சனி, 4 செப்டம்பர், 2010

கல்லூரி மாணவி தற்கொலை: ராகிங் காரணமா?

சென்னை அண்ணா பல்கலைக்கழகதைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ராகிங் கொடுமை தாங்கமுடியாமல் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர் மாதவன் இவரது மகள் ஜோதி (வயது 17). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் முதலாமாண்டு சேர்ந்து படித்து வந்தார். இந்நிலையில் விடுப்பில் வந்த ஜோதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி ஜோதி நன்றாக படிப்பவர். மென்மையான சுபாவம் கொண்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது சகோதரரிடம் போனில் பேசிய போது தமது கல்லூரியில் இவரது சக மாணவர்கள் ராகிங் கொடுமை செய்வதாக கூறியுள்ளதாக, ஜோதி உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மொபைல் போனில் என்னை காதலி என பல எஸ்.எம்.எஸ்.,கள் வந்துள்ளதாகவும், இதனை வீட்டிற்கு வந்து சொல்லி மிக வருத்தப்பட்டார் என்றும், உறவினர்கள் கூறியுள்ளனர். உறவினர்கள் கொடுத்த தகவலின்படி மாணவி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: