ஞாயிறு, 2 அக்டோபர், 2011

மரண தண்டனைகளை பெருமையோடு வழங்கிய புலிகளுக்காக மரணதண்டனை ஒழிக்க போராட்டம்

வெளிநாட்டில் சொகுசாக வாழும் புலிகளின் பணத்திற்கு மாரடிக்கும் சுயநல மரண வியாபாரிகள்: வைகோ ராஜீவ் கொலையாளிகளின் மரண தண்டனையை ஒழிக்க நெடுமாறன் உண்ணாவிரதம்:

மரணதண்டனைகள் வழங்குவதை பெரும் வீரமாகவும் கலாச்சாரமாகவும் உருவாக்கிய காட்டு மிராண்டி புலிகளின் பேயோட்டிகள் மரணதண்டனை ஒழிக்கவேண்டும் என்றும் எதோ ஜீவகாருண்ய பிதாமகர் வேஷம் போடுவதை என்ன சொல்வது? வெட்கம் இல்லை  இவர்கள் யாருக்கும் வெட்கம் இல்லை.
இந்தியாவில்(ராஜீவ் கொலையாளிகளின்) மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிர்களை காக்கவும் உயிர்காப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சென்னையில் இன்று உண்ணாவிரதம் இருந்தார். காயிதே மில்லத் கல்லூரி அருகே நடைபெற்றது இந்த உண்ணாவிரதத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்து பேசியதாவது:-
காந்தியின் பிறந்த நாளான இன்று அவர் ஏந்திய படைக்கருவியான உண்ணாவிரதத்தை பிரேத வியாபாரிகளான புலிகளின்  முகவர் நெடுமாறன் கையில் எடுத்து மரண தண்டனையை ஒழிக்க உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். உலகில் 107 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை இருக்கும் நாட்டை விட மரண தண்டனை இல்லாத நாடுகளில்தான் குற்றங்கள் குறைவாக நடக்கிறது. மனித உயிரை அரசே பறிப்பது காட்டு மிராண்டித்தனமானது. தமிழ்நாட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் 3 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது என மக்கள் கொந்தளித்து எழுந்தனர்.

ஐகோர்ட்டு தடையால் தற்போது மக்கள் நிம்மதியாக உள்ளனர். தமிழக அரசும் சட்டசபையில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு பிறகும் மரண தண்டனையை நிறைவேற்ற சிலர் சதி திட்டம் தீட்டுகிறார்கள். அப்படி ஏதேனும் நடந்தால் மக்கள் இன்னும் ஆர்த்தெழுவார்கள்.

இவ்வாறு வைகோ பேசினார்.

பின்னர் பழ. நெடுமாறன் கூறுகையில், இந்த உண்ணா விரதத்துக்கு மக்கள் ஆதரவு எழுச்சியாக உள்ளது. 3 பேரின் உயிரை காப்பாற்ற தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் கவர்னரை கட்டுப்படுத்தாது. எனவே அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

உண்ணாவிரத நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், தென்றல் நகர் சேகர், இயக்குனர் புகழேந்தி, மணிமொழி, ராஜேந்திரசோழன், ஓவியர் வீரசந்தானம், மணியரசன், வக்கீல் பாவேந்தன், பச்சையப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: