நடிக்கிறார்கள்.
இலங்கையில் முதல் தர பென்சில் உற்பத்திக்காக உலக புகழ் பெற்ற எச் பி பென்சில் நிறுவனத்தின் ஆசிய காப்புரிமை பெற்றவர் (சினிமாஸ்) திரு கே குணரத்தினம் அவர்கள்
இலங்கையிலும் இந்தியாவிலும் (சென்னையும் பூனேவிலும்) இதற்கு உரிய நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்!
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இறக்குமதி மாபியாக்களின் கைகளில் தான் நாடு இருக்கிறது!
![]() |
ராதா மனோகர் : அரபு நாடுகளில் உருக்குலைந்தவர்கள்
புலம் பெயர் நாடுகளில் வாழ்வை தொலைத்தவர்கள்
மற்றும் சுற்றுலா துறை மூலமும் நாட்டுக்குள் வருவதுதான் அந்நிய செலாவணி ( டாலர் பிராங் டோட்ச் மார்க் ரியால் போன்றவை)
இப்படி கடும் போராட்ட உழைப்பின் பயனாக நாட்டுக்குள் வருதுதான் அந்நிய செலவாணி!
இது எப்படி பெரிதும் வீணாக்க படுகிறது?
எப்படி இறக்குமதியாளர்கள் என்கின்ற மோசமான மாபியாக்களிடம் பறிபோகிறது?
உள்ளூர் உற்பத்திக்கு போட்டியாக இறக்குமதி செய்யப்படும் பல பொருட்கள் இந்த அந்நிய செலவாணி மூலம்தான் வாங்கப்படுகிறது.
ராகுல் காந்தி : இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ஏன் முதலில் அறிவித்தார்?
தினகரன் : இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை முதன் முதலில் ட்ரம்ப் அறிவித்த விவகாரம்: பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை முதன் முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்தும் விவாதிப்பது அவசியம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் 4 ரபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது? பிரெஞ்சு ரபேல் விமான நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவு .
![]() |
பாலகணேசன் அருணாசலம் : முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு பிரான்ஸ் டமிருந்து ரூ.600 கோடி க்கு வாங்க தயங்கி கிடப்பில் போடப்படிருந்த ரபேல் விமானத்தை,
2014 ல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு ரூ.1600 கோடி க்கு (கிட்டத்தட்ட முதலில் வாங்கிய நேரத்திலேயே 40,000 கோடி ஊழல் என்று செய்திவந்தது) வாங்கியது...
ஏன்டா இவ்வளவு விலை ன்னு கேட்டா Extra fitting charge ன்னு அளந்து விட்டான்ங்க..
பிரான்ஸ் பத்திரிக்கை அந்த வியாபாரத்துக்காக இந்தியாவுக்கு கமிஷன் கொடுத்ததாகவும் செய்தியில் வந்தது...
இப்ப மூன்று நாள் இந்திய பாகிஸ்தான் சண்டையில் அதிக விலை கொடுத்து வாங்கிய அந்த விமானம் 4 சுட்டு வீழ்த்தப்பட்டதாக (குறைபாடு காரணமாக) தெரிய வருகிறது..
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கைகள் மூடி மறைக்கப்பட்டன.. அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிறது
புகச்சோவ் புகச்சோவ் : கொரோனா மரணங்களில், மாநிலங்கள் செய்த புரட்டுத்தனங்கள் வெளிவந்துள்ளன!
குஜராத்தில் 5000 பேர் மட்டுமே இறந்ததாக கணக்கு காட்டப்பட்டது.
ஆனால், 195000 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்தக்கணக்கின்படி உத்திரப்பிரதேச மரணங்கள் குறைவாக காட்டப்பட்டுள்ளது. ஆனால், கங்கை படுகையில் வீசப்பட்ட பிணங்களை காசி யாத்திரை பிணங்களாக மடைமாற்றியுள்ளனர்.
கேரளாவிலிருந்து கொரோனா பரவியதாக சங்கிகள் செய்த பிரச்சாரம் பொய்யானது.
இலங்கையில் 100 அடி பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து விபத்து: 21பேர் உயரிழப்பு
வீரகேசரி : கொத்மலையில் 100 அடி பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து விபத்து: 21பேர் உயர்ரிழப்பு
கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, நுவரெலியா – கம்போல பிரதான வீதி கொத்மலை, ரம்பொட பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த 21 பேர் உயிரிழந்ததாக கொத்மலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த 21 பேரின் சடலங்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, சிலரின் உடல்கள் பேருந்தின் அடியில் சிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சடலங்களை மீட்க பொலிஸார் மற்றும் உள்ளூர்வாசிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
ரகுபதி சொன்ன சீக்ரெட்! துரைமுருகன் ஆட்களுக்கு ஆப்பு… ஸ்டாலின் ஆக்ஷன்!
![]() |
மின்னம்பலம் : , “ஒருசில நாட்களுக்கு முன்னாள் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வகித்து வந்த நீர்வளத் துறையை தவிர்த்து அவரிடம் இருந்த கனிம வளம் மற்றும் சுரங்கத் துறையை அமைச்சர் ரகுபதிக்கு மாற்றி கொடுத்துவிட்டு சட்டத்துறையை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக ஒதுக்கினார் முதல்வர் ஸ்டாலின்.
இப்போது கனிம வளம் மற்றும் சுரங்கத் துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் ரகுபதிக்கு பல சிக்கல்கள் அவரின் நட்பு வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தொடர்வதாக தகவல்கள் வருகின்றன.
துரைமுருகனிடம் கனிம மற்றும் சுரங்கத் துறை கையில் இருந்த காலத்தில் எஸ்.ஆர் என்று அழைக்கக்கூடிய ராமச்சந்திரன், கரிகாலன், ரத்னம் இந்த மூன்றுபேர்தான் மணல் கான்ட்ராக்ட்டில் கொடிகட்டி பறந்தனர்.
சனி, 10 மே, 2025
5 வயது குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் மருத்துவமனையில் 10 மணி நேரம் கவனிக்க படவில்லை உத்தர பிரதேசம்
![]() |
Vasu Sumathi : மனசாட்சியை சிதறடிக்கும் இந்த செய்தியில் இரண்டு பகுதிகள்...
ஒரு 5 வயது பச்சை குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள்..
அந்த சிறுமி அரசு மருத்துவமனையில் 10 மணி நேரம் கவனிப்பாரற்று கிடந்த அவலம்!
வன்கொடுமைக்கு ஆளான அந்த குழந்தை பிலிபித் மாவட்ட பெண்கள் அரசு மருத்துவமனையில் அன்றிரவு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் அந்த குழந்தைக்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாமல், 10 மணி நேரத்திற்கும் மேலாக கேட்பாரற்று கிடந்திருக்கிறார். இது குழந்தையின் உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கின் தடயவியல் ஆதாரங்களும் அழிந்துள்ளனவாம்.
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்!
zeenews.india.com - Yuvashree : India Pakistan War Stopped Indian Citizens Reaction
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகள், இந்தியர்கள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடங்கியது.
இந்த தாக்குதலானது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில், பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்கள் மற்றும் முகாம்கள் குறிவைக்கப்பட்டு தகர்க்கப்பட்டதாக இந்தியா கூறியது.
இரு நாடுகளும் தாெடர்ந்து தங்கள் எல்லைகளில் தாக்குதல் நடத்தி வந்ததை அடுத்து, தற்போது போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.