சனி, 6 பிப்ரவரி, 2016

அதிமுகவும் திமுகவும் ஒன்று என்பவர்கள் அதிமுகவின் கள்ள காதலர்கள்.....

subavee.com :தமிழக அரசியல் அரங்கில், தி.மு.க.வை எதிர்ப்பதற்கு, இப்போது காரணம்?
ஒரு புதிய உத்தி புறப்பட்டிருக்கிறது. தி.மு.க.வையோ, கலைஞரையோ எதிர்க்கும்போது நேரடியாக எதிர்க்கின்றனர். அ.தி.மு.க.வையோ , ஜெயலலிதாவையோ எதிர்க்கும்போது, இரண்டு திராவிடக் கட்சிகளுமே இப்படித்தான் என்று, தி.மு.க.வையும் சேர்த்தே தாக்குகின்றனர். அதன்மூலம், அ.தி.மு.க.வின் தவறுகளை நியாயப்படுத்துகின்றனர்.தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் ஒன்றுதான் என்று திரும்பத் திரும்பப் பல கட்சிகளும், சில தமிழ்த் தேசியக் குழுக்களும் கூறுகின்றன. அவை இரண்டும் ஒன்றல்ல என்பதை இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அறிவார்கள். அரசியல் அறிந்த அனைவரும் அறிவார்கள். ஏன், இந்தக் குற்றச்சாற்றைக் கூறும் பலரே அறிவார்கள். எனினும் இந்தப் பல்லவியைத் தொடர்ந்து அவர்கள் பாடுவதற்கு என்ன

மணமக்களுக்கு கூட மரியாதை இல்லையா.. அம்மா ஸ்டிக்கர் பற்றி குஷ்பு கொதிப்பு



சென்னை: அதிமுகவினர் நடத்திய இலவச திருமணத்தின்போது மணமக்கள் நெற்றியில் அக்கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா படத்தை ஒட்டிய தொண்டர்கள் செயலை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கண்டித்துள்ளார். உடுமலைப்பேட்டையில் அதிமுகவினர் நேற்று 68 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். அப்போது மணமக்கள் நெற்றியில் ஜெயலலிதா போட்டோவை ஒட்டி வைத்திருந்தனர். இலவச திருமணம் செய்ய வந்த ஏழை மணமக்களை இவ்வாறு, தனிநபர் போட்டோவை போட்டு அசிங்கப்படுத்திவிட்டதாக சமூக வலைத்தளங்களில் அதிமுக நிர்வாகிகளுக்கு எதிராக கண்டன குரல்கள் எழும்பியுள்ளன.

நடிகை சசிரேகாவை கழுத்தறுத்து கொன்ற வில்லன் நடிகர்..... நாளை முதல் குடிக்க மாட்டேன் கதாநாயகி

சென்னை: சினிமாவில் கதாநாயகியின் கழுத்தை தனியாக அறுத்து கொலை செய்வதைப் போல தன்னுடைய மனைவியும் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' என்ற படத்தின் நாயகியுமான சசிரேகாவை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து குப்பை தொட்டியில் வீசியுள்ளார் வில்லன் நடிகர் ஒருவர். கள்ளக்காதலை கண்டித்ததற்காக இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான் அந்த வில்லன் நடிகர். நாளை முதல் குடிக்க மாட்டேன் என்ற படம் நேற்று முதல் தமிழகமெங்கும் வெளியானது. இதில் கதாநாயகியாக நடித்தவர் சசிரேகா. இப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை கலந்து கொள்ளவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு நடிகை சசிரேகா, வெளிநாடு சென்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். மேலும் படக்குழுவினரின் பட்டியலில் கூட நடிகையின் பெயரை குறிப்பிடாமல் இருந்தனர். இப்படத்தின் டிரைலரில் சசிரேகா சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமல் இருக்கிறது.

வைகோவையும் கலைஞர் மன்னிப்பார்.....யாரையும் மன்னிக்கும் பண்பு.....

ம.தி.மு.க.,வில் இருப்பது இனி ஒருவரே; அவரையும் கலைஞர் மன்னிப்பார்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ம.தி.மு.க.,விலிருந்து விலகி, சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்த, பாலவாக்கம் சோமுவின் மகன் திருமணம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, அக்கரையில் நேற்று நடந்தது. விழாவில், தன் மனைவி துர்காவுடன் பங்கேற்ற ஸ்டாலின் பேசியதாவது:
நான் தொடர்ந்து, சுய மரியாதை திருமணங்களை நடத்தி வைக்கிறேன். 'சுய மரியாதை திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும்' என, அங்கீகாரம் அளித்தவர் அண்ணாதுரை. ம.தி.மு.க.,வில் இருந்தபோதே, தி.மு.க.,வினரோடு தொடர்பில் இருந்தார்பாலவாக்கம் சோமு. சில காலம் விலகி இருந்த அவர், மீண்டும் தாய் கட்சியில் சேர்ந்துள்ளார்.

திருமாவளவன்:ஆண்டுக்கு 5 ஆயிரம் தலித்துகள் சந்தேக மரணம்: நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்

ஆண்டுக்கு சராசரியாக 5 ஆயிரம் சந்தேக மரணங்கள் என்பது
இந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் தலித்துகள் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. உண்மையை வெளிப்படுத்த தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,<>தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை தேசியக் குற்ற ஆவண மையத்தின் அறிக்கை வெளிப்படுத்தியது.  இப்போது தமிழகக் காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூக நீதிப் பிரிவுக்குப் பொறுப்பான காவல்துறை உயர் அதிகாரி திரு. ராஜேஷ் தாஸ் அவர்கள், தமிழ்நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் தலித்துகள் சந்தேகமான முறையில் மரணமடைவதாகவும், அதில் 45 விழுக்காட்டினர் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சரிதா நாயர் பலாத்காரம் செய்தவர்கள் பட்டியலை தாக்கல் செய்தார்...

சோலார் விசாரணை கமிஷனில் சரிதா நாயரிடம் பலாத்காரம் செய்த
பிரமுகர்கள் பட்டியல் சோலார் விசாரணை கமிஷனில் ஆஜராகி வரும் சரிதா நாயர் தினமும் பல்வேறு அதிரடி விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். முதல்வர் உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்துறை அமைச்சர் ஆரியாடன் முகமதிற்கு ரூ.40 லட்சமும் கொடுத்ததாக தெரிவித் தார். இதையடுத்து தன்னை பலாத்காரம் செய்தவர்கள் பெயர் பட்டியலை சோலார் விசாரணை கமிஷனிடம் சீல் வைத்த கவரில் தாக்கல் செய்யப்போவதாக கூறியிருந்தார்.
இதன்படி நேற்று விசாரணை கமிஷனில் ஆஜரான அவர், தன்னை பலாத்காரம் செய்தவர்கள் பெயர் பட்டியல் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தார்.  இந்த அம்மணி  சோலார் தகடு சதுரங்க வேட்டைநடத்திவிட்டு இப்போ பலாத்கார மொத்த வியாபார பட்டியலை கொடுத்து தப்பிக்க பார்க்கிறாரோ?

தைவான் மற்றும் சீனாவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் தரைமட்டம் earthquake topples buildings in Taiwan city of Tainan

சீனா மற்றும் தைவானில் நிலநடுக்கம்: 17 மாடிகள் கொண்ட அடுக்குமாடி
குடியிருப்பு மண்ணில் புதைந்தது சீனா மற்றும் தைவானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவிகோலி இது 6.7ஆக பதிவானது. சீனாவின் டைனான் நகரத்தில் 17 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு மண்ணில் புதைந்தது. தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. படுகாயம் அடைந்த 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.nakkheeran,in

மதுரை முத்துவின் மனைவி விபத்தில் பலி..அமெரிக்காவில் மதுரை முத்து

சின்னத்திரையில் கிடு கிடுவென உயர்ந்த நிலையை எட்டிய மதுரை
முத்துவை தெரியாதவர்களே இல்லை எனலாம். இவரது இளம் மனைவி விபத்தில் மரணம் அடைந்ததையிட்டு   அதிர்ச்சியில் சின்னத்திரையினர் . பல மேடைகளில் தன் நகைச்சுவை பேச்சால் மக்களை சிரிக்க வைத்தவர் மதுரை முத்து. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் கூட தலையை காட்டினார்.இந்நிலையில் இன்று சிவகங்கை பிள்ளையார்பட்டி கோவிலுக்கு இவருடைய மனைவி வையம்மாள் சென்றுள்ளார். அப்போது திருப்பத்தூர் கோட்டையிருள் பகுதியில் கார், ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துவின் மனைவி வையம்மாள் இறந்துள்ளார். காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பாண்டியும் பலத்த காயம் அடைந்தார். வையம்மாள் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஓட்டுநர் பாண்டி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, கலை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்ற மதுரை முத்துவிற்கு மனைவி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு அவசரமாக விமானம் மூலம் முத்து மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார்

Gujarat பாஜக முதல்வர் 400 ஏக்கர் அரசு நிலம், ஒரு சதுரஅடி, 1.50 ரூபாய்க்கு வாங்கினார்


anandi ben patel should resign for land scam in Gujrat. குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேலின் மகள் அனர் ஜெயேஷ் பட்டேலுக்கு, சொந்தமான நிறுவனத்திற்கு சிங்கங்களின் சரணாலயம் உள்ள பகுதியில், 400 ஏக்கர் அரசு நிலம், ஒரு சதுரஅடி, 1.50 ரூபாய் என்ற அடிமாட்டு விலைக்கு, தாரை வார்க்கப்பட்டுள்ளது.
முதல்வராக இருந்து, வருவாய்த் துறை பொறுப்பையும் நிர்வகித்து வருகிற, ஆனந்திபென் பட்டேல் முதலில், 400 ஏக்கர் நிலத்தை, தம் மகளுக்கு வழங்கியிருக்கிறார். மேலும், 172 ஏக்கர் விவசாய நிலத்தை வழங்கி, அதை தொழில் செய்வதற்கான விலக்கு அளிக்கும் ஆணையையும் பிறப்பித்துள்ளார். குஜராத் அரசால் வழங்கப்பட்டுள்ள, 572 ஏக்கர் நிலம், அந்தப் பகுதியில், 1,200 கோடி ரூபாய் சந்தை மதிப்புடையதாக கூறப்படுகிறது. இதை, ஊழல் இல்லையென்று சொன்னால், வேறு எது ஊழல்? எனவே, பா.ஜ., எந்த ஊழலையும் செய்யாத யோக்கிய சிகாமணிகள் நிறைந்த கட்சி என, பிரதமர் மோடி தம்பட்டம் அடித்து பேசியது போலித்தனமானது.- தினமலர்.com

திமுக செல்வகணபதி பாமக ராமதாசை சந்தித்தார்....

பா.ம.க., நிறுவனர் ராமதாசை, தி.மு.க.,வின் தேர்தல் பணிக்குழு செயலர்
செல்வகணபதி, நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். கூட்டணியில், பா.ம.க.,வை சேர்க்க, தி.மு.க., நடத்திய வளைப்பு நடவடிக்கையே, இந்த சந்திப்பு என, கூறப்படுகிறது. மற்ற கட்சிகளுக்கு முன்னதாக, முதல்வர் வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியை அறிவித்து, சட்டசபை தேர்தலை சந்திக்க, பா.ம.க., ஆயத்தமாகி உள்ளது. ஊரெங்கும் பொதுக் கூட்டம் மற்றும் மாநாடுகளை நடத்தி வருகிறது.தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம், கடந்த சில நாட்களாக, விருப்ப மனுக்களையும் வாங்கி வருகிறது. விரைவில் நேர்காணல் நடத்தி, வேட்பாளர் பட்டியலை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது. திட்டுங்க அப்புறம் பேரம் பேசுங்க இதுதான்ட்டா தமிழ்நாட்டு அரசியல். 

10 நாட்களில் கூட்டணி அறிவிப்பு பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில் :''பத்து நாட்களில் பா.ஜ., கூட்டணி பற்றிய அறிவிப்பை தேசிய தலைமை வெளியிடும்,'' என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:பிரதமர் மோடி வருகையால் தமிழக பா.ஜ.,வில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களையும், நாட்டின் வளர்ச்சியையும் பிரதமர் தெளிவாக எடுத்து கூறியுள்ளார். அவரது பேச்சால் விவசாயிகள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை பயணம் செல்ல உள்ளார். இந்த பயணம் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க உதவியாக இருக்கும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் முயற்சிகளுக்கு மீனவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

வேட்டை பட பாடகி ஷான் ஜோன்சன் சென்னை ஹோட்டலில் அகால மரணம்


="field-content single-article-description">
வேட்டை படத்தில் இடம்பெற்ற ஹிந்தி பாடல் வரிகளை இவரே எழுத்னார்.கர்நாடக மற்றும் மேலை தேச இசையிலும் இவர் சிறந்த பாடகளை பாடியுள்ளார் . இவர் இசையமைத்து சிறந்த ஆல்பங்களும் வெளியாகி உள்ளது . இவரது தந்த காலம் சென்ற ஜோன்சன் மாஸ்டர் மலையாளத்தில் மிகவும் பிரபலமான ஒரு பாடாசிரியர் ஆவார் In an incident that has shocked the film fraternity, budding singer-composer Shan Johnson was found dead at a Chennai hotel on Friday.  The cause of the 29-year-old celebrity’s death is yet to be confirmed by police.
According to police, the daughter of the late Malayalam composer Johnson Master, Shan had recorded a song on Thursday night and was supposed to continue recording on Friday.

வரலாற்றுப் பார்வையில் ஜல்லிக்கட்டு ஆதரவும் எதிர்ப்பும்

மிழர்களின் கலாச்சாரம்’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் கேட்க விரும்புவதுமில்லை.
ஒருபுறம். ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் இன்னொரு புறம். இந்த இரண்டு பிரிவினர் தான் இவ்விசயத்தில் இருதுருவங்களாக இருந்து மோதிக் கொள்கின்றனர் என்பது போன்ற ஒரு சித்திரம் அனைத்து ஊடகங்களாலும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. ஆனால், இந்த இரு முகாம்களுடனும் முரண்பட்டு ஜல்லிக்கட்டை விமர்சிக்கும் இன்னொரு பிரிவினரும் உள்ளனர். அவர்கள்தான் தலித் அமைப்பினர், பெரியார் அமைப்பினர்,  இடதுசாரியச் சிந்தனையாளர்கள் (CPI, CPM அல்ல) மற்றும் மார்க்சிய-லெனினிய அமைப்பினர்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

கெய்ல்' குழாய் திட்ட அனுமதி சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

சென்னை: 'கெய்ல் நிறுவனத்தின், இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை தடை செய்ய முடியாது' என, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிற்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கேரளா மாநிலம்,கொச்சியில் இருந்து, கோவை, திருப்பூர்,ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக, பெங்களூருக்கு, பிரமாண்ட குழாய்கள் மூலம், இயற்கை எரி வாயுவை கொண்டு செல்லும் திட்டத்தை, 2012ல், 'கெய்ல்' நிறுவனம் துவக்கியது.   முதல்ல 'கெய்ல்க்கு அனுமதி கொடுத்தது தாயுள்ளம் கொண்ட தங்க தாரகை தான் அதனால் தான் மறு சீராய்வு இல்லை என்றால் இந்நேரம் கலிங்கர் கொண்டு வந்த திட்டம் என்று 3 பக்க எந்த கூன் பாண்டி மந்திரி பேரில் வந்து இருக்குமே...

சியாச்சின் இறந்த10 வீரர்களில் 4 பேர் தமிழர்கள்..பெயர்கள் ராணுவம் வெளியிட்டுள்ளது.

01.வேலூர் மாவட்டம் துக்கம்பாறையை சேர்ந்த எழுமலை ( ஹவில்தார்)
02.மதுரை மாவட்டம் சொக்கதேவன்பட்டியை சேர்ந்த கணேசன் (சிப்பாய்)
03.கிருஷ்ணகிரி மாவட்டம் குடிசாதனபள்ளியை சேர்ந்த ராமமூர்த்தி ( சிப்பாய்)
04.தேனி மாவட்டம் குமணண்தொழுவை சேர்ந்த எஸ் குமார் (லான்ஸ் ஹவில்தார்)
05. லான்ஸ் நாயக் நாகேஷா (கர்நாடகா)
06. லான்ஸ் நாயக் சுதீஸ் (கேரளா)
07. சிப்பாய் மகேஷா ( கர்நாடகா)
08. லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா (கர்நாடகா )
09. சிப்பாய் முஷ்டாக் அகமது (ஆந்திரா )
10. சிப்பாய் சூரியவன்சி (மகாராஷ்டிரா )

ஜம்மு: சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி பலியான 10 ராணுவ வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4 பேர் மதுரை, தேனி, வேலுார், கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.பிப்ரவரி 03ம் தேதி இமயமலையில் சியாச்சின் பகுதியில் அடுத்தடுத்து பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 10 பேர் சிக்கிக் கொண்டனர்.

லஞ்ச அதிகாரிகளை காப்பாற்ற அரசு புதிய ஆணை...இளங்கோவன்

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை காப்பாற்ற தமிழக அரசு புதிய அரசாணையை பிறப்பித்திருக்கிறது: இளங்கோவன் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு புதிய அரசாணையை பிறப்பித்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு ஊழியர்கள் யார் ஊழல் செய்தாலும், முன் அனுமதியின்றி அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய அரசாணை தவறானது. லஞ்சம் பெறுவதற்காக அதிகாரிகள் இடைத்தரகர்களாக பயன்படுத்தப்படுகின்றனர். பின்னே  அவுங்கதான் இப்ப ஏஜெண்டுகளாச்சே?

காதலை வைத்து காவிகள் தயாரிக்கும் வெடி குண்டு

முசுலீம் குடும்பங்களைப் பாருங்கள். பன்றி குட்டி போடுவதைப் போல் எட்டு பத்து பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள். அதில் அழகான பையனாக பார்த்து மதரஸாவிற்கு தத்து கொடுத்து விடுகிறார்கள். மதரஸாவில் என்ன செய்கிறார்கள்? இந்தப் பையன்களுக்கு பெண்களை மயக்குவதற்கு பயிற்சியளிக்கிறார்கள். பின்னர், பைக், வாட்ச், மொபைல், போன் போன்றவற்றையும், நல்ல உடைகளையும் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார்கள். அவர்களும் சோனு மோனு போன்ற பெயர்களோடு வாழும் இந்துப் பெண்களை அணுகுகிறார்கள். இந்தப் பையன்களின் அழகில் மயங்கும் இந்துப் பெண்களை மெல்ல  வலையில் வீழ்த்தி அவர்களை இசுலாமுக்கு மதம் மாற்றி பின் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இசுலாத்தில் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமில்லையா? எனவே அடுத்தடுத்து இந்துப் பெண்களாக குறி வைத்து அவர்களை மதம் மாற்றி குழந்தைகள் பெற்று இசுலாமியர்களின் மக்கள் தொகையை உயர்த்த சதி நடக்கிறது. இந்த சதி திட்டத்திற்கு பாகிஸ்தான் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் காசு வருகிறதாம்….”

வியாழன், 4 பிப்ரவரி, 2016

ராகுலை சந்தித்த விஜயதாரணி....என்ன தவறு கண்டீர்கள்?

டெல்லி: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. விஜயதாரணி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். விளவங்கோடு சட்மன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர் விஜயதாரணி. இவர் தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அப்பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மகளிரணி தலைவராக ஜான்சிராணி நியமிக்கப்பட்டார் இது தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுலை சந்தித்து விளக்கம் அளிக்க இருப்பதாக விஜயதாரணி கூறிவந்தார். இதனிடையே நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளித்தார்

அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழலை எதிர்க்கமுடியாதா?” சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கண்டனம்

அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழலை எதிர்க்கமுடியாதா?” சட்டப் பஞ்சாயத்து
இயக்கம் கண்டனம்
அரசுப் பணியாளர்கள் மீதான இலஞ்ச, ஊழல் புகார்கள் கூறவேண்டும் என்றால், அரசின் அனுமதி பெறவேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் முன்னர் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில்தான், இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்கங்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ. இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இலஞ்ச-ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை என சமூக அமைப்புகள் போராடிவரும் சூழலில், இந்த அரசாணையானது ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் விதத்தில் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு மீது லஞ்ச ஊழல் புகார்களை கூற அரசு அனுமதி வேண்டும்...ஹிட்லர் கெட்டவன்னு கூற ஹிட்லரின் அனுமதி வேண்டும்

அரசுப் பணியாளர்கள் மீதான இலஞ்ச, ஊழல் புகார்கள் கூறவேண்டும்
என்றால், அரசின் அனுமதி பெறவேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அந்த அரசாணையில், தற்போதைய இலஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையானது, இனிமேல் அரசு ஊழியர்கள் மீதான புகார்களை, கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பும் என்றும் அந்தப் புகார்கள் குறித்து ஒருவேளை கண்காணிப்பு ஆணையமானது விசாரணை நடத்த உத்தரவிடும்பட்சத்தில், அரசின் குறிப்புகளைப் பெற்ற பிறகு, இலஞ்ச ஒழிப்பு போலீசின் விசாரணைக்கு ஆணையம் உத்தரவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.>உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் முன்னர் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில்தான், இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்கங்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.nakkheeran,in

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேக்கு ஆதரவாக ஐ.நா. தீர்ப்பு

லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு
மேலாக தங்கியிருக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஆறுதலான செய்தி கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் தான் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. குழுவிடம் புகார் அளித்திருந்தார் ஜூலியன் அசாஞ்சே. இந்த வழக்கை விசாரித்த ஐ.நா. குழு, ஜூலியன் அசாஞ்சேக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, விக்கிலீக்ஸின் டுவிட்டர் பக்கத்தில் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஐ.நா. குழு நாளைக்குள் என்னுடைய வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும். தீர்ப்பு எனக்கு எதிராக இருந்தால் வெள்ளிக்கிழமை நான் இங்கிலாந்து காவல்துறையிடம் சரண் அடைவேன்.

தான்சானியா மாணவி ...இனவெறி தாக்குதல் அல்ல. கர்நாடக அமைச்சர் விளக்கம்

தான்சானியா மாணவி மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு நிர்வாணமாக
ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கர்நாடக உள்துறை மந்திரி மறுத்துள்ளார். பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விபத்து ஒன்றில் 35 வயது பெண் ஒருவர் இறந்தார். அவரது கணவர் காயம் அடைந்தார். இந்த காரை குடிபோதையில் ஓட்டி வந்த சூடானை சேர்ந்த வரும் காயம் அடைந்தார். இதையடுத்து இறந்து போன பெண்ணின் உறவினர்கள், அந்த வழியாக வந்த கார் ஒன்றை வழி மறித்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் அந்த காரில் இருந்த தான்சானிய நாட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவரை கீழே இழுத்து அடித்து உதைத்தனர். இது தொடர்பாக அந்த பெண் காவல்துறையில் அளித்துள்ள புகாரில் “நாங்கள் சென்ற காரை மக்கள் மறித்தார்கள். உடனே காரை விட்டு நாங்கள் கிழே இறங்கினோம். அங்கு நிறைய மக்கள் கூடி நின்றனர். அருகில் ஒரு காவலரும் நின்றார். நான் அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்டேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. உடனே அந்த கும்பல் என்னையும் நண்பர்களையும் அடிக்க தொடங்கினார்கள்.

இலங்கையில் தமிழிலும் தேசியகீதம் ஒலித்தது 1949 பின் மீண்டும் தமிழில்


இலங்கையின் இன்றைய தேசிய சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் சிங்கள மொழியிலும் நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 1949-ம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த திருப்பம் கடும்போக்கு சிங்கள தேசியவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பிரிவினை கோரிய விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர் முடிந்து 7 ஆண்டுகள் கடக்கின்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் முன்னெடுக்கின்ற
நல்லிணக்க முயற்சிகளின் அங்கமாக இந்த இருமொழி தேசிய கீதம் பார்க்கப்படுகின்றது. தமிழும்  நாட்டின் தேசிய மொழி என்பதால் இதில் ஒருவித சட்ட பிரச்சனையும் இல்லை என்பது கவனிக்க தக்கது

லைகாவுடன் இரு படங்கள்.. அவற்றில் மருதநாயகமும் உண்டு! - கமல் ஹாசன்

லைகா நிறுவனத் தயாரிப்பில் இரு படங்களை உருவாக்கவிருப்பதாகவும், அவற்றில் தனது கனவுப் படமான மருதநாயகமும் உண்டு என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார். இந்திய சினிமாவில் மிக பிரமாண்டமாக கால் பரப்பியுள்ள லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்போது ரூ 350 கோடி பட்ஜெட்டில் ரஜினியின் 2.ஓ படத்தைத் தயாரிக்கிறது. இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் தயாராகும் படம் இது.  அடுத்து கமல் ஹாஸனுடனும் கைகோர்ப்பதை இன்று அறிவித்திருந்தது லைகா. இந்த நிலையில் லைகா தயாரிக்கும் தனது படம் என்னவென்பதை கமல் ஹாஸனே அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நீங்க சரினு போன் பண்ணி சொன்னா போதும், ‘மருதநாயகம்' தொடங்கிடலாம்' என்கிறார் லைகா சுபாஷ்கரன். ஆனால், அந்தப் படத்தைத் தொடங்குவதற்கு முன்பான தயாரிப்பு வேலை பெருசு.  இனி  பாடம் படிக்க தீர்மானித்தால் நன்னா படிக்கட்டும் ?  ஊரான் வீட்டு நெய்யே பெண்டாட்டி கையே...தானுகிட்டே டியுஷன் எடுத்தா தேவல... 

அதிமுகவுக்கு சார்பாக தேர்தல் கமிஷன்! கடந்த இரு தேர்தல்களை போலவே விலை போய்விட்ட......

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்த மக்கள் தொகையான 7.77 கோடி பேரில் 5.79 கோடி பேர் வாக்காளர்கள். கிட்டத்தட்ட 75.56 சதவீதம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக பதிவு செய்திருக்கிறார்கள் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், இதில் 40 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என குற்றச்சாட்டை கிளப்புகிறார் தி.மு.க.தலைவர் கலைஞர். இவரது குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக பா.ஜ.க. இல.கணேசன் உட்பட எதிர்க்கட்சியினரும் சூட்டை ஏற்படுத்தி யிருக்கின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து நாம் ஆராய்ந்தபோது நமக்கு கிடைத்த சில புள்ளிவிபர ஆதாரங்கள், போலி வாக்காளர் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதாக இருக்கின்றன.

நடிகை ரோஜா: எனது தொகுதியில் 50 வீதம் தமிழர்கள்தான்...

நடிகையாகப் பிரவேசித்து திரையுலகைக் கலக்கியவர். கமல் நீங்கலாக ஏறக்குறைய அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்தவர். பரபரப்பான நடிகையாக இருக்கும்போதே சட்டென்று ரூட் மாறி அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியவர். பெயருக்காக இல்லாமல் தீவிர அரசியல்வாதியாக மிளிரும் நடிகை ரோஜாவுடன் சில மணித்துளிகள் பேசியதில்..."மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை குறைவுதான்:
 நடிகை ரோஜா  நடிகையாகப் பிரவேசித்து திரையுலகைக் கலக்கியவர். கமல் நீங்கலாக ஏறக்குறைய அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்தவர். பரபரப்பான நடிகையாக இருக்கும்போதே சட்டென்று ரூட் மாறி அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியவர். பெயருக்காக இல்லாமல் தீவிர அரசியல்வாதியாக மிளிரும் நடிகை ரோஜாவுடன் சில மணித்துளிகள் பேசியதில்..."

ஜிக்கா வைரஸுக்கு தடுப்பு மருந்து ஹைதராபாத்தில் கண்டுபிடிப்பு...உலகின் முதல் ஜிக்கா தடுப்பு இதுவாகும்


ஹைதராபாத்: உலகை மிரட்டும் ஜிக்கா வைரஸுக்கு ஒன்று அல்ல இரண்டு மருந்துகளை கண்டுபிடித்துவிட்டோம் என ஹைதராபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளை கொசுக்கள் மூலம் பரவும் ஜிக்கா வைரஸ் மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு மருந்தே இல்லை என்று கூறப்பட்டு வந்தது. வைரஸ் தாக்காமல் தடுக்கவும், தாக்கினால் சிகிச்சை அளிக்கவும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஜிக்கா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ஹைதராபாத் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் தான் மருந்து கண்டுபிடித்துள்ளது. World's First Zika Virus Vaccine Made in India, Claim Scientists ஜிக்கா வைரஸுக்கு இரண்டு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் 21,000 பேர் மேசை தட்ட விருப்ப மனு.....டாஸ்மாக் விதவைகள் விருப்பு மனு திமுகவில் ?

தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை' என, அறிவித்த அ.தி.மு.க.,வுக்கு, விதவைகள் மூலம், 'சென்டிமென்ட் அட்டாக்' கொடுக்க, தி.மு.க., மேலிடம் திட்ட மிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. 'தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை, சில மாதங்களுக்கு முன் தீவிரமடைந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - காங்., உட்பட, பல கட்சி கள் போராட்டங்களை நடத்தின. விஜயகாந்தும், மது விலக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

விஜயகாந்த்தூ :விஜயபிரபாகரனை துணை முதல்வராக்க வேண்டும்... மகனின் காதலிக்கும் சீட் வேணும்....

விஜய் பிரபாகரன் ஐ.பி.எல்., பேட்மின்டன் போட்டிக்காக சென்னை அணியை ஏலம் எடுத்தார். கேப்டன் 'டிவி' நிர்வாக இயக்குனராக இருந்து தொழிலை கவனித்து வருகிறார். இவரது தம்பி சண்முக பாண்டியன் சினிமா கதாநாயகனாகி விட்டதால் விஜய் பிரபாகரனை அரசியலுக்கு கொண்டு வர விரும்புகிறார் விஜயகாந்த். அதற்கு இந்த சட்டசபை தேர்தல் நேரம் சரியான நேரமாம் .ஜோதிடர்கள் யோசனை. 
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதிப்பதால் தி.மு.க.,வினர் கடுப்பாகி உள்ளனர். அவருக்கு சில நாட்களுக்கு 'தண்ணி' காட்டும்படி கட்சியினருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதன், 3 பிப்ரவரி, 2016

கிராமம் முழுவதும் எரிவாயு... கெயில் நிறுவனமும் அந்த ஆந்திர சம்பவமும்! தமிழகத்திலும் எரிவாயு குழல்.......

vikatan.com :தமிழகத்தில் எரி வாயு குழாய் பதிக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து
விட்டது. தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியாக இந்த குழாய்கள் பதிக்கப்படவுள்ளன. இந்த எரிவாயு குழாய்கள்  மூலம் அழுத்தம் நிறைந்த வாயுவை கொண்டு செல்வது பாதுகாப்பானதா? என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடையாது.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள  நகரம் என்ற கிராமத்தில்,  கெயில் நிறுவனம் பதித்த எரிவாயு குழாய் வெடித்து,  19 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவமும் நடந்திருக்கிறது.
இந்த குழாய்கள்,  15 ஆண்டுகளுக்கு முன் நிலத்தில் 4 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தன. பராமரிப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், சில நாட்களாக எரிவாயு கசிந்து வந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கெயில் நிறுவனத்துக்கு புகார் அளித்தும் கண்டு கொள்ளப்படவில்லை.

தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பேராசிரியர் அன்பழகன் உறுதி!

vikatan.com : தி.மு.க தலைவர் கருணாநிதியைவிட வயதில் மூத்தவரான பொதுச் செயலாளர் க.அன்பழகன், கடந்த சில வாரங்களாக திருப்பூர், வேலூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். நடக்க சிரமப்பட்டாலும் பேச்சில் சுணக்கம் இல்லை. கடந்த 29-ம் தேதி திருச்சி தேவர் மன்றத்தில் தி.மு.க எம்.பி-யும், தி.மு.க கொள்கைப்பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் 60-வது பிறந்தநாள் விழாவும் அவருடைய, ‘நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள்’, ‘மேனகாவின் நம்பிக்கை’, சிவாவின் பிள்ளைகள் எழுதிய, ‘அன்புள்ள அப்பா’ உள்ளிட்ட புத்தகங்கள் வெளி யீட்டு விழாவில் அன்பழகன் கலந்துகொண்டார். இதையே திருச்சி சிவா பெருமையாகக் குறிப்பிட்டார். ‘‘தலைவர் கலைஞருக்கு 93 வயது. பேராசியருக்கு வயது 94. தலைவரும் பேராசிரியரும் சாலை வழியே பயணிக்கிறார்கள். மக்களைச் சந்திக்கிறார்கள். இதேபோலவே தளபதி ஸ்டாலினும் செயல்படுவது பெருமையாக இருக்கிறது” என்றார் திருச்சி சிவா.

அழகிரிக்கு 'நோ என்ட்ரி' ஸ்டாலின் கதவடைப்பு...

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, 2014ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சிக்கு விரோதமான செயல்களில், அவர் இறங்கியதாக குற்றஞ்சாட்டிய கருணாநிதி, 'இனி, அவர் எனக்கு மகனே கிடையாது' என்றும், ஆவேசமாக அறிவித்தார்.
அதன்பின், பலமுறை சென்னைக்கு வந்த அழகிரி, விமான நிலையத்தில், தி.மு.க.,வுக்கு எதிராகவும், குறிப்பாக, ஸ்டாலினுக்கு எதிராகவும் கருத்து கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார்.    எவ்வளவு கஷ்டப்பட்டு, அழகிரியை கோபப்படுத்தி, கடுப்பேத்தி கட்சியை விட்டு வெளியேத்திருக்கார் ஸ்டாலின். அவ்வளவு சுலபமா கட்சிக்குள் மீண்டும் வரவிடுவாரா என்ன? கட்சி வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தைவிட கட்சியில் தான் நெம்பர் 1-ஆக இருக்கவேண்டும் என்பதே கொள்கையாக இருக்கிறது. சுப்ரமணியம் சுவாமியும் இது தெரிந்துதான் ஸ்டாலினை முன்னே நிறுத்தி திமுகவை அடிக்க நினைக்கிறார்.

குறும்படம்...தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம்

nisaptham.com :அலுவலக நண்பர்கள் சிலர் சேர்ந்து குறும்படம் எடுக்கலாம் என்றார்கள். நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய மூன்று பேரும் ஆந்திரக்காரர்கள். அதனால் தெலுங்கில் எடுப்பதாகச் சொன்னார்கள். என்னைக் கதை சொல்லச் சொன்னார்கள். இயக்குநர் என்றால் சினிமா இயக்குநர் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. லட்ச ரூபாய் கொடுத்து ஒரு கேமிரா வாங்கியிருக்கிறார். இப்பொழுதெல்லாம் கேமிரா வைத்திருந்தால் இயக்குநர்தானே? அப்படித்தான் இயக்குநர் ஆகியிருந்தார். நாயகனாக முடிவு செய்யப்பட்டவர் திருமணமாகாத பையன். தலையில் குச்சி குச்சியாக முடியை நட்ட வைத்திருந்தார். அதனால் அவர் நாயகன். தயாரிப்பாளர் ஒரு இனாவானா. நடுவில் ஒன்றிரண்டு காட்சிகளில் என்னையும் காட்டிவிடுங்கள் என்று சொல்லியிருந்தார். ஒத்துக் கொண்டு தயாரிப்பாளராக்கியிருந்தார்கள்.

மோடி வருகையால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை: ஈ.வி.கே.எஸ் விமர்சனம்

சென்னை: பிரதமர் மோடி வருகையால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார். மோடியின் பேச்சு ஒரு பிரதமரை போன்று இல்லாமல், சராசரியாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து பிரதமர் பேசாதது கண்டிக்கத் தக்கது என்றும் இளங்கோவன் கூறினார் dinakaran.com

எரிவாயு குழாய் .....தமிழக விவசாயிகளுக்கு ஏன் இந்த அநீதி?

vikatan.com இந்தியா முழுவதும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் கொண்டு கெயில் நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூருவிற்கு, குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
செல்வதற்கான திட்டத்தினை மத்திய அரசின்
கேரளாவில் இருந்து நேரடியாக கர்நாடகா வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும்,  அப்போதைய தமிழக அரசு சற்று விழிப்புடன் இருந்திருந்தால். ஆனால் வழக்கம் போல மாநில அரசு தமிழர்களை கைவிட்டு விட, இப்போது மத்திய அரசு விவசாயிகள் தலையில் மிளகாய் அரைத்து விட முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.

இறுதிச் சுற்று...நொச்சிக்குப்பம்..நிச்சயம் பார்க்க...மாஸ்

charuonline.com:: பைத்தியம் பிடித்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு வேலைப்
பளு.  அதற்கு நடுவிலும் நேற்று நான் (மட்டும்) இறுதிச் சுற்று போயிருந்தேன்.  காரணம், நல்ல தமிழ்ப் படம் பார்த்து மாமாங்கம் ஆகி விட்டது.  மேலும் நான் ஒரு சினிமாப் பைத்தியம்.  இப்படி பல காரணங்கள் இருந்தன.  மேலும், இறுதிச் சுற்று நன்றாக இருப்பதாகப் பல நண்பர்களும் சொன்னார்கள்.  மற்றபடி படத்தின் இயக்குனர் யார் என்று கூடத் தெரியாது.  இப்போது இந்த நிமிடம் வரை கூடத் தெரியாது.  இனிமேல்தான் கூகுளில் தேட வேண்டும்.
பெயர்ப் பட்டியலில் சந்தோஷ் நாராயணனின் பெயரைப் பார்த்து மகிழ்ந்தேன்.  நான் அவர் ரசிகன்.  அவர் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  அவரிடம்தான் தமிழ் சினிமாவில் முதல் முறையாக விளிம்பு நிலை மக்கள் கேட்கும் இசை இடம் பெறுகிறது.  முதல்முறையாக தென்னமெரிக்க இசையும் சேர்ந்திருக்கிறது.  முதல்முறையாக கிழட்டுத்தனம் இல்லாமல் இருக்கிறது.

பாகிஸ்தான் இந்துக்கோவில் மீது தாக்குதல் பதற்றம் Hindu population in Pakistan from 15% to 1%.


hindu minority in Pakistan degresus from 15% to 1%. 
பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், சிறுபான்மை மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.< பழமையான கோவில் பாகிஸ்தானின் துறைமுக நகரம் கராச்சி. அங்கு உயிரியல் பூங்காவின் அருகில் இந்துக்கோவில் ஒன்று உள்ளது. 60 ஆண்டுகள் பழமையான கோவில் இது.
இந்த கோவிலுக்குள், சம்பவத்தன்று தாடியுடன் கூடிய 3 பேர், கைத்துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது அங்கு அந்தக் கோவிலை கட்டியவர்களின் குடும்பத்தினரும், பராமரிப்பவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள், துப்பாக்கி ஏந்திய நபர்களைக் கண்டதும் என்ன நடக்கப்போகிறதோ என்று கலங்கினர்.

கார்னியா கண் குறைபாடு...இந்தியாவில் ஏன் வேதனை?


bbc.com/tamil :கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தின் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை இழப்பை தடுப்பதில் இலங்கை உலகநாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிழிப்படலங்களை இறந்தவர்களிடம் இருந்து பெற்று அவற்றை தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துவதில் இலங்கை தன்னிறைவு பெற்றிருப்பது மட்டுமல்ல, தனக்கு மீதமான கண்ணின் கருவிழிப்படலங்களை வேறு நாடுகளுக்கும் கொடுத்து உதவுகிறது.
ஆனால் இலங்கையின் அண்டைநாடான இந்தியா இதில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் கார்னியா கிடைக்காமல் பார்வையின்றி தவிக்கும் நிலைமை இந்தியாவில் இன்னமும் நீடிக்கிறது. இதன் பின்னணி காரணிகளை பிபிசி தமிழோசையிடம் விளக்கினார் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் எம் ராதாகிருஷ்ணன்.

உலகக்கு கண்பார்வை தரும் இலங்கை cornea donation sri lanka


tamil.bbc.com :கார்னியா என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் விழியின் கருவிழிப்படலம் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு, இறந்தவரின் கருவிழிப்படலத்தை எடுத்துப் பொருத்தும் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் பெற்றுக் கொடுக்க முடியும். உலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. அவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் கருவிழிப்படலம் சேதமடைந்த காரணத்தால் கண்பார்வை பறிபோனர்வகள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த நான்கு சதவீதமானவர்களுக்கு கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் கொடுக்க முடியும். ஆனால் அதற்குத் தேவைப்படும் கருவிழிப்படலத்துக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கிராம மக்களுடன் சாப்பிட்ட ராகுல்


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆந்திரபிரதேச மாநிலம்
ஆனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்ட்லா பள்ளிக்கு சென்றார். காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். இந்த திட்டத்தை காங்கிரஸ் அரசு கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் முதல் முறையாக இந்த திட்டத்தை இங்கு தான் தொடங்கி வைத்தனர் என நினைவுகூர்ந்தார்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ரோஹித் வெமுலா...பிறப்பு ஏன் மர்மமாகியது? மனிதகுலமே வெட்கப்படவேண்டிய நேரம் இது...

ரோஹித்தின் பிறந்தநாளான ஜனவரி 30 அன்று இதைப் பதிவேற்றுவது
தற்செயல் நிகழ்வுதான் எனினும், தன் பிறப்பே மரணத்தையொத்த விபத்து என்று ஏன் சொன்னார் ரோஹித் என்பதற்கான சான்று இப்பதிவு. ரோஹித் பிறப்பதற்கும் முன்பே தொடங்கிவிட்டது அவரின் துயரம் என்றுதான் கூறவேண்டும். எதை எழுதினாலும் மொழிபெயர்த்தாலும் அதை பகிருங்கள் என்று கூறி இதுவரை முகநூலில் வேண்டுகோள் வைத்ததில்லை. முதன்முறையாகக் கேட்கிறேன். நண்பர்களே! இப்பதிவு அதிகம் பேரைச் சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு தலித் வாழ்க்கையின் மிகப்பெருந்துயரத்தைத் தாங்கிய ரோஹித்தின், அவரது தாய் ராதிகாவின், அவரது சகோதரர் ராஜாவின் இக்கதை இந்தியாவில் உள்ள, உலகில் உள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. இதிலுள்ள தகவல்களைத் திரட்ட ஒரு செய்தியாளராக எத்தனை சிரமங்கள் இருந்திருக்கும் என யூகிக்க முடிகிறது. இதை எழுதிய சுதிப்டோ மோண்டலுக்கு நன்றியும் சிரந்தாழ்ந்த வணக்கங்களும்.
தோழமையுடன் கவின்மலர்-

கிருஷ்ணகிரி ;14 வயதில் 24 வயதுப் பெண்ணைப் பலாத்காரம்..வெளியே வந்து மீண்டும் 17 வயதில் பாலியல் பலாத்காரம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸார் பலாத்கார வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த சிறுவன் ஏற்னவே தனது 14 வயதில் 24 வயதுப் பெண்ணைப் பலாத்காரம் செய்து பரபரப்பை ஏற்படுத்திக் கைதாகி சிறுவர் சிறைக்குச் சென்று தண்டனை அனுபவித்தவன். Teenager commits second rape in 3 years 3 ஆண்டு தண்டனை (சிறார்களுக்கு அதிகபட்ச தண்டனையே அவ்வளவுதான் - கொலையே செய்தாலும் கூட) முடிந்து திரும்பி வந்த அவன் தற்போது 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து மீண்டும் சிக்கியுள்ளான். இந்த சம்பவம் சூளகிரியை அதிர வைத்துள்ளது. திங்கள்கிழமை மாலை இந்த பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. இந்த அக்கிரமத்துக்கு ஆளான சிறுமி, குண்டு குருக்கி என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ஆவார்.  பாலியல் குற்றத்திற்கு உரிய தண்டனை  வயது எல்லையை 14 ஆக குறைக்கவேண்டும்

சு.சாமி :திமுக-தேமுதிக-பாஜக கூட்டணி உருவாகும்: மு.க.ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர்...என்னா அக்கறை?

"Subramanian Swamy" : I am hopeful the MK will decline to be CM candidate and make Stalin leader. Then hope BJP align Stalin and Vijaykanth in a new alliance
திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் உருவாகும் என எதிர்பார்க்கிறேன் என பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், முதல் அமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை திமுக தலைவர் கலைஞர் அறிவிப்பார் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.திமுக யாரோடு சேரவேண்டும் திமுகவில் யார் யார் முதல்வர் வேட்பாளர் ஆகவேண்டும் என்றெல்லாம்இந்த  பார்பன பாம்பு பாடம்  நடத்தவேண்டும் என்று யார் அழுதா? பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. ஸ்டாலினுக்கு இனிப்பு காட்டி திமுகாவுக்கு நஞ்சை ஊட்டும் ஒரு வஞ்சக முயற்சிதான் இது.

கருவில் பாலினத்தை கண்டறியும் பரிசோதனை கட்டாயம் ஆக்கப்படும்..மேனகா காந்தி

ஜெய்பூர்: கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் பாலின பரிசோதனை மீதான தடை நீக்கப்படக்கூடும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டு கொண்டார். Ban may go, sex test on foetus could be mandatory: Maneka Gandhi நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் பாலின பரிசோதனை மீதான தடையை நீக்குவது குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருகிறது. மேலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவது கட்டாயம் ஆக்கப்படும். அப்படி குழந்தை ஆணா, பெண்ணா என்பது கண்டறிந்து பதிவு செய்யப்படும். கருவை கலைத்தால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் அல்லது மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டும்.

விஜயகாந்தின் மொதலாளி சுப்பிரமணியம் சாமி.. அந்த துரை சொல்றதை.....

விஜயகாந்தின் வாக்கு வங்கி மிகவும் சரிந்தே போய்விட்டது. தேமுதிகவின்
இன்றைய வீழ்ச்சிக்கு வழிகோலியது விஜயகாந்தும் பிறேமலதாவும்தான். ஜெயலலிதாவை போல் இனி ஒருவர் அரசியலில் வருவது முடியாத காரியம்.

விஜயகாந்த் தன்னை ஒரு எம்ஜியராகவும் எண்ணி எம்பி எம்பி குதிக்க பிறேமலதாவோ தன்னை ஒரு வருங்கால ஜெயலலிதாவாக கற்பனையில் மிதக்க தொடங்கி விட்டார்,
ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தமிழகத்தின் வரலாற்று சோகம்.
அது புரியாமல் இவர்கள் போடும் கூத்துதான் தேமுதிகவின் அரசியல்.

இவர்களின்  தரம் தாழ்ந்த பேச்சுக்கள் தேமுதிகவின்  அரசியல் வெறுமையை தெளிவாக காட்டுகிறது.
சுப்பிரமணியம் சாமி அமித்ஷா போன்றோரின் அட்டவணைக்கு ஏற்ப அரசியல் நடத்தும் பாமரத்தனம் இவர்களிடம் தெரிகிறது.

சுப்பிரமணியம் சாமிக்கு எப்படியும் திமுகவை ஒழிக்கவேண்டும். கலைஞரை கேவலப்படுத்த வேண்டும் . இந்த  நோக்கங்களை இந்த தராதரம் அற்றவர்கள் மூலம் செய்துவிடலாம் கனவு காண்கிறார்.

விஜயகாந்த் திமுகவோடு பேரம் பேசுவது தனது கியாதி எவ்வளவு என்று தானே தெரிந்து கொள்ளவும் பாஜகவிடம் தனது ரேட்டை ஊட்டி காட்டவும்தான்.

மகாராஷ்டிராவில் 14 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி,

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஆபேதா இனாம்தார் என்ற கலை மற்றும்அப்போது கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டன. இருப்பினும் குளிக்கும் உற்சாகத்தில் ஒவ்வொருவராக கடலுக்குள் சென்றனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலைகள் கடலில் குளித்து கொண்டிருந்த மாணவ, மாணவிகள் 4 பேரை வாரி சுருட்டி உள்ளே இழுத்து சென்றது.
அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருந்தனர். 143 மாணவ, மாணவிகள் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.

ஆ.ராசா: மன்மோகன்சிங்கிடம் தெரிவித்தே முடிவுகளை எடுத்தேன்: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு....

ஆ.ராசா ஒரு பைசா கூட ஆதாயம் பெறவில்லை. அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும், ‘புதிய தொலைத்தொடர்பு கொள்கை-1999‘ என்ற கண்ணாடி மூலமாகவே பார்க்க வேண்டும். அந்த கொள்கையின் நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? மன்மோகன்சிங் அரசில், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்தபோது, 122 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கியதில், அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 984 கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 17 பேர் மீது இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி, 122 உரிமங்களையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததுடன், ஏல முறையில் அவற்றை ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிட்டது.

சரிதா நாயர்: அரசியல் வாதிகள் என்னை உடல், மன ரீதியாக பயன்படுத்தினார்கள்

திருவனந்தபுரம்: பல அரசியல்வாதிகள் தன்னை உடல் ரீதியாகவும், மன
ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டதாக சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் தெரிவித்துள்ளார். சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரித்து வரும் கமிஷன் முன்பு தொழில் அதிபர் சரிதா நாயர் திங்கட்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அவர் அரசியல் தலைவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியதோடு அதை நிரூபிக்கும் வகையில் 3 சி.டி.க்களையும் அளித்தார். Politicians 'used' me, says Kerala solar scam accused Saritha Nair விசாரணை கமிஷன் முன்பு அவர் கூறுகையில், இன்று நான் ஆடியோ மற்றும் வீடியோ சி.டி.க்களை அளித்துள்ளேன். அவற்றில் காங்கிரஸ் தலைவர் தம்பனூர் ரவி, எம்.எல்.ஏ. பென்னி பெஹனன், முதல்வர் உம்மன் சாண்டியின் முன்னாள் பாதுகாவலர் சலிம் ராஜ், தொழில் அதிபர் ஆபிரகாம் கல்லிமன்னல் ஆகியோருடனான உரையாடல் உள்ளது.

திங்கள், 1 பிப்ரவரி, 2016

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...சாட்டை எடுத்த நமிதா இவங்கதான்!

vikatan.com சொல்லுங்க நீங்க யாரு... இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று ’பாட்ஷா’ ரஜினியிடம் கேட்பது போல கேட்டதும்.... கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...’ என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார ’நீயா நானா’ விவாதத்தில் உருவான ஸ்டார்..!
 
’’பில்ட்-அப்லாம் வேண்டாம். நான் எப்பவும் சாதாரண பொண்ணுதான். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில், சமூக மேம்பாடு படிச்சுட்டு இருக்கேன். ஒரு பொண்ணா எப்பவும் என் பார்வையை, உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு இயங்குவேன். அப்படித்தான் அந்த ஷோவிலும் நடந்துக்கிட்டேன். அது பலருக்கு அதிர்ச்சியா இருந்துருக்கு. ஆனா, இனிமே எல்லாம் இப்படித்தான்!’’

புதுச்சேரியில் பிரியங்கா காந்தி மகளின் கூடைப்பந்து விளையாட்டை பார்க்க வந்தார்

புதுச்சேரி: மகளின் கூடைப்பந்து விளையாட்டை பார்க்க புதுவைக்கு
வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி மகளின் கூடைப் பந்து விளையாட்டை பார்க்க பிரியங்கா காந்தி இன்று புதுவை வந்துள்ளார். அகில இந்திய இளையோர் கூடைப்பந்து போட்டி நாளை புதுவையில் தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை நடைபெறும் போட்டியில் 25 மாநில அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் டெல்லி அணி சார்பில் பிரியங்கா காந்தி மகள் மரியா பங்கேற்று விளையாட உள்ளார்

திமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவு செய்த விஜய்.....

சென்னை,பிப்.01 (டி.என்.எஸ்) விரைவில் வர உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், திமுக-வுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டபை தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக விஜய் அறிவித்தார். மேலும் அவருடைய ரசிகர்களையும் தேர்தல் பணியில் ஈடுபட செய்ததுடன், அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அதிமுக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். ஆனால், அதிமுக ஆட்சியைப் பிடித்தப் பிறகு விஜய் நடித்த படங்கள் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்தபோது, எந்தவிதம் உதவியையும் செய்யவில்லை.

யோகா குரு விக்ரம் சவுத்ரியின் “ரேப்” யோகா !

ஹாட்’ யோகா குரு விக்ரம் சவுத்ரி இந்திய வேதக் கலாச்சாரத்தை உலக அறியச் செய்யும் பொருட்டு பாலியல் வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
விக்ரம் சவுத்ரி
2013-ல் இவரது யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்த ஆறு மாணவிகள் தாங்கள் சவுத்ரியால் தொடர்ச்சியான பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழு ‘ஹாட்’ யோகா குரு குற்றவாளி என தீர்ப்பளித்து 6.25 கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.  மனிதர்கள் தோன்றமுதலே பிராணிகள் இதே யோகாசனம் போன்ற இயல்பான உடல் மன ஒழுங்கு முறைகளை பிராணிகள் இயற்கையாகவே செய்துவருகின்றன. இன்றும் கூட எனது வீட்டு நாய் விதம்விதமான போஸ்களில் சிலவேளை சில சுயபயிற்சிகளை செய்கிறது இது மிகவும் இயல்பானது , வழமை போல் பார்பனீயம் இதையும் எதோ தங்கள் கண்டுபிடிப்பு என்பது வேடிக்கை. எதன்மீதும் சம்ஸ்கிருத லேபில் ஓட்டும் வேலைதான் இதுவன்றி வேறொன்றும் இல்லை

மிடாஸ் முன்னாள் இயக்குனர் சோ ராமசாமி வேறு எப்படிப் பேசுவார்?

திமுக தலைவர் கலைஞர் 01.02.2016 திங்கள்கிழமை கேள்வி பதில் வடிவிலான
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேள்வி :- தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று “துக்ளக்” “சோ” பேசியது பற்றி?கலைஞர் :- மதுவகைகள் தயாரிக்கும் “மிடாஸ்” நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் வேறு எப்படிப் பேசுவார்?
கேள்வி :- திருமலை நாயக்கர் பிறந்த  தினத்தையொட்டி ஜனவரி 24ஆம் தேதியன்று மதுரையில் அரசு விழா நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?
கலைஞர் :- கடந்த ஐந்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சிதானே நடந்து கொண்டிருக்கிறது.  இத்தனை ஆண்டுகளாக ஏன் இந்த அறிவிப்பு வரவில்லை? இந்த ஆண்டு தேர்தல் வருகிறது என்றதும் இந்த அறிவிப்பைச் செய்கிறாரோ?

2-ஜி: ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் இறுதி வாதங்கள் துவங்கின

 இரண்டாம் தலைமுறை அலைகற்றை (2-ஜி) ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி உள்ளிட்டோர் தரப்பிலான இறுதி வாதங்கள் இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளன. டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கில் சிபிஐ தரப்பிலான இறுதி வாதம் முடிவடைந்துள்ள சூழலில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான வாதங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக இன்று டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் வழக்கில் ஆஜராகினர்.

கடன்...1,000 கட்டுமான திட்டங்கள் முடங்கும் ஆபத்து...விற்பனை வீழ்ச்சி.

விற்பனை வீழ்ச்சி, விலை உயர்வு போன்ற காரணங்களால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1,000 கட்டுமான திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடன் சுமை நெருக்கடியால் 'பில்டர்'கள் தலைமறைவாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், புதிய குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் வீடு வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த பிற தொழில்கள், நிதி சேவை நிறுவனங்கள் மற்றும் இதர சேவை துறைகளில் பணி புரிய வருவோர், சென்னையில் சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டியதால், புதிய கட்டுமான திட்டங்களுக்கு வரவேற்பு அதிகரித்தது.தற்போதைய நிலவரப்படி சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு, 8,000 கட்டுமான திட்டங்களுக்கும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 900 திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

எஸ்.எஸ்.ஆர். மகள் லக்ஷ்மி புகார்...300 கோடி மோசடி பத்மநாபன்,தமிழ் கைது

கூடுவாஞ்சேரி, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் வீடுகளை கட்டித்
தருவதாக விளம்பரம் செய்து இருந்தனர். மேலும் அதற்கான வீட்டுக் கடன் தொகையையும் தனியார் நிறுவனத்திடம் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதை நம்பி ஏராளமானோர் கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் முதல் குறிப்பிட்ட தொகையை கட்டுமான நிறுவனத்திடம் செலுத்தி வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணம் செலுத்தியவர்களுக்கு வீட்டு சாவியை அவர்கள் வழங்க வேண்டும். ஆனால், யாருக்கும் வீட்டு சாவியை கொடுக்க வில்லை. இதையடுத்து பணம் கட்டியவர்கள் வீடு கட்டப்படுவதாக கூறிய நுங்கம்பாக்கம் கிராமத்திற்கு சென்று பார்த்ததனர். அங்கு காலி மனையாக இடம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் விசாரித்தபோது, ‘மனையிடத்தில் கட்டுமான அனுமதி பெறாமல் உள்ளது, பொது மக்கள் யாரும் வாங்க வேண்டாம்‘ என ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்திருந்தது தெரிந்தது

மதிமுகவில் மூன்று கோஷ்டிகள்...அம்மாவா? அய்யாவா? அரசியலை விட்டே ஓட்டமா?

மதிமுகவில்  திமுகவுக்கு ஆதரவான கோஷ்டியும் அதிமுகவுக்கு ஆதரவான கோஷ்டியும் சத்தம் போடாமல் பிய்த்துகொண்டு போக முயற்சிப்பதாக தெரிகிறது. வைகோவின் பின்னால் சென்று மீண்டும் மீண்டும் சுடுமணலில் யாத்திரை செய்ய முடியாது  என்ற முடிவுக்கு பலரும் வந்து விட்டார்கள் . வைகோ ஜெயலலிதாவிடம் இருந்து எதை உறுதியாக பெறுவார் என்பதில் ஒரு நிச்சயம் இல்லாத நிலையில் அவரை நம்பி இனியும் அரசியல் நடத்த முடியுமா என்ற எண்ணத்தில் பலர் அரசியலை விட்டே ஒதுங்கும் முடிவுக்கும் கூட வந்து விட்டனர் என்று தெரிகிறது .ம.தி.மு.க. மகளிரணியை சேர்ந்த 100 பேர் தி.மு.க.வில் இணைந்தனர் வடசென்னை ம.தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் ராதிகா சந்திரகுமார் தலைமையில் 100 பேர் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.வில் இணைந்தனர்.

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

பெண்களிடம் வாங்கி கட்டிய ஆண்கள்.....நீயா நானா?


நான் கர்ச்சீப்பை கட்டிக்கொள்கிறேன், அல்லது வேறு எதை வேண்டும் என்றாலும் கட்டுகிறேன். அதெல்லாம் வேற யார் பிசினசும் கிடையாது. ஒரு பொண்ணா இருந்து நான் எனக்கு பிடிச்ச முடிவை எடுப்பேன். நாங்க பப்புக்கு போனா உங்களுக்கு (ஆண்களுக்கு) என்ன பிரச்சினை? என் சேலைக்கும் இடுப்புக்கு நடுவேயான, 6 செமீ இடைவெளி கலாசாரம். ஆனால், சட்டை-பேண்ட் நடுவேயுள்ள 1 இஞ்ச் ஆபாசமா? நாங்க (பெண்கள்) தண்ணியடிச்சா உங்களுக்கு என்ன? உங்களுக்கு சரக்கு பற்றாக்குறையாகிவிடுமா?என்று கேட்டார். இதைப் பார்த்து கொதித்துப் போன ஆண்கள் சகட்டு மேனிக்கு பதிவிட்டனர். எந்த மாதிரி ஆடை அணியவேண்டும் என்பது தொடங்கி அட்வைஸ் மழையை ஓசியாக கொடுத்து வருகின்றனர்.
சென்னை: பெண்ணின் நடை எப்படி இருக்கவேண்டும் என்று கூட இன்றைக்கு ஆண்கள் தீர்மானிக்கின்றனர். பெண்கள் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்று தீர்மானிக்க ஆண்களுக்கு யார் சுதந்திரம் கொடுத்தது என்று தெரியவில்லை. கடந்த ஞாயிறு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா விவாதம் பார்த்த பிறகு பெண்களுக்கு எதிரான கருத்துக்களை அதிகம் பதிவிடுகின்றனர் ஆண்கள்.

பதன்கோட் தாக்குதலால் உறவு போச்சு: பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலை

இஸ்லாமாபாத்: ''பதன்கோட் தாக்குதலால், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான, வெளியுறவு துறை செயலர்களின் பேச்சு தடைபட்டுள்ளது,'' என, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாக்., இடையிலான பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், அதை பாதிக்கும் விதமாக, பதன்கோட் தாக்குதல் அமைந்து விட்டது' என, நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளதாக, பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தில், பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய வீரர்கள், ஏழு பேர் வீர மரணம் அடைந்தனர்; நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.'இந்த தாக்குதலுக்கு காரணமாக, ஜெய்ஸ் - இ - முகமது தலைவன் மசூத் அன்சார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைது செய்தால்தான், பேச்சு தொடரும்' என, இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? அருள்மொழி சாட்டை....

சென்னை: பத்ம விருதுகளை அடுத்தடுத்து கொடுக்கும் அளவுக்கு அப்படி என்னதான் நடிகர் ரஜினிகாந்த் சாதித்துவிட்டார் என்று திராவிடர் கழக பிரசார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷண் விருது கொடுத்துள்ளது மத்திய அரசு. ஆனால் ரஜினிகாந்துக்கு அரசியல் ஆதாயத்துக்குதான் மத்திய பாஜக அரசு இந்த விருதை கொடுத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாவது: ரஜினிகாந்துக்கு இந்த விருது கொடுத்திருப்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று கூறப்பட்டது. இது சரியான கருத்து அல்ல. கண்டிப்பாக இதில் மாற்றுக் கருத்து உள்ளது. நிறைய பேரிடமும் இருக்கும்.

நாடார் மகாஜன மாநாடு தமிழிசை சவுந்தரராஜன், சரத்குமார் பங்கேற்பு

நாடார் மகாஜன சங்க மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் - சரத்குமார் பங்கேற்பு
கோவில்பட்டியில் நாடார் மகாஜன சங்க மாநாடு இன்று (ஞாயிறு) நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ப.சிவந்தி ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது nakkheeran.in

அதிமுகவின் அன்பான மக்கள் நல கூட்டணி.....?

மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை அமைக்கிற கூட்டணியாக இருக்கும் என்றெல்லாம் நம்ப வேண்டியதில்லை. அது தமிழக அரசியலில் சாத்தியமும் இல்லை. ஒவ்வொரு ஐந்தாண்டுகளின் இறுதியிலும் நாம் உணரக் கூடிய ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இந்த முறையும் இருக்கிறது. ஆனால் மக்களின் இந்த மனநிலையை வாக்காக மாற்றுவதற்கான சாதுரியமும் சாணக்கியத்தனமும் பணச் செல்வாக்கும் மக்கள் நலக் கூட்டணியிடம் இல்லை என்பதுதான் நிதர்சனம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளின் ரூபாய் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது. அந்த விலைவாசியோடு போட்டி போடும் வலிமை அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டுமே உண்டு என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

தற்கொலைப்படை தாக்குதல் நடத்த மும்பை பெண்களுக்கு ஆன்லைன் மூலம் ஐஎஸ் தலைவர் பயிற்சி

மும்பை: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த மும்பையைச் சேர்ந்த வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. 'ISIS leader Abu Bakr al-Baghdadi training Mumbai girls for suicide bombings through online classes' விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறியிருப்பதாவது, ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பையைச் சேர்ந்த வாலிபர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இந்தியா வழங்கிய 40 பேருந்துகளை காணல்லியா?...தொண்டமான், சிவலிங்கம்..மலையக தலைவர்கள் கைவரிசை

40 பேருந்துகளை ஏப்பம் விட்டார் ஆறுமுகம் தொண்டமான்? பேருந்துகளை
ஏப்பம் விடவில்லை - இ.தொ.கா விளக்கம்: பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 'டாடா சிட்டி ரைடர்' வகையைச் சேர்ந்த 40 பேருந்துகளை முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மிகவும் இரகசியமான முறையில் விற்று, அப்பணத்தைத் தன்னுடைய சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 2008ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இந்திய ரூபாயில் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 40பேருந்துகள் வழங்கப்பட்டன.