![]() |
Hemavandhana - /tamil.oneindia.com : சென்னை: "இத்தனை ஊடகங்கள் கணித்து இருக்கும் எக்ஸிட் போலை, தவறு என்று சொல்வதற்கு இவங்க எல்லாம் மிக பெரிய ராஜதந்திரிகளா?
கூவத்தூர் கூத்தில் கோபுரத்தில் ஏறி உட்கார்ந்தவரும், டீ கடையில் வேலை பார்த்துவிட்டு, தெருவில் நின்றவர் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும், இவர்களுக்கும் அரசியலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?' என்று திராவிடர் கழக பேச்சாளர் நாஞ்சில் சத்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் முடிந்த நிலையில் நாளைக்கு ரிசல்ட் வர உள்ளது.. இதுவரை வந்த கருத்து கணிப்புகளின்படி, திமுகவே மெஜாரிட்டி பெறுகிறது..
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பும்,வாக்குப்பதிவு அன்று கணிப்பும், தேர்தலுக்கு பிந்தைய கணிப்பும், திமுகவே அபாரமாக வென்று ஆட்சியை அமைக்கும் என்று அறுதியிட்டு சொல்லப்பட்டுள்ளது.. ஏராளமான அரசியல் நோக்கர்களும், தேர்தல் வல்லுநர்களும்கூட இதையேதான் சொன்னார்கள்..
அதாவது 170 இடங்களுக்கு குறையாமல் திமுக வெற்றி பெறும் என்றார்கள்.. அதேபோல, அதிமுகவோ 60ஐ தாண்டாது என்று கூறியுள்ளார்கள். இத்தகை எக்ஸிட் போல்கள் அதிமுக தலைமைக்கு பெருத்த ஷாக்காக இருந்தது.. இதன்மூலம் அதிமுக தொண்டர்கள் சோர்வடைய கூடாது என்பதற்காகவே நேற்றைய தினம் அதிமுக தலைமை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில், "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்; இரட்டை இலையே என்றென்றும் வெல்லும். கடமைகள் அழைக்கின்றன; கண்மணிகளே வெற்றி மாலை சூடத் தயாராகுங்கள். வரலாறு வியக்கும் வகையில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்"... என்று கூறியிருந்தது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் நக்கீரன் இதழ் ஒரு பேட்டி எடுத்துள்ளது. அந்த பேட்டி இதுதான்.
கேள்வி: கருத்துக் கணிப்புகள் சொல்லும் முடிவையே மே 2ஆம் தேதி எதிர்பார்க்க முடியுமா?