சனி, 11 ஜூலை, 2015

நத்தம் விஸ்வநாதன்::மின்வாரியத்தில் ஊழல் நடக்கவே இல்லை! கலைஞர் பொய் சொல்கிறார்?

கருணாநிதி, நத்தம் விஸ்வநாதன் | கோப்புப் படம்
மின் வாரியத்தில் ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி அளித்துள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்ட சி.செல்வராஜ் தன்னை வளர்த்த மின் வாரியம் நசிய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும், அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு முழு பயன்பாட்டில் இருக்கக்கூடாது என்ற நோக்கிலும் வெளியிட்ட செய்திகளையும் புகார்களையும் நம்பகமற்ற நாளிதழ் செய்திகள் வெளியிட்டிருந்தன.
மேலும், அவரின் கற்பனை அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய ஒரு பொது நல மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

சிதம்பரம் ஆவேசம்: நரேந்திர மோடி இந்தி பேசும் மக்களுக்கு மட்டுமா பிரதமர்?

திருச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார பிரதிநிதிகளின் மாநாடு தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் வயலூர் முத்துலெட்சுமி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ப.சிதம்பரம் பேசும்போது, கடந்த நாடளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து நாடு முழுவதும் மோடி குடுகுடுப்பைகாரன் போல நல்லாகாலம் பிறக்க போவுது என்று பிரச்சாரம் செய்தார். இப்போது யாருக்கு நல்லகாலம் பிறந்துயிருக்கு என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

வெள்ளி, 10 ஜூலை, 2015

நலந்தானா ஜெயலலிதா? வழக்குகளை வென்றது போல் நம்பிக்கையுடன் நோயையையும் வெல்ல வாழ்த்துகிறோம்!


ரசியல்வாதிகளுக்கு முதுமையும் முதலீடுதான்! உடலின் வலிமையைத் தாங்கும் சக்தி, தன் கால்களுக்கு இல்லை என உணர்ந்ததுமே வீல் சேரில் கூச்சப்படாமல் உட்கார்ந்தார் கருணாநிதி. 'வீல் சேரில் வலம்வரும் வில் பவரே...’ என்ற பட்டம் கிடைத்தது. இதை இயல்பான மாற்றமாக மாற்றிக்கொண்டார் கருணாநிதி.
ஒரு சினிமாவின் ப்ரிவ்யூ அது... இயக்குநர் மணிவண்ணன் அங்கு வந்திருப்பதை அறிந்தார் கருணாநிதி. அவரை அழைத்து வரச் சொன்னார். காலைச் சாய்த்துச் சாய்த்து மணிவண்ணன் நடந்து வந்தார். 'இந்த மாதிரி ஒரு வீல் சேர் வாங்கிக்கோய்யா... நிம்மதியா உட்கார்ந்துட்டுப் போகலாம். வசதியா இருக்கு; சோர்வும் இருக்காது’ எனச் சொன்னார் கருணாநிதி. அதாவது தன் உடல்நிலையைக்கூட சாதாரணமானதாக நினைத்து, அதை உள்வாங்கி விழுங்கப் பழகிக்கொண்டார் கருணாநிதி. 'இத்தனை வயதிலும், நடக்க முடியாத சூழலிலும் இத்தனை மணி நேரம் உழைக்கிறார்’ எனச் சொல்வதே, தனக்கான கம்பீரமாக கருணாநிதி மாற்றிக்கொண்டார்.

கும்பமேளாவையொட்டி நாசிக்கில் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகம்! பெண்கள் ஜாக்கிரதை?

மகா ராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் ஜூலை 14 அன்று கும்பமேளா என்ற அம் மணச் சாமியார்களின் கூட்டுக் களியாட்டம் நடைபெறும் இந்த நிகழ்வை ஒட்டி நாசிக் முழுவதும் 8 லட்சம் ஆணுறைகள்  விநியோ கிக்கப்பட்டுள்ளன. மும்பை நகரைச் சேர்ந்த பிரபல ஆணுறை விநியோகிக்கும் ஜே.கே.அன்ஷீல் மற்றும் ஜோய் லைஃப் லோடக்ஸ் இந்தியா பிரைவேட் லிமி டெட் என்ற இரண்டு நிறுவனங்களும் கடந்த மாதம் நாடு முழுவதும் விநியோகிக்கும் ஆணுறை யில் அளவை 60 விழுக் காடு குறைத்துள்ளது.  இது குறித்து அந்த நிறு வனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள் ளது  அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது,  மக ராஷ்டிரா நகரமான நாசிக்கில் ஜூலை 14 மகாகும்பமேளா நடை பெற உள்ளது இந்த கும்பமேளாவிற்காக எங்களது உற்பத்தில் 47 விழுக்காடு நாசிக் நக ரத்திற்கு அனுப்பியுள் ளோம். ஆகவே முன்னேற் பாடான இதர மாநிலங் கள் அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ளவேண்டு கிறோம் என்று அனுப்பி இருந்தது.

பாகுபலிக்கு கேரளாவில் எதிர்ப்பு? ஷங்கரின் ஐ, கேரளாவில் 200 திரையரங்குகளில் வசூல் செய்ததுபோல் மீண்டும் வசூலிக்க ????

இன்று, பாகுபலி படம், உலகம் முழுக்க 4000 திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆரவாரம் எல்லாம் கேரளாவில் இல்லை. அங்கு மலையாளத்தில் டப் செய்யப்பட்டு 200 திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த பாகுபலி, 50 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸாகியுள்ளது. காரணம், கேரளத் திரையுலகில் இப்படத்துக்கு எழுந்த எதிர்ப்புதான். மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் இந்தப் படத்தால் நேரடி மலையாளப் படத்துக்கு வருங்காலத்தில் பாதிப்பு வரும் என்பதால் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 
கேரளாவில் பாகுபலி படத்தை குளோபல் யுனைடெட் மீடியா வெளியிடுகிறது. பெரிய அளவில் படம் வெளியிடப்படுவதால், இதற்கு கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாலசந்தருக்கு சிலை? கூடவே நடிகை பிரமிளாவுக்கும் வையுங்க! பாலச்சந்தரை விட அவுக மேல்!

Director-K-Balachanderநல்லது. ‘பாலசந்தருக்கு சிலை வைக்க வேண்டும். தெருவுக்கு அவர் பெயர் வைக்க வேண்டும்’ என்று அவரைப் பெரிய தியாகிபோல் சித்தரித்துக் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. முதலில் பாலசந்தருக்கு ‘பாலசந்தர்’ என்ற பெயரை வைங்க. ‘இயக்குர் சிகரம்’, ‘காலத்தை வென்ற கலைஞன்’ இன்னும் பல பெயர்களால் தான் அவர் குறிக்கப்படுகிறார்.
என்ன பெரிய தியாகம் பண்ணார்? ஒரு வைதிகப் பார்ப்பனரை விட மிக மோசமான பார்ப்பன உணர்வு கொண்டவராகதான் தன் படங்களை எடுத்ததார். இடஒதுக்கீடு எதிர்ப்பு, மதமாற்ற கண்டிப்பு, தமிழின் முதல் முழு நீள முஸ்லீம் எதிர்ப்புப் படமான ‘ரோஜா’ தயாரிப்பு.. இதுக்கெல்லாமா சிலை வைப்பாங்க?
தன்னைத் திமுக அல்லது அண்ணாதுரையின் ஆதரவாளராகச் சில படங்களில் சித்தரித்துக் கொண்டதெல்லாம், பெரியார் எதிர்ப்பின் பின்னணிதான். அண்ணாவை உயர்த்துவதே பெரியாரை மட்டம் தட்டுவதற்காகதான்.

Airport டிசைன் பிடிக்காததால் ஆர்கிடெக்டை போட்டுத் தள்ளிய வட கொரிய அதிபர்

 புதிய முனையங்களை வடிவமைத்த நிபுணரை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. வட கொரியா தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள பியோங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் 2 புதிய முனையங்கள் கட்டப்பட்டுள்ளன. கண்ணாடி சுவர்கள் கொண்ட அந்த முனையங்கள் பற்றி தான் உலக மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 1ம் தேதி தான் அந்த முனையங்களின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தது.  இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு முனையத்தின் வடிவமைப்பு பிடிக்கவில்லையாம். வடிவமைப்பாளர் மா வன்-சுன் தனது அரசின் உத்தரவை மனதில் வைத்து செயல்படாமல் தவறு செய்துவிட்டதாக கிம் ஜோங் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மா வன்-சுன் மாயமாகியுள்ளார். அவர் ஒன்றும் மாயமாகவில்லை, கிம் ஜோங் உன் தான் அவருக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியிருப்பார் என்று கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் - இலங்கை இடையே பாலம், சுரங்கப்பாதை. ரூ.22,000 கோடியில் மத்திய அரசு புதிய திட்டம்..


டெல்லி: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு துவங்கவுள்ளது. 22,000 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையும், கடலுக்கு மேல் பாலமும் அமைக்கப்பட உள்ளது. rameswaram bridge டெல்லியில், சாலை போக்குவரத்து தொடர்பாக நேற்று நடந்த மாநாட்டில், மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார். மாநாட்டுக்குப் பிறகு நிதின் கட்கரி கூறியதாவது.. அண்டை நாடுகளுடன், வர்த்தக ரீதியான உறவை பலப்படுத்த, போக்குவரத்து இணைப்பு வசதி முக்கியமானதாக கருதப்படுகிறது.

வியாழன், 9 ஜூலை, 2015

ராஜேந்தர்: சிம்புவுக்கு எதிராக சதி நடக்கிறது! அச்சனும் மோனும் கொஞ்சம் கூடி முக கண்ணாடி நோக்கினால் மதி?

சிம்பு நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள வாலு படம் ஜூலை 17-ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட உள்ளது.
இந்த நிலையில், வாலு' படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்டது. 'தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்கள் நிறுவனத்துக்கு வழங்குவதாக 2013-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது வேறு நபர் மூலமாக படத்தை வெளியிட உள்ளார்கள். எனவே வாலு படத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

வியாபம் ஊழல், 42 வது மரணம் ! மத்திய பிரதேஷ் சாட்சி காவலரும் மரணம்!


'வியாபம்' ஊழல் வழக்கில் சாட்சியாக இருந்த போலீஸ் காவலர் திடீர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், சாட்சிகள் என மர்மமான முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப்பிரதேச மாநில தொழில் முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத் தேர்வுகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்த ஊழலில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இது ஊழல் வழக்கை தற்போது மாநில உயர்நீதி மன்ற மேற்பார்வையின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், சாட்சிகள் என அடுத்தடுத்து பலரும் மர்மமான முறையில் மரணம் அடைந்து வருகின்றனர்.

2018ல், இந்தியா வில் 4.37 லட்சம் கோடீஸ்வரர்கள் அல்ல அல்ல கொள்ளைக்காரர்கள்?

அப்போ வறுமை கோடு அழிஞ்சு போய்டுமா? புதுடில்லி: 'வரும் 2018ல்,
இந்தியா வில் 4.37 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பர்; 2023ல் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும்' என, புதிய ஆய்வு கூறுகிறது. இதுகுறித்து, சிங்கப்பூரைச் சேர்ந்த 'வெல்த் எக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல்கள்: சொத்து உருவாக்கல் அடிப்படையில், அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவின் காலமாக இருக்கும். கடந்த ஆண்டில், இந்தியாவில் 6.3 கோடி ரூபாய் அல்லது அதற்கு அதிக மதிப்பில் சொத்துடைய கோடீஸ்வரர் எண்ணிக்கை 2.5 லட்சம். முந்தைய ஆண்டை விட, 27 சதவீத புது பணக்காரர்கள் உருவாகி உள்ளனர்; வரும் 2018ல், இந்த எண்ணிக்கை, 4.37 லட்சமாக உயரும்; 2023ல், அதை விட, இரு மடங்கு கோடீஸ்வரர்கள் இருப்பர். இந்தியாவில் சிறப்பான சீர்திருத்தங்களை அமல்படுத்தி வரும் புதிய அரசு, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன் காரணமாக, புதிய உத்வேகத்துடன் நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவும், தென் ஆப்ரிக்காவும், குறிப்பிடத்தக்க வகையில், புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கும் நாடுகளாக திகழும். இவ்வாறு, 'வெல்த் எக்ஸ்' நிறுவன ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது dinamalar.com

சுஷ்மா சுவராஜ், லலித் மோடி – வசுந்தரா ராஜே! பா.ஜ.க டவுசரை உருவிவிட்டனர்.

லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.லித் மோடி – சுஷ்மா சுவராஜ், லலித் மோடி – வசுந்தரா ராஜே உறவு விவகாரங்களில் அம்பலத்துக்கு வந்திருக்கும் திரைமறைவு இரகசியங்கள் பா.ஜ.க.வோடு, ஊழலுக்கு எதிரானவராகவும், வலிமையான தலைவராகவும் முன்நிறுத்தப்பட்ட நரேந்திர மோடியின் டவுசரையும் உருவிவிட்டன. லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே – இந்த மூவரில் யார் மீது நடவடிக்கை எடுத்தாலும், அது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொண்டது போன்ற நிலையை உருவாக்கிவிடும் என்ற நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்ட மோடி, வழக்கமாக காது வரை கிழியும் தன் வாய்க்குப் பூட்டுப்போட்டு “மன்மோகன் சிங்” ஆகிவிட்டார். அவரது அமைச்சர்களெல்லாம் ஊடகங்களின் கண்ணில் படாமல் தப்பித்து ஓடுகின்றனர்.
அப்பாடக்கராக முன்நிறுத்தப்பட்ட மோடியின் டவுசரை உருவிய மும்மூர்த்திகள் : லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.

சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !

மோடியின் செல்ஃபி ஆசனம்பொதுவாக யோகிகள் எனப்படுவோர் ஊனுடலை வெறுத்தவர்கள் என்றே கூறப்படுகின்றனர். ஆனால், இன்று புழக்கத்தில் இருக்கும் யோகாவோ, இதற்கு நேரெதிரான பொருளில், மூட்டு வலி, முதுகு வலி போன்ற ஊனுடல் சார்ந்த பிரச்சினைகளுக்கான மருந்தில்லா வைத்தியமாகவும், உடல் பருமனைக் குறைத்து அழகைப் பேணும் கலையாகவும் பயன்பட்டு வருகிறது.
பொய் புரட்டுகளால் கட்டமைக்கப்பட்ட இந்து பாரம்பரியம் குறித்த பார்ப்பன பாசிஸ்டுகளின் பெருமிதமும், தன்னை தேசத்தின் மீட்பனாகக் கற்பித்துக் கொண்ட மோடி என்ற வெட்கங்கெட்ட அற்பவாதியின் சுய விளம்பர மோகமும் கூடிப் பெற்றெடுத்திருக்கும் கேலிக்கூத்துக்குப் பெயர் – “சர்வதேச 
யோகா தினம்.
“கழிவறைக்கு ஒரு ஐ.நா. தினம் இருக்கும்போது, யோகாவுக்கு ஒரு தினம் இருக்கக்கூடாதா?” என்று கேட்டிருக்கிறார் ரவி சங்கர்ஜி. பொருத்தமான கேள்விதான்!
வருடம் 365 நாட்களுக்கும் ஏதாவது ஒரு தினம் என்று ஐ.நா. அறிவிக்கத்தான் செய்கிறது. இப்படி ஐ.நா. அறிவிக்கும் தினங்கள் குறித்து யாரும் பெருமை கொள்வதில்லை. ஆனால், மோடி பெருமை கொள்கிறார். “இது உலக அரங்கில் இந்தியா பெற்றிருக்கும் அங்கீகாரம்” என்றும், “இதன்மூலம் பாரதம் உலகத்துக்கே வழிகாட்டுகின்ற விசுவ குரு” ஆகிவிட்டதாகவும் பீற்றிக் கொள்கிறார். காஞ்சி சங்கராச்சாரி தன்னைத்தானே ஜெகத்குரு என்று கூறிக்கொள்வதைப் போல!

தேர்தல் : 1000 டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பை சட்டமன்றத்தில் ஜெ. வெளியிடுவாரு?

"ஹலோ தலைவரே... …முதல்வரான பிறகு எம்.எல்.ஏ.வாகி சாதனை படைச்ச ஜெ., சனிக் கிழமையன்னைக்கு அதற்கான பதவிப்பிரமாணம் செஞ்சிக்கிட்டதும் கொடநாடு போவாருன்னு எதிர்பார்க்கப்பட்டது.'"அது நடக்காததால பலவித யூகங்களோடு பரபரப்பாயிடிச்சே.சனிக்கிழமை எம்.எல்.ஏ.வா ஜெ. பதவியேற்கிறதுக்காக காலை 10.40க்கு கார்டனிலிருந்து கிளம்பினார். முன்பெல்லாம் ஸ்பீடா போகுற அவரோட கான்வாய் இப்ப 40 கி.மீ. ஸ்பீடுக் குள்ளேதான் கோட்டைக்குப் போனது. அங்கே அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களெல்லாம் உற்சாக வரவேற்பு கொடுத்தாங்க. ஜெ.வை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், டி.ஜி.பி அசோக்குமார், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சி.எம். செல் தனி அதிகாரி இன்னசன்ட் திவ்யா எல்லாரும் பொக்கே கொடுத்து வரவேற்றாங்க. யார்கிட்டேயும் பேசாம சபாநாயகர் அறைக்குப் போனாரு ஜெ.  அவர் பதவியேற்றப்ப மந்திரிகள் கைதட்டினாங்க. ஆனா இந்த நிகழ்ச்சியை கவரேஜ் பண்ண மீடியா, ஃபோட்டோகிராபர்ஸ் யாரையும் உள்ளே அனுமதிக்கலை. அரசாங்கம் கொடுத்த ஃபோட் டோக்கள்தான் மீடியாக்களில் வெளியானது.''

மலப்புரம்:13 வயது சிறுமியை 40 பேர் பாலியல் பலாத்காரம் தாய் உடந்தை? 12 பேர் கைது!.


திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது கணவனுடன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள ஒரு பள்ளிக்கு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் அண்மையில் சென்றிருந்தனர். பிற ஆண்களிடம் எப்படி பழக வேண்டும்?.. பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகாமலிருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து ஆறாம் வகுப்பு மாணவிகளிடையே அவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது, 13 வயது சிறுமி அந்த அதிகாரிகளிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்தாள். தனது தாயார் இரண்டாவதாக ஒரு நபரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது துணையுடன் தன்னை கடந்த 2 ஆண்டுகளாக பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், தாயின் இரண்டாவது கணவரின் மகன் உள்பட சுமார் 40 பேர் இதுவரை தன்னை பலாத்காரம் செய்து, சீரழித்ததாகவும் அந்த சிறுமி கண்ணீருடன் தெரிவித்தாள்.

புதன், 8 ஜூலை, 2015

அதிமுகவினர் 4 ஆண்டு வேதனை விளக்கக் கூட்டம் நடத்தலாம்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் | கோப்புப் படம்
அதிமுகவினர் நான்கு ஆண்டு கால சாதனைகளை விளக்கி கூட்டம் நடத்த சொல்வது மிகவும் கேலிக்குரியது. அதை விட நான்கு ஆண்டு கால வேதனைகளை விளக்கிக் கூட்டம் நடத்தலாம்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக அரசின் நான்காண்டு கால சாதனைகளை விளக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு தவறான தகவல்களை வழங்கியிருக்கிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு மின்தேவை முற்றிலும் நிறைவு செய்யப்பட்ட மாநிலமாக தமிழகம் இப்பொழுது ஒளிர்கிறதாக கூறியிருக்கிறார். இதன்மூலம் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்திருக்கிறார்.

குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த பிளஸ்–2 மாணவி

 கோவையில் பரபரப்பு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் 16 வயதான பிளஸ்–2 மாணவி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவரது ஆண் நண்பருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு கிளம்புவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சீருடையில் பள்ளிக்கு கிளம்பினார். இருந்த போதிலும் திவ்யாவுக்கு காதல் தோல்வியால் பள்ளி செல்ல பிடிக்கவில்லை. இதையடுத்து காதல் தோல்வியை சக தோழிகளுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். தனது செல்போனை எடுத்து தோழிகள் 3 பேருக்கு அழைப்பு விடுத்தார்.

ஜாதிவெறி ? எச்சரிக்கையான வார்த்தை? வெட்டியது வெள்ளாள கவுண்டர் ஜாதி வெறி !

இவ்வளவு நடந்த பிறகும் கூட பொதுவாக ‘ஜாதி வெறி, ஜாதி வெறி‘என்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம். எந்த ஜாதி வெறி என்று சொல்ல முடியவில்லை என்றால், நம்மால் எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்? ‘கோகுல் ராஜ் கழுத்தை வெட்டியது வெள்ளாள கவுண்டர் ஜாதி வெறி‘ என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். அது ஜாதி வெறியர்களை மட்டும் குறிக்கிற சொல்தானே. மற்றவர்களுக்கு எப்படி கோபம் வரும்? வந்தால் அவர்களும் யுவராஜ் தானே.mathimaran.wordpress.com

ஜெயலலிதா, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் ! எல்லா நீதிபதிகளுக்கும் ஒரு விலை உண்டு.? அது உண்மை என்றே நீதிபதி குமாரசாமி நிரூபித்துக் காட்டினார்.

Sathyanarayana
FL12_kumaraswamy_j_2418095mநீதிபதி சத்யநாராயணா
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் அப்பழுக்கற்ற நேர்மையான நீதிபதிகளின் எண்ணிக்கை சொற்பமே.   அதுவும், முதுகெலும்போடு உள்ள நீதிபதிகள் மிகவும் குறைவு.  குறிப்பாக அரசுக்கு எதிரான வழக்கு என்றால், பெரும்பாலான நீதிபதிகள் பம்முவார்கள்.    அவர்கள் அவ்வாறு பம்முவதற்கு, அச்சம் மட்டும் காரணமல்ல.   அடுத்து தலைமை நீதிபதியாகவோ, உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ பதவி உயர்வதற்கு, அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தால், ஆபத்து வந்து விடுமே என்பதற்காக எவ்வளவோ சமரசம் செய்து கொள்ளும் நீதிபதிகள்தான் அதிகம். தொடக்க காலத்தில் நேர்மையாக இருக்கும் பல நீதிபதிகள், இது போன்ற காரணங்களால், நிலை தடுமாறி, நேர்மையிலிருந்து பிறழ்கிறார்கள்.   பிரேமானந்தா வழக்கை விசாரித்த நீதிபதி பானுமதி, பிரேமானந்தாவுக்காக ஆஜரான ராம் ஜெத்மலானியை பகைத்துக் கொண்டதால், அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய பதவி உயர்வு, நான்கு வருடங்களுக்கு மேல தாமதமானது.   

எம்எஸ் விஸ்வநாதன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. 87 வயதாகும் எம் எஸ் விஸ்வநாதனுக்கு சில தினங்களுக்கு முன் உடல் நிலை மோசமடைந்தது. அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.  சில தினங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால் தொடர்ந்த சீரற்ற முறையில் அவர் உடல்நிலை காணப்பட்டதால், மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது மகன்கள் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
Read more at: /tamil.filmibeat.com/ne

செவ்வாய், 7 ஜூலை, 2015

விசாகா சிங் : Facebookஇல் சொந்த முகத்தை காட்டக் கூட தைரியம் இல்லை உங்களுக்கு!

திரைநட்சத்திரங்களுக்கும் ரசிகர்களுக்குமிடையேயான தூரம் என்பது மிக நீ......ண்டதாக இருந்தது. ஆனால் இப்போதோ சமூக வலைதளங்களின் மூலமாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகையுடன் மிக நெருக்கமாகிவிட்டனர். இதனால் நடிகர்/நடிகைகளுக்கு பல லாபம் இருந்தாலும் சில சமயங்களில் பிரச்சனைகளும் ஏற்பட்டுவிடுகின்றன. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் திரையுலகில் அறியப்பட்ட நடிகை விகாஷா சிங் தனது படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார். அந்த படத்தில் ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்துவிட்டார். இந்த கீழ்த்தரமான செயலால் மனம் நொந்து அமைதியாக போய்விடாமல் அவரை காய்ச்சி எடுத்துவிட்டார் விஷாகா. ’சொந்த முகத்தை காட்டக் கூட தைரியம் இல்லை உங்களுக்கு. என்னைப் பற்றி பேசியது போல் உங்கள் வீட்டிலிருக்கும் பெண்களிடமும் பேசுவீர்களா?’ என விஷாகா கேட்டிருக்கிறார்.

இரட்டை மலை சீனிவாசன் (7.7.1860).!மைலாப்பூரில் ஜட்ஜ் வசிக்கும் பிராமணர் தெருவில் பறையர் வரக் கூடாது என்ற விளம்பரப் பலகை....

ஆரியர்கள் நமது தேசத்தில் குடியேறி வந்து ஜாதி கோட்பாடுகளை உண் டாக்கியபோது, இப்போது பறையர், பஞ்சமர், ஆதி திராவிடர்களென்னும் திராவிடர்கள் இசையாமல், பல துன்பங்களுக்குட்பட்டு கொண்டு, தனியே சேரி என்னும் தங்கள் கிராமங் களையுண்டாக்கி கோயில், குளம் குரு கிராம தலைவர் (நாட்டாண்மைக்காரர்) பஞ்சாயத்தார், வண்ணான், அம்பட்டன், சுடுகாடு, இடுகாடு, விதவா விவாகம், விவாக சம்பந்த விலக்கு முதலியவையுடன் கிராமங் களில் தனி சமுதாயமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 1895ஆம் வருஷத்தில் அச்சம்பவம் நேரிட்டது. அதவாது லண்டன் நகரில் சிவில் சர்வீஸ் பரீஷை நடந்து கொண்டிருந்தது. அந்த பரீஷையில் தேருகிறவர்கள் ஆங்கிலேயரே, அவர்கள் தான் கலைக்டர்களாகவும், இன்னும் தேச பரிபாலனத்தில் உத்தரவாதமான உயர்ந்த பதவிகளினின்று தேச பரிபாலனஞ் செய்து கொண்டு வந்தார்கள். அந்த பரீஷை இந்தியாவிலும் நடைபெற வேண்டுமென பிரிட்டிஷ் பார்லிமெண்டில் காங்கிரஸ்காரர்கள் ஒர் மசோதா சமர்ப்பித்தார்கள். அந்த பரீஷையானது இந்தி யாவிலும் நடந்தால் ஜாதி இந்துக்கள், உயர்தர உத்தி யோகங்களை வகித்து ஏழை ஜாதியாரானவர்களை தீண் டாதார் என்று இம்சிப்பார் களென பறையர் மகா ஜன சபையார் (இதன் செயலாளர் இரட்டைமலை சீனிவாசன்)

ஆருஷி இரட்டைக் கொலை வழக்கு: தீர்ப்பை டைப் செய்த நீதிபதியின் மகன்

இளம் பெண் ஆருஷி - ஹேம்ராஜ் இரட்டைக் கொலை வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ நீதிமன்ற நீதிபதி, தீர்ப்பின் முதல் சில பக்கங்களை  வழக்குரைஞரான தனது மகனை வைத்தே டைப் செய்ததாக புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் ஹிந்தி மட்டுமே தெரிந்தவர்கள் என்பதால், டைப் செய்ய ஆங்கிலம் தெரிந்த நீதிமன்ற ஊழியர்கள் கிடைக்கவில்லை. எனவே, தனது மகனை வைத்து தீர்ப்பை நீதிபதி எழுதியுள்ளார்.

எம்.ஜி.ஆரை பயன்படுத்தி தி.மு.க.வை உடைத்தார் இந்திரா ! மோகன் குமாரமங்கலம், கம்யூனிஸ்ட் பாலதண்டாயுதம் கூட்டு சதியில்???

Minister of steel in the Indira Gandhi government, Kumaramangalam was killed in a plane crash in New Delhi May 30, 1973சென்னை: எம்.ஜி.ஆர். மூலம் தி.மு.க.வை இந்திரா காந்தி உடைத்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைமுகமாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதி கூறியுள்ளதாவது: மொழி விவகாரம், மாநில சுயாட்சி விவகாரம், சோஷலிச அடிப்படையிலான திட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்களில் காட்டிய தொடர் அக்கறை, வடக்கு - தெற்கு பாகுபாட்டு அணுகுமுறையில் எங்களுக்கு இருந்த விழிப்புணர்வு, சர்வ வல்லமை படைத்த மத்திய அரசை எதிர்த்துத் துணிச்சலாக அறைகூவல் விடுக்கும் அணுகுமுறை இப்படி எவ்வளவோ விஷயங்கள் காரணமாக திமுக தொடர்ந்து குறிவைக்கப்பட்டிருக்கிறது.
திமுக ஒரு தேச விரோத சக்தி என்கிற அளவுக்கு கருத்துகளை விதைப்பதிலும், அவற்றை வளர்ப்பதிலும் எங்களுடைய இயக்கத்தின் தொடக்கக் கால எதிரிகள் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்கள்.

ஆயுத மோகத்தால் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சேர்ந்த பெண்கள் செக்ஸ் அடிமைகளான கொடுமை!

நியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் உள்ள பெண்கள் படை ஆட்களை பணியமர்த்துவது, உளவு பார்ப்பது, செக்ஸ் அடிமை சந்தைக்கு ஆட்களை அனுப்புவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருவது தெரிய வந்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் பெண் படையும் உள்ளது. ஆனால் அந்த பெண் படையில் உள்ளவர்கள் பிற தீவிரவாத அமைப்புகளைப் போன்று தாக்குதல் செயல்களில் ஈடுபடுத்தப்படுவது இல்லை. இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்தவரின் மனைவியான உம் சயப் அமெரிக்கப் படையிடம் சிக்கியுள்ளா

கிரேக்கம்: சர்வதேச கந்துவட்டிக்காரர்களே வெளியேறுங்கள்!

 கிரீஸ் நாட்டின் நெருக்கடி என்று ஊடகங்கள் தெரிந்தே தவறாகச் சொல்கின்றன. உண்மையில் ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதிகளான சர்வதேச நிதியம் (IMF), ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஏவிவிட்ட அடக்குமுறை இது. உலக வங்கியும் சர்வதேச நிதியமும் ஏழை நாடுகளை மீட்பதாக சொல்லி நிபந்தனைகள் பேரில் கடன் கொடுத்து ஒட்டச் சுரண்டி திவாலாக்கியதன் சமீபத்திய சான்று கிரீஸ். இவர்களிடம் வாங்கிய கடனில் சுமார் 10,000 கோடி ரூபாயை ஜூன் 30-க்குள் கட்ட கிரீஸால் முடியவில்லை. எனவே கூடுதலான நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அது ஊதியம், இதர உரிமைகளை ரத்து செய்வதாக அமையும். ஏற்கனவே கிரேக்க மக்களின் நலத்திட்டங்கள் பல ரத்து செய்யப் பட்டிருக்கின்றன. இவ்வளவிற்கும் சர்வதேச நிதியம் மட்டும் கிரீஸிலிருந்து வட்டியாக மட்டும் ஏராளமான பணத்தை அள்ளிச் சென்றிருக்கிறது. இந்நிலையில் இந்த அநீதியான, கொடூரமான நிபந்தனைகளை ஏற்பதா, மறுப்பதா என்று நாளை 05-07-2015 கிரீஸில் வாக்கெடுப்பு நடக்கிறது.

மோடி வடிவமைத்த Yoga day? ஜக்கி எப்படி பயன்படுத்தினார்? ஜாலிலோ ஜிம்கானா?

யோகா வியாபாரத்தின் ஒரிஜினல் முதலாளிகளான ஜக்கி, ரவிசங்கர், ராம்தேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் குருக்கள் தமது வழக்கமான முறுக்கும் எள்ளுருண்டயும் விற்று கல்லா கட்டி யிருக்கிறார்கள் 
யோகா தினத்தை ஐ.நா அங்கீகரித்த மாதத்தில் பல்வேறு தினங்களும் உள்ளன, ரசிய மொழி தினம் அவற்றில் ஒன்று. ஒரு மாதத்தில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட தினங்கள் இப்படி ஐ.நா-வால் ‘கொண்டாடப்’ படுகின்றன. அந்தந்த நாடுகளைச் சேர்ந்தோர் இதை உலகமே கொண்டாடுவதாக பீற்றுவது விளம்பரச் செலவைப் பொறுத்தது. கூடுதலாக ஸ்வயம் சேவக அம்பிகள், ‘இந்த தினம்தான் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவார் செத்துப்போன நாள், இதையே கொண்டாடுமாறு உலகத்தை மாற்றிவிட்டார் மோடி’ என்று பெருமையடிக்கிறார்கள். செத்ததுக்கு கொண்டாட்டம் என்றால் நாமும் கூட கொண்டாடலாம்.

2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆஜராகிய கே.கே.வேணுகோபால் விசாரணையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், மத்திய அமலாக்கத் துறையின் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகிய, கே.கே.வேணுகோபால், விசாரணையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தனித் தனியாக விசாரித்து வருகின்றன; இதனை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. மத்திய அமலாக்கத் துறை சார்பில், சிறப்பு வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர், கே.கே. வேணுகோபால் ஆஜராகி வந்தார். அமலாக்கத் துறை, மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இந்நிலையில், நிதி அமைச்சகம் அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது... உச்சநீதிமன்றத்தில், கே.கே.வேணுகோபாலின் செயல்பாடுகள், அமலாக்கத் துறையின் நிலைக்கு எதிரானதாகவும், முரண்பாடாகவும் உள்ளன. வழக்கின் விசாரணையில், அமலாக்கத் துறை அல்லது வருவாய் துறையின் அனுமதியின்றி, சில விஷயங்களை அவர் செய்து உள்ளார்.

திங்கள், 6 ஜூலை, 2015

வியாபம்' ஊழலில் தொடரும் மரணங்கள்: விசாரணைக்கு உதவிய 'டீன்' சாவு

புதுடில்லி:மத்திய பிரதேசத்தில், 'வியாபம்' ஊழல் தொடர்பான விசாரணைக்கு உதவிய டாக்டர், டில்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கின் முக்கிய சாட்சிகள் மற்றும் குற்றவாளிகள் உள்ளிட்ட, 40 பேர், இதுவரை மர்மமான முறையில் இறந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசுப் பணிகளுக்கான நபர்களை தேர்வு செய்வதற்கு, 'வியாபம்' எனப்படும், தொழில்முறை தேர்வு வாரியம் செயல்படுகிறது.இந்த வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதில் உள்ளவர்கள், பெருமளவில் பணம் பெற்று, ஆட்களை தேர்வு செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

திருமணம் ஆகாத தாய், குழந்தைக்கு பாதுகாவலராக இருக்கலாம்'' என சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: ""திருமணம் ஆகாத தாய், குழந்தைக்கு பாதுகாவலராக இருக்கலாம்'' என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. டில்லியில் கெஜட்டட் அதிகாரியாக இருப்பவர் அந்தப் பெண் (பெயர் வெளியிடப்படவில்லை). இவருக்கும் இன்னொரு ஆணுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு மாதங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தினர். அதற்குள் அப்பெண் கர்ப்பம் ஆனார். இரண்டு மாதங்கள் கழித்து, அந்த ஆண் அந்த பெண்ணை பிரிந்து சென்று விட்டார். அப்பெண்ணுக்கு குழந்தையும் பிறந்தது.உரிமை வேண்டும்: திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தைக்கு சட்டப்பூர்வ பாதுகாவராக இருக்க விரும்பிய அப்பெண், அதற்கு அனுமதி கேட்டு டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

வியாபம் ஊழலுக்கு மோடி பதில் சொல்ல தயங்குவது ஏன்? இளங்கோவன் கேள்வி

நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிற வியாபம் மெகா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிய சி.பி.ஐ.விசாரணை வேண்டும். அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம் செய்தில் அக்கறை காட்டுகிற நரேந்திர மோடி இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கிற மெகா ஊழலுக்கு பதில் சொல்ல தயங்குவது ஏன்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து ஓராண்டு முடிந்ததும், மதுராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை ஓராண்டு நடத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி நெஞ்சை உயர்த்தி, மார்தட்டி முழக்கமிட்டு பேசினார்.

ஜெ. விடுதலையை எதிர்த்து க.அன்பழகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்கக் கோரியும், அந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பளித்த பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்கா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்ற மூன்று பேருக்கும் 10 கோடியும் ரூபாயும் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

Flash Back:கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்துக்கும் ஜக்கி வாசுதேவுக்கும் எப்படி தொடர்பு ?.ட்ரூ வேல்யு ஹோம்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் நடத்தி...

JM130427_0065அதிமுக அரசு அமைந்ததும் உள்ளபடியே ஜக்கி நடுங்கித்தான் போனார்.   ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ நமது தொழிலுக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சினார்.  அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மூலமாக தூது அனுப்பினார்.  ஆனால் இவரது தூது எடுபடவில்லை.   இந்த நேரத்தில்தான், நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய ராமஜெயம் தலைமறைவாக இருந்தார்.    அப்போது தனக்கு அடைக்கலம் தருமாறு ராமஜெயம் ஜக்கியிடம் கோரியபோது, ஜக்கியின் ஈஷா ஆசிரமத்தினுள் இருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிய கட்டிடத்தினுள்  தாங்க வைத்தார்.    ஆனால் தற்போது, மன்னார்குடி மாஃபியாவோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, தனது சட்டவிரோத கட்டிடங்களை ஒழுங்குமுறைப் படுத்தும் முயற்சியில் ஜக்கி ஈடுபட்டு வருகிறார் என்பதுதான் வேதனையான செய்தி.கோடியில் புரளும் கேடி சமீபத்தில் வெளியான “சதுரங்க வேட்டை“ என்ற திரைப்படம் உலகளவில் நடக்கும் பல போலி வியாபார தந்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. அதில் கதாநாயகன் பேசும் ஒரு வசனம்< “நாம சொல்லுர ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மை இருக்கனும்”. இது தான்  “தன்னை உணர்ந்த ஞானி” என்று சொல்லித்திரியும் திருட்டுச் சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் தாரக மந்திரம். ஜக்கியிடம் உள்ள மிக மிக முக்கியமான திறன் அவரது வசீகரிக்கும் பேச்சுத் திறன்.  உண்மையில் கடவுள் நேராக வந்து, நம்மிடம் பேசினால் எப்படி கருணையோடு பேசுவார் என்று நாம் கற்பனை செய்து வைதிருக்கிறோமா… அதே போல பேசும் கைதேர்ந்த கேடிதான் ஜக்கி. 

O.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா நீதிமன்றத்தில் ஆஜர் ! பூசாரி மரணத்தில் ராஜாவின் பங்கு ?

 தேனி மாவட்டம், டி.கல்லுப்பட்டி யைச் சேர்ந்த கோயில் பூசாரி நாகமுத்து (23). இவர் கடந்த 2012-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர் பாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதர ரும், பெரியகுளம் நகராட்சித் தலைவருமான ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சித் தலைவர் பாண்டி உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக ஓ.ராஜா, பாண்டி, மணிமாறன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்ததால் ஓ.ராஜா, பாண்டி ஆகிய இருவரும் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.

நிலச் சட்டத்தில் அதிமுக நிலைப்பாடு என்ன?-ஜெயலலிதாவுக்கு மேதா பட்கர் கேள்வி!

சமூக ஆர்வலர் மேதா பட்கர் | கோப்புப் படம்
சமூக ஆர்வலர் மேதா பட்கர் | கோப்புப் படம்
நில கையகப்படுத்தல் சட்டம் தொடர்பான பிரச்சினையில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு சமூக ஆர்வலர் மேதா பட்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராக, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், குடிசை பகுதி மக்கள், கடலோர மக்களுக்கான அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

காஷ்மீரில் ராணுவவீரர் இளம்பெண்ணை வழிமறித்து நிர்வாணபடுத்தினார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பைக்கில் சென்ற இளம்பெண்ணை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வழிமறித்து பொதுமக்கள் மத்தியில் நிர்வாணப்படுத்தியுள்ளார். இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் இதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரவ விட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் உள்ள ஜகனூ பகுதியில் இளம்பெண் ஒருவர் வாலிபருடன் பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றுள்ளார்.  அப்போது ராணுவ வீரர் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை வழி மறித்து தகாத முறையில் நடந்துள்ளனர். அந்த இளம் பெண் 5 பேர் கொண்ட கும்பலிடம் எதிர்ப்பு தெரிவித்து போராடி உள்ளார்.

காதலுக்கு எதிரான சாதி வெறியை எதிர்த்து சுப.வீரபாண்டியன் கண்டன ஆர்ப்பாட்டம்


சுப.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், ’’அண்மைக்காலமாக காதலுக்கு எதிரான சாதிய வெறி மிகுதியாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக, தலித் மக்களுக்கு எதிரான அணி திரட்டல்கள் நடைபெறுகின்றன. தங்கள் வீட்டுப் பெண்களைக் காதலிக்கும் இளைஞர்களைப் படுகொலை செய்வது கை, கால்களை வெட்டுவது போன்ற மனிதநேயமற்ற காட்டுவிலங்காண்டிக் காலச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், விழுப்புரம் செந்தில் என்று பட்டியல் நீள்வது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதாக உள்ளது. இவைபோன்ற சாதிய வெறியாட்டங்களைக் கண்டித்து, 09-07-2015 வியாழன் காலை 10 மணிக்கு, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. சாதி வெறியை எதிர்க்கும் மனித நேயர்கள், ஜனநாயகவாதிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார். nakkheeran.in

மின் வாரியம் அதானி' குழுமம் ரூ.4,500 கோடி ஒப்பந்தம் ! சூரிய மின்சாரம் 648 மெகாவாட் தயாரிக்க திட்டம்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில், 4,536 கோடி ரூபாய் முதலீட்டில், அதானி குழும நிறுவனங்கள், ஐந்து சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க உள்ளன. இவற்றில் இருந்து, 648 மெகாவாட் மின்சாரத்தை, தமிழக மின் வாரியம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், 2014 செப்டம்பர், 12ம் தேதி நிர்ணயித்துள்ளபடி, யூனிட் ஒன்றுக்கு, 7 ரூபாய் ஒரு பைசா என்ற விலையில், சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய, ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒப்பந்தம்: அந்த வகையில், 436 மெகாவாட் அளவிற்கு, சூரிய சக்தி மின்சாரம் வாங்க, 31 உற்பத்தியாளர்களுடன், தமிழ்நாடு மின் வாரியம், ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.இந்நிலையில், அதானி குழும நிறுவனம் சார்பில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில், 4,536 கோடி ரூபாய் மதிப்பில், சூரியசக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் இருந்து, 648 மெகாவாட், சூரியசக்தி மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின் வாரியம், முடிவு செய்துள்ளது.அம்பானி போல அடானியும் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கட்டும்...

மாணவிக்கு 100 தோப்புகரணம் தண்டனை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்


திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலதாமதமாக வந்த மாணவியை தோப்புக்கரணம் போட வைத்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவி கடந்த திங்கள் கிழமை பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியை பாப்பாத்தி 100 தோப்புக்கரணம் போட வைத்ததாக கூறப்படுகிறது.
பள்ளியில் இருந்து வீடு திரும்பி சென்ற மாணவியால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதன் கிழமையன்று பள்ளிக்கு வந்த மாணவியை இரும்பு சத்து மாத்திரையை சாப்பிட வேண்டும் என தலைமை ஆசிரியை பாப்பாத்தி கூறியுள்ளார். மாத்திரை சாப்பிட்டால் தனக்கு வாந்தி வருவதாகவும், வயிற்று போக்கு ஏற்படுவதாகவும் கூறி மாத்திரை சாப்பிட அவர் மறுத்துள்ளார்.

Chotta shakeel: தாவூத் இந்தியா வர விரும்பியது உண்மை தான்! அத்வானியும் சரத்பவாரும் தடுத்துவிட்டனர்!

புதுடில்லி: 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளிதழுக்கு, மும்பை நிழலுலக தாதாக்களில் ஒருவனான சோட்டா ஷகீல், அளித்த பேட்டியில், 'மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இந்திய அரசால் தேடப்படும் தாவூத் இப்ராகிம், இந்தியா வர விரும்பியது உண்மை தான். ஆனால், அப்போதைய மகாராஷ்டிர முதல்வர் சரத் பவார் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த தகவலை, என் தலைவனான தாவூத் இப்ராகிம், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியிடமும் தெரிவித்துள்ளார்' என, கூறியிருந்தான். இதையடுத்து, இந்த விவகாரம் பரபரப்படைந்தது. மும்பையில், 1993ல், பயங்கர தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதும், குடும்பத்துடன் பாகிஸ்தான் தப்பிச் சென்ற தாவூத் இப்ராகிம், இப்போது, பாகிஸ்தானின் கராச்சி நகரில் தான் உள்ளார் என, இந்திய உளவு அமைப்பு கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. எனினும், அதை, பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. தாவுத்  அப்படியே குமாரசாமிக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து கேசுகளை ஒருவழிப்பன்னி  தேர்தலில் நின்று மத்திய அமைச்சராகவும் ஆகிட அரியவாய்ப்பு இன்னும் உள்ளது .

வேறு சாதி பெண்ணை காதலித்த தலித் இளைஞரின் கை,காலை துண்டித்த கொடூரம்

விழுப்புரம் : வேறு சாதி பெண்ணை காதலித்த தலித் இளைஞரின் கை காலை துண்டித்த மர்ம கும்பலை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையை சேர்ந்தவர் தலித் இளைஞரான செந்தில். இவர் விழுப்புரம் பகுதியில் ஓடும் தனியார் மினி பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் மினி பேருந்தில் செல்லும்போது தோகைப்பாடியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் அதே பேருந்தில் தினமும் பயணம் செய்து வந்தார்.  அப்போது செந்திலுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. வழக்கம்போல பெண்ணின் பெற்றோர் கொந்தளித்தனர். இதனால் அந்த மாணவி செந்திலுடன் பேசுவதை திடீரென நிறுத்திக்கொண்டார்.