சனி, 10 செப்டம்பர், 2016

பெங்களூரில் தமிழ் இளைஞர் சந்தோஷ் கடுமையாக தாக்கப்பட்டார் .. போலீஸ் கண்டுக்கல...


பெங்களூரு: பெங்களூரில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞர் சந்தோஷ் பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். கல்லூரி மாணவரான இவரை கிரி நகரில் வைத்து ஒரு கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குல் வீடியோ பல்வேறு கன்னட டிவி சானல்களில் ஒளிபரப்பாகியுள்ளன. தற்போது பெரும் பரபரப்பாக வலம் வரும் இந்த வீடியோவில் தாக்குதலுக்கு ஆளான இளைஞர் சந்தோஷ் தனது பேஸ்புக்கில், காவிரிப் போராட்டம் தொடர்பாக போட்ட பதிவுதான் அவர் தாக்குதலுக்குள்ளாக காரணம் என்று கூறப்படுகிறது.
நடிகர்கள் சிவராஜ் குமார், தர்ஷன் குறித்தும், கன்னட திரையுலகினரின் போராட்டத்தையும், தமிழ் நடிகர்களையும் ஒப்பிட்டு அவர் கருத்து போட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் சந்தோஷைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

காவிரி .. உச்சநீதிமன்ற நீதிபகள் மீது வழக்கு?

மின்னம்பலம்.காம் : காவிரி நீர் விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீது 420பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்டியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார் ஒருவர். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி வீதம் கர்நாடகம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10,000 கன அடி நீரும், கபினிஅணியில் இருந்து 5,000 கன அடி நீரும் என்று காவிரியில் விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாண்டியாவைச் சேர்ந்த ராஜண்ணா என்பவர் மாண்டியா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தமிழகத்துக்குத் தண்ணீர் தர உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிருப்தி அடைந்தேன்.

எம்.எல்.ஏ - எம்.பி ஒரே நேரத்தில் தேர்தல்!

minnambalam.com நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு மக்களின் கருத்தை கேட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஆணையர் நஸீம் ஜைதி தேர்தல் நடைமுறைகளை பார்வையிடுவதற்காக சர்வதேச பார்வையாளர்களில் ஒருவராக ஆஸ்திரேலியா சென்றார். மெல்போனில் நடந்த சர்வதேச தேர்தர் பார்வையாளர்கள் மாநாட்டில் பேசிய இந்திய தேர்தல் ஆணையர், “அரசு மற்றும் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றிய சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு நாடாளுமன்றச் செயலகத்துக்கு பரிந்துரை செய்திருந்தது. இது பற்றி கருத்து தெரிவிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டிருந்தது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்” என்று பேசினார் அவர்.

திலீபன் மகேந்திரன் மீது கொலைவெறி தாக்குதல்: உயிருக்கு ஆபத்தான நிலையில்...

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆதரவாகவும், இந்த கொலையில் பாஜகவை சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும் முகநூலில் எழுதி வந்தவர் திலீபன் மகேந்திரன். கருப்பு முருகானந்தம் இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் திலீபன் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வெளியே வந்த திலீபன், சுவாதி கொலையின் குற்றவாளிகள் யார் என்பதை தெரியப்படுத்துவேன் எனவும், இந்த கொலை குறித்த ரகசியங்களை இன்னும் சொல்லுவேன்;தைரியமாக கூறினார்.>இந்நிலையில் நேற்று திருவாரூர் நீதிமன்றம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் திலீபன் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து வழக்கறிஞர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். சுவாதி கொலை வழக்கு குறித்து நீ பேசக்கூடாது என்று கூறியபடியே தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மயக்கமடைந்து கிடந்த திலீபனையும், வழக்கறிஞரையும் மீட்ட வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலை  webdunia.com

மாரியப்பனுக்கு 2 கோடி பரிசு : ஜெயலலிதா அறிவிப்பு

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் ஆக மொத்தம் 2 பதக்கம் கிடைத்தன. பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளியும், மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் வெண்கல பதக்கமும் பெற்றனர். இதை தொடர்ந்து ரியோ நகரில் மாற்றுதிறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. 18-ந்தேதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் ரியோடி ஜெனீரோ நகரில் நடக்கிறது.

திமுக மகளிரணி நிர்வாகி கொலை – வீட்டு வாசலில் வைத்து வெட்டிய நபர் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் கொலை செய்யப்பட்ட லட்சுமியின் வீட்டில் விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீஸார். (உள்படம்): லட்சுமி | படங்கள்: பி.ஜோதிராமலிங்கம் சென்னை கொருக்குப்பேட்டையில் கொலை செய்யப்பட்ட லட்சுமியின் வீட்டில் விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீஸார். (உள்படம்): லட்சுமி | படங்கள்: பி.ஜோதிராமலிங்கம்.கொருக்குப்பேட்டையில் திமுக மகளிர் அணி நிர்வாகியை வீட்டு வாசலில் வைத்து கழுத்தை வெட்டி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார். சென்னை கொருக்குப்பேட்டை மேற்கு கிருஷ்ணப்ப கிராமணி தோட்டத்தை சேர்ந்தவர் சேகர் (48). இவரது மனைவி லட்சுமி (45). ஆர்.கே.நகர் தொகுதி 42-வது வட்ட திமுக மகளிர் அணி நிர்வாகி. அதே பகுதியில் பூ வியாபாரம் செய்தார். வட்டிக்கும் பணம் கொடுத்து வந் துள்ளார். தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வரும் தொந்தி கணேஷ்(27) என்பவர் லட்சுமியிடம் அடிக்கடி பணம் கடன் வாங்குவார். கணேசுக்கும் லட்சுமியின் தோழி ஓருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். லட்சுமியிடம் அடிக்கடி பணத்தை கடன் வாங் கிய கணேஷ், அந்த பணத்தை லட்சுமியின் தோழிக்கு செலவழித்து வந்துள்ளார்.

ஒரு வயது மகன் கண் முன்னே பெண் ஊழியரை பலாத்காரம்.... உயரதிகாரி தலைமறைவு

A 23-year- old woman has been allegedly raped in front of her one-year- old son by her boss during a field trip to Kodagu
பெங்களூரு: ஒரு வயது மகன் கண்முன்னே பெண் பணியாளரை உயரதிகாரி ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூரு  எலகங்கா கோகிலு கிராஸை சேர்ந்தவர் பிரியா(23)(பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இவர் கட்டுமான பொருட்கள் விற்கும் நிறுவனத்தில் கஸ்டமர் கேர் எக்ஸிகியூடிவாக பணியாற்றி வந்தார். இவர் பணியில் சேர்ந்த 2 மாதத்திலேயே  நிறுவனத்தின் பங்குதாரர் விவேகானந்தா என்பவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.  இதையடுத்து விவேகானந்தாவை கடுமையாக எச்சரித்த பிரியா,  போலீசில் புகார் அளித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து  அமைதியான விவேகானந்தா, பிரியாவை எப்படியாவது அடைய திட்டமிட்டார். பின்னர்  நிறுவனத்தின் சார்பில் குடகுவுக்கு களப்பணி மேற்கொள்ள  கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்தார். அதில்  பிரியாவும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தமிழக அரசின் புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தரும் அளவு ..... .

அரசு நடத்தவில்லை கிறுக்குத்தனமாக கங்கெம் டான்ஸ் போல தாறுமாறாக ஆடி கொண்டு உள்ளார் #bogusvotesCM .. புள்ளி விவரங்கள் கடுப்பை தருகிறது .. If Can't govern better Quit tamilnadu #Jayalalitha . People will be happy ever ..
புதிய தொழில் பூங்காக்கள் அமைக்க நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக, அமைச்சர் அவர்கள் விடுத்த செய்தி . தொழிற்துறை மானியக்கோரிக்கை எண் 27 ன் கீழ் வழங்கப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகம் முறையே :
2014-15 ஆம் ஆண்டில் பக்கம் 18 & 19 ல்,
2015-16 ஆம் ஆண்டில் பக்கம் 10&11ல் ,
#ஓரகடம் தொழில் வளர்ச்சி மையம் 2 (மாத்தூர் - வைப்பூர் ) - 616.3 ஏக்கர்
#செய்யாறு தொழில் வளாக விரிவாக்கம் - 2,200.57 ஏக்கர்
#மதுரை தொழிற் பூங்கா - 1,476.71 ஏக்கர்
#தூத்துக்குடி தொழில் வளாகம் நிலை 2 - 1,179.86 ஏக்கர்
#திண்டிவனம் தொழில் வளாகம் - 720.27 ஏக்கர்
#மணப்பாறை தொழிற் பூங்கா - 1,077.94 ஏக்கர்

பரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார்

ரியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றார். உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தமிழக வீரர் மாரியப்பன் தங்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.>மாரியப்பன் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்ல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார்.

உபி கருத்துக்கணிப்பு மாயாவதி மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார்...

லக்னோ: உத்தரபிரதேசத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது இதுதொடர்பாக பார்லிமெண்டேரியன் என்ற மாதாந்திர பத்திரிக்கை கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் பேரிடம் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் இந்த கணிப்பை தயாரித்துள்ளது. அதில், ஆளும் கட்சியான சமாஜ்வாடி கட்சி இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்து 3-வது இடத்துக்கு தள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும் ஆனால் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று அந்த கருத்து கணிப்பு கூறுகிறது.

பாஜக MLA மகனின் கொடூர தாக்குதல் .. வீதியில் இளைஞர்கள் மீது லத்தியால் ..


சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த மந்துராம் பவார். மந்துராம் பவார், காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், 2015ல் பா.ஜ.,வில் இணைந்தார். மந்துராம் பவார் மகன் நானு பவார். இவர் தனது சொகுசு காரில், நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 200 கி.மீ., தூரத்தில் உள்ள கேர்கட்டா பகுதியில், அவரது காருக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் காருக்கு வழிவிடவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நானுபவாரும், அவரது நண்பர்களும் காரிலிருந்து இறங்கி இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். வீடியோ ஆதாரம் இருந்தும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. நக்கீரன்.இன்

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

சிவலிங்கா படத்தில் லாரன்ஸ் ராகவேந்திரா

காமடி கலந்த திகில் திரைப்படங்கள் என்றாலே ராகவா லாரன்ஸ் என்று சொல்லும் அளவுக்கு  ஒரு புதிய ட்ரெண்ட் செட்டராக விளங்கி வருகிறார் அவர் . நடனம், இயக்கம், சமூக சேவை  போன்ற  பல முகங்கள் இவருக்கு இருந்தாலும் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்ற முகமே  இவரது முதல் அடையாளமாக இருந்து வருகிறது ."மொட்ட சிவ கெட்ட சிவ"  படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் தனது அடுத்த படத்திற்கான பணியை நடிகர் ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார்.

பழங்குடிகளைக் கொல்லும் ஜார்கண்ட் போலீசு. வினவு.

கிராம மக்கள் இலவசமாக விரும்புகிறார்கள் என்று வக்கிரம் பேசும் ஆபிசர், அதே இன்லேண்ட் அனல் மின் நிலையம் அக்கிராம மக்களிடம் கொள்ளையடித்த சமூக வளம் குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் - படம் நன்றி: http://scroll.in
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் – படம் நன்றி: scroll.in
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தின் கோலா கிராமத்தில் இன்லேண்ட் என்ற தனியார் அனல் மின் நிலையம் இருக்கிறது. இங்கே  ஆகஸ்டு 29, 2016 அன்று போராட்டம் நடத்திய பழங்குடி மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில் அக்கிராமத்தை சேர்ந்த தஷ்ரந்த் நாயக், ராம்லால் மகடோ இருவரும் கொல்லப்பட்டனர்.
மேற்கண்ட அனல் மின் நிலையம் அப்பகுதியின்  நீர் வளத்தை அதீதமாக உறிஞ்சி வருகிறது. இதனால் மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீரில்லாமல் பயிர்கள் சேதமடைந்துவிட்டன. மேலும் அனல் மின் நிலயத்திலிருந்து வெளிவரும் அதிக அளவினான புகை மற்றும் சுற்று சூழல் மாசுபாடு காரணமாக பயிர்கள் நாசமாவதோடு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

கலைஞர் அதிகாரத்தை கைப்பற்ற ஸ்டாலின் முயற்சியா?

திமுக தலைவர் கருணாநிதியை வீட்டு சிறையில் அவரது மகனும் திமுக பொருளாளருமான ஸ்டாலின் வைத்திருப்பதாக நேற்று இணையதளங்களில் செய்திகள் பரவியது. ஆரம்ப காலத்திலிருந்தே கட்சிக்காக உழைத்த தளபதிக்கு தலைவர் பதவியை வழங்காமல் கருணாநிதி இழுத்தடித்து வருவதாகவும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே அவருக்கு தலைவர் பதவியை விட்டுக்கொடுத்திருக்க வேண்டும் என தளபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள் பேசி வருவதாக செய்திகள் வந்தன.;மேலும், தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில் தளபதி சுதாரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் வேறு வழிஇன்றி தலைவரை வீட்டுக்கு அனுப்பலாம். அல்லது வீடு சிறையில் வைத்து விட்டு தலைமை, தலைவர் பொறுப்பு இரண்டையும் அதிரடியாக கைப்பற்ற வியூகம் வகுப்பட்டு விட்டதாக தளபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுவதாக நேற்று இணையத்தில் செய்திகள் பரவியது.இந்த செய்தி திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அழகிரி தரப்பிலும் இதற்கு எதிர்பு கிளம்பியதாக செய்திகள் பரவியது  வெப்துனியா.com

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை! இமானுவேல் சேகரன் ,முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் நினைவு நாட்கள்...


ராமநாதபுரம் மாவட்டத்தில் முத்துராமலிங்க தேவர், அதன்படி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தவும், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும். மேலும் செப்டம்பர் 9 முதல் 15ஆம் தேதி வரையும், அக்டோபர் 25 முதல் 31ஆம் தேதி வரையும், வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களில் தலைவர்களின் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நினைவிடங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்குள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வர வேண்டும். மேலும் அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்ல வேண்டும்.

மத்தியப்பிரதேசத்தில் அம்மா உணவகம்! குவாலியர், போபால், இந்தூர் ,ஜாபல்பூரில் முதலில் ...


அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் அடித்தட்டு மக்களின் அமோக மின்னம்பலம்.காம் :ஆதரவைப் பெற்ற திட்டமாக உள்ளது. குறைந்த வருவாய் பிரிவினருக்குக் குறைந்த விலையில் உணவுகளை வழங்கும் அம்மா உணவகங்கள் சென்னையில் தொடங்கப்பட்டு பின்னர் தமிழகம் முழுக்க விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் பலனை அறிந்த பல மாநிலங்களின் அதிகாரிகள் தமிழகத்தின் அம்மா உணவகத்தை வந்து பார்வையிட்டு சென்றனர். ஏற்கனவே, ஆந்திர மாநிலத்தில் அம்மா உணவகத்தைப் பின்பற்றி ‘அண்ணா மெஸ்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ராஜஸ்தான், புதுடெல்லி உள்ளிட்ட மாநில முதல் மந்திரிகளும் தங்களுடைய மாநிலங்களில் மலிவு விலையில் அரசு உணவு விற்பனையை தொடங்கின.

வட கொரியா அணு ஆயுத சோதனை.. ஹிரோஷிமா குண்டைவிட பயங்கரமானது !


மின்னம்பலம.காம்வட கொரியா ஐந்தாவது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தி பெருமிதத்தோடு மார்தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், உலக நாடுகள் வட கொரியாவின் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளன. வட கொரியாவில் அணு ஆயுத பரிசோதனை நடத்தப்பட்ட பகுதியில் 5.3 ரிக்டர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பும் விதமாக அவ்வப்போது வட கொரிய இதுபோன்ற பயங்கர அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் ஜி-20 மாநாடு நடைபெற்றபோது வட கொரியா மூன்று பயங்கர ஏவுகணைகள் சோதனையை நடத்தியது. வட கொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் தேசிய பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டத்தை தென் கொரியா கூட்டி உள்ளது. வட கொரியாவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதை அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சீன நில அதிர்வு ஆய்வு கழகங்கள் உறுதி செய்துள்ளன.

: சீமான் :தமிழக மக்களையும் இந்திய மக்களாக கருத வேண்டும்!


மின்னம்பலம்,காம் :காவிரி தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான பிரச்னையில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில், ‘தமிழக மக்களையும் இந்திய மக்களாக கருதி, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில் கூறியதாவது, “தமிழகத்தின் ஒவ்வொரு ஜீவாதார பிரச்னைக்கும் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளோம். மத்திய அரசு, தமிழர்களின் பல்வேறு பிரச்னைகளில் நேரடியாக தலையிட்டு தீர்த்து வைக்க முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

பழிவாங்க காத்திருக்கும் அதிகாரிகள் .. அதிகார போட்டியா? கமிஷன் போட்டியா? எது உண்மை?

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் மெசேஜ் வரிசைகட்டி வந்து விழுந்தது.
"தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிகாரிகள்தான் ரொம்பவும் ஆடிப்போயிருக்கிறார்கள். அதிகாரிகள் வட்டாரத்தில் நினைக்காதவற்றை எல்லாம் செய்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. ஒருபக்கம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்ட்... இன்னொருபக்கம் டிஜிபி விருப்ப ஓய்வு, கமிஷனர் மாற்றம் என தமிழகம் அலற ஆரம்பித்துவிட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், அதிகாரிகள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது. கடந்த இரு தினங்களுக்குமுன்பு, கோயம்பேடு அருகேயுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். 'அவங்க சொல்றதை கேட்கலைன்னு இப்படி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது எந்தவிதத்தில் சரியானது? இதுக்கு நம்ம எதிர்ப்பை பதிவுசெஞ்சே ஆகணும். ஆனால் யாரும் வாயே திறக்காமல் இருக்காங்க... போயஸ் கார்டன்ல சி.எம். பக்கத்துலயே ஒரு லேடி இருக்காங்க. அவங்கதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்.

ஸ்டாலின் : பயணிகள் விரோத Dynamic Fair கட்டண முறையை திரும்ப பெறுக! ரயில்களின் புதிய...

சென்னை: ரயில் பயணிகளை வாட்டி வதைக்கும் கட்டண உயர்வை மத்திய
அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கட்டண உயர்வு இல்லாத நிதி நிலை அறிக்கை என்றும், அனைத்துத்தரப்பு மக்களுக்குமான நிதி நிலை அறிக்கை என்றும் கடந்த 25.2.2016 அன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்த ரயில்வே நிதி நிலை அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார். அவர் பாராட்டி ஏழு மாதங்கள் கூட நிறைவு பெறாத நிலையில், இப்போது திடீரென்று ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ ரயில்களில் 50 சதவீத கட்டண உயர்வு என்று அறிவித்திருப்பது நாடு முழுவதும் உள்ள பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

கர்நாடகாவில் பதற்றம்- போக்குவரத்து 5-வது நாளாக முடக்கம்


மைசூருவில் டவுன் ஹால் சாலையில் நடந்த போராட்டம் | படம்: முரளி குமார்.

மைசூருவில் டவுன் ஹால் சாலையில் நடந்த போராட்டம் | படம்: முரளி குமார்.
காவிரி நீரை தமிழகத்துக்கு பகிர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நடைபெறும் பந்த் காரணமாக அங்கு இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மைசூரு, ராம்நகர், காமராஜ் நகர் முடங்கியுள்ளது. தெற்கு கர்நாடகா முழுவதும் பாதிப்பு முழு வீச்சில் இருக்கிறது.
இதற்கிடையில் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை தொடர்பாக நாளை (சனிக்கிழமை) கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் காவிரி நீரை பங்கிட்டு கொள்ளும் மாநிலங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வாரத்தில் தீர்ப்பு

புதுடில்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1991 முதல் 96ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தி.மு.க., அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஜெ.,வுடன் அவரது தோழி சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு கோர்ட், நான்கு பேருக்கும் தண்டனை வழங்கியது. இதனால் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார், இதன் பின்னர் நான்கு பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பெங்களூரு ஐகோர்ட் நான்கு பேரையும் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

காவிரி .. தேவ கவுடா மோடியை சந்திக்கிறார் .. அதான் சு.சாமி கடல் தண்ணிய பயன்படுத்த சொல்லிட்டார்

டெல்லி: காவிரிப் பிரச்சினை தொடர்பா கர்நாடகத்தில் இன்று பந்த் நடத்தப்பட்டு வரும் நிலையில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார். காவிரிப் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கர்நாடகத்தின் நிலையை விளக்கவுள்ளதாக கெளடா தரப்பு தெரிவிக்கிறது. தமிழகத்திலிருந்து ஒரு தலைவரும் சென்னையை விட்டு வெளியே வரவில்லை. அறையில் அமர்ந்து கொண்டு அறிக்கை அறிக்கையை அடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகத் தலைவர்கள் எங்கெல்லாம் ஓட முடியுமோ அங்கெல்லாம் ஓடுகிறார்கள். முன்னாள் பிரதமர் தேவெ கெளடா இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார்.

ஜார்ஜுக்கு வசூல் செய்து தர ஒரு பொறுப்பான நபர் ... மாமூல் நாலு கோடியை தொடும்

சபாபதியும் விபச்சாரத் தடுப்புப் பிரிவும்
1996ம் ஆண்டு பணியில் சேர்ந்து காவல் ஆய்வாளராக இருப்பவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாள் பணியாற்றினார். அதன் பிறகு இவர் பணியாற்றிய இடம், சென்னை மாநகர காவல்துறையின் விபச்சார தடுப்புப் பிரிவு.
ஆய்வாளராக இருந்த சபாபதிக்கு விபச்சாரத் தடுப்புப் பிரிவில் ஒரு வாரத்துக்கான மாமூல் 10 லட்சம் ரூபாய். ஜார்ஜ் ஆணையராக இருந்த காலத்தில், சென்னையில் நட்சத்திர ஹோட்டல்கள், மசாஜ் பார்லர்கள், என்று விபச்சாரம் கொடி கட்டிப் பறந்தது. ஒரு ஆய்வாளரக்கு வாரம் 10 லட்சம் என்றால், உயர் உயர் அதிகாரிகளுக்கு எவ்வளவு என்பதை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு அருணாச்சலம் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டவுடன் அவர் செய்த முதல் வேலை விபச்சாரத் தடுப்புப் பிரிவில் நீண்ட காலமாக பணியாற்றிய அனைவரையும் கூண்டோடு மாற்றியதுதான். அந்தப் பிரிவுக்கு நேர்மையான டிஎஸ்பியான மதி என்பவரையும், பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி என்பவரையும் நியமித்து, சென்னை மாநகர் முழுக்க ரெய்டுகள் நடத்த உத்தரவிட்டார். அருணாச்சலம் கூடுதல் ஆணையராக இருந்த ஒரு சில மாதங்களிலேயே, சென்னை நகரின் நட்சத்திர ஹோட்டல்களும், மசாஜ் பார்லர்களும் கதறத் தொடங்கினர். விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைதாகும் பெண்களின் படங்களை வெளியிடுவதை தடுத்தார். தரகர்களின் படங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகுமாறு பார்த்துக் கொண்டார்.
அடுத்த நடவடிக்கை, ஆய்வாளர் சபாபதி மாமூல் வாங்கியதை ஆதாரங்களோடு நிரூபித்து, துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஸ்னோ டானுக்கு அடைக்கலம் கொடுத்த சிங்கள அகதி.. ஹாங்காங்கில் 2013 இல்


Supun Thilina Kellapatha, his wife and their toddler also sheltered Snowden, putting him up for about three
days in their 250-square-foot apartment. அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வௌியிட்ட விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக, ஜேர்மன் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தவராவார். இந்நிலையில் 2013ம் ஆண்டு ஹொங்கொங்கில் இலங்கை அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் எட்வர்ட் ஸ்னோவ்டன் தலைமறைவாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து வேறொரு நாட்டுக்கு தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வியாழன், 8 செப்டம்பர், 2016

palazzo தியேட்டரை Jazz Cinemas க்கு ? ஜோர்ஜ் மீண்டும் சென்னை கமிஷனர்?


சென்னைக்கு மீண்டும் கமிஷனராக S. George
எதுக்காகன்னு தெரியுமா....
இந்த பெரிய மனுசன்தான் வேளச்சேரி Luxe திரையரங்கத்த SPI Cinemas கிட்ட இருந்து Jazz Cinemas வசம் மாத்த, சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் தலைவர் மேல நில அபகரிப்பு வழக்கு பதிவு செஞ்சு, தியேட்டர் கைமாறுற வேலைய பாத்து விட்டாரு....
இப்ப வடபழனி Palazzo திரையரங்கத்த Jazz Cinemas வசம் கைமாத்த வேண்டிய டீல TK Rajendran சரியா முடிச்சு கொடுக்க முடியாததால மறுபடியும் George க்கு கமிஷனர் பதவி....
நல்ல அரசாங்கம் நல்ல அதிகாரி...விளங்குமா?  முகநூல் பதிவு

மும்பை பிரீத்தி ரதி அசிட் வீச்சு குற்றவாளிக்கு மரண தண்டனை

டெல்லியைச் சேர்ந்தவர் பிரீத்தி ரதி(23) என்பவர் மும்பை கொலாபாவில் உள்ள கடற்படை மருத்துவமனையில் பணிபுரிய மும்பை பந்தரா ரெயில் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் வந்திறங்கியபோது அவர் மீது ஒரு மர்ம நபர் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில், படுகாயமடைந்த ரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி தலைமறைவாக இருந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று டெல்லியில் இருந்து பிரீத்தி பயணித்த அதே ரெயிலில் வந்த ஒருவர் ரதி மீது ஆசிட் வீசியதாக தெரியவந்தது.
இதையடுத்து, ரதியின் வீட்டருகே வசித்துவந்த அன்குர் லால் பன்வார் என்பவனை கைது செய்த போலீசார் அவன்மீது மும்பையில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அன்குர் லால் பன்வார் குற்றவாளிதான் என்பதை நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் உறுதி செய்திருந்தது.

சிங்கப்பூரில் தருண் விஜய் திருவள்ளுவர் பற்றி கலந்துரையாடல் ..

திருவள்ளுவர் மீது திடீர் பாசம் கொண்ட தருண்விஜய் எம்.பி-யுடன்
சிங்கப்பூரில் ஒரு கலந்துரையாடல்
31-08-2016 புதன் கிழமை அன்று சிண்டா-வின் கட்டடத்தில் நடைப்பெற்றது. நானும் கலந்துக்கொண்டேன்.
பட்டு வேட்டியுடன் மிடுக்காக வந்தார் தருண்விஜய். தமிழில் மகிழ்ச்சி, சந்தோசம், வணக்கம், நன்றி என்று கூறி..ஆங்கிலத்தில் எழுதிவைத்து தமிழில் உரையை தொடங்கினார். நல்ல தமிழ் உச்சரிப்பு. தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றும்போது திருவள்ளுவரை பற்றியும், இராஜ ராஜசோழன், வேலுநாச்சியார், ஆண்டாள், பாராதி என தமிழகத்தை சேர்ந்தவர்களை போற்றி பாராட்டி வந்திருந்த தமிழ் உண்ர்வாளர்களை மகிழ்ச்சி பரவசப்படுத்தினார்.
ஆரம்பத்தில் பேசும்போதே நான் B.J.P, R.S.S பின்னனியிலிருந்து வருகிறவன் ஆனாலும் எல்லோரும் என்னை பாராட்டுவது எனக்கு வியப்பளிக்கிறது என்று குறிப்பிட்டார்.( திருவள்ளுவருக்கும் கோவில் கட்டி நாலு அய்யர்களை அழைத்து கும்பாபிஷேகம் செய்யப்போகிறாரோ?)

விநாயகர் சிலை வைக்கற அளவுக்கு வளர்ந்துட்டீங்களா?' -தலித்துகளை நொறுக்கிய சாதி கொடூரம்

கோ வை மாவட்டத்தில், விநாயகர் சிலை வைத்து வழிபட்டதற்காக கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் பெரிய தடாகம் பகுதி தலித் மக்கள். ' மேளம் அடிக்கக் கூப்பிட்டார்கள். போகாததால் வீடு புகுந்து எல்லோரையும் அடித்து நொறுக்கினார்கள்' என கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர் மக்கள். 
அனுவாவி சுப்பிரமணிய சாமி கோவில் அருகிலுள்ள பெரியதடாகம் பகுதியில் பாரதிபுரம் என்ற பகுதி உள்ளது. செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் 300 தலித் குடும்பங்கள் வசிக்கின்ற பகுதி இது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்முறையாக விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். இதை அந்தப் பகுதியில் உள்ள மாற்று சாதிக்காரர்கள் விரும்பவில்லை. இதையடுத்து, கடந்த 5-ம் தேதி நள்ளிரவில் தலித் குடியிருப்புகளுக்குள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

YES ABS Bank ? தருமபுரியில் போலி வங்கி நடத்திய 4 பேர் கைது

தருமபுரியில் செயல்பட்ட போலி வங்கி. (அடுத்த படம்) போலி வங்கி நடத்தி இது பற்றி தங்கள் தலைமை அலுவல கத்துக்கு தகவல் அளித்த சசிகுமார், அவர்களின் வழிகாட்டுதல்படி தருமபுரி மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி குற்றப்பிரிவு போலீ ஸாருக்கு உத்தரவிட்டார்.
கைதானவர்கள். தருமபுரியில் செயல்பட்ட போலி வங்கி. (அடுத்த படம்) போலி வங்கி நடத்தி கைதானவர்கள். " மும்பையை தலைமை இடமாகக் கொண்டுள்ள ‘யெஸ் பேங்க்’ நாடு முழுவதும் கிளைகளு டன் செயல்பட்டு வருகிறது. இந்தப் பெயருடன் கூடுதல் எழுத்துக் களைச் சேர்த்து ‘யெஸ் ஏபிஎஸ் பேங்க்’ என்ற பெயருடன் தருமபுரி – சேலம் நெடுஞ்சாலையில் அரசு கலைக் கல்லூரிக்கு எதிரில் புதிய வங்கி ஒன்று செயல்பட்டு வந்தது.

வினவு: உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா..


மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கை – சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, செப்டம்பர் – 1, 2016 அன்று சென்னை – மதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் தி.மு.க வை சார்ந்த எழுத்தாளர் திரு.பழ.கருப்பையா ஆற்றிய உரை!நான் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ள மாநாடுகளில் பேசியுள்ளேன். ஆனால் ரொம்பப் பெரிய வியப்பு – இவ்வளவு இளைஞர்கள் ஒரு புரட்சிகர அமைப்பின் கீழ் கூடியிருக்கிறீர்கள் என்றால், இன்னொரு 10 ஆண்டுகளில் நீங்கள் இந்த நாட்டை மாற்றிவிடுவீர்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவ்வளவு இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவிகள் எல்லாம் கொள்கை பிடிப்புள்ள இந்த அமைப்பில் இருப்பது பாராட்டுதற்குரியது.

BBC :பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவருக்கு மரண தண்டனை

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்பட ஐந்து நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தண்டனை வழங்கியது 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் தினமன்று கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை சுட்டுக் கொலை செய்ததாக குற்றம் சாட்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்பட12 நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்கு தாக்கல் செய்தார்.

தமிழச்சியின் புதிய விடியோ .. சுவாதி கொலையில் பாஜகவுக்கு தொடர்பு !

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டதில் இருந்தே இந்த வழக்கு குறித்து இணையதளத்தில் பல்வேறு கருத்துக்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் தமிழச்சி.இவர் பதிவிட்டு வந்த பல பதிவுகள் வழக்கின் விசாரணை சரியாக செல்லவில்லை, ராம்குமார் உண்மை குற்றவாளி இல்லை, சுவாதியின் பெற்றோர்கள், உறவினர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது, இந்து, ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினருக்கும் இதில் தொடர்பு உள்ளது என்பவை ஆகும்.பிரான்ஸில் இருந்து இந்த தகவல்களை கூறி வரும் தமிழச்சி தான் கூறிய அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் கூறி வந்தார். இந்நிலையில் தனக்கு பாஜகவினர் சிலர் கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆபாச தாக்குதலும் நடத்தி வருவதாக கூறிய தமிழச்சி அது தொடர்பாக அவர்கள் மீது இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

சிறப்பு அந்தஸ்து மறுப்பு: ஆந்திராவில் முழு அடைப்பு!

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு மென்பொருள் நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், சில பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் மாநிலத்தின் பொருளாதார மையமாக விளங்கிய ஐதராபாத் நகரம், தெலங்கானா மாநிலத்துடன் இணைந்துவிட்டது. ஆனால், பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனினும், அந்த மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தெரிவித்திருந்தார். அதையடுத்து, தங்கள் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை ஆந்திர அரசு வலியுறுத்தி வந்தது.

62 தமிழக மீனவர்கள் வழிதவறி... சவுதியில் சிறை.. கொத்தடிமைகளாக.. மதுரை நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம்

நீதிபதி, ‘ஆறு மாதங்களாக மீனவர்கள் துன்பப்படும் நிலையில் புறாவின் காலில் கடிதம் கட்டி அனுப்பியிருக்கிறீர்களா?
குமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களைச் சார்ந்த 62 மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்று கொத்தடிமைகளாக சவுதியில் சிறைப்பட்டுள்ளனர். இவர்களை மீட்கக் கோரி மீனவர்களின் குடும்பத்தினர் ஆட்கொணர்வு மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது சவுதி அரேபியாவின் சட்ட விதிமுறைகள் சிக்கலாக உள்ளதால் கால அவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சென்னை ஆட்சியர் மகேஸ்வரி!


தமிழகத்தில் எட்டு மாவட்ட ஆட்சியர்கள் தடாலடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்குமுன் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இணைச் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பி.மகேஸ்வரி, சென்னை மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த கோவிந்தராஜ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் வெளியிட்டுள்ள உத்தரவில் ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு இயக்குநர் டி.பி.ராஜேஷ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். கடலூர் மாவட்ட ஆட்சியர் ஏ.ஞானசேகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். நிதித்துறை துணைச் செயலாளர் பிரஷாந்த் எம்.வத்நேர், திருவண்ணாமலை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த பதவியில் இருந்த எஸ்.பழனி வருவாய் துறையில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் திருடர்கள் என்றால் மல்லையா யார்?-ராகுல் காந்தி!


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இரண்டாயிரத்து ஐநூறு கி.மீ தொலைவுக்கு மகா யாத்திரை ஒன்றை ‘விவசாயிகளுடன் யாத்திரை’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரமாக செய்து வருகிறார். உத்தரப்பிரதேச தேர்தலையொட்டி ராகுல்காந்தி இந்த பிரச்சாரத்தை தியோரியாவில் தொடங்கினார். ‘கட்டில் சபா’ என்ற பெயரிலான இந்த கூட்டம் முடிந்ததும், கூட்டத்துக்கு வந்தவர்கள் அமருவதற்காகப் போடப்பட்டிருந்த கட்டில்களை, போட்டி போட்டு தூக்கிச் சென்றனர். அப்போது கட்டில்களை எடுத்துச் செல்ல விவசாயிகள் மோதிக் கொண்டனர். இது விமர்சனங்களையும், கிண்டல்களையும் ஏற்படுத்தியது.

மஹாராஷ்டிராவில் எஸ்.ஐ.,யை குளத்தில் தள்ளி கொல்ல முயன்ற RSS ரவுடிகள்


தானே: மஹாராஷ்டிரா மாநிலத்தில், விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட, போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தி, அவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<>குளத்தில் கரைக்க ஏற்பாடு < மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி உள்ளது. இம்மாநிலத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தானே மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை குளத்தில் கரைக்க, நகராட்சி ஏற்பாடு செய்திருந்தது.   RSS ரவுடிகள்  தண்ணீரில கறைக்கிற நிகழ்ச்சியை மொதல்ல சட்டம் போட்டு நிறுத்தனும். அத அடிச்சி, தொவச்சி ,கால்லபோட்டு மிதிச்சி ரொம்ப கண்றாவி ?

வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது இன்சாட் 3 டி.ஆர். செயற்கைக்கோள்

ஜி.எஸ்.எல்.வி.எப்.5 ராக்கெட் மூலம் இன்சாட் 3 டி.ஆர். செயற்கைக்கோள்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (வியாழன்) மாலை 4.10 மணிக்கு ஏவப்பட்டது. இதற்கான கவுண்டவுன் நேற்று காலை 11.10 மணிக்கு தொடங்கியது. வானிலை தொடர்பான தகவல்கள், கடல் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல், ராணுவத்திற்கு தேவையான தகவல்களை பெறும் வகையில் 2211 கிலோ எடைக்கொண்ட இன்சாட் 3 டி.ஆர். செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஜி.எஸ்.எல்.வி.யின் 10வது ராக்கெட் ஆகும்.  nakkeeran,in

செப். 15ல் ஜெ. அதிரடி... 7 தமிழர், வீரப்பன் அண்ணன், ஆட்டோ சங்கர் தம்பி என 80 பேருக்கு விடுதலை?

சென்னை: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதியன்று சிறையில் 20 ஆண்டுகளைக் கடந்த ராஜிவ் கொலையாளிகள் 7 பேர், வீரப்பன் அண்ணன் மாதையன், ஆட்டோ சங்கர் தம்பி மோகன் உட்பட ஆயுள் தண்டனைக் கைதிகள் 80 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2008-ம் ஆண்டுவரை அண்ணா பிறந்த நாளையொட்டி சிறைக் கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதனால் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக சட்டசபையிலும் கூட அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு கடந்த மாதம் 16-ந் தேதி முடிவுக்கு வந்தது. தலையிட முடியாது இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கவுல், 2008-ல் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட பலரும் தற்போது வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர்.

சுவாதி கொலை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாத்தில் மென்பொறியாளர் சுவாதி கடந்த ஜீன் மாதம் நுங்கம்பாக்கத்தில் ரயில் நிலையத்தில், கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் கொளஞ்சிநாதன் ஆஜராகி வந்தார். இந்நிலையில், அவருக்கு பதிலாக, இனி வழக்கறிஞர் கோபிநாத் ஆஜராகி நீதிமன்றத்தில் வாதிடுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி, அரசு சிறப்பு வழக்கறிஞராக கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை காவல் துணை ஆணையரின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். சுவாதி கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, அரசு சிறப்பு வழக்கறிஞர் கோபிநாத் தெரிவித்தார். ns7.tv

சு.சாமி அருள்வாக்கு : காவேரின்னு கத்துறத விட்டிடுங்க .. தேவ கவுடாவின் அடியாள் வேற எப்படி சொல்வார்?

காவிரி நதிநீரை தமிழகத்திற்கு வழங்கும் விவகாரத்தில் சுப்ரமணியன் சுவாமி தமிழகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து தமிழர்களை அவமததித்து உள்ளார்.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் தமிழகத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விடக்கோரி விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 15 ஆயிரம் கன அடி தண்ணீரை 10 நாளைக்கு தொடர்ந்து தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டும் என்று உத்தரவிட்டது.இதனை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாஜக எம்பியான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், காவிரி தண்ணீருக்காக கத்திக் கொண்டிருப்பதற்கு பதிலாக கடல் நீரை குடிநீராக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.>தமிழக மக்கள் நீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பதிவு தமிழக விவசாயிகளை அவமதிப்பது போல் உள்ளது.

தமிழகத்தில் தலைக்கு 50 ஆயிரம் கடன்.. சி ஏ ஜி அறிக்கை !

ஜெ. அரசின் நூறு நாள் "சாதனை' ஆட்சிக்கு ஒரு சான்றிதழாக தலைமைக் இவற்றில் போக்குவரத்து, மின்சாரம், சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைகள் ஆகிய பொது நிறுவனங்கள் அடங்குகின்றன. இந்த 20 பொதுத்துறை நிறுவனங்கள் மார்ச் 31, 2015 வரையிலான ஒரு வருடத்தில் மட்டும் 16 ஆயிரத்து 833 கோடி ரூபாய் நஷ்டத்தை சம்பாதித் துள்ளன. மொத்தமுள்ள 61 தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் மீதமுள்ள 41 நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து வெறும் 1,978 கோடி ரூபாய் மட்டுமே லாபம் சம்பாதித்து உள்ளது என இந்த தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது. இத்துடன் முடிவடைந்து விடவில்லை. இதுவரை தொடர்ந்து இயங்கும் 61 பொ துத்துறை நிறு வனங்கள் மொத்த மாக 65 ஆயிரத்து 440 கோடிரூபாய் நஷ்டத்தில் இயங்கு கிறது என ஆடிட் டர் ஜெனரல்குழு மதிப்பிடுகிறது.சி.ஏ.ஜி. கொடுக்கும் ஒரு வருட கணக்கான 16 ஆயிரத்து 833 கோடி ரூபாயையும் அரசின் ஒரு வருட செலவு என பட்ஜெட்டில் குறிப்பிடும் 1 லட்சத்து 62 கோடி ரூபாயோடு சேர்த்தால் அரசின் செலவினத்தில் சுமார் 16ஆயிரம் கோடிரூபாய் கூடுத லாக கணக்கில் வரும்.

பஞ்சமி நிலம்... எஸ்.ஆர். எம். கட்டடம் இடிப்பு; படம் பிடித்த ஜூ.வி. செய்தியாளர் சிறைப்பிடிப்பு


thetimestamil.com :சென்னை காட்டாங்கொளத்தூரில், சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்திற்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, ஹோட்டல் மேனேஜ் மென்ட் என பல்வேறு கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில், தலித்துகளுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர்பஞ்சமி நிலத்தையும், அதேபோன்று பொத்தேரி ஏரி, பாசன கால்வாயையும் எஸ்.ஆர்.எம். நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக பொத்தேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்துமாறு காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறைக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதிகளை கடந்த ஒரு வாரமாக ஆய்வு செய்தனர்.

கால்களை சேர்த்து வைத்திருந்தால் பலாத்காரத்தில் இருந்து தப்பித்திருக்கலாம்: ஏடாகூடமாக பேசிய நீதிபதி சஸ்பெண்ட்

webdunia.com :கனடா நாட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளி என கூறி, குற்றம் சுமத்தப்பட்டவரை விடுதலை செய்த நீதிபதி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.கனடா நாட்டில், கல்கேரி நகரில் ராபின் கோம்ப் என்பவர் நீதிபதியாக உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு இவரிடம் ஒரு பலாத்கார வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கின் விசாரணையின் போது பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணிடம், அந்த நபர் பலாத்காரம் செய்ய முயன்றபோது அதிலிருந்து தப்பிக்க ஏன் முயற்சி செய்யவில்லை. உங்கள் கால்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்திருந்தால் அந்த நபர் உங்களை பலாத்காரம் செய்ய முடிந்திருக்காதே

புதன், 7 செப்டம்பர், 2016

முகநூல் வலையில் முந்திவரும் specialcorrespondent செய்திகள்

சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 40 மணி நேரத்தில் 13928 + படிக்கும் மாணவர்கள் படித்த உழைக்கும் சிந்திக்க கூடிய நபர்களை சென்று அடைந்து உள்ளது.. 1500+ நமது எழுத்துகளை விவாதித்து உள்ளனர் .. உங்கள் ஆதரவுக்கு நன்றி ..
உங்கள் சமூக அக்கறையுள்ள ., சமூக நல செய்திகள் எங்களை சேர #specialcorrespondent hashtag அடித்து செய்யுங்கள் ..
நிதி ஆதாரம் Special Correspondent க்கு எப்படி?! .. #FAQ 2
கம்யூனிஸ்ட் மாதிரி உண்டியலா (or)
கார்பொரேட் பிடியில் சிக்கி செயல்படும் தற்கால மீடியாவா (or)
அல்லது அரசியல் கட்சி ஜிங் ஜில் ஜாக் ஆராதனையா ..

மூன்றுமே கிடையாது ..15/01/2017 - web tv portal - www.splco.me ஆரம்பிக்கும் முன்னரே தெளிவு படுத்தி விடுவோம் ..அரசியல் பின்புலம் அற்ற சாமானியன் குரலே - தனிமனித கோட்பாட்டில் சிக்காத You are Special Correspondent - Never underestimate the #Voice of Common people (y) .
நீங்களே ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - உங்கள் குரல் விரைவில்
www.splco.me webportal ஒலிக்க எங்களுடன் இணைத்து கொள்ளுங்கள் ..

கன்னய்யா குமார் மீது எந்த நடவடிக்கையும் கூடாது: ஜே.என்.யூ பல்கலைக்கு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னய்யா குமார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 19ஆம் தேதி வரை அவர் மீது அபராதம் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று, பல்கலைக்கழகத்தை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு ஆதரவான சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி தொடர்பான வழக்கில், நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
முன்னதாக உமர் காலித், பட்டாச்சார்யா உள்ளிட்ட 19 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

மேயர் மறைமுகத் தேர்வு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்! கவுன்சிலர்களை சம்பாதிக்க விடுங்கப்பா?

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை மக்களே
நேரடியாக தேர்வு செய்யும் முறையை மாற்றி வார்டு உறுப்பினர்களே, தலைவர்களை தேர்வு செய்யும்புதிய சட்டத்திருத்த மசோதாவை செப்டம்பர் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது அதிமுக அரசு. இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பைத்தெரிவித்தன. மேயரை மறைமுகத் தேர்வு செய்யும்முறையை ரத்து செய்து, மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் பழைய முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னைகிண்டியைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில்மேயர்களை நேரடியாக மக்கள் தேர்தலில் தேர்வுசெய்யும் முறையை மாற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள்மூலம் தேர்வுசெய்யும் முறையை தமிழக அரசுகொண்டுவந்துள்ளது. இதன்மூலம், மேயர் பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது குதிரைபேரம் நடைபெறும். இதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெறும்.

மீண்டும் சென்னை கமிஷனராக ஜார்ஜ் நியமனம்!


சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக எஸ்.ஜார்ஜ் மூன்றாவதுமுறையாக நியமிக்கப்பட்டுள்ளார். 1984ஆம் ஆண்டு தேர்வு ஐ.பி.எஸ். குழுவைச் சேர்ந்த ஜார்ஜ், கேரள மாநிலம், திருவங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மத்திய மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலத்தில் ஜ.ஜி.யாக பணியாற்றியுள்ளார். இவர், 2004ஆம் ஆண்டு மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோது, பலத்த பாதுகாப்புடன் ஒரு மகாமகத்தை நடத்தி, ஆளும் தரப்புக்கு நம்பிக்கையானவராக விளங்கினார் என்று கூறப்படுகிறது.
ஜார்ஜ், சென்னை கமிஷனராக முதலில் 2012ஆம் ஆண்டு, செப்டம்பர் 19ஆம் தேதி நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, அப்பதவியில் இருந்து தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டடார். அதன்பின்னர், மீண்டும் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

‘உங்களால முடியலன்னா போங்க...!’ - டி.ஜி.பி-யிடம் கொந்தளித்த ஜெ.


minnambalam.com :(அசோக்குமார், ஜெயலலிதா, ராஜேந்திரன்)
நெட்டைத் தொட்டதும், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது.‘‘சட்டமன்றம் முடிந்ததும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என அடுத்தடுத்து பந்தாட ஆரம்பித்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமார் திடீரென விருப்ப ஓய்வு பெறுவதாக தெரிவிக்க, அவரது மனுவை ஏற்று உடனடியாக அசோக்குமாரை விடுவித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தின் டி.ஜி.பி.யாக அசோக்குமார் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அதற்குமுன்பு சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் டி.ஜி.பி-யாக இருந்தவர் ராமானுஜம். அவரது பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து அசோக்குமாருக்கு அந்தப் பொறுப்பை கொடுத்தது தமிழக அரசு. அப்போதும் ஜெயலலிதாதான் முதல்வர்.

தமிழகத்தின் குளங்கள் ஊருணிகள் நீர் கொள்ளளவு 390 டி எம் சி .. சரியாக பராமரித்தாலே போதும்?

தமிழகத்தின் மழை அளவு 925மி.மீ,ஆந்திர 908மி.மீ, கர்நாடகா 732மி.மீ இது சரியான மழை அளவு.
தமிழக அரசாங்கத்தின் கணக்குப்படி 39,202 ஏரிகள் இருக்கின்றன.
100 ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டு கொண்டவை 18,789. இவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
100 ஏக்கருக்கு குறைவான ஆயக்கட்டு கொண்டவை 20,413. இவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இவை தவிர 3000 கோயில் குளங்கள், 5000 ஊருணிகள் இருக்கிறது.
இவற்றின் மொத்த நீர் கொள்ளவு 390 டி.எம்.சி. இது சாதாரண அளவு அல்ல. இது தமிழகத்தின் மொத்த அனைக்கட்டுகளின் நீர் கொள்ளளவான 243 டி எம்.சியை விட அதிகம்.
இதை பராமறித்தாலே போதும் !!  முகநூல் பதிவு  சுதாகர்

காவிரிப் பிரச்சினையை இனவாத அரசியல் தீர்க்குமா ?

வேறு வழியின்றி விநாடிக்கு 15,000 கன அடி காவிரி நீரை திறந்து விடுகிறது, கர்நாடக அரசு. மாண்டியா, மைசூரூவில் நடக்கும் எதிர்ப்பு போராட்டங்கள், அனைத்துக் கட்சி கூட்டம் எல்லாவற்றையும் தாண்டி உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஏற்ப கர்நாடக காங்கிரசு அரசு திறந்து விடுகிறது. இருப்பினும் இந்த நீர் கூட தமிழகத்தின் குறுவை சாகுபடிக்கு போதுமானதல்ல என்று விவசாயிகள் கூறுகின்றனர். தமிழக தரப்பில் விநாடிக்கு 26,000 கன அடி நீர் கேட்கப்பட்டது. கர்நாடகம் 10,000 அடி என்று சொன்னது. இறுதியில் இரண்டும் நடுவில் உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் நீர் திறப்பதை எதிர்த்தன. ஆனால் 2012-ம் ஆண்டில் இதே போன்றொரு முடிவைத்தான் அப்போதைய பா.ஜ.க அரசு எடுத்ததாக முதல்வர் சித்தராமையா நினைவுபடுத்துகிறார். உண்மைதான், அதே போன்று அப்போது அந்த முடிவை எதிர்த்து காங்கிரசு போராடியதும் உண்மைதான்.
காவிரியை வைத்து கர்நாடக கட்சிகள் நடத்தும் இந்த போங்காட்டம் ஒருபுறமிருக்க இந்த பிரச்சினை குறித்து அவர்கள் தரப்பில் முன்வைக்கும் வாதம் என்ன?

குஜராத் கிட்னி விற்பனையில் சாதனை.. வாடகை தாய் விற்பனையிலும் முன்னணியில் .. ஒளிர்கிறது?

மக்களின் வறுமையை பயன்படுத்தி மும்பை ஹிரநந்தனி, டெல்லி அப்பல்லோ கார்ப்பரேட் மருத்துவமனைகள் நடத்திவரும் கிட்னி திருட்டு குறித்து வினவில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இக்கிட்னி திருட்டுக் கும்பல் குஜராத்தை மையப்படுத்தி இயங்குவதோடு, இம்மாநிலத்திலிருந்து கணிசமானவர்கள் கிட்னி விற்பதாகவும் தெரிய வந்துள்ளது. குஜராத்தின் பண்டோனி கிராமம் – 13 பேர்கள் கிட்னியை விற்றிருக்கின்றனர். 
ல்லாயிரம் கோடி கடனை வாங்கி ஏப்பம் விட்ட மல்லையாக்கள் வாழ்கின்ற இதே நாட்டில்தான், 30,000 ரூபாய்க்காகவும், கான்கிரிட் சுவருக்காகவும், அடுத்த வேளை உணவிற்காகவும் தங்கள் உடல் உறுப்புகளை விற்போரும் வாழ்கின்றனர்.  இது 2014-ல் ஒளிர்கிறது குஜராத் என்கின்ற மாயையை தனது திருவாய் மலர கொக்கரித்த மோடியின் வீழ்ச்சி மட்டுமல்ல. தனியார்மயம், தாரளமயம், உலகமயம் ஆகியவற்றால் நாசமாக்கப்பட்ட விவசாயம், சிறு தொழில்கள், வேலையின்மை, முதலியன தோற்றுவிக்கும் வறுமைதான் மக்களை தங்கள் சொந்த இடத்தில் கூட வாழமுடியாதவர்களாய் மாற்றியுள்ளது.

சென்னை மின்சார ரெயில் மோதி 4 வடமாநில தொழிலாளர்கள் பலி!

விகடன்.காம் :சென்னை சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் நடந்து சென்ற  வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர்  ரயிலில் அடிபட்டு பலியாகினர். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் சேத்துப்பட்டு&நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் இடையே பிற்பகல் 3 மணியளவில் வந்தது. அப்போது, ரயில் வந்த தண்டவாளத்தில் 4 பேர் நடந்து சென்றனர். இதைப்பார்த்த ரயில்வே பைலட் (டிரைவர்) ஹரான் மூலம் எச்சரிக்கை செய்தார். ஆனால் அவர்கள் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ரயிலை நிறுத்த அவர் முடிவு செய்து பிரேக் போட முடிவு செய்தவதற்குள் மின்னல் வேகத்தில் ரயில் 4 பேர் மீதும் மோதியது. தண்டவாளத்திலிருந்து அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து ரயில்வே பைலட், ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் எழும்பூர் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடகாவில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை எரித்து போராட்டம்


உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதனை கண்டித்து கன்னட அமைப்பினர் தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின்போது ஜெயலலிதா உருவப்படத்தை எரித்தும், கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா மற்றும் மத்திய அரசுக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக தமிழக கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். -வடிவேல் நக்கீரன்,இன்

தீர்ப்பை மீற முடியாது; தண்ணீர் திறக்கப்படும்! - சித்தராமய்யா

மின்னம்பலம்.காம் : தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு தினமும் 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு இடைக்கால நிவாரணமாக தண்ணீரை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தது. மண்டியா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள், மத்திய–மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தின்போது அரசு அலுவலகம் சூறையாடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என சித்தராமய்யா அறிவித்திருந்தபடி அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் பின்னர் பேசிய அவர், "உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீற முடியாது.

அந்த ஆட்டத்துக்கு நான் இனி வரமாட்டேன். ( சிறுகதை)

The moment you realize that you were always the right person. Only ignorant people walk away from greatness.” ― Shannon L. Alder
அந்த பெரிய இருபத்தி ஐந்து நிமிஷங்கள்.... என்னனவோ ஞாபகங்கள் ஒரே நேரத்தில் எல்லா கடந்த காலங்களும் நினைவுக்கு வருமா? இதுவரையில் இந்த அனுபவம் எனக்கு இருந்ததில்லை. எனக்கு மட்டும் அல்ல யாருக்குமே இப்படி எல்லா திரைப்படங்களையும் ஒரே நேரத்தில் பார்ப்பது போன்ற ஒரு அனுபவம் வாழ்வில் வந்திருக்காது.
எனக்கு முதலில் வந்த நெஞ்சு வலி ஒரு சாதாரண நெஞ்சுவலி என்று என்னால் என்ன முடியவில்லை. உடம்பெல்லாம் ஒரு வினோத நிகழ்வு நடப்பது நன்றாக உணரமுடிகிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை எனக்கு இது பயமாக இல்லை. ஆனால் ஷோபாவை நினைக்கும் போதுதான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது.

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

தமிழகம் சாதி சண்டைகளில் இரண்டாம் இடம்.. பிகார் முதல் இடம்

சில விஷயங்களில் முதலில் வந்தால் மரியாதை. சில விஷயங்களில் கடைசியில் வந்தால் மரியாதை. தமிழன், புகழென்றால் உயிரையும் கொடுக்க முன்வருவான்- பலியென்றால் உலகோடு பெறினும் ஒப்புக்கொள்ளமாட்டான் என்பது புறநானூற்றுக்கவி இளம்பெருவழுதியின் வாக்கு.அந்த தமிழகம் இன்றைக்கு வெகுவாக மாறிவிட்டது. அதை உறுதிப்படுத்துவதுபோல் இருக்கிறது 2015-ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டுள்ள தரவுகள். இந்தப் பட்டியலில் சாதி சார்ந்த மோதல்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது தமிழகம்.வழக்கமாக, ஜாதி மோதல்கள் அதிகமாக காணப்படும் பீகாரை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிட த்துக்கு அனுப்பிவிட்டு வாகை சூடியிருக்கிறது தமிழகம். முதலிடத்தை தக்கவைத்து கிரீடம் சூடியிருக்கிறது உத்தரப்பிரதேசம். 2014-ஆம் ஆண்டை ஒப்பிட சாதி சார்ந்த மோதல்கள் நூறு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது தமிழகத்தில்.2014-ல் நிகழ்ந்த சாதிய மோதல்களின் எண்ணிக்கை 211. மாறாக, தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 426 சாதிய அடிப்படையிலான மோதல்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நக்கீரன்,இன்

குற்றமே தண்டனை: நாசர் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது ஏன்?

சராthetimestamil.com :குற்றமே தண்டனை’ – கடந்த மூன்று ஆண்டுகளில் எனக்கு முழு திருப்தி தந்த மிகச் சில தமிழ்ப் படங்களுள் ஒன்று.
ஒரு குற்றத்தில் நேரடியாகத் தொடர்புடையர்களை மட்டுமே சமூகமும் அமைப்புகளும் கண்டுகொள்கிறது. ஆனால், ஒரு குற்றத்தில் மறைமுகமாகத் தொடர்புடையவர்களையும், பெரியக் குற்றமாக இருப்பினும் – அதற்குக் காரணமான கிளைக் குற்றமாக இருப்பினும் – ப்ரொஃபஷனல் கிரிமினல் அல்லாதவர்களுக்கு ‘குற்றம் புரிவதே தண்டனை தரவல்லது’ என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்த சினிமா இது.

கருப்பண்ணனை நீக்கும் வரை போராட்டம்: விவசாயிகள் சங்கம்!


விவசாயிகள் எல்லாம் கோடீஸ்வரர்களாக இருந்துகொண்டு, வங்கியில் முதலீடு செய்து, வட்டிக்கு விடும் தொழிலை செய்து வருகின்றனர்’ என்றும் ‘விவசாயிகள் யாரும் வறுமையில் இல்லை. விளம்பரத்துக்காக வீதியில் இறங்கி போராடி ஊரை ஏமாற்றி வருகிறார்கள்’ என்றும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் பேசியதற்கு, விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருப்பண்ணனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை என்றால் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “வீட்டில் இருப்பவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினால் அதை கொச்சைப்படுத்தி பேசுவது நியாயமல்ல.

கர்நாடகம்: 9ஆம் தேதி பந்த், அணையும் மூடப்பட்டது!


காவிரியில் இருந்து விநாடிக்கு 15,000 கன அடி நீரை 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று இடைக்கால தண்ணீர் நிவாரணத்தை அறிவித்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில் தீர்ப்பு வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் கர்நாடகம் முழுக்க போராட்டங்கள் வெடித்தன. ஆங்காங்கே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியைக் கொளுத்தி போராட்டங்களை நடத்தினர் கர்நாடக அமைப்பினர். பாஜக, கன்னட சளுவாலியா போன்ற அமைப்புகள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளன.

சு.சாமி : ஜெயலலிதா கம்பனிகளுடன் டீல் வைத்துகொண்டு டிராமா போடுகிறார்


அதிரடிக் கருத்துகளால் ஊடகங்களைக் கவரும் தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் அகில இந்திய அளவிலான தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, இன்று சென்னை விமானநிலையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது ஊடகவியலாளர்கள் காவிரி பிரச்னையில் இருந்து கேள்விகளைத் தொடங்கினார்கள்.
"காவிரி பிரச்னையில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தாற்காலிகமானதுதான். இது, மறுபடியும் பிரச்னைகளையே உருவாக்கும்.நதிநீர் இல்லாத சவூதி அரேபிய போன்ற நாடுகளில் கடல்நீரைப் பயன்படுத்தி, அந்நாட்டு மக்களின் தண்ணீர் தேவையை 24 மணி நேரமும் பூர்த்தி செய்து வருகிறது.

அய்யய்யோ நான் ஏதோவொரு ப்லோவுல சொல்லிட்டேன் ! பதறும் டி டி

விஜய் டிவி-யில் டிடி தொகுத்து வழங்கும் ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். அதில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் தொகுப்பாளினி டிடி, சமீபத்தில் உங்களைப் பற்றி வந்த கிசுகிசுவில் எது மிகவும் பிடித்தது? எனக் கேட்டார். இதற்குப்பதிலாக கீர்த்தி சுரேஷ், என்னை ரசிக்கவைத்த கிசுகிசுவாக காமெடி நடிகர் சதிஷ்க்கும் எனக்கும் காதல் என்று வந்த செய்திதான் என்று கூறினார்.
கீர்த்தி சுரேஷ் கூறியதற்குப் பதிலாக டிடி, கிசுகிசுவை பரப்புவதற்கு சதீஷ் 1000 ரூபாய் கொடுத்து அப்படி செய்தி வெளியிடச் சொல்லியிருப்பாரோ! எனக் கூறினார். இப்படியாக காசு வாங்கிக்கொண்டு செய்தி பரப்புவதைப்போல் செய்தியாளர்களைப் பேசி அவமானப்படுத்திய டிடி-க்கு செய்தியாளர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.