ஞாயிறு, 7 நவம்பர், 2010

கொங்கோவில் இராணுவம் அட்டகாசம் : 700 பெண்கள் மீது வல்லுறவு!

.கொங்கோவில் இராணுவத்தினர் அங்கோலா நாட்டுப் பெண்கள் மீது வல்லுறவு மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 700 பெண்கள் இவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆபிரிக்க கண்டத்தில் கொங்கோ மற்றும் அங்கோலா நாடுகள் உள்ளன. கொங்கோ நாட்டின் கனிமவள சுரங்கங்கள் அங்கோலாவின் எல்லையில் உள்ளன.

இங்கு கொங்கோ நாட்டுப் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் தங்கள் நாட்டுக்குள் புகுந்து விட்டதாக கூறி அவர்களை அங்கோலா இராணுவத்தினர் கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகின்றனர்.
அவ்வாறு சிறையில் அடைக்கப்படும் பெண்கள் அங்கோலா இராணுவ வீரர்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தி வருவதாக ஐ.நா. அதிகாரிகளுக்குப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன் அங்கோலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 30 பெண்கள் கூட்டாக மானபங்கப்படுத்தப்பட்டு கொங்கோ நாட்டு எல்லையில் வீசப்பட்டதாகத் திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து ஐ.நா.சபையின் மனித உரிமை முகவர் நிலையம் விசாரணை நடத்தியது. விசாரணையில் கொங்கோவைச் சேர்ந்த 700 பெண்கள் மீது வல்லுறவு மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்தத் தகவலை முகவர் நிலையத்தின் செய்தி தொடர்பாளர் மவுரிஷியோ குலியானா தெரிவித்துள்ளார். இச்சம்பவங்கள் குறித்து இரு நாடுகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை: