சனி, 29 ஆகஸ்ட், 2015

அண்ணன் உயர்ஜாதி பெண்ணை காதலித்ததால் சகோதரிகளை கற்பழித்த பஞ்சாயத்து!


உத்திர பிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் .ரவி என்பவர் அந்த கிராமத்தி்ல  உயர் சாதி பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கிராமதிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த உயர் சாதியினர் அவனை பழிவாங்குவதற்க்காக அவரது குடும்பத்தில் உள்ள அவரது சகோதரிகளை கற்பழித்து  நிர்வாணப் படுத்தியுள்ளனர். இதுகுறித்து பலமுறை  மாவட்ட காவல் துறைக்கு பாதிக்கப்பட்ட சகேதாரிகள் புகார் செய்துள்ளனர். ஆனால் அந்த உயர் சாதியினருக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கததால்.தற்பொழுது பாதிக்கப்பட்ட  சகோதரிகள்  உச்ச நீதிமன்றத்தில் நாடியுள்ளார்.  இதுகுறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம் இரண்டு வரத்துக்குள் பாதில்லளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது http://tamil.webdunia.com

நடிகர் மாதவன் மீது நில ஆக்கிரமிப்பு புகார்! திண்டுக்கல் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம்,.......

 வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் மாதவன் மீது விவசாயிகள் புகார்! திண்டுக்கல்: 50 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலை நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் டி.என். ஹரிஹரன் தலைமை வகித்தார். இதில் பாலசமுத்திரம் பகுதி விவசாயிகள் மகாலட்சுமி, கணேசன் ஆகியோர் பேசுகையில், "பழநி அருகே உள்ள விலாங்கோம்பை தேக்கன் தோட்டம் பகுதியில் டிடிஎல் பாசன வாய்க்கால் உள்ளது. கொடைக்கானல் மலையில் இருந்து பழநி கண்மாய்களுக்கு இந்த வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரால், தேக்கன் தோட்டம் பகுதியில் 50 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இப்பகுதியில் 7 ஏக்கர் நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் மாதவன் வாங்கினார். அதன் பிறகு மாதவன் தரப்பினர் 50 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து மின்வேலி அமைத்துள்ளனர்.  இந்த ரங்கநாதன் சரோஜாவின் மேட்டுக்குடி மகன்/நடிகன் பேசுவது சதா தத்துவம்! செய்வது பக்கா பார்ப்பனதனம்!இவரு தம்பி படத்தில புரட்சி பத்தி அந்த முழக்கு முழக்குவார்...  

தாய்லாந்து கோவில் குண்டுவெடிப்பு....துருக்கிய பயங்கரவாதி சிக்கினான்?

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மா கோயில் வளாகத்தில் 20 உயிர்களை பலிவாங்கிய பயங்கர குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகிக்கப்பட்ட நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிரசித்தி பெற்ற பிரம்மா கோயில் உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். கடந்த 17-ம் தேதி இரவு இந்த கோயில் வளாகத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 123 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் 11 பேர் வெளிநாட்டவர்கள். 5 பேர் சீனாவை சேர்ந்தவர்கள், 4 பேர் மலேசியாவை சேர்ந்தவர்கள், ஒருவர் இந்தோனேஷியா, இன்னொருவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் ஆவர்.< அந்த கோயில் வளாகத்தை ஒட்டியுள்ள சாலையில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் குண்டுவெடிப்பு நடந்த சமயத்தில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, மஞ்சள் நிற டிசர்ட் அணிந்த வாலிபர் ஒருவர், தோள்பையுடன் கோயில் வளாகத்துக்கு வருவதும், சில நிமிடத்தில் வளாகத்தில் பையை வைத்து விட்டு அங்கிருந்து நைசாக கிளம்பி செல்போனில் பேசியபடி ஓடுவதும் பதிவாகி இருந்தது.

மீண்டும் ஜெயலலிதாவே ஆட்சி ! அ.தி.மு.க.வுக்கு 34.1% தி.மு.க.வுக்கு 32.6% ....கருத்து கணிப்பு!

 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் ஆய்வக இயக்குனர் தலைமையில்  கருத்து கணிப்பு ஒன்றை நடத்தபட்டது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,370 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த கருத்து கணிப்பில் பேராசிரியர்கள் மாணவர்கள் என  400 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1% பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.6% பேர் வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
தே.மு.தி.கவுக்கு 4% பேர் ஆதரவளித்துள்ளனர். பா.ம.கவுக்கு 3% பேர் ஆதரவைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி 2.9% பேர் ஆதரவு பெற்று உள்ளது.  திமுகவில் இருக்கும் மிச்சம் மீதி திறமையாளர்களையும் ஸ்டாலின் ஓரங்கட்டி துரத்துவார்? பிரதான எதிர்க்கட்சியாகவாவது வருமா? ம்ம்ம்ம் என்னத்தை சொல்ல? 

நடிகர் சங்க தேர்தல் விஷால் அணி வெற்றியை நோக்கி?

நடிகர் சங்க நிர்வாகம் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பினோம். அதன்காரணம் இப்போது எல்லோருக்கும் தெரியவந்திருக்கும். என நம்புகிறேன். சிவாஜிகணேசன் இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்உதாரணமாக இருந்தவர். அவருக்கு மணிமண்டபம் கட்டப்படுவது அனைத்து நடிகர்-நடிகைகளினுடைய விருப்பம். இந்த மணிமண்டபத்தை கட்டுவதற்கு காலதாமதம் செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. இளம் நடிகர்களை கொண்டு நாங்கள் கலைநிகழ்ச்சிகள் மூலமும் கூட நிதி திரட்டி மணிமண்டபம் கட்டியிருப்போம் அதை செய்யவில்லை. ஆனாலும், இப்போது தீர்வு கிடைத்துள்ளது இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி.

ஷீனா போரா கொலைசெய்யப்படும் பொழுது கர்பம்! இந்திராணியின் முதல் திருமணத்தை அம்பலபடுத்துவேன் என்று .......

மும்பை:நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, ஷீனா போரா கொலை வழக்கில் கைதான, இந்திராணி முகர்ஜியின், இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கடந்த 1997 முதல் 2007 வரை, ஸ்டார் இந்தியா 'டிவி' சேனலின் தலைமை நிர்வாகியாக இருந்தவர், பீட்டர் முகர்ஜி. இவரது இரண்டாம் மனைவி இந்திராணி; ஏற்கனவே, இரு முறை திருமணம் ஆனதை மறைத்து,பீட்டரை, மூன்றாவது கணவராக மணந்தார். அறிமுகம்:கடந்த 2012ல், முதல் கணவர் மூலம் பிறந்த ஷீனா போராவை, தன் சகோதரி என, அறிமுகம் செய்து, தன்னுடன் தங்க வைத்தார் இந்திராணி. இந்த ரகசியம் அறியாத, பீட்டரின் முதல் மனைவிக்கு பிறந்த ராகுல், ஷீனாவை காதலித்தார்; ஷீனா கர்ப்பமானதாக தெரிகிறது.   எல்லாருமே பல முறை திருமணம் புரிந்த நிலையில் அவர்களுக்கு பிறந்தவர்கள் மாத்திரம் உறவு முறைகளை மதிக்கணும்னு எதிர்பார்த்தால் எப்படி?

5ஆண்டுகளில் 30 க்கும் மேற்பட்ட தலித் இளைஞர்கள் காதலித்ததால் கொல்லப்பட்டுள்ளனர்! வேறு ஜாதிப் பெண்களை.....

‘தேசிய அளவில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெறும் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இம்மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் நீதிமன்றத் தலையீட்டிற்குப்பிறகே வழக்கு பதிவு செய்யப்படுகிறது. கடந்த அய்ந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 74 வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் 70 சதவிகித வழக்குகள் ஆதாரம் இல்லையென முடிக்கப்பட்டு விடுகின்றன. 10 சதவிகித வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வேறு ஜாதிப் பெண்களை காதலிக்கும் தலித் இளைஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. தமிழக நிதிநிலை அறிக்கையில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்படும் 18 சதவிகித நிதியில் 2 சதவிகிதம் மட்டுமே அவர்களுக்காக செலவிடப்படுகிறது.

நாசா எச்சரிக்கை: கடல் 3 அடிகள் வரை உயரும்! தண்ணீரில் மூழ்கபோகும் நாடுகள்.......Global Warming.....


புவி வெப்பமடைதலால் உருகும் பனி மலைகள், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2013-ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகளின் குழு கடல் மட்டம் உயர்வு பற்றி ஆய்வு நடத்தியது. அதில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது. கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா போன்ற பகுதியில், பனிப்பாறைகள் உருகியதால் கடல்மட்ட அளவு 3 அங்குலமாக உயர்ந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் 3 அடிகள் வரை கடல் மட்டம் உயர்ந்தால் அது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்தானதாக மாறும் என்று நாசா கவலை தெரிவித்துள்ளது. ஆனால் விஞ்ஞானிகளோ இனி இதை தடுத்து நிறுத்துவது என்பது மிகவும் காலதாமதமானது, அதற்கான காலத்தை நாம் எப்போதோ கடந்து விட்டோம் என்று ஆதங்கமடைகின்றனர் maalamalar.com

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அழகிரியை மீண்டும் கழகத்தில் சேர்க்க வேண்டும்: ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

தேனி மாவட்டத்தில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள திமுக இளைஞரணி மற்றும் வார்டு செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கடமலைக்குண்டு ஏ.எம்.ஏ., பண்ணையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் இளம்வழுதி பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குணசேகரன், முத்தாலாளம்பாறை ஊராட்சி மன்றத் தலைவர் பிச்சமணி, மகாராஜன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுக கிளைச் செயலாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திதில், மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும். தென் மண்டல அமைப்புச் செயலாளராக அவரை கழகத் தலைமை நியமிக்க வேண்டும். தென் மண்டலங்களில் உள்ள தொகுதிகளில் திமுக வெற்றிப் பெற வேண்டும் என்றால் மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பது அவசியம். கழகம் எப்படி போனால் என்ன அறக்கட்டளைதாய்ன் முக்கியம்? சோவியத் ஸ்டாலின் எப்படி எல்லாரையும் ஓரங்கட்டி தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டி ஜனநாயகத்தை அழித்து கம்யுனிசத்தை ஒருவழியாக்கி...,அதே வழியில்  திமுகவை எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாத நிலைக்கு .... 

அரபு நாட்டு அவலம்! 56 இலங்கை பெண்கள் தூதரகத்தில் தஞ்சம்....நாடு திரும்பினர்

வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்குச் சென்று அங்கு பல துன்பங்களை அனுபவித்து வந்த பெண்கள் சிலர் இன்று நாடு திரும்பினர்.இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.230 என்ற விமானத்தில் இன்று காலை 06.10 அளவில் 56 பெண்கள் நாடு திரும்பினர். இப்பெண்கள் சவுதி அரேபியா மற்றும் குவைட் ஆகிய நாடுகளுக்குச் சென்றதுடன் அங்கு பல துன்பங்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளனர். இதனை அடுத்து அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் தஞ்சம் புகுந்து இருந்த நிலையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் ! சுமார் 62 பேர் கொலை! நோ தற்கொலை???


ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.சுதிர் ஷர்மா – பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் இவரொரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். அனுதாபி. அம்மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்திவரும் சரசுவதி சிஷு மந்திர் என்ற பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தவர். சுதிர் ஷர்மாவின் தந்தை கூட்டுறவு பால் சங்கத்தில் எழுத்தராகப் பணியாற்றிக்கொண்டே, மாலை நேரத்தில் வீடுவீடாகச் சென்று பால் ஊற்றிக் கிடைத்த வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்றியவர். ஆனால், இன்று சுதிர் ஷர்மாவின் அந்தஸ்தே வேறு. 20,000 கோடி ரூபாய் மதிப்புமிக்க நிறுவனங்களின் அதிபர் அவர். சுரங்கம், கல்வி என அவரது தொழில் சாம்ராஜ்யம் பரந்து கிடக்கிறது.
சுதிர் ஷர்மாவின் “நல்ல காலம் (அச்சே தின்)” 2003-ல், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த பிறகு தொடங்கியது.

ஜெயாவிடுதலை புகழ் நீதிபதி குமாரசாமி மீது சொத்துகுவிப்பு புகார்!

பெங்களூரு:ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி, விதிமுறைகளை மீறி, பெங்களூருவிலும், மைசூருவிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக, சமூக ஆர்வலர் குழுவினர் புகார் எழுப்பியுள்ளனர்.தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து, 'கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே' என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஊழலுக்கு எதிராக போராடி வருகின்றனர். உத்தரவிடும்படி...: சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி, கடந்த, 24ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவர் மீது, சொத்து குவிப்பு புகார் கிளம்பி உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குமாரசாமியிடம் விசாரணை நடத்த உத்தர விடும்படி, ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே அமைப்பின் தலைவர் ராமலிங்க ரெட்டி, புகார் மனு அளித்துள்ளார்.  
முகத்தை பார்த்தாலே தெரிகிறது. சரியில்லை. ஜெயாவிடம் இருந்து எவ்வளவு கைமாறியது என்று  விசாரித்தால் எல்லாம் வெளியே வரும். . இனி எந்த ஒரு நீதிபதியையும் நம்ப முடியாது போல் இருக்கிறது.
நல்லா தேடுங்கப்பா எப்படியும் நூறு கோடி தேறும்னு பேசிக்கிறாங்க ! விபரம் வேணும்னா ஜெயாக்கிட்டேயும் கேக்கலாம்னே?

ஆஸ்திரியாவில் நின்றுகொண்டிருந்த லாரியில் குடியேறிகளின் 70 சடலங்கள்

ஆஸ்திரியாவின் பேர்கன்லேன்ட் மாகாணத்திற்குக் கிழக்கே, ஹங்கேரி எல்லையை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட லாரியொன்றிலிருந்து, குடியேறிகள் பலரது சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரிய நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆஸ்த்ரியாவில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட லாரி. மேற்படி லாரியின் குளிரூட்டப்பட்ட பகுதிக்குள், 20 முதல் 50 வரையிலான சடலங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் குடியேறிகளை பாதுகாப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியம் முழுமைக்குமான பொதுக்கொள்கையின் தேவையையும் மனித கடத்தல்கார்களுக்கு எதிராக போராடவேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்திக் காட்டியுள்ளதாக ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் ஜெஹானா மிக்ல் லின்டர் தெரிவித்துள்ளார்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட லாரியில் ஹங்கேரி நெம்பர் பிளேட் காணப்பட்டது.

குஜராத்தில் வெடித்தது இட ஒதுக்கீட்டு போர்! அங்கும் பெரியார் சென்றுவிட்டார் ! இனி விடமாட்டார்! தி க தலைவர் வீரமணி முழக்கம்!


இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மதுரைக்கு வந்து தோள் தட்டினார் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா அவரின் குஜராத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான கிளர்ச்சித் தீ! காந்தியார் மாநிலத்திற்கு பெரியார் சென்றுவிட்டார் அடிமை ஜாதிகள் இனி விடமாட்டார்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தமிழ்நாட்டில் மதுரைக்கு வந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா - இன்றோ அந்த அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான கிளர்ச்சித் தீ பற்றிக் கொண்டு விட்டது. ஆம் காந்தியார் மாநிலத்தில் பெரியார் நுழைந்துவிட்டார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சமூகநீதி எங்களுக்கும் தேவை என்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், மிக ஆவேசமாக போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது - பட்டேல்கள் என்ற பட்டிதார் வகுப்பினரால்.
1980-களில் இட ஒதுக்கீட்டை எதிர்த்த குஜராத்தில் இன்று இட ஒதுக்கீடு கேட்டுக் கிளர்ச்சி!

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

சீன வெடிவிபத்தில் Tata lost 5,800 Cars! டாட்டாவின் Jaguar Land Rovers சீனவெடி விபத்தில் எரிந்தது ....?


23-1440317750-17-1439808576-china-blast-02  சீன வெடிவிபத்தில் 5,800 ஜேஎல்ஆர் கார்களை இழந்துவிட்டோம்: டாடா மோட்டார்ஸ் 23 1440317750 17 1439808576 china blast 02சீனாவில், நடந்த வெடிவிபத்தில் 5,800 ஜாகுவார்- லேண்ட்ரோவர் கார்களை இழந்துவிட்டோம்,” என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், சீன துறைமுகத்தில் நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தில், பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெடிவிபத்தில், கார் நிறுவனங்களுக்கும் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான கார்கள் சேதமடைந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இந்த விபத்தில் ஜாகுவார்- லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான கார்கள் கருகி நாசமடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

குஜராத் கலவரம்! 10 பேர் பலி! இரண்டாவது நாளாக தொடர்கிறது..

அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் வன்முறை சம்பவம் இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு அரசுக்கு எதிராக நடத்திய பந்த், கலவரமாக வெடித்துள்ளது. இதனால் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முக்கிய நகரங்களில் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  9 காவல் நிலைய சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு கேட்டு ஹர்திக் பட்டேல் என்ற 21 வயது இளைஞன் சுமார் ஒரு லட்சம் பேரை ஒன்று திரட்டி போராட்டத்தை துவக்கினார். போராட்டத்தை தீவிரப்படுத்த நேற்று (புதன்கிழமை) முழு பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அதிகம் பதற்றம் நிறைந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

அடுத்த இலக்கு நான்தான்! star டிவி யின் நிறுவனர் மகன், மகளை கொன்று காட்டில் வீசிய இந்திராணி தன்னையும் கொலை...


ஸ்டார் இந்தியா’ தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவருடைய மனைவி இந்திராணி (வயது 43). இவர் ‘9 எக்ஸ் மீடியா’ என்ற தனியார் தொலைக்காட்சியின் நிறுவனர். இந்திராணி 2012-ம் ஆண்டு அவருடைய தங்கை ஷீனா போராவை கொலை செய்து மும்பையை அடுத்த ராய்காட் காட்டுப்பகுதியில் வீசியதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்திராணியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஷீனா போராவை தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். முதலில் கொலையான ஷீனா போரா தனது தங்கை என்று கூறிய இந்திராணி, போலீசாரின் தீவிர விசாரணையில் தான் பெற்றெடுத்த மகள் என்ற அடுத்த குண்டை தூக்கி போட்டார்.

பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கள்ள உறவு வைத்திருக்கிறது எனும் இளங்கோவனின் ஒரு வசனத்துக்காகத்தான்.....

jaya (1)ஜெயாவிடம் எகிறிய சு.சாமிக்கு இந்துஞான மரபின்படி அ.தி.மு.க. மகளிரணியை வைத்து கொடுத்த `வரவேற்பு’ இப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கிடைத்திருக்கிறது. “நாயே.. பன்றி.. ..மவனே!” இன்ன பிற ஜெயார்ச்சனைகள் தமிழகம் முழுவதும் எதிரொலித்து வந்தன. பிறகு போரடித்து விட்டதோ என்னமோ போதும் என்று அம்மாவே ஜாடை காட்ட ரத்தத்தின் ரத்தங்கள் நிறுத்தியுள்ளன.
சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் ஸ்டேசனில் பத்மினி என்ற பெண் காக்கி மிருகங்களால் குதறப்பட்டபோது “அந்தப் பெண் நடத்தை சரியில்லாதவர்” என்று கூறியவர் மாண்புமிகு அம்மா. அப்பேற்பட்டவர்கள் அறத்துக்காக சினமடைந்தனர் என்பதை அ.தி.மு.க அடிமைகளே கேலி செய்வர்.
பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கள்ள உறவு வைத்திருக்கிறது எனும் இளங்கோவனின் ஒரு வசனத்துக்காகத்தான் பெண்ணினத்தயே தரக்குறைவாக்கிவிட்டார் என்று பெட்ரோல் குண்டு வீசி, கட்சி ஆபிசை கல்லால் அடித்து, சாலைகளை மறித்து கொடும்பாவி எரித்து,

மதிமாறன்:இந்திய முஸ்லிம்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார் அப்துல்கலாம்.

இந்திய முஸ்லிம்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார் அப்துல்கலாம்.
ஒரு முஸ்லிம் உண்மையான இந்தியனாக இருக்க வேண்டுமென்றால் பகவத்கீதையைக் கொண்டாட வேண்டும். இந்து சாமியார்களை வழிபடவேண்டும். வேதங்களைப் போற்ற வேண்டும்.
‘நான் சைவம்’ என்று சொல்வதின் மூலமாக ‘மாட்டுக்கறி சாப்பிடுகிற முஸ்லிம் அல்ல’ என்பதை மறைமுகமாக வெளிபடுத்தி ‘பசுப் புனிதம்’ என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
‘அப்துல்கலாமை பார்த்தவது இங்கிருக்கும் முஸ்லிம்கள் திருந்துங்கள்’ என்று இந்து அமைப்புகள் இனி அறிவுரை சொல்லும், எச்சரிக்கும் பிறகு மிரட்டும்.
அப்துல்கலாமை எந்த அளவிற்குக் கொண்டாடுகிறார்களோ அந்த அளவிற்கு இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது….
விழித்துக் கொள்ளுங்கள் இஸ்லாமியர்களே, ‘முற்போக்காளர்களே’
ஒரு பேராபத்து இந்திய முஸ்லிம்களை அன்போடு அழைக்கிறது..
வரும் தேர்தலில் கலாமும் இந்து அமைப்புகளும் காட்டுவார்கள் தங்கள் பேரன்பை.

ஆ.ராசா:மோடி ஜெயலலிதா சந்திப்பில் நிச்சயம் உள்நோக்கம் இருக்கிறது!

கூடலுார்: ''2ஜி வழக்கில் என்னை எதுவும் செய்து விட முடியாது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசினார். நீலகிரி மாவட்டம், கூடலுார் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் ராஜா பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், கூடலுார் சட்டசபை தொகுதியில் நான் போட்டியிடுவதாக தகவல்கள் வருகின்றன. எதையும், தி.மு.க., தலைவர் கருணாநிதி முடிவு செய்வார்.கடந்த, 2013ல், என் உறவினர் வீடுகளில் சோதனை செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், 'ஒன்றுமில்லை' என தெரிவித்தனர். ஆனால், தற்போது என் மீது சொத்து குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளனர். 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என கூறியவர்கள், தற்போது, 27 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக கூறுகின்றனர். இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். பிரதமர், முதல்வர் சந்திப்பு சரியாக இருந்தாலும், அதில், நிச்சயம் உள்நோக்கம் உள்ளது. மத்திய அமைச்சர்களின் மீதான புகார் குறித்து, பிரதமர் மோடி வாய் திறப்பதில்லை.தினமலர்.com

ஸ்டார் டிவி இந்திராணி தன் மகளையே கொலை செய்தார்! Indrani Mukerjea in police custody: Wife of ex-Star TV CEO


முறையற்ற காதலால் மகளை கொன்று உடலை காட்டில் வீசிய வழக்கில் மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி பெண் நிறுவனர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த இந்த கொலை பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனர் ‘ஸ்டார் இந்தியா’ தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி. இவர் ‘9எக்ஸ் மீடியா’ என்ற தனியார் தொலைக்காட்சியின் நிறுவனராக உள்ளார்.
இந்திராணியின் கார் டிரைவர் ஷாம் மனோகர் ராய் (வயது 43). இவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அவர் கொலை வழக்கிலும் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஷாம் மனோகர் ராயை கடந்த 21–ந் தேதி மும்பை கார் போலீஸ் நிலைய போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதிர்ச்சி தகவல்கள் இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் வெளியிட்டார். 9எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனரான இந்திராணி அவரது தங்கை ஷீனா போராவை படுகொலை செய்து மும்பையை அடுத்த ராய்காட் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வீசியதாகவும், அதற்கு தான் உதவியதாகவும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குஷ்புவின் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது! வாழ்த்துக்கள்!

தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செயல்பட்டு வருகிறார். இன்னும் மூன்று மாதத்தில் இளங்கோவனை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தலைவராக வர வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் குஷ்பு பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.nakkheeran,in

புதன், 26 ஆகஸ்ட், 2015

பாடகி சித்ரா: கேரளா பாடகர்களுக்கு மற்ற மாநிலங்களில் வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை! You too Chithra?

பல ஆயிரக்கணக்கான தமிழ் பாடல்களை பாடும் வாய்ப்பு கிடைத்த சித்ரா இப்படி கூறுகிறார். இவர் இளையராஜாவை பந்தம் பிடித்து பல தமிழ் பாடகிகள் பலருக்கும் கிடைக்காத வரம் எல்லாம் பெற்றவர்! வேறொன்னும் இல்லை எல்லாம் இளையராஜா செஞ்ச சதி!  மலையாளத் திரையுலகத்தில் ஸ்ரேயா கோஷலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று பாடகி சித்ரா பேசியதாக நேற்று இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் நீண்டகாலமாகப் பாடிவரும் சித்ரா இப்படிப் பேசலாமா என்று பலர் அதிருப்தியுடன் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள்.
உண்மையில் சித்ரா இதுபற்றி என்ன பேசினார்?
கேரள சுற்றுலாத்துறை சார்பாக திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகைக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் சித்ரா கலந்துகொண்டார். அவரிடம் மலையாளத் திரையுலகில் மற்ற மொழிப் பாடகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

150 ல் தொடங்கி ரூ. 30 கோடி சாம்ராஜ்யத்தை நிறுவிய மும்பை தமிழனின் சாதனை கதை!

உயர் கல்வி படிக்க வசதியின்றி, தெரிந்தவர் ஒருவர் 1200 ரூபாய் சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி, 1990 ல் மும்பைக்கு வேலை தேடி சென்றார் 17 வயது பிரேம் கணபதி. மும்பை சென்று சேர்ந்த உடன்,  ரயில் நிலையத்திலேயே தான் வைத்திருந்த 200 ரூபாயையும் பிக்பாக்கெட் திருடனிடம் பறிக்கொடுத்து விட்டு நின்றார். தன்னம்பிக்கையை தவிர வேறு எதுவும் கையில் இல்லாமல் அன்று உதவியற்று நின்ற பிரேம் கணபதி, இன்று 30 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை கட்டி வளர்த்திருப்பது, முன்னேற நினைப்போருக்கெல்லாம் ஒரு தன்னம்பிக்கை டானிக்.
ஹிந்தியும் புரியாமல், கையில் காசும் இல்லாமல் அன்று ரயில் நிலையத்தில் நின்ற அவருக்கு உதவும் வகையில், ஒரு தமிழர் அவரை அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்து சென்று, வந்து போவோரிடம் பணம் கேட்டு, சென்னைக்கு ஒரு டிக்கெட் எடுத்து கொடுக்க ஏற்பாடு செய்தார். ஆனால் தமிழ் நாடு திரும்பி வர பிரேமுக்கு மனம் இல்லை. வாழ முயன்றுதான் பார்ப்போமே என்ற உந்துதலோடு வேலை தேடினார்.

மத்திய அரசின் மத அடிப்பைடயிலான புள்ளிவிபரம் ஆபத்தானதா?

மத அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட வேண்டுமென, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து, மத அடிப்படையிலான மக்கள் தொகை விவரத்தை, மத்திய அரசு வெளியிட்டது. கடந்த 2011ல் இந்தியாவின் மக்கள் தொகை, 121.09 கோடி. இதில் இந்துக்கள், 96.63 கோடியும்; முஸ்லிம்கள், 17.22 கோடியும்; கிறிஸ்தவர்கள், 2.78 கோடியும்; சீக்கியர்கள், 2.08 கோடியும்; புத்த மதத்தினர், 84 லட்சமும்; ஜெயின் மதத்தினர், 45 லட்சமும்; மற்ற மதத்தினர், 79 லட்சமும்; கணக்கெடுப்பில் மதத்தை குறிப்பிடாதவர்கள், 29 லட்சமும் உள்ளனர் என, தெரிய வந்துள்ளது.    ஆமாம்... இப்படி கடவுள் கொடுக்குறாரு கடவுள் கொடுக்குறாரு அப்டீன்னு வரிசையா பெத்து தள்ள வேண்டியது.. அதுகளுக்கு உருப்படியா கல்வியும் வசதியும் கொடுக்க முடியாம,, நாங்க பின் தங்கி இருக்கோம்.. அது இதுன்னு பொலம்ப வேண்டியது.. நம்ம குடும்பத்த நல்ல வச்சிக்கணும்னு கொழந்தைய கம்மியா பெத்தா எந்த கடவுளும் கோவிச்சிக்கிற மாட்டாரு.. அப்படி கோவிச்சா அது கடவுளே இல்ல.. மொதல்ல கடவுள் மேல பழிய போட்டுட்டு எஸ்கேப் ஆகிற வேலைய விட்டுட்டு ஒழுங்கா குடும்ப கட்டுப்பாடு செஞ்சி ஒன்னு ரெண்டு புள்ளைகள பெத்து உருப்படியா வளர்க்க பாருங்க.. நல்லது சொன்னா நமக்கு பிடிக்காதே.. நடத்துங்க...

கொச்சியில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து- பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

கொச்சியில் மீன்பிடி படகு மோதியதில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. கொச்சியில் 45 பேருடன் பயணித்த சுற்றுலாப் படகு ஒன்றின் மீது இன்று பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென மீன்பிடிப் படகு மோதியது. இதில் படகு இரண்டாக உடைந்து கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கொச்சி, எர்ணாகுளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
35 பேர் செல்லக் கூடிய இந்த படகில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் ஏற்றப்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது  tamil.oneindia.com/

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

‘பிராமின்ஸ் ஒன்லி’ கூவத்தை விட அசிங்கமானது இது ! மதிமாறன்


சிங்கப்பூரை விட சிறப்பான சென்னை
வந்தாரை வாழ வைக்கும் வளம் மிகுந்த சென்னைக்காரன் நான். வீடு இருப்பவனுக்கு மட்டுமல்ல வாழ்க்கை; வாடகைக்குக் கூட வக்கற்றவர்களையும் தன் சாலைகளால் அரவணைத்துக் கொள்ளும் அன்னை – சென்னை.
சிங்கப்பூருக்கும் கிடைக்காத சிறப்பு. சென்னையின் சிங்காரமே இது தான். ‘சிங்காரச் சென்னை’
*
கோயிலை சுற்றியுள்ள அக்ரகாரங்களைத் தவிர, சென்னையில் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் குடியேறலாம்.
*
சென்னையை அசிங்கமாக்குவது கூவம் அல்ல; அதை விட நாத்தம் பிடித்த ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு.

சீன பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!

சீனாவில் கடந்த சில தினங்களாக பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. 2007ம் ஆண்டுக்குப் பிறகு அதிக இழப்பாக, ஷாங்காய் பங்குகள் நேற்று 8.49 சதவீதம் சரிவடைந்தன. இன்றும் 7.63 சதவீதம் சரிவடைந்தன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். சீனாவின் மிகப்பெரிய பணக்காரரும், சொத்து மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான டாலியன் வாண்டா நிறுவன உரிமையாளருமான வாங் ஜியான்லினுக்கு நேற்று மட்டும் 3.6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இது அவரது சொத்து மதிப்பில் 10 சதவீதத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. நேற்றைய வர்த்தகத்தில் அவரது நிறுவனம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அதேசமயம், அவரது சொத்து மதிப்பு இந்த ஆண்டு 6 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் இரண்டாவது பெரிய பணக்காரரும், இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜேக் மா என்பவருக்கு நேற்று 545 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது மாலைமலர்.com 

இலங்கை :கோகாகோலா மீது ஒரு பில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்கு!

It has been decided to demand nearly Rs.1 billion as compensation from Coca Cola Company for the mass scale environmental pollution it caused due to a leak of oil from a damaged underground pipeline in its factory at Kaduwela. Also, the environmental protection license the company had been given has been withdrawn by the Central Environmental Authority.
The license has been withdrawn until an estimate of the damage due to  the oil leak has been released. It is said that drinking water pumped to Colombo and adjacent areas had been mixed with oil. As a result the supply of drinking water had to be limited  lankatruth.com/

பெருமுதலாளிகளின் அடிமைகளாகிவிட்ட வணிக ஊடகங்களும், காலாவதியாகிப் போன பத்திரிகை தர்மமும்?

தமிழ்நாட்டு அளவில் சன் குழுமத்திற்கும், தினமலருக்கும் இடையே வேண்டுமானால் போட்டி, பகை இருக்கலாம். ஆனால், ரிலையன்ஸுக்கும் சன் குழுமத்திற்குமோ, ரிலையன்ஸுக்கும், தினமலருக்குமோ எப்போதும் போட்டி, பகை வராது. ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனங்களை இந்தப் பத்திரிகைகள் ஒரு நாளும் பகைத்துக் கொள்ளாது.
அறிவுஜீவியாக காட்டப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவால், தெரிந்தோ தெரியாமலோ ரிலையன்ஸ் நிறுவனத்தின்மீது கைவைக்கிறார். ரிலையன்ஸ் குழுமங்களின் முறைகேடுகளுக்காக முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய முயல்கிறார்.
அதுவரை ஆகப்பெரும் அறிவுஜீவியாக சித்தரிக்கப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவால், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மிகப்பெரும் கோமாளியாக ஊடகங்களால் மாற்றப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் கோமாளியாகத்தான் ஊடகங்களில் காட்டப்படுகிறார். அவர் மீண்டும் அறிவுஜீவியாக வேண்டுமானால், முகேஷ் அம்பானி கடைக்கண் காட்டினால்தான் முடியும்
20 – 25 ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகை உலகில் பத்திரிகை தர்மம் என்ற ஒன்றைப்பற்றி அதிகம் பேசுவார்கள். ‘இதுதான் பத்திரிகை தர்மமா’ என்று சாதாரண வாசகர் கேள்வி கேட்கும் அளவிற்கு பத்திரிகை தர்மத்தின் அவசியம் அன்று அனைவராலும் உணரப்பட்டிருந்தது.

பேரவை விதி 110- ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் 577 ! நிறைவேற்றியவை....??

அறிவித்த திட்டங்களின் மொத்த செலவு 84 ஆயிரத்து 374 கோடி ரூபாயாகும். இதில் செலவு செய்யப்பட்டதோ 12 ஆயிரத்து 733.60 கோடி ரூபாய்தான்!
 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் சொன்னதோ, கடல் அளவு; செய்ததோ, கை அளவுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் கடித வடிவில் எழுதியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''சட்டப்பேரவை தொடங்கி விட்டது. இனி ஒவ்வொரு நாளும் முதல் அமைச்சர் ஜெயலலிதா, பேரவை விதி 110இன் கீழ் அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கி விடுவார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 என்ன கூறுகிறது என்றால், பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர் அறிக்கை ஒன்றை அளிக்கலாம் என்று தான் உள்ளது.

பல்மைரா பாரம்பரியச் சின்னம் சிதைக்கப்படும் புகைப்படங்கள் வெளியாயின

சிரியாவின் பல்மைராவில் பல்ஷமின் கோவில் அழிக்கப்படுவதைக் காட்டும் புகைப்படங்களை இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழு வெளியிட்டுள்ளது. Image caption பல்ஷமின் கோவில் குண்டுவைத்துத் தகர்க்கப்படுவதைக் காட்டுப் புகைப்படம். கோவிலை பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்துத் தகர்க்கும் காட்சிகளும் பெரும் வெடிப்பு நிகழும் காட்சிகளும் கொண்ட புகைப்படங்கள் அந்த ஜிகாதிக் குழுவின் ஆதரவாளர்களால் பகிரப்பட்டுவருகின்றன.புகழ்பெற்ற பல்ஷமின் கோவில் இடிபாடுகள். இந்தக் கோவில் ஞாயிற்றுக்கிழமையன்று தகர்க்கப்பட்டதாக சிரிய அதிகாரிகளும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்தனர். சிரியடாவின் கலாச்சாரப் பொக்கிஷத்தைச் சிதைத்தது ஒரு போர்க் குற்றம் என ஐ.நா.வின் கலாச்சாரப் பிரிவான யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.bbc.com/tamil

Facebook, Skype.Whatsapp தலாக் தலாக் தலாக் சொல்லும் பாணி......

சமூக தளங்கள் வாயிலாக தலாக் சொல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்தியாவில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மீபத்தில் இஸ்லாமிய முறைப்படி தலாக் சொல்லி பிரியும் தம்பதிகளில் அதிகமானோர், சமூக தளங்கள் வாயிலாக தலாக் சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்கைப், வாட்ஸ்அப், மின்னஞ்சல் மூலமாக தலாக் சொல்லும் விவகாரத்து முறை தற்போதைய காலங்களில் அதிகரித்திருப்பது பெண்களை கவலையடையச் செய்கிறதுdinamani .com

2016 தேர்தல்! அதிமுக எதிர்ப்பு வாக்குகள் அதிகரிப்பு ! திமுகவும் ஸ்டாலின் ராஜ்யமாகி அதிமுக பாணி அரசியலே....மூன்றாவது அணி...

BANGALORE - 23/04/2009 :  Young girls who have voted for the first time showing her finger marked with indelible ink after casting her votes at J P Nagar, during the Phases II polls, in Bangalore on April 23, 2009.    Photo: K Murali Kumar.BANGALORE – 23/04/2009 : Young girls who have voted for the first time showing her finger marked with indelible ink after casting her votes at J P Nagar, during the Phases II polls, in Bangalore on April 23, 2009. Photo: K Murali Kumar.மோடி மற்றும் ஜெயலலிதா சந்திப்பு தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.  2016 பேரவைத் தேர்தல் இதுவரை இல்லாத வகையில் இரு திராவிட கட்சிகளுக்கும் வாழ்வா சாவா என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது.
நெருக்கடிக்கு காரணம், முன்னெப்போதும் காணாத விதமாக 3வது அணி என்ற கோஷம் வலுத்திருப்பது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 3வது அணியாக இங்கு களமிறங்கிய பிஜேபி இரு தொகுதிகளில் வெற்றிபெற்றது.  பேரவைத்  தேர்தலிலும் பிஜேபி தலைமையில் கூட்டணி அமைவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
கருணாநிதிக்கு வயது 92.  அவர் தலைமையில் திமுக சந்திக்கும் கடைசித் தேர்தலாக இது இருக் கலாம் என்று அவரே கூறிவருகிறார். இரும்புப் பெண்மணி என கட்சியினரால் போற்றப்படும் ஜெயலலிதா உடலளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதும் அவரே ஒப்புக்கொண்டுள்ள உண்மை. இச்சூழலில், திமுக, அதிமுக நேருக்கு நேராக களமிறங்கிய சந்தர்ப்பங்களில் விளைவுகள் எவ்வாறு இருந்தன என்பதை திரும்பிப்பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.

சசிபெருமாள் சமாதி அருகே குடும்பத்தினர் திடீர் உண்ணாவிரதம்... மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தல்

சேலம்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சசிபெருமாள் குடும்பத்தினர் அவரது சமாதி அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை கிராமத்தில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி, செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியபோது சசிபெருமாள் மரணம் அடைந்தார்.  அவரது மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது உடலை பெற்றுக்கொள்ளாமல் குடும்பத்தினர் 7 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

Jeyalalitha சுலோகம் ! அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்…!

24-1440407455-jayalalitha-tn-assembly1-600  அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்...! 24 1440407455 jayalalitha tn assembly1 60024-1440407417-jayalalitha-tn-assembly5-600  அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்...! 24 1440407417 jayalalitha tn assembly5 600சென்னை: அதிமுகவினருக்கு எது திருவிழா தெரியுமா.. புன்னகை பூத்த தங்களது “தங்கத் தலைவி” ஜெயலலிதாவின் முகத்தைப் பார்க்கும் அந்த ஒரு நிமிடம்தான்.. அதுதான் அவர்களுக்கு தீபாவளி, புத்தாண்டு, தைப்பொங்கல் மற்றும் கார்த்திகைப் பெரு விழா. ஜெயலலிதா புன்னகைக்கும் ஒவ்வொரு நொடியையும், நிமிடத்தையும் அப்படிக் கொண்டாடுகிறார்கள் அதிமுகவினர். 2ம் நிலை தலைவர் முதல் தொண்டர்கள் வரை இந்த விஷயத்தில் பக்தர்களாகி விடுகிறார்கள்.
ஜெயலலிதாவை நேரில் பார்த்துக் கும்பிட முடியாவிட்டாலும் அவர் இருக்கும் திசையை நோக்கி கும்பிடு போட்டு தங்களது பக்தியை வெளி்ப்படுத்துகிறார்கள்.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு : நந்தகுமார் ,கேபிள் முருகனிடம் உண்மை கண்டறியும் சோதனை

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 2 முக்கிய நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு திருச்சியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால் 3 ஆண்டுகளாகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து, சி.பி.ஐ விசாரணை கோரி ராமஜெயத்தின் மனைவி லதா உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதிலளித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அக்டோபர் மாதம் வரை அவகாசம் கோரினர்.

கடலுக்கு அடியில் பிரமாண்ட நகரம் கண்டு பிடிப்பு: வீடியோ காட்சிகள்


கியூபா கடற்கரை பகுதியில் கடலின் ஆழமான பகுதிகளில் ரோபார்ட் நீர் மூழ்கி கப்பல் மூலம் கடலுக்கு அடியில் பிரமாண்டமான நகரம் இருப்பதை பால் வியின்சிவிக் மற்றும் பவுலின் ஷலிட்ஷகிரா என்ற இரு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
விஞ்ஞானிகள் ஆய்வில் கடலுக்கு அடியில் பிரமாண்டமான நகரம் பெர்முடா முக்கோணம் பகுதியில் இருப்பதை கண்டறிந்து உறுதி செய்து உள்ளனர். அந்த பண்டைய நகரத்தில் பல ஸ்பினகஸ் சிலைகளும், மாபெரும் பிரமிடுகளும் மற்றும் பலவேறு கட்டிடங்களும் இருப்பதை கண்டறிந்து உள்ளனர். கியூபா கடலுக்கு அடியில் உள்ள இந்த நகரம் கடல் மட்டத்தின் உயர்ந்ததால் அழிந்த நகரமாகும். அந்த நிலப்பகுதியும் கடலுக்கு அடியில் மூழ்கி உள்ளது என்று கூறப்படுகிறது dinamani.com 

சிரியாவின் 2000 ஆண்டு பழங்கால கோவில் "வெடிவைத்து தகர்ப்பு"

சிரியாவின் முக்கிய கலாச்சார பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படும் பழம்பெரும் நகரமான பல்மைராவில் உள்ள பால் ஷமின் பழங்காலக் கோவிலை இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் வெடிகள் வைத்து தகர்த்து அழித்துவிட்டதாக சிரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தைச் சுற்றி வெடிப்பொருட்களை வைத்த ஜிகாதிகள், அதனை வெடிக்கச் செய்ததாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கின் தொல்லியல்
பெருமைகளில் பல்மைரா நகரம் தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது மத்திய கிழக்கில் உள்ள அதிமுக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் இடங்களில் பல்மைரா நகரமும் ஒன்று. பல்மைரா நகரிலுள்ள பண்டைய இடிபாடுகளைப் பராமரிப்பதில் தனது வாழ்க்கையை அர்பணித்திருந்த எண்பத்தியிரண்டு வயது தொல்பொருள் ஆய்வாளரான காலித் அல் அசாதை, ஆயுததாரிகள் கடந்த வாரம் தலையை வெட்டி கொலைச் செய்திருந்தனர். இந்த பழம்பெரும் பொக்கிஷங்களை காத்து வந்த தொல்லியலாளர் காலித் அல் அசாத் கடந்தவாரம் கழுத்தறுத்து கொல்லப்பட்டார்

ரயில்களில் கண்காணிப்பு கேமரா: ரூ.700 கோடி செலவிட முடிவு

 ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், 20 ஆயிரம் பெட்டிகளில், ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ரயில் பெட்டிகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, மும்பை, டில்லி போன்ற நகரங்களில் புறநகர் ரயில்களில், பெண்களுக்கான பெட்டிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது, அனைத்து ரயில்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 'நிர்பயா' திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து, 700 கோடி ரூபாயை, இதற்காக செலவிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு! காஸ் சிலிண்டர் உதவி ரத்து?

புதுடில்லி: பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, கூடுதலாக தேவைப்படும் மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை மத்திய அரசு வழங்க மறுப்பதால், மாநிலங்களின் மதிய உணவு திட்டம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், பல நேரங்களில், மானிய சிலிண்டர் மட்டும் உணவு தயாரிக்க போதுமானதாக இருப்பதில்லை. இதனால், சந்தை விலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் வாங்கப்படுகின்றன.அவற்றிற்கான பணத்தை, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு திரும்ப வழங்கி வந்தது. கடந்த ஏப்ரல் முதல், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், 'மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை தர முடியாது' என தெரிவிக்கப்பட்டது. செலவினங்களை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.  அதானிகளுக்கும்   அம்பானிகளுக்கும் தான் சலுகை கொடுப்போம் . ஏழைக்குழந்தைகளின் வயிற்றில் அடிப்போம். விவசாயிகளின் நிலத்தி எடுத்து அடிமாட்டு விலையில் பேரு முதலைகளுக்கு தருவோம்..

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

கஞ்சா இலை புற்றுநோய் செல்கள்களை அழிக்கிறது: அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்!

பல நாடுகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கஞ்சா. இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கஞ்சா இலை புற்றுநோய் செல்கள்களை அழிப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனம் தனது இணையதளத்தில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது. மேலும் அந்த இணையதளத்தில், கஞ்சாவை வைத்து ஆய்வகங்களில் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், அதில் புற்றுநோய் அறிகுறிகள், புற்றுநோய் சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு சிகிச்சையளிப்பதிலும் மற்றும் புற்றுநோய் செல்கள்களை அழிப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் கஞ்சா இலை புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது என்பது மிகச்சிறிய அளவில் மட்டுமே நடைபெறுகிறது. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள் maalaimalar.com
Now that Colorado and Washington have successfully legalized weed, others states are already wondering if they can do the same. But many are forgetting a crucial argument in favor of marijuana legalization: its health benefits.
Because marijuana is a Schedule I controlled substance, it has to be tested under the strictest of circumstances.

CBI அதிகாரிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கடிதம்! Debate on "Disproportionate Assets Case against A. Raja.


ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வை மறு விசாரணை நடத்த இயலாதென்பது தெரிந்தும் செயல்படுவது துன்புறுத்தலேயன்றி வேறல்ல!
சென்னை, ஆக.23_- ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வை மறு விசாரணை நடத்த இயலாதென்பது தெரிந்தும் செயல்படுவது துன்புறுத்தலேயன்றி வேறல்ல  என்று முன் னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சென்னை சி.பி. அய். ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறை கண்காணிப் பாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து சென்னை சி.பி.அய். ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறை கண் காணிப்பாளருக்கு ஆ.இராசா எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:
என் மீதும் என் குடும்ப நண்பர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை RC-MA1-2015-A-0037 dated 18.08.2015. P.S. CBI, ACB, Chennai குறித்து எனது அதிர்ச்சி யைத் தெரிவிக்கவே இக் கடிதத்தை எழுதுகிறேன்.

NH 10 இது ஒரு இந்திப் படம்! இதுவரை இப்படி ஒரு படம் இந்தியாவில் வரவேயில்லை



இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கச் சொல்லி தோழர் சுகிதா தான்
சொன்னாங்க. (facebook.com/sugitha.sugi) அவுங்க சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று இரவு தான் பார்த்தேன். (13 August)
துணிந்து சொல்வேன்; இந்த நிமிடம் வரை இப்படி ஒரு படம் இந்தியாவில் வரவேயில்லை.
இப்படியும் சொல்வேன்; உண்மையான இந்தியாவைக் காட்டிய ஒரே படம்.
படத்தின் இயக்குநர் Navdeep Singh. இவரைப் பாராட்டுவதே அவருக்குச் செய்கிற அவமரியாதைதான். அவரைக் கட்டிப்பிடித்துக் கதறி அழத் தோன்றுகிறது.
‘அனுஷ்கா ஷர்மா’ – அழகான அல்லது கவர்ச்சியான நடிகை, வீராட் கோலியின் காதலி இப்படியாகத்தான் அறியப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் கவுரவங்களைக் கொலை செய்கிற அரக்கியாக அவதாரம் எடுத்து நிற்கிறார் இந்தப் படத்தில்.

ஜெயலலிதா: இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனி தொடரவேண்டாம் !

இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனி தொடரவேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் அதிமுக தொண்டர்களுக்கு விடுத்துள்ளார்.அவர் மேலும்,  நாலாந்தர அரசியல்வாதிகளே பேசக் கூச்சப்படும் வார்த்தைகளை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதை கண்டித்தும், இதற்காக அவர் மன்னிப்புக் கேட்கக் கோரியும், அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழக மீனவர் பிரச்சனையில் பிரதமர் மோடிக்கு தாம் எழுதிய கடிதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் செய்தி வெளியான போது, அதனை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கண்டித்ததை முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார்.

தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருக்கிறார்! வலுவான ஆதாரம்?

மும்பையில், 1993ல் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் தான் வசித்து வருகிறான் என்பதற்கான வலுவான ஆதாரம், இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் கிடைத்துள்ளது. மும்பை குண்டுவெடிப்பு:மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், மும்பையில் பயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதும், குடும்பத்துடன் பாகிஸ்தான் தப்பிச் சென்று விட்டான்.அவன் அங்கிருப்பதற்கான ஆதாரங்களை அவ்வப்போது, பாகிஸ்தான் அரசிடம் தெரிவித்து, அவனை பிடித்து ஒப்படைக்குமாறு, இந்தியா விடுக்கும் வேண்டுகோள் இதுவரை ஏற்கப்படவில்லை.அவனை பிடிக்க, 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பு மூலம், 'ரெட்கார்னர்' நோட்டீஸ் எனப்படும், கைது செய்ய கோரும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் இருப்பதை உறுதி செய்யும் புதிய ஆதாரமான, அவனின் மனைவி மெஜாபீன் ஷேக்கின் பெயரிலான தொலைபேசி பில், இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் கிடைத்துள்ளது.