ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ராணா கைவிடப்பட்டது! ரஜினியின் புதிய படம்!!

    ரஜினி நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக இருந்த ராணா படம் திடீரென கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ராணா படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினியின் உடல் நலம் திடீர் பாதிப்புக்குள்ளானது. நுரையீரல் மற்றும் சிறுநீரக கோளாரால் அவதிப்பட்ட அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் ராணா படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் சென்னை திரும்பினார் ரஜினி.
2 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு ராணா படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவித்திருந்தார் அதன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் நேற்று திடீரென இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அலுவலகத்துக்கு சென்றார் ரஜினி. இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள்.  
ராணா படத்தின் படப்பிடிப்பு காலம் ஒரு வருடம் என்பதாலும், அதில் ரஜினிக்கு மூன்று வேடங்கள் என்பதாலும், தற்போதைய ரஜினியின் உடல் நிலை அதற்கு இடம் தராது என்பதால் ராணா-வை கைவிட அலோசித்ததாகவும் தெரிகிறது.
ஆனால், படையப்பா போன்ற ஒரு கமர்ஷியல் படத்தை எடுக்க முடிவெடுத்ததாகவும் தெரிகிறது. அதில் முன்னனி நடிகை ஒருவர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது என்று செய்திகள் கசிகின்றன

கருத்துகள் இல்லை: