ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சுந்தர் சி கூட்டணியில் அடுத்த இன்னிங்ஸை தொடங்குகிறார் வடிவேலு!

வடிவேலு மீண்டும் நடிப்பாரா? சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல லட்சம் சினிமா ரசிகர்களின் மனதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த கேள்வி இதுதான் என்றால் மிகையல்ல.
அவ்வளவு ஏன்... சக சினிமாக்காரர்களே வடிவேலு நகைச்சுவைக்கு மாற்று இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஒன்று. ஆம்... மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார் வடிவேலு. தேர்தலுக்குப் பிறகு இடைப்பட்ட இந்த ஐந்து மாத காலத்தில் வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமலிருந்தார் வடிவேலு. நானாகத்தான் சினிமாவை விலக்கி வைத்துள்ளேன். என்னை யாரும் விலக்கவில்லை என்று கூறிவந்தார்.
இந்த நிலையில், சுந்தர் சி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வடிவேலு.
இந்த இருவரும் இணைந்த வின்னர், கிரி, தலைநகரம், நகரம் என அத்தனைப் படங்களுமே நகைச்சுவையில் தனி முத்திரைப் பதித்தவை. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு முழு வீச்சோடு நடிக்க வரும் வடிவேலுவும், மீண்டும் இயக்கத்தை கையிலெடுத்துள்ள சுந்தர் சியும் மீண்டும் தனி முத்திரை பதிப்பார்கள் என்பதால், இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது!
நகைச்சுவைப் புயலே, வாங்க!

கருத்துகள் இல்லை: